சொந்த மண்ணில் தமிழர்கள் அகதிகளாக வாழும்போது உலகத்தமிழ் மாநாடு எதற்கு?ஜெ.

ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் தற்போது நிலைகுலைந்து போய் வேதனையில் இருக்கிறார்கள். 1966 ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய மலேசிய தமிழர்கள் இன்று அந்த நாட்டின் இரண்டாம்தர குடிமக்களாக துன்பப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.


கடந்த ஆண்டு, தங்களுடைய உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், மலேசியத் தமிழர்கள் தெருக்களுக்கு வந்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்த போது, அந்த நாட்டு அரசாங்கத்தால் கொடூரமாக அடக்கப்பட்டனர். இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக கருணாநிதி குரல் எழுப்பவில்லை.

1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய இலங்கைத் தமிழர்கள், இன்று தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகள் முகாம்களில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் இனப் படுகொலை நடந்து கொண்டிருந்தபோது கருணாநிதி குரல் கொடுக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில் உலக தமிழ் மாநாடு எதற்கு? 2010 ஜனவரியில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை கோவையில் நடத்தப்போவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இந்த 'உலகத் தமிழ் மாநாடு' கருணாநிதியை உயர்த்திக் கொள்வதற்காக அறிவிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியே தவிர, இதனால் தமிழ் மொழிக்கு எந்தப் பயனும் இல்லை’’என்று தெரிவித்துள்ளார்.

’’1995ஆம் ஆண்டிலிருந்து 14 ஆண்டுகளாக எந்த நாடுமே ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்த முன் வராததற்குக் காரணம், தமிழ் உலகமே கலக்கத்தில், பெருங்குழப்பத்தில், அமளியில் இருந்து வருவது தான்.

உலகத்தில் உள்ள தமிழர்களின் துயர் துடைக்க கருணாநிதி என்ன செய்தார்? கருணாநிதியின் கட்சி தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த மத்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது வாய் மூடி மவுனியாக இருந்தது குறித்து கருணாநிதி என்ன சொல்லப் போகிறார்?

எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசு ஏற்பாடு செய்தது என்ற ஒரே காரணத்திற்காக 1981ம்ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் கருணாநிதியும், அவரது திமுக கட்சியும் கலந்துகொள்ளவில்லை.


நான் முதலமைச்சராக இருந்தபோது 1995ஆம் ஆண்டு எனது அரசின் ஏற்பாட்டில் தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டிலும் இதே நிலையைத்தான் கடைபிடித்தார் கருணாநிதி.

இதுபோன்ற அரசியல் நாகரீகத்தை உலகத் தமிழ் மாநாடுகளில் புகுத்திய கருணாநிதி, உலகத்தில் வாழும் தமிழர்கள் அனைவரும் எல்லாவற்றையும் மறந்து, கோயம்புத்தூரில் தான் நடத்தும் கேலிக்கூத்தான மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? அவ்வாறு அவர் எதிர்பார்த்தால் அது அவர் செய்யும் மிகப் பெரிய தவறாகும்’’என்று தெரிவித்துள்ளார்.

Read more...

'கருணாநிதியும் திசைதிருப்பலும்'-நெடுமாறன்

தமிழர்களின் கோபத்துக்கும், வெறுப்புக்கும் ஆளாகும் ஒவ்வொரு முறையும் தனது உயிருக்கு ஆபத்து என கூக்குரல் எழுப்பி திசைதிருப்ப முயல்வது முதல்வர் கருணாநிதிக்கு கைவந்த கலையாகும் என நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இது அவர் வெளியிட்ட அறிக்கையில்,

வன்னி வதை முகாம்களில் உள்ள 3 லட்சம் தமிழர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் உயிருக்கு ஆபத்துஎன்று ஓலமிடும் முதல்வர் கருணாநிதியின் செயலால் உலகத் தமிழர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

அதனை சுட்டிக்காட்டியதற்காக என் மீது பாய்கிறார். குண்டர் சட்டத்தைக் காட்டி மிரட்டுகிறார்.

தமிழர்களின் கோபத்துக்கும், வெறுப்புக்கும் ஆளாகும் ஒவ்வொரு முறையும் தனது உயிருக்கு ஆபத்து என கூக்குரல் எழுப்பி திசைதிருப்ப முயல்வது முதல்வர் கருணாநிதிக்கு கைவந்த கலையாகும்.

ஐநா அதிகாரி லின் பாஸ்கோ அகதி முகாம்களை நேரில் பார்வையிட்டு உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளார்.

ஆனால் முதல்வர் கருணாநிதி [^] தில்லிக்கு கடிதம் எழுதுவதும், பிரதமர் சார்பில் அதிகாரிகள் இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதுவதுமான நாடகம் தொடர்கிறதே தவிர ஈழத் தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்கவில்லை.

இதுபோன்ற நாடகங்களை எல்லாம் நிறுத்திவிட்டு முகாம்களில் உள்ள தமிழர்களை மீட்பதற்கு உண்மையான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை மீது பொருளாதார தடை...

தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஐநாவில் இந்தியா கொண்டு வரவேண்டும். அப்போதுதான் இந்திய அரசின் மீது தமிழர்களுக்கு நம்பிக்கை பிறக்கும் என அறிக்கையில் நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

Read more...

புதுவையில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா












Read more...

தொடரும் இன அழிப்பு... ஒரு இந்தியா நாயின் எச்சரிக்கை!

புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் அணிதிரண்டு ஆயுதப் போராட்டத்தை தொடங்கக்கூடும்! இந்தியா எச்சரிக்கை!

உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் அணிதிரண்டு ஆயுதப் போராட்டத்தை தொடங்கக்கூடும் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் M.K.நாராயணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


புதுடில்லியில் இடம்பெற்ற இந்திய காவல்துறை தலைமையதிகாரிகளுக்கான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்:-

"பெரும் படை நடவடிக்கையின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி வளமாக விளங்கும் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் பரந்து விரிந்து காணப்படுகின்றார்கள். எனவே அவர்களின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான நிதி வழங்கல்கள் எவ்விதமான சிதைவும் இன்றி அப்படியே உள்ளன. உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அணிதிரண்டு தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் கட்டியெழுப்பி ஆயுதமேந்தக்கூடும். இது தொடர்பாக நாம் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்."

இவ்வாறு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை



15-09-1909-ல் பிறப்பு காஞ்சிபுரம், தந்தை: நடராசன், தாய்: பங்காரு அம்மாள்.
வளர்ப்பு: இராசாமணி அம்மையார் (சிற்றன்னை) - தொத்தா

1914: பச்சையப்பன் தொடக்கப்பள்ளியில் கல்வி.

1927: காஞ்சி நகராட்சியில் எழுத்தர் பணி.

1928: சென்னை பச்சையப்பன் கல்லூரிக் கல்வி

1930: இராணி அம்மையாரை மணந்துகொள்தல்

1931: மாணவர் செயலராதல், போட்டிகளில் பரிசு பெறல்.

19.03.1931: பெண்கள் சமத்துவம் எனும் முதல் கட்டுரை. தமிழரசு இதழில்

1932: முதல் ஆங்கிலக் கட்டுரை 1933: காங்கேயம் - செங்குந்தர் இளைஞர் மாநாட்டில் முதல் பொழிவு

11.02.1934: முதல் சிறுகதை `கொக்கரக்கோ` ஆனந்த விகடனில் வெளியாதல்

1934: முதுகலைப்ப பட்டப் படிப்பில் தேர்ச்சி

1936: `பாலபாரதி` ஆசிரியர் பொறுப்பு

1934: திருப்பூர் - செங்குந்தர் இளைஞர் மாநாடு பொழிவு. பெரியாருடன் முதல் சந்திப்பு

1935: கோவிந்தப்ப நாயக்கர் பள்ளியில் ஆசிரியர் பணி.

1936: சென்னை நகராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடல். (பெத்துநாயக்கன் பேட்டையில்)

1936: பெரியாருடன் வடாற்காடு மாவட்டச் சுற்றுப்பயணம்

04.04.1937: `நீதிக்கட்சி` செயற்குழு உறுப்பினராதல்

1937: செட்டிநாட்டு அரசர், தம் தனிச் செயலாளராகப் பணியாற்ற வேண்டல்.

09.12.37: முதற்கவிதை `காங்கிரசு ஊழல்` விடுதலையில் வெளிவரல்

1937: `நவயுகம்`, `விடுதலை`, `குடியரசு` இதழ்களின் துணை ஆசிரியர் பொறுப்பு

02.09.38: முதல் மடல் பரதன் பகிரங்கக் கடிதம் விடுதலையில் வெளிவரல்

26.09.38: இந்தியை எதிர்க்க மக்களைத் தூண்டியதாக நான்கு மாத வெறும் காவல் தண்டணை: ராணியம்மை வாழ்த்துச் செய்தி (குடியரசு, விடுதலை)

13.01.39: இந்தி எதிர்ப்பில் உயிர் நீத்த தாளமுத்து நடராசன் இரங்கல் கூட்டத்தில் உரை

18.01.39: தமிழர் திருநாள் விழாவில் டாக்டர் சி.நடேசனார் படத் திறப்பு (சென்னை)

10.02.39: சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியில் இந்தி எதிர்ப்பு உரை

07.1939: முதல் குறும் புதினம் `கோமளத்தின் கோபம்` (குடி அரசு)

12.11.39: `கபோதிபுரக் காதல்` தொடக்கம்

10.12.39: நீதிக்கட்சியின் செயலாளர் ஆதல்

06.01.40: பம்பாயில் பெரியார்-அம்பேத்கர் உரையாடல் மொழி பெயர்த்தமை

23.03.40: முதல் புதினம் `வீங்கிய உதடு` தொடக்கம் (குடி அரசு)

02.06.40: காஞ்சியில் திராவிட நாடு பிரிவினைத் தீர்மானத்தைக் கொனரல்

08.11.40: தி.க.சண்முகம் நடித்த `குமஸ்தாவின் பெண்` நாடகத் திறனாய்வு (குடியரசு)

08.03.42: திராவிடநாடு மதழ் தொடக்கம் தலையங்கம் கொந்தளிப்பில் கவிஞர் பாரதிதாசனின் `தமிழுக்கு அமுதென்று பேர்` எனும் பாடல் முகப்பில்.

1942: சென்னையில் அண்ணா தலைமையில் நீதிக்கட்சி மாநாடு

07.02.43: சென்னைச் சட்டக் கல்லூயில் ரா.பி.சேதுப்பிள்ளையுடன் - சேலத்தில் நாவலர் பாரதியாருடன் கம்பராமாயணச் சொற்போர்

05.06.43: திருவத்திபுரம் லட்சுமி விலாஸ் அரங்கில் `சந்திரோதயம்` எனும் தம் முதல் நாடகத்தில் துரைராஜாவாக நடித்தல்

1944: சேலம் மாநாட்டில் நீதிக்கட்சியை திராவிடர் கழகமாக்கும் தீர்மானத்தை முன்மொழிதல்

05.12.45: சென்னையில் சிவாஜி கண்ட இந்துராஜ்யத்தில் காகபட்டராக நடித்தல்

13.01.46: `பணத்தோட்டம்` கட்டுரை வெளிவரல்

மே 46: இந்தி எதிர்ப்பு போரில் அண்ணாவின் தலைமையில் பலர் சிறை ஏகல்

மே 46: மதுரையில் நடைபெற்ற கருஞ்சட்டை மாநாட்டில் உரை 11.10.46: ஓர் இரவு பற்றி பெர்னாட்சா என்று கல்கி பாராட்டு

29.07.46: நாவலர் பாரதியார் தலைமையில் கவிஞர் பாரதிதாசனுக்கு ரூ.25000 பணமுடிப்பு வழங்கல்

25.04.47: அண்ணாவின் `வேலைக்காரி` படம் திரையிடல்

01.06.47: `நீதி தேவன் மயக்கம்` நாடகம் அரங்கேறல்

10.08.47: ஆகஸ்டு 15 துக்க நாள் என்ற பெரியாரை மறுத்து அது திருநாளே எனத் திராவிட நாடு ஏட்டில் வெளியிடல்

17.08.47: தஞ்சையில் நடைபெற்ற வேலைக்காரி நாடகத்திற்கு தலைமையேற்ற திரு.வ.ரா.வையும், என்.எஸ்.கே. வையும் பாராட்டல்

23.09.47: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், நிலையும் நினைப்பும் என்ற தலைப்பில் உரை

14.12.47: திராவிட நாடு அலுவலகம் காஞ்சியில் 95, திருக்கச்சி நம்பித் தெருவில் அமைத்தல்.

14.01.48: அண்ணாவின் `நல்லதம்பி` படம் திரையிடல்

17.07.48: இந்தி எதிர்ப்பு மாநாட்டில் உரை

02.08.48: இந்தி எதிர்ப்பு மறியலுக்கு தலைமையேற்றல் பின் சிறையேகல்

23,24,10.48: ஈரோடு திராவிடர் கழகத் தனி மாநாடு தலைமையேற்று நடத்தல். காலை ஊர்வரத்தில் அண்ணாவை அமர வைத்து ஊர்வரத்தின் முன் பெரியார் நடந்து வந்தமை, `பெட்டிச் சாவியைத்தருகிறேன்` என்று பெரியார் மொழிந்தமை.

1948 அரசு அறிவித்த கருஞ்சட்டை எதிர்ப்புக்கு எதிராகக் கூட்டப் பெற்ற மாநாட்டில் கலந்து கொள்ளல்.

25.06.48: திராவிட நாடு ஏட்டில் 04.04.48, 18.04.48 ஆகிய நாட்களில் எழுதிய கட்டுரைகள் வகுப்புக் கலவரத்தைத் துண்டுகின்றன எனக் குற்றம் சாட்டி ரூ.3000 பொறுப்புத் தொகை கட்ட அரசு ஆணை பிறப்பித்தது.

18.03.49: அழகிரி மரணத்தால் தவித்த குடும்பத்திற்கு நாடகம் நடத்தி ரூ.5000 வழங்கல்

18.06.49: பெரியார் - மணியம்மை திருமண அறிவிப்பு

03.07.49: பெரியாரின் திருமணத்தைக் கண்டித்தல் கண்டன அறிவிப்புக்கு வேண்டுகோள் விடுத்தல்

17.07.49: `கண்ணீர்த்துளிகள்` தலைப்பில் எதிர்ப்பாளர் பட்டியல் வெளியிடல்

10.08.49: `மாலை மணி` நாளிதழ் ஆசிரியராதல்

21.08.49: `மாஜிகடவுள்` கட்டுரைத்தொடர் தொடக்கம்

17.09.49: சென்னைப் பவளக்காரத் தெரு 7 ஆம் எண் இல்லத்தில் (காலை 7 மணிக்கு) குடந்தை கே.கே.நீலமேகம் தலைமையில் திராவிடர் கழகத் தோழர்களின் எதிர் காலப்பணி குறித்து உரையாற்றல்

17.09.49: மாலை இராபின்சன் பூங்காவில் தி.மு.கழகத்தொடக்க விழா உரை

18.09.49: கழகப் பொதுச் செயலாளரானார்

18.09.49: திராவிட நாடு ஏட்டில் எழுதிய கட்டுரைகளுக்காக (04,18.04.48) நான்கு மாதச் சிறைத் தண்டனை ஏற்றல், எதிர்ப்புக்கண்டு பத்தாம் நாள் விடுதலை செய்யப்படல்

25.09.49: `வெள்ளி முளைத்தது` தி.மு.க.தொடக்கம் குறித்த தலையங்கம்.

04.11.49: வழக்கு விசாரணையில் ஈட்டுத் தொகை கட்ட பணிக்கப்பட்ட அரசு ஆணையைநீதிமன்றம் தள்ளுபடி செய்தல்.

13.11.49: ஈட்டுத் தொகைக்கு கழக ஆதரவாளர் அனுப்பிய நன்கொடைகளைத் திருப்புதல்

12.01.50: எங்கும் பொங்கல் விழா எடுக்க அறிக்கை விடல்

12.01.50: திருச்சி சிறையில் இலட்சிய வரலாறு எழுதுதல்

06.08.50: சமநீதி பார்ப்பதாகச் சட்டமன்றத்தில் அறிவித்த அரசின் முடிவுக்கு அறிக்கை

18.09.50: ஆரியமாயை நூல் எழுதியமைக்காக ரூ700 தண்டமும் கட்டத் தவறினால் ஆறு திங்கள் சிறை வாழும் என அறிவிக்கப் பெற்றமை.

24.10.50: அமைச்சர் இராசகோபாலாச்சாரியாருக்குக் கறுப்புக் கொடி காட்ட முடிவு

1950 இந்தி நல்லெண்ணக்குழுவுடன் சந்திப்பு

20.01.51: திருச்சி உழவர் கிராம ஒன்றிய மாநாட்டில் உரை

01.03.51: ஆரிய மாயை நூலை எங்கும் தடையை மீறிப் பலர் படித்தல்

01.03.51: தடை மீறி ஆரியமாயை 159 இடங்களில் படிக்கப்படல்

15.03.51: காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி நிதிக்காக நாடகம் நடத்தியமை 15.03.51: காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி நிதிக்காக நாடகம் நடத்தி ரூ.21000 வழங்கியமை

06.04.51: இராசேந்திர பிரசாத்துக்குக் கறுப்புக் கொடி

29.04.51: சிதம்பரம் திலையரங்கில் சந்திரமோகன் நாடகம் நடத்தியமை

13.08.51: சர் தியாராயர் கல்லூரி உதவி நிதிக்காகத் தம் குழுவினருடன் நீதிதேவன் மயக்கம் நாடகம் நடத்தியமை

02.11.51: அறிவகம், கட்டிடத் திறப்பில் தலைமையேற்றல்

14.12.51: சென்னையில் தி.மு.கழக முதல் மாநில மாநாடு. அண்ணா மாநாட்டு தலைமையேற்றல்

12.03.52: வடநாட்டு ஆளுநர் நியமனக் கண்டனக் கூட்டத்தில் ஆளுநரை மக்கள் தேர்ந்தெடுத்தல் வேண்டும் என்று கோரியமை.

06.04.52: கழக இளைஞர் மஜீத் கொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரல்

01.08.52: இந்தி எதிர்ப்பு அறப்போர்

28.08.52: ராயல்சீமா பஞ்சநிலைக்கு அண்ணா நன்கொடை அனுப்பியமை

1953: கைத்தறி நெசவாளர் துயர் துடைக்க திருச்சியில் துணி விற்றல்.

25.04.53: திருச்சி மாநாட்டில் காதல் ஜோதி அரங்கேற்றல்

28.04.53: புயல் நிவாரண நிதியாக ரூ 27000 வழங்கல்.

06.06.53: கழக இளைஞர் குடும்பத்துக்கு நிலம் அளித்தல்

15.06.53: நம்நாடு ஏட்டின் ஆசிரியர் பொறுப்பு

08.07.53: குலக்கல்வி கண்டன ஊர்வலத்தில் (காஞ்சிபுரம்) தலைமை

13.07.53: குலக்கல்வி, ரயில் நிறுத்தல், கல்லக்குடி இம் மூன்றையும் உள்ளடக்கிய மும்முனைப் போராட்டத்தைத் தூண்டியதாகக் கைதாதல். மூன்று மாதம் சிறை செல்லல்.

01.09.53: மும்முனைப் போராட்டத்திற்கு ரூ.5000 அபராதத் தொகை (அண்ணா மற்றும் சிலருக்கு) எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதி மன்றம் கலையும் வரை காப்பு.

03.05.54: மொழிவழி மாநிலம் அமைய ஆணையிடம் அறிக்கை அளித்தல்

14.01.55: அண்ணாவின் சொர்க்கவாசல் திரையிடப்படல்

20.03.55: ஐந்தாண்டுத் திட்டம் கண்டன நாள் என அறிவித்தல்.

31.05.55: திருச்சி, இராமநாதபுரம் பகுதில் புயலால் பாதிக்கப் பெற்றவருக்கு நிதி வழங்கியமை

20.02.56: தேவிகுளம் பீர்மேடு பகுதிகளைத் தமிழகத்துடனும், செங்கோட்டை வட்டததின் ஒரு பகுதியைக் கேரளத்துடனும் இணைக்க வேண்த் தெரிவிக்கப்பட்ட கண்டனக் கூட்டததில் பொது வேலை நிறுத்தம் பற்றி விளக்கல்.

17,18,19. 05: 1956: திருச்சி இரண்டாவது மாறில மாநாடு.

20.05.56: தேர்தலில் போட்டியிட முடிவு, அண்ணாவின் கருத்துரைமூவலூர் இராமாமிர்தம் அம்மையாருக்கு விருது

11.03.57: தேர்தல் முடிவு அறிவிப்பு, அண்ணா வெற்றி பெறல்

09.06.57: ஆங்கில வார இதழ் தொடங்கல் ழடீஆநு டுஹசூனு 07.07.57: எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அண்ணா உரையாற்றல்

03.01.58: நேருவுக்குக் கறுப்புக் கொடி காட்ட முடிவு. தடையை மீறிப பேசச்செல்லுகையில் கைது செய்யப்படல்.

02.03.58: தி.மு.க. மாநிலக் கட்சியாகவும், உதயசூரியன் அதன் சின்னமாகவும் இந்திய அரசு ஏற்றல்

22.06.58: இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு நாள் கொண்டாடல்.

06.11.58: பூதவராயன் பேட்டையில் எதிரிகளால் கொலை செய்யப்பட்ட கழகத் தொண்டர் ஆறுமுகம் என்பவர் குடும்பத்துக்கு 1 ஏக்கர் நிலம் வழங்கல்

24.04.59: சென்னை மாநகராட்சிப் பொறுப்பைத் தி.மு.க. ஏற்றல்

20,21.06.59: திருச்சி மாவட்ட தி.மு.க 3வது மாநில மாநாட்டில் உரை

15.05.60: சந்திரமோகன் நாடகம் வழி திரு.பி.பாலசுப்பிரமணியன் நிதிக்கு ரூ.10000 வழங்கல்

01.08.60: சென்னையில் இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்குத் தலைமை ஏற்றல்

25.09.60: சென்னையில் கூடிய பொதுக் குழுவில் அண்ணா பொதுச் செயலாளா ஆதல்.

1960: திராவிட நாடு விடுதலை வார விழாப் பளியில் மாண்ட திரு. கணேசனின் (திருப்பூர்) மனைவியிடம் ரூ.5000 மதிப்புள்ள வீட்டை வழங்கல்.

1962: சம்பத் விலகல் குறித்து அண்ணா வருந்தி அறிக்கை வரைதல்

26.02.62: சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுறல்

26.02.62: சட்டமன்றத்திற்குத் தம்பியர் ஐம்பதின்மர் செல்ல, அண்ணா, பாராளுமன்ற மேலவை உறுப்பினராதல்

04.03.62: செயின்ட்மேரி மண்டபத்தில் அண்ணாவின் தலைமையில் தி.மு.க.சார்பில் வெற்றி பெற்ற 48 எம.எல்.ஏ. 8 எம்.பி. களுக்குப் பாராட்டு

20.04.62: டில்லி மாநிலங்களவை உறுப்பினராதல்

01.05.62: டில்லி மாநிலங்களவைறில் முதல் சொற்பொழிவு

10.06.62: நெசவாளர் மீது விதித்த வரிக்கொடுமைக் கண்டன ஊர்வலம் நடத்தியமை. அண்ணா கைதாதல்.

19.07.62: வேலூரில் விலைவாசி உயர்வைக் கண்டித்து நடந்த மறியலில் கைதாதல்.

02.08.62: அண்ணா தம்மீது தொடரப்பட்ட வழக்கில் தாமே வாதாடல்

03.08.62: விலைவாசி உயர்வுப்போர் - வேலூர் சிறையில் பத்து வாரம்.

02.12.62: சென்னையில் போர் நிதி திரட்டல்.

09.12.62: இந்திய-சீனப்போர் பற்றிய வானொலி உரை

1962: ழடிஅந சுரடந இதழ் தொடக்கம் 07.01.63: சீனர்களின் ஆதிக்கசெறி குறித்துச் சென்னை வானொலியில் ஆங்கில்ப் பேருரை

25.01.63: மாநிலங்கள் அவையில் பிரிவினைத் தடை மசோதா மீது உரை

01.09.63: மகன்கள் பரிமளம், இளங்கோவன் திருமணம்

03.11.63: கட்டாய இந்தியை எதிர்த்ததால் அமைந்த கரையில் கைதாதல்

17.11.63: கட்டாய இந்தி 17 வது மொழிப் பிரிவு சட்டம் எரித்ததல் அன்றே கைதாகி, ஆறு மாதம் சிறைத் தண்டனை ஏற்றல்.

02.12.63: இந்தியைப் புகுத்தும் சட்டப் பிரிவை எரித்தல்

10.12.63: ஆறு மாதக் கடுங்காவல் தண்டனை பெறல்

08.01.65: குடியரசு நாளை இந்தி எதிர்ப்பு நாளாகக் கூறல்.

17.01.65: இந்தி எதிப்ப்பு மாநாடு

26.01.65: துக்க நாளாகக் கொண்டாடியமைக்காக கைது.

29.01.65: விடுதலை ஆதல்

09.02.65: இந்தி எதிர்ப்பில் மாணவர் மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்தக் கூறல்.

09.02.65: சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் சென்று திரும்பிய அண்ணாவிற்கு வரவேற்பு

26.01.66: இந்தித் திணிப்பிற்காகக் குடியரசு நாளைத் துக்க நாள் எனல். அதனால் கைது ஆதல்.

31.12.66, 01.01.67: சென்னை மாவட்ட மாநாட்டில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒரே மேடையில் அமர வைத்தல்

27.02.67: பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெறல்

06.03.67: தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில் தம்யியருடன் 138 பேர் அமர்ந்திட, அண்ணா தமிழக முதல்வர் பொறுப்பேற்றல். அன்றே அரசு ஊழியரிடையே உரையாற்றல்

09.03.67: சென்னை மாநகராட்சி வரவேற்பில் உரை

14.03.67: முதலமைச்சராக வானொலியில் உரை

15.03.67: சட்ட மன்ற வளாகத்தில் உறுதிமொழி கூறி பதவி ஏற்றல்.

16,03.67: இந்தி எதிர்ப்பில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தல்.

11.04.67: தலைமை அமைச்சர் இந்திராவை சந்தித்தல்

14.04.67: சென்னை அரசு தமிழ்நாடு அரசு எனப் பெயரிடப்பட்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டை தமிழக அரசு தலைமைச் செயலகம் என மாற்றிப் செயர்ப் பலகை அமைத்தல்,

22.04.67: சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படல்

26.04.67: மேலவை உறுப்பினராகப் பதவியேற்றல்

09.05.67: அண்ணாவின் அரசால் ஆகாஷ்வாணி வானொலி என வழங்கப்படல்

15.05.67: ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்கல்.

17.06.67: புன்செய் நிலங்களுக்கு நிலவரி ரத்து, பேருந்துகள் அரசுடைமை ஆதல், ஏழைகளுக்கு இலவசக் கல்வி, கலப்புமணப் பரிசு, குடிசைவாசிகளுக்குத் தீப்பிடிக்காத வீடு, காவிரித் திட்டம். 08.07.67: ஒரு கோடி ரூபாய் திரட்டி குடிசைப் பகுதிக்க செலவிட முடிவு.

23.10.67: சீரணியின் நோக்கத்தைப் புலப்படுத்தல்.

1967: அண்ணாமலைப் பேருரை

02.01.68: தமிழ் அறிஞர்களுக்குச் சிலை எடுத்தல்

04.01.68: இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு செயற்குழுத் தலைமை

10.01.68: இரண்டாவது இலகத்தமிழ் மாநாடு எடுத்து உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் நிற்றல்

23.01.68: இருமொழித் திட்டம் கொணரல்

15.04.68: உலகப் பயணம் மேற்கொள்ளல், யேல் பல்கலைக் கழக அழைப்பு

22.04.68: அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் உரை, சப்பெலோஷிப் எனும் சிறப்பு விருதினைப் பெறல்

12.05.68: அமெரிக்கா, ஜப்பான் முதலிய நாடுகளைக் கண்டு திரும்பல்.

21.08.68: பள்ளிகளில் என்.சி.சி.அணியில் இந்தி ஆணைச் சொற்கள் நீக்கல்.

08.09.68: அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பேரறிஞர் அண்ணாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி பெறுமை பெறல்.

09.10.68: புற்று நோயால் பாதிக்கப் பெற்று அமெரிக்கா செல்லல்.

06.11.68: அமெரிக்க மெமோரியல் மருத்துவமனையில் டாக்டர் மில்லரால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தமிழகம் திரும்பல்.

01.12.68: தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்தமைக்கு விழா கொண்டாடல்

14.01.69: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை திறப்பு.

02.02.69: இரவு 12.22 மணிக்கு உடல் இயக்கம் நின்றது.

03.02.69: தமிழ் மக்கள் பேரறிஞர் அண்ணாவை இழந்து துன்பக்கடலில் மூழ்கல்

04.02.69: முற்பகல் 11.40-க்கு முப்படையினர் மரியாதையுடன் அண்ணாவின் உடல் புதைக்கப்பட்டது,

03.02.70: அண்ணா அஞ்சல்தலை - மைய அரசு வெளியிடல்.





அண்ணாவின் சாதனைகள்

1. 1967-ல் அறிஞர் அண்ணா முதல்வரானதும் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயரிட்டார்.

2. தந்தை பெரியாரின் கொள்கையான சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாகும் அரசாணையை கொண்டுவந்தார்.

3. தமிழக மக்களின், மாணவர்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை, மனதில் கொண்டு, இந்தியத் துணைக்கண்டம் முழுதும் மும்மொழி திட்டம் அமுலில் இருந்தபோது, தமிழில் இரு மொழி திட்டம் கொணர்ந்து, தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும்தான், இங்கு இந்திக்கு இடமில்லை என்று தீர்மானம் இயற்றினார்.

4. பதவி ஏற்கும்போது கடவுள் பெயரால் என்று சொல்லி பதவி ஏற்காது மனசாட்சிப்படி - உளமாற எனச் சொல்லி பதவி ஏற்றார்.

5. அண்ணா அரசு அமைந்ததும் ஆகாஷ்வாணி என்பது வானொலி என அழைக்கப்பட்டது.

6. ஏழை எளியோருக்கு பயன்படும் வகையில் சென்னை, கோவை இரு நகரங்களிலும் ரூபாய்க்கு 1 படி அரிசி வழங்கியது.

7. புன்செய் நிலங்களுக்கு நிலவரி ரத்து செய்யப்பட்டது.

8. பேருந்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டது.

9. ஏழைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க ஏற்பாடு - பி.யு.சி வரையில்.

10. பேருந்துகளில் திருக்குறள் இடம்பெற செய்தது.

11. கலப்பு மணம் செய்துகொள்வோரை ஊக்கப்படுத்தும் விதத்தில் தங்க விருது அளிக்கப்பட்டது.

12. சென்னையில் உள்ள குடிசை வாசிகளுக்கு தீ பிடிக்காத வீடுகள் கட்டித் தந்தார்.

13. 1 கோடி ரூபாய் திரட்டி குடிசைப் பகுதிக்கு செலவிட முடிவு செய்தார்.

14. சீரணி எனும் ஓர் அமைப்பைத் தொடங்கி மக்களை அதில் ஈடுபடுத்தி தங்கள் பகுதிக்குத் தேவைப்படுகிற சிறிய, சிறிய வசதிகளை தாங்களே எந்தப் பலனும் எதிர்பாராமல் செய்துகொள்வது என்கிற திட்டம் கொண்டுவந்ததார்.

15. 1968-ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையிலே நடத்தினைர்.

16. கடற்கரைச் சாலையில் தமிழ்ச் சான்றோர்களுக்குச் சிலை நிறுவினார்.
(திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பர், ஜி.யு.போப், பாரதியார், பாரதிதாசன், ஔவையார், கண்ணகி, கால்டுவேல், உ.வே.ச.)

17. பள்ளிகளில் என்.சி.சி. அணியில் இந்தி சொற்களை நீக்க ஆணை பிறப்பித்தார்.

18. அரசு அலுவலகங்களில் உள்ள கடவுளார் படங்களை நீக்க ஆணை பிறப்பித்தார்.

19. முதல்வரானதும், அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் செல்லும் விழாக்களுக்கெல்லாம் அவர்களை பின் தொடராமல் தங்கள் பணியைச் செய்யலாம் என சுற்றரிக்கை அனுப்பினார்.

20. சென்னை செகரட்டேரியட் என்பதனை தலைமைச் செயலகம் என மாற்றியமைத்தார்.

21. விதவைத் திருமணம் செய்து கொள்வோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கினார்.

Read more...

அண்ணா நூற்றாண்டு மீட்சிப் பார்வை...

அண்ணா நூற்றாண்டு விழா கட்டுரை


அண்ணா என்று கழகத்தவர்களால் அன்பொழுக அழைக்கப்பட்ட அறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நிறைவுகிறது. அரை நூற்றுக்கும் மேலாக ஒன்பதாண்டுகளே வாழ்ந்தார் அண்ணா. குறைவான வாழ்நாள் ஆனாலும் நிறைவான வாழ்வினைத் தமிழர்க்குக் கொடுத்திட திராவிட முன்னேற்றக் கழகம் எனும் சீரிய இயக்கத்தை ஆக்கிக்கொடுத்தார். பெரியாரின் கோட்பாட்டை உள்ளடக்கி மொழி, இனம், மானம், பண்பாடு என்ற நெறிப்பாடுகளை வகுத்து வைத்தார்.

அய்யாவின் சிந்தனைகளை அரசியல் வடிவமாக்கி அரசியல் இயக்கமாக தி.மு.கவை நடத்தினார். அண்ணாவின் பேச்சும் எழுத்தும் செயல்பாடுகளும் தி.மு.க.வை ஆட்சியில் அமரச்செய்தது. அண்ணா முதலமைச்சரானார். சென்னை மாநிலம் தமிழ்நாடு ஆனது. தமிழ் நாட்டரசையே தன் ஆசான் பெரியாருக்குக் காணிக்கை ஆக்கிப் பெருமிதம் கொண்டார் அண்ணா.

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்று அரிய சிந்தனையைத் தமிழர்க்குக் கற்றுக்கொடுத்து அறிவியக்கம் கண்ட பெரியாரையே “தான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர்” என்று ஏற்று போற்றினார் அண்ணா.
தமிழர்க்கு நாடு, தமிழர்க்கு உயர்வு, தமிழர் வாழ்வுக்குச் செழிப்பு, சமதர்மம், சமூக நீதி என அடிப்படையான ஆட்சி வல்லமையை அண்ணா நடத்திட முயன்றார், நடத்திச் சென்றார்.

அண்ணா அண்ணா என்று இளையோரும் முதியோரும் பாசத்தோடு அழைத்தனர், அண்ணன் தம்பி உறவாக குடும்பப்பாசப் பொழிவாகக் கழகக் குடும்பத்தை அண்ணா நடத்தினார். “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு” என்று அரசியலில் புது நெறியைப் புகட்டினார். அண்ணாவின் நாவன்மைக்கு நாடே புகழாரம் சூட்டியது.
தமிழர் தலைநிமிர, தன்மானம் பெற்றிட அயராது உழைத்த அண்ணா நெடுநாள் நம்மிடம் நடமாடாமல் மறைவுற்றார். பின்னர் கழகமும் கழக ஆட்சியும் தொடர்ந்தன. வெகு விரைவிலேயே அண்ணாவின் குறிக்கோள்கள் கேள்விக்குரியதாயின. கடமை கண்ணியம் கட்டுப்பாடு எனும் அண்ணாவின் மந்திரச்சொற்கள் கட்டளைச் சொற்களாக்கப்பட்டன. மு.க. கட்டளைக்குக் கழகம் ஆட்பட்டது. நாம் கட்டுப்பாடு என்பதில் கட்டுண்டுக்கிடந்தோம்.

இதயத்தைத் தந்திடண்ணா இரவலாக என்று கவிதை பாடி தன் இதயத்தில் அண்ணாதான் இருக்கிறார் என்று மா கவிஞர் மு.க. சொன்னபோது ஏற்றோம். பின்னர் மாறன் மறைந்தபின் மாறன்தான் தன் இதயத்தில் முதலில் நிற்கிறார் என்ற உடன்பிறப்புக்களுக்கு உணர்த்தினபோது கழகத்தினர் ஏமாந்தனர். கட்சித் தலைமைக்கும் ஆட்சித் தலைமைக்கும் குறிவைத்து எப்படியோ அதனைப் பெற்றுவிட்டார் மு.க.: மாண்பினைப் பெறுவதற்கு மரபுகளையெல்லாம் உடைத்தெறிந்தார்.

பெரியார் உயிரோடு இருக்கும்வரை கழகத்தில் தலைவர் பொறுப்பு இல்லை. பெரியாரே அனைவருக்கும் தலைவர் என்று அண்ணா போற்றினார். ஆனால் பெரியார் இருக்கும்போதே தலைவர் பதவி தி.மு.க.வில் உருவாக்கப்பட்டு தானே தலைவரானார் இன்றைய முதல்வர் மு.க.
காங்கிரசை வீழத்திதான் கழகம் ஆட்சியேறியது. ஆதனை வீழத்தவே முதன்;முதலாகக் கூட்டணி அமைத்தவர் அண்ணா. அதே காங்கிரசுடன், மிசா காலச்சிறைக்கொடுமைகளால் கழகத்தவர்கள் துயருற்றபின்னும் கூட்டணி அமைத்து கைகோர்த்து கழக வரலாற்றில் கரும்புள்ளி வைத்தார் மு.க.
தி.மு.க.வை வெளியில் இருந்து எவராலும் அழித்திட முடியாது என்றார் அண்ணா. அண்ணனின் மறைவுக்குப்பின் கழகம் பிளவுபட வழிவகுத்தார்;. கழக வளர்ச்சிக்குப் பாடுபட்ட ஈகமறவர்களெல்லாம் வெளியேற்றப்பட்டனர், புறந்தள்ளப்பட்டனர்.

தனது தலைமைக்கும் தமது குடும்பத்தார் ஆதிக்கத்திற்கும் கழகத்தில் வழி ஏற்படுத்தப்பட்டன. மகனுக்கு இளைஞரணியும், மகளுக்கு மகளிரணியும் என்ற வகையில் கழக நிர்வாகம் சென்றுவிட்டது. மாநிலம் மண்டலங்களாக ஆக்கப்பட்டன. மகன்களுக்கும் பேரனுக்கும் மாண்புகள் சூட்டப்பட்டன. மகளும் மேலவைக்கு அனுப்பப்பட்டார். துணை முதல்வர் என்றோர் பதவியைப் புதியதாக உருவாக்கி மன்னர் பரம்பரைபோல் தன் மகனுக்கே சூட்டிவிட்டார். தனக்குப்பின்னும் தன் பரம்பரை ஆட்சி தொடர வழிவகை செய்துவிட்டார்.

சமூக நீதி கேட்டு தொடங்கப்பட்ட இயக்கம் ஒரே சமூகத்தின் ஒரே குடும்பத்தின் ஆட்சிக்கு ஆட்பட்டுவிட்டது. சமதர்மம் பேசி வளர்ந்த இயக்கம் தமது குடும்பத்துக்குள் சமநிலைபெற வழிபெற்றுவிட்டது. மக்களாட்சி கேட்ட இயக்கம் தன் மக்களுக்கே ஆட்சி என்ற நிலைக்கு உட்பட்டுவிட்டது. தன்னாட்சி என்பது தனது குடும்ப ஆட்சி என்றாகிவிட்டது. இலவசங்கள் தமிழர்களுக்கு வசந்தங்கள் ஆகிவிட்டன. வாக்குகள் வாங்கப்படுகின்றன. கோடிகளைப்பெற கொள்கைகள் இழக்கப்பட்டன. ஊரிமைகள் மறுக்கப்படுகின்றன.
இந்நிலைமைகளெல்லாம் உருவானபின் கழக ஆட்சியின் கொள்கைகள் திசை மாறிபோயின. இனமானம், மொழி, பண்பாடு அனைத்துமே பின்னுக்குத்தள்ளப்பட்டன.
அண்மையில் நடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தல் தி.மு.க.வின் தற்சார்பு நிலைகளை உலகுக்குத் தோலுரித்துக் காட்டின.

ஈழத்து மண்ணில் இலட்சம்பேர் மடிந்தாலென்ன, இலட்சம்பேர் குருதி கொட்டினாலென்ன? இலட்சக்கணக்கானோர் நாடிழந்தாலென்ன? தமிழீழ நாட்டை மீட்டெடுக்க களம்கண்ட போர்ப்படைப் புலிகள் அழிந்தாலென்ன? இந்த துயர்கண்டு இனப்படுகொலையைக் கண்டு அகிலத்தின் குரலெல்லாம் குமுறினாலென்ன? நமக்குத் தேவை மகுடம், மகுடம் என்று கொஞ்சமும் ஈவிரக்கமின்றி காங்கிரசு கட்சியோடு கூட்டணித்தொடர்ந்தது கொடுமையினுங் கொடுமை.

நலிந்த நிலையிலும் நாற்காலி வண்டியில் ஊர்ந்து ஊர்ந்து டெல்லியில் வலம்வந்து ஆட்சி அதிகாரம் பெற்றிட முயற்சித்தோர் நடுவணில் காங்கிரசு ஆட்சிக்குக் கொடுத்துவந்த ஆதரவை விலக்கி இருந்தால் ஈழத்தில் போர் நன்றிருக்கும் அல்லது நேரிட்ட கொடுந்துயரமாவது குறைந்திருக்கும்.
நம் கண்முன்னே நம்மின மக்கள் அழிவதைப் பார்த்துக்கொண்டிருக்க இங்கு ஏன் ஓர் திராவிட இயக்க ஆட்சி தமிழராட்சி? 1958இல் அறிஞர் அண்ணா “டெல்லியின் அடிவருடிகள் தமிழ்நாட்டின் (காங்கிரசு) ஆட்சியில் இருக்குமட்டும் ஈழத்தமிழருக்கு விடிவேது” என்று புழுங்கினாரே, கழக ஆட்சிக்கும் அல்லவா அது பொருத்தமாகிவிட்டது.

கழகங்களின் பெயரால் தொடர்ந்து ஆட்சிகள் மாறி மாறி வந்தாலும் அண்ணா காணவிரும்பிய சமுதாயம் அமையவில்லை. தமிழுக்கு வலிமை சேர்க்கவில்லை, ஆட்சிமொழிக்கான வழிகாணப்படவில்லை. தனித்தமிழ் தோற்றுப்போகிறது. அயல்;மொழி கலவாத பேச்சில்லை. ஆயிரம் பெயர்களில்; ஓர் பெயர் தமிழாய் தெரிகிறது. தமிழைச் சிதைக்க தொலைக்காட்சிகள், ஊடகங்கள், பண்பாட்டைச் சீர்குலைக்கும் ஆட்டம் பாட்டுகள், முடிவுறா தொடர்கள் என சமுதாயத்தைச் சீரழிக்கும் ஊடகங்கள் இவைகள் மலிந்துவிட்டன.

மொழிப்பற்று, இனப்பற்று, கொள்கைப்பற்று என்றாலே ஏளனமாய்ப் பார்க்கும் இளம் சமூகம் பெருகிவிட்டன. மதவழி சின்னங்கள் குறியாய்க்கொண்டாரெல்லாம் இன்றைக்குக் கழகங்களின் பொறுப்பாளர்களாக மிளிர்கின்றனர். மடாதிபதிகளும் அடியார்களும் கழகத் தலைவர்களின் வீடுகளுக்கே வந்து அற்புதத்தைச் செய்துகாட்டும் அவலங்கள் நடக்கின்றன. மூடத்தனங்கள் பெருகிவிட்டன. மண் சோறு உண்போரும் மண்டையில் தேங்காய் உடைத்து மண்டை உடைபடுவோரும் மலிந்துவிட்டனர். பெண் அடிமை தீரவில்லை, பெண்டிர்க்குக் கல்வி, அரசியல் விழிப்பு இன்னும் வழங்கப்படவில்லை.
இவற்றையெல்லாம் நாம் ஏன் எண்ணிப்பார்க்க வேண்டும்? கழகங்கள் பலவாறாகப் பிரிவுற்று விளங்கினாலும் கொள்கைப்பற்றால் இழந்தவைகளை மீட்க மீள்பார்வை பெற்றாக வேண்டும். இது அண்ணா நூற்றாண்டு. 1969 தொடங்கி 2009 வரையிலான 40 ஆண்டுகள் திராவிட இயக்கம்தான் தமிழ்நாட்டை ஆளுகின்றன.
சுயமரியாதையை அடிப்படையாக வைத்துத்தானே திராவிட இயக்கம் தோன்றியது. ஆரியத்தின் அடித்தளத்தையே அடித்து நொறுக்கத்தானே கழகங்கள் தோன்றின. மாறாக ஆரியமே திராவிடத்தை வீழ்த்துகிற ஊடுறுவல்கள் நடைபெற்றுவிட்டன. பெரியாரின் சிந்தனைகளைப் பரப்புகின்ற முதன்மையான வேலையைச் செய்ய வேண்டிய கழகங்கள் அரசியலைச் சார்ந்து நிற்கின்றன.
எனவேதான் பெரியாரின் சிந்தனைகளிலிருந்து கிளர்ந்தெழுந்த சமூகநீதி, பகுத்தறிவு, இனம், மொழி, பண்பாடு, தன்னாட்சி இவைகள் சிறக்கவும்; சாதி, மதம், தீண்டாமை போன்றவை ஒழியவும் திராவிட இயக்கம் மறுமலர்ச்சியுற வேண்டும். அதற்கான களம் அமைத்து பயிற்சி பட்;டறைகளை உருவாக்க வேண்டும்.

இன்றைக்குத் திராவிட இயக்கம் ஆட்சியிலிருந்தாலும் கொள்கையளவில் வீழ்ச்சியுற்றுள்ளது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த திராவிட இயக்க வீழ்ச்சிக்கும் இன்றைய தமிழ்நாட்டின் முதலமைச்சரே முழு பொறுப்பு.

தள்ளாத வயதிலும் சக்கரவண்டியில் அமர்ந்து சமுதாயப்பணியாற்றி வந்த பெரியாரின் தொண்டு எங்கே? கட்சிக்கும் ஆட்சிக்கும் தாமும் தமது குடும்பமுமே இருக்கவேண்டும் என்று சக்கரவண்டியில் ஊர்ந்துவரும் மு.க.வின் தொண்டு எங்கே! திராவிட இயக்க தமிழியக்கப் பற்றாளர்கள் சிந்திப்போமாக.

1916ல் தொடங்கப்பட்ட நீதிக்கட்சியின் தொடக்கத்தின் நோக்கமும், முனைப்பும் 90 ஆண்டுகட்குப்பின்னும் தேவைப்படும் நிலை நமக்கு நேரிட்டுவிட்டது.
அண்ணாவின் நுற்றாண்டில் மறுமலர்ச்சி பெறுவோமாக.

நன்றியுடன்,

தூ.சடகோபன்
மாநில பொறுப்புக்குழு உறுப்பினர்
புதுச்சேரி மாநிலம்.

Read more...

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP