சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் பிறந்தநாள் விழா

சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் அவர்களின் பிறந்தநாள் விழா புதுச்சேரி மாநிலம், வீராம்பட்டினம், பெரியார் பாசைறை தோழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெரியார் பாசறை நிறுவனர் பா.சக்திவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது மேலும் நிகழ்வின் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன. இவ்விழாவில் பாசறைத்தோழர்களும், ஊர்ப்பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.








வரலாறு
பிறப்பு பெப்ரவரி 18, 1860

ம. சிங்காரவேலர் (பெப்ரவரி 18, 1860 -பெப்ரவரி 11, 1946) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பொதுவுடமைவாதியும் தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். மயிலாப்பூர் சிங்காரவேலு செட்டியார் என்ற முழுப்பெயர் கொண்ட இவர் பொதுவுடைமைச் சிந்தனைகளை தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய பணிகளுக்காக "சிந்தனைச் சிற்பி"[1] எனப் போற்றப்படுகிறார்.






பொருளடக்கம்

1 கல்வியும் தொழிலும்
2 சமூகப் பணிகள்
3 ஈடுபட்ட போராட்டங்கள்
4 சிறப்பு
5 அரசு விழா
6 மேற்கோள்கள்
7 உசாத்துணை
8 வெளி இணைப்புகள்

கல்வியும் தொழிலும்

சிங்காரவேலர் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். தனது பள்ளிக்கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதன்பின் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குறைஞர் ஆனார். வழக்குறைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடர்ந்த இவர் பொதுவுடைமைச் சிந்தனைகளாலும் காந்தியச் சிந்தனைகளாலும் ஈர்க்கப்பட்டார்.
[தொகு] சமூகப் பணிகள்

இந்தியாவில் முதன்முதலாக மே நாளைக் கொண்டாடியவர். (தொழிலாளர் நாள்)
உருசியாவின் கம்யூனிசப் புரட்சியால் கவரப்பட்டு, இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தை 1918இல் தொடங்கினார். சென்னை பக்கிங்காம் கர்னாடிக் ஆலையில் தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார்.
தொழிலாளர் நலனுக்காக மே 1, 1923 ல் தொழிலாளர் விவசாயக் கட்சியை தொடங்கினார்[2][3].
1925ல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கிய தலைவர்களுள் இவரும் ஒருவர்.
இவர் சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்த போது மதிய உணவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அதன் பின்னர் இத்திட்டம் இடையிலேயே கைவிடப்பட்டது. எனவே இவரே காமராஜர் தமிழகம் முழுவதும் தொடங்கிய மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி ஆவார்.
தமிழ் மொழிக்காக பெரிதும் பாடுபட்டார். தமிழை ஆட்சி மொழியாக்கும் கோரிக்கையை வலியுறுத்தினார்.
பல நூல்களை எழுதியுள்ளார். மேலும் பல நூல்களை வேறு மொழிகளிலிருந்துத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.[4] இவர் எழுதிய சிந்தனை நூல்கள் மாஸ்கோ நகர் லெனின் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. இவருடைய நூலக்ள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
பெரியார் ஈ. வே. ராமசாமியின் சுயமரியாதை இயக்கம் 1930களின் ஆரம்பத்தில் பொதுவுடைமைக் கொள்கையின் பக்கம் சாய சிங்காரவேலரின் தூண்டுதல் காரணமாக இருந்தது.

[தொகு] ஈடுபட்ட போராட்டங்கள்

சிங்காரவேலர் 1918ஆம் ஆண்டு மகாத்மா காந்தியைத் தன் தலைவராக ஏற்றார். இவர் ஆங்கிலேய ஆட்சியின் இரவுலத் சட்டத்தினை எதிர்த்தார். மேலும் 1919ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வைத் தொடர்ந்து காந்தி ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்திற்கு அனைத்து வழக்குரைஞர்களுக்கும் அழைப்பு விடுத்தார். அதன் காரணமாக இவர் தனது வழக்குரைஞர் ஆடையை எரித்தும் "இனி எப்போதும் வக்கீல் தொழில் பார்க்க மாட்டேன். என் மக்களுக்காகப் பாடுபடுவேன்!" என்று கூறியும் ஆங்கில அரசுக்குத் தனது எதிர்ப்பையும் காந்திக்குத் தனது ஆதரவையும் காட்டினார். ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலையைச் சமாளிக்கும் விதமாக இங்கிலாந்தின் வேல்சு இளவரசர் இந்தியாவுக்கு வந்தார். அவரது வருகையை எதிர்க்கும் விதமாக சிங்காரவேலர் சென்னையில் பெரிய போராட்டம் ஒன்றை முன்னின்று நடத்தினார். இப்போராட்டம் ஆங்கிலேய அரசையே உலுக்கியது என்று அறிஞர் அண்ணா கூறியுள்ளார்.
[தொகு] சிறப்பு

ம. சிங்காரவேலர் மீனவச் சமூகத்தைச் சேர்ந்தவராதலால், தமிழக அரசு மீனவர் வீட்டு வசதித் திட்டத்திற்கு இவரது பெயரைச் சூட்டியுள்ளது. மேலும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிங்காரவேலர் மாளிகை என்று பெயர் சூட்டியது. இவர் உருசியப் புரட்சியாளர் லெனினின் நெருங்கிய நண்பர்[ஆதாரம் தேவை]. பேரறிஞர் அண்ணா இவரை, "வெட்டுக்கிளிகளும் பச்சோந்திகளும் புகழப்படும் ஒரு நேரத்தில் ஒரு புரட்சிப் புலியை மக்கள் மறந்தனர்!" என்று கூறியுள்ளார்.

Read more...

அப்துல்கலாம் காங்கிரஸ் அரசின் தற்போதைய தரகரா?

இலங்கைக்கு நான்கு நாள் சுற்றுவிஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், இப்பிரடகடனத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வில் பங்கெடுத்துக்கொண்டார். ஊர் உலகை ஏமாற்ற 10 வருட செயல் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த 'மும்மொழி இலங்கை' திட்டத்தின் தொடக்கவிழாவின் போது ஈழத்தமிழர்களின் அடிப்படைத் தன்மையை சற்றும் உணராதவராய், ஏட்டு அறிவை மட்டுமே கையாண்டு வருபவராய் உரையாற்றிய டாக்டர் அப்துல் கலாம், 'கொண்டாட்டங்களின் அடிப்படையிலேயே வேறுபாடுகளை கலைய முடியும். மோதலிலான் அல்ல. வறுமை, கல்வியறிவின்மை, வேலையின்மை இழப்பு, ஆகியன சச்சரவுகள், கோபம், வன்முறை என்பவற்றை தூண்டிவிடுகின்றன.




இவையே பழமைவாதம், வரலாற்று பகைமை, நீதி நடுநிலையின்மை, மத அடிப்படைவாதம் என்பவற்றை தூண்டிவிட்டு தீவிரவாத எழுச்சியை ஏற்படுத்துகிறது' என்றார். இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு இந்தியா, இலங்கை இரு நாடுகளுமே நீண்டகாலம் நிலைத்திருக்க கூடிய ஒரு நிலையான தீர்வை தேடவேண்டும் என்றார்.



இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் இளைஞர்களுக்கான ”கனவு காணுங்கள்” என்ற திட்டத்தினை இலங்கையிலும் பிரதிபலிக்கும் வகையில் 'சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்ப இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன். இலங்கையில் இணக்கம் மற்றும் செழிப்பு கொண்ட அமைதியான இலங்கையை கட்டியெழுப்ப இரு பக்க தலைவர்களையும் தான் சந்திக்கவிருக்கிறேன். மோதல்கலுக்கான தீர்வாக எந்தவொரு போரும் அமையவில்லை. குறிப்பிட்ட எந்த பிரச்சினையையும் போர் மூலம் தீர்வு காண முடியாது என்றார்.

இதேவேளை அப்துல் கலாம் கடந்த சில நாட்களுக்கு முன் கூடங்குளம் அணு உலை திட்டத்தில் தமிழர் விரோத போக்கை வெளிக்காட்டியிருப்பதன்மூலம் இவர் காங்கிரஸ் அரசின் தற்போதைய இடைத்தரகராக நியமிக்கப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது.

Read more...

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் - கிருஷ்ணா திருப்தி

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் வெறித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் 200க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன. 8 மீனவர்களை சிறை பிடித்துச் சென்று விட்டனர். பல மீனவர்கள் காயமடைந்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்களை இந்த அடாத செயல் பெரும் அதிர்ச்சியிலும், கொந்தளிப்பிலும் ஆழ்த்தியுள்ளது.



600க்கும் மேற்பட்ட படகுகளில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். சர்வதேச எல்லைப் பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சூழ்ந்து கொண்டனர். பின்னர் காட்டுமிராண்டிகள் போல கற்களை வீசித் தாக்கினர். இதில் பல மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டது.



200க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன. மேலும் மீனவர்கள் கரைக்குத் திரும்பிய பின்னர் பார்த்தபோது பாக்கியம்ஜோசப், ராஜமாணிக்கம், மாரியப்பன், விஜயகுமார், சின்னையா, செல்வராஜ், தமிழ்ச்செல்வம், மலைச்சாமி ஆகிய 8 மீனவர்களை காணவில்லை என்று தெரிய வந்தது. அவர்களை இலங்கைப் படை பிடித்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில்தான் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு எல்லாம் திருப்தியாக இருக்கிறது என்று கூறினார். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது. அங்கு என்ன பேசினார்கள் என்பது தெளிவாகத் தெரியாத நிலையில், அந்தப் பேச்சுக்குக் கிடைத்த 'மதிப்பாக' இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது.

தாக்குதலிலிருந்து தப்பி வந்த மீனவர்களில் ஒருவரான ஜஸ்டின்கூறுகையில், கற்களை தாறுமாறாக எங்கள் மீது எறிந்து இலங்கைப் படையினர் தாக்கினர். பெரிய பெரிய கற்களை அவர்கள் எடுத்து வந்து வீசினர். மேலும் மீன்பிடி வலைகளையும் அவர்கள் அறுத்துக் கடலில் போட்டனர் என்றார்.

தாக்குதலில் ஜெகதீசன் என்ற மீனவரின் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தமிழனின் நிலை இப்படியிருக்க...

நைஜீரியா நாட்டில் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் இந்திய ஊழியர் ஒரே ஒருவர் உயிர் இழந்தார். இந்த நைஜீரியா குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் பெரும் உயிர் இழப்பு ஏற்பட்டிருப்பது வருந்தத்தக்கது என்று தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இந்தியர்கள் விவரத்தை அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

தமிழனை இந்தியனாக பாராத இந்திய அரசை இனியும் தமிழக மீனவர்கள் நம்பியிராது...
தமிழ்தேசியத் தலைவரின் பாதையில்...
விரைவில் தற்காப்புக்கேனும் ஆயுதம் ஏந்தும் நிலை வந்தே தீரும்..

Read more...

உயிர் பிரியும் வலி…....

உடலில் சிறு காயங்கள் ஏற்படும் போதெல்லாம் உயிர் போகும் வலியென நாம் அலறுகிறோம்.உன்மையில் உயிர் பிரியும் வேலையில் அது போன்ற வலி ஏற்படுமா? அதை உணர்த்துவது என்பதும் இயலாத ஒன்றாகிவிட்டது. ஆனால் உயிர் பிரியும் வலியை என் அம்மாவின் உயிர் பிரியும்வேளையில் அருகிலிருந்த நான் உணர்ந்தேன்...
ஒருவரின் இழப்பின்போது அவரது குடும்பத்தாரும், உறவினரும் அடையும் ஆழ்ந்த கவலையே உயிர் பிரியும் வலியா?

Read more...

வைகோவின் பொருளாதார முற்றுகைப்போராட்டம் - வெற்றி

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் முற்றுகை போராட்டம் நடத்தி கேரளாவுக்கு பொருளாதார நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று மதிமுக போது செயலாளர் வை.கோ விடுத்துள்ள அழைப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்று ஆதரவு தெரிவித்து உள்ளனர்.



தாங்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாளை லாரிகளை கேரளாவுக்கு ஓட்ட மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் நல்லதம்பி அறிவித்துள்ளார்.


தமிழக லாரி முன்பதிவு அலுவலகங்கள் சங்கமும் கேரளாவுக்கு நாளை முதல் காலவரையறை இன்றி முன்பதிவை நிறுத்துவதாக அறிவித்துள்ளார்கள்.


கேரளாவுக்கு சரக்கு எடுத்து செல்லும் லாரிகளை மலையாள மக்கள் தாக்குவதால் லாரிகள் சேதமடைகின்றன, ஓட்டுனர் மற்றும் கிளீனர்கள் தாக்கப்படுகின்றர்கள். பல இடங்களில் தமிழக வாகனங்கள் தடுத்து நிறுதத்தப்படுகின்றது, அதனால், சரக்குகளை குறிப்பிட்ட நேரத்தில் எங்களால் கொண்டுபோய் சேர்க்க முடியவில்லை. மேலும் கொண்டு போகும் காய்கறி, பழங்கள் எல்லாம் அழுகிவிடுகின்றது.


இதனால், நாளை காலை முதல் (21.12.2011) தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு சரக்குகளை கொண்டு செல்லும் லாரிகளை நிறுத்த முடிவு செய்துள்ளார்கள், எனவே கேரளாவுக்கு செல்லும் சரக்குகளை முன்பதிவு செய்வதும் நாளை முதல் நிறுத்தப்படும். கேரள மற்றும் தமிழகத்திற்கு இடையே முல்லை பெரியாறு அனை விவகாரத்தில் நல்லிணக்கம் ஏற்ப்பட்டு மக்களின் வாழ்க்கை முறை சுமூகமடையும் வரை கேரளாவுக்கு நாங்கள் சரக்குகளை அனுப்பமாட்டோம் என்று தமிழக லாரி புக்கிங் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜவடிவேல் நேற்று சேலத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


இதன் மூலம், தினமும் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு சரக்கு லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படும், கோழி, மாட்டு இறைச்சி, பால், காய்கறிகள், சர்க்கரை, பழங்கள் உள்ளிட்ட பலவகையான அவசியமான பொருட்களில் தட்டுப்பாடு கேரளாவில் ஆரம்பிக்கும் இதன் மூலம் அங்கு பெரிய அளவில் விலையேற்றம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் வைகோ அறிவித்துள்ள முற்றுகைபோராட்டம் வெற்றி பெற்றுள்ளது.

Read more...

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP