Showing posts with label சீமான். Show all posts
Showing posts with label சீமான். Show all posts

தமிழர்களை ஒன்றுபடுத்தவே அரசியல் கட்சி: சீமான்

தமிழர்களை ஒன்று​படுத்தவே நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுகிறது என்று அந்த இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். கூறியுள்ளார்.


இதுகுறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் தமிழின எழுச்சி அரசியல் மாநாடு மதுரையில் மே 18ல் நடைபெறுகிறது.​ இது தமிழர்களுக்கான அரசியல் கட்சியாகத் தொடங்கப்படுகிறது.​

இந்திய தேசியம்,​திராவிடம் என்ற பெயர்களில்தான் இதுவரை தமிழகத்தில் கட்சிகள் உள்ளன.​தமிழினத்திற்கென்று ஓர் அரசியல் கட்சியைத் தொடங்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகி​விட்டது.​


ஈழத்தில் முன்பிருந்ததை​விடவும் அதிகமாக தமிழன் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறான்.​ உலகம் முழுவதும் 12 கோடித் தமிழர்கள் இருந்தும் ஈழத் தமிழனுக்கு உதவ முடியவில்லை.​


இலங்கை கடல் படையினால் நாள்​தோறும் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் சித்திரவதை அனுபவிக்கின்றனர்.​ இதுவரை 500 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.​ மத்திய,​மாநில அரசுகள் அவர்களைப் பாதுகாக்க எந்த முயற்சியும் செய்யவில்லை.​ அவர்களுக்கு ஆதரவாக எச்சரிக்கை விடுவதற்குக்​கூட அரசுகள் முயலவில்லை.​


பல்வேறு உலக நாடுகள் இலங்கை அரசு போர்க் குற்றம் செய்திருப்பதைச் சுட்டிக்​காட்டுகின்றன.​ஆனால்,​​ இந்திய அரசு இந்த விஷயத்தில் மௌனமாக இருக்கிறது.​ இந்நிலையில் தமிழ் இனத்திற்கென்று,​​ மொழிக்கென்று அரசியல் கட்சி அமைக்க வேண்டியது அவசியம்.​ தமிழர்களை ஆள்பவர்கள் தமிழன் துயரப்படும்​போது உதவவில்லை.​ எனவே,​​ தமிழரைப் பாதுகாக்க ஓர் அரசியல் கட்சி தேவை.​


இந்தக் கட்சியின் கொடி அறிமுக விழா (சனிக்கிழமை) தஞ்சாவூரில் நடைபெறுகிறது.​ நாங்கள் வசதியாக வாழ்வதற்காகக் கட்சி தொடங்கவில்லை.
​ திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்.​ அப்படியொரு நிலை ஏற்பட்டால்,​​ கட்சியைக் கலைத்து​விட்டு திரைத்துறைக்குச் சென்று விடுவேன்.​ தமிழின அமைப்புகள் விரும்பினால்,​​ அவர்களைத் தேர்தலில் சேர்த்துக் கொள்வோம்.​


கட்சி தொடங்கிய பின்னர்,​ஊர் ஊராகச் சென்று இளைஞர்களிடம் தமிழின உணர்வுகளைப் பரப்புவோம்.​ அரசியல் வகுப்பு​ள் நடத்தி,​​ இளைஞர்களை வழி நடத்துவோம்.​ பெரியார்,​ பூலித்தேவன்,​​ ரெட்டை​மலை சீனிவாசன் போன்ற தமினத்திற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பெயர்களில் படிப்பகங்களைத் தொடங்குவோம்.​


உடல் பயிற்சிக் கூடங்களை அமைத்து,​இளைஞர்களைத் தனித்திறன் மிக்கவர்களாக வார்த்தெடுப்போம்.​ இளைஞர்களை மது,​புகையிலை போன்ற தீயசெயல்களில் இருந்து மீட்டெடுப்போம் என்றார்.

Read more...

தமிழீழம் அடுத்த வல்லரசாக உருவாகும் என்ற அச்சத்தில் உலகமே ஒன்றுசேர்ந்து அதனை அழித்தது: கனடாவில் சீமான்

“பிரபாகரன் என்ற மாமேதையின் கையில் ஓரு நாடு அல்லது தேசம் செல்லுமானால் உலகத்தின் வல்லரசாக சில வருடங்களிலேயே வந்துவிடும். பிரபாகரனின் ஆட்சியைப் பார்த்து, தமிழ்நாட்டு அரசை விமர்சிப்பார்கள் என்ற பயம், துணிவான-தூய்மையான-நீதி, நிர்வாகம், கட்டுக்கோப்பான அரசென்ற பெருமையை ஈழத்தமிழன் பெற்றுவிடுவான் என்ற பயம்.



ஊழலில்லாத தமிழீழத்திற்குப் பயந்த ஊழல்மிக்க ஒரு அரசாட்சி, பிரபாகரன் என்ற மாமேதை அழிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தது என்று செந்தமிழன் சீமான் கனடா ஸ்காப்ரோவில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் தெரிவித்தார்.

“இத்தாலியிலே பிறந்த சோனியா காந்தியை அன்னை என்று மொழியலாம், பிரபாகரனை நான் அண்ணன் எனக் கூறினால் என்னைப் புலி என்கிறார்கள். பிடி என்கிறார்கள். கற்பழித்தவன், கொலைசெய்தவன், எரித்தவன், பள்ளியில் குண்டு போட்டவன் ஒருவரும் பயங்கரவாதிகள் இல்லை. கற்பழிக்காத-கொலைசெய்யாத, போர்க்கைதிகளைப் பாதுகாத்த புலிகள் இயக்கம் பயங்கரவாதிகள் இயக்கம் எனச் சொல்லுகிற பயங்கரவாதத்தை என்னென்று கூறுவது” – என்று கேள்வி எழுப்பிய சீமான் -

“ஈழத்தமிழனுக்கு ஏற்ற ஒரு அரசாட்சி எம்.ஜீயாருக்குப் பிறகு தமிழ்நாட்டில் வரவே இல்லை. விடியலுக்குப் போராடிய விடுதலைப் புலிகள் எதிரியோடு பொருதியிருந்தால் இதுவரைக்கும் வென்றிருப்பார்கள். ஆனால், ஊழல் நிரம்பிய தமிழ் எதிரிகளோடும் அவர்களுக்குப் பொருத வேண்டியிருந்தது. ஆனால், இந்த வரலாறு தமிழனுக்குத் தோல்வி இல்லை. துடித்து எழும். தமிழீழத் தேசம் பிறக்கும்” – என்று தெரிவித்தார்.

எழுச்சியுடன் நடைபெற்ற நிகழ்வு

சாவின்றி உயிர்வாழும் சத்திய தேவதைகளாம் மாவீரர் வணக்கநாள் முதல்நாளாக நேற்று புதன்கிழமை ரொறன்ரோ பெருநகரத்தில் வெகு உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.

ஸ்காபரோ நகரத்தில், கென்னடி-பிஞ் சந்திப்பில், பிஞ் வீதியில் அமைந்துள்ள மெற்றோபொலிற்ரன் மண்டபத்தில் அரங்கு நிறைந்த மக்கள் வெள்ளத்தில், ‘செந்தமிழன்’ சீமானின் சிறப்பு வருகையோடும் ஒரு எழுச்சி விழாவாக, மாவீரரை உள்ளத்தால் நினைந்து விழிநீர் பெருக்கி நின்றதென்றால், தமிழர் வரலாற்றை எழுதும் இன்றைய நாட்கள் அது இளைஞர் கைகளிலேயே உள்ளது என்பதை பறைசாற்றிய நிகழ்வாக இது அமைந்து கொண்டது.

கனடா, தமிழ்மாணவர் அமைப்பினால் நடத்தப்பட்ட இவ்விழாவில் பல்கலை பயிலும் மாணவ மாணவிகள் தமிழீழ தேசத்தைத், தமிழர்களிடம் இருந்து பிரிக்க முடியாது என்ற சத்தியத்தை நிரூபித்த விழாவாக அமைந்திருந்தது.

மிகக் கட்டுப்பாடாக, பாதுகாப்பு வழங்கி, துரிதமாக இயங்கி, மண்ணின் துயரங்களை வெளிக்கொணரும் வகையாக கலை நிகழ்வை நடத்தி மாணவர்கள் இயங்கிய விதத்தைப் பார்த்தால் தமிழர் சமுதாயம் என்றும் குனியாது நிமிர்ந்து எழும் என்பதை உறுதி செய்த விழாவாகவும் இது அமைந்து கொண்டது.

விழா தொடங்குவதற்குப் பன்னிரண்டு மணித்தியாலங்கள் முன்னதாகவேதான் விழாவுக்கான இடத்தின் அறிவிப்பு தொலைக்காட்சி, வானொலிகள் மூலம் அறிவிக்கப்பட்டபோதும் அரங்கு மக்கள் வெள்ளத்தால் நிரம்பியிருந்தது.

இசை, நாடகம், மாணவர் தலைவர்களின் பேச்சுக்கள், ஏனைய பல்கலாச்சார மாணவர் அமைப்புகளின் தலைவர்கள், பலதரப்பட்ட பல்கலைக்கழங்களின் தமிழ் அமைப்புக்களின் தலைவர்கள் வழங்கிய உரைகள் என சபைஉணர்ச்சிப் பிழம்பாக மாறியது.

விழா ஆரம்பத்தில், தமிழீழத் தேசியக்கொடி, கனடியத் தேசியக்கொடி என இருநாட்டுக் கொடிகளும் ஏற்றப்பட்டன. கனடியத் தேசிய கீதமும், தமிழீழத் தேசிய கீதமும் இசைக்கப்பட்டன. ‘இனிதான உலகத்தில் அழகான தமிழீழம் உருவாகக் காண்போமே மாவீரரே’ என்ற பாடலுக்கு எழுந்து நின்று வணக்கமும், மௌன அஞ்சலியும் இடம்பெற்றது.

இதனைஅடுத்து, தொழிலதிபர் பாபு மற்றும் மாணவர் தலைவர்களோடும் சீமான் அவர்கள் அரங்கத்தில் நுழைந்தார். சிதைக் கோவிலில்,போராளி உறவினரால் ஈகச் சுடர் ஏற்றலும், ‘செந்தமிழன்’ சீமான் அவர்களால் மலர்க்கொத்து இட்டு அஞ்சலியும் இடம்பெற்றது. வரவேற்பு நடனம், கிரிசாந்தி வதை நாடகம், மண்ணின் துயர், இசை, நடனம், என மாணவர்களின் பங்களிப்பு உள்ளத்தை உருகவைத்தன.

விழாவில் செந்தமிழன் சீமானின் உருக்கமான, உணர்ச்சியான, எழுச்சியான, யாதார்த்தமான உணர்வலைகள் நிரம்பிய பேச்சால் மௌனித்திருந்தது சபை. அவரது கருத்தாடல் மிக்க பேச்சுக்களால் கைதட்டி ஆர்ப்பரித்தது சபை. ஓரு மணித்தியாலமாக அரங்கத்தை வீரச்சுரங்கமாக மாற்றிய செந்தமிழன் சீமான், தேசியத் தலைவன் பிரபாகரன் தனக்குப் பணித்திருந்த வழியிலேயே தான் செல்வதாகக் கூறினார்.

இறுதியாக அனைவரும் எழுந்து நின்று, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுக்குக் கரமிசைத்து நிமிர்வு கொண்ட காட்சி இதயத்தை ஈர்த்துக் கொண்டது.

Read more...

குடும்ப நலனுக்காக, இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா? இனத்தைக் காக்க, குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா? - சீமான் ஆவேசம்

ஈழத்தமிழர்களை காக்கக்கோரி பெங்களூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இயக்குநர் சீமான் பேசும்பொழுது “குடும்ப நலனுக்காக, இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா? இனத்தைக் காக்க, குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கருநாடகத் தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் பெங்களூரில் “மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்” நேற்று ஞாயிறு காலை நடைபெற்றது. முன்னதாக பெங்களூர் கிழக்குத் தொடர்வண்டி நிலைய திடலில் எழுச்சி கரமான பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு கருநாடகத் தமிழ் மக்கள் இயக்க தலைவர். சி.இராசன் தலைமை தாங்கி உரையாற்றினார். தொடர்ந்து பேராசிரியர் பாப்பையா தமிழீழ மக்களுக்கான ஆதரவை தனது கன்னட உரையின் வழித் தெரிவித்துக் கொண்டார்.



சிறப்புரையாற்றிய இயக்குநர் சீமானின் உணர்ச்சிக் கரமான உரையைக் கேட்டு கூடியிருந்த தமிழர் கூட்டம் உணர்ச்சி பிழம்பாகவே மாறிவிட்டது.
மனித சங்கிலி கலந்துக் கொண்ட அனைவரும் தேசியத் தலைவரின் படத்தையும், தமிழீழ ஆதரவு பதாகைகளையும் ஏந்தியிருந்தது குறிப்பிடத் தக்கது.

தமிழீழ எதிர்ப்புப் போக்கை கடைப்பிடிக்கும் கருணாநிதியின் குடும்பப் பத்திரிகையான தினகரன் பொதுக் கூட்டத் திடலில் எரிக்கப்பட்டது.

இயக்குநர்.சீமான் தனது எழுச்சியுரையில், இனவெறி பிடித்த சிறிலங்கா அரசு, சீனாவும், பாகிஸ்தானும் கொடுத்த ஆயுதத்தையும், இந்தியா கொடுத்த ஆயுதத்தையும், பயிற்சியையும் பயன்படுத்தி தமிழினத்தை முற்றாக அழிக்கப் பார்க்கிறது.

தமிழ் நிலத்தை சுடுகாடாக்கிவிட்டு, நாடு அமைதியாக இருப்பதாக கொக்கரிக்கிறது.

இந்த அமைதியில், சிங்களவன் நிம்மதியாக இருக்கமுடியாது.

இனி, புலிகள் மரபு வழி யுத்தம் செய்யப் போவதில்லை.

சிங்களவனே, நீ ஒரு பள்ளியில் குண்டு போட்டால், புலிகளின் குண்டு பத்து பள்ளிகளின் மேல் விழும்.

இரத்த உறவுகள் மானபங்கபடுத்தப்பட்டு, கொல்லப்படும் வேதனையை தமிழன் மட்டுமே அனுபவித்து வந்தான்,

இனி இந்த கொடுமைகளையெல்லாம் சிங்களவன் அனுபவிக்க போகிறான். அப்போது, மனித உரிமை பற்றிப் பேச எந்த வல்லாதிக்க அரசுக்கும் அருகதை கிடையாது.

தமிழினத்தை சொந்தமண்ணிலே, முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்கிறான் சிங்களவன்; அந்த சிங்களவனுக்கு ஆதரவாக, ஐ.நா. மன்றத்தில் முதல் கையெழுத்துப் போட்டு ஆதரவு தெரிவிக்கிறது இந்தியா.

ஒரு மலையாளி கொல்லப்பட்டிருந்தால், நாராயணன் பல்லிளித்துக் கொண்டு ராஜபக்சவுடன் கை குலுக்குவானா?

வழக்கை முடிக்க இறப்பு பத்திரம் கேட்கிறான். அடேய் பாவி, உனக்கு வழக்கு முடிக்க தமிழினத்தின் வாழ்க்கையா முடியவேண்டும்?

ஒரு மலையாளி கொல்லப்பட்டிருந்தால், ஏ.கே அந்தோனி ஆயுதம் கொடுப்பானா??

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் பதவிக்காக நாயை விட கேவலமாக நக்கிட்டு கிடக்கிறான்…..

சிங்களவன் தமிழச்சி சேலையை உருவி மானப்பங்கபடுத்தறான்.

அந்த சிங்களவனிடம் கை குலுக்கிட்டு வந்து தமிழ்நாட்டில் நம் தமிழ்தாய்மார்களுக்கு சேலை கொடுத்து வாக்கு கேட்கிறான்… ச்சீய்….என்ன மானங்கெட்டத் தனம்?

குடும்ப நலனுக்காக இனம் அழிவதை வேடிக்கை பார்ப்பவன் தலைவனா?

இனத்தைக் காக்க குடும்பமே அழிந்தாலும் களமாடுகிறவன் தலைவனா??

மே-17 ந்தேதி, பிரபாகரன் இறந்துவிட்டதாக செய்தி வந்தவுடன் தமிழ்நாடே இழவு வீடாகி போனது. தமிழினமே செத்துப் போனது.

பிரபாகரன் நலமாக உள்ளார் என்ற செய்தி கிடைத்தவுடனே,தமிழினமே உயிரெழுந்தது. இப்போது புரிந்து கொள்ளுங்கள்…. தமிழினத்தின் உயிர் யார்? என்பதை….

தமிழினத்தின் ஜீவநாடி, பிரபாகரனின் கையில் தான் உள்ளது.

கம்யூனிச நாடுகளான சீனமும், கியூபாவும், வியட்நாமும் கூட சிறிலங்காவிற்கு ஆதரவளிப்பதேன்?

ராஜபக்ச காட்டியும்,கூட்டியும் கொடுப்பதால் தான்…..

சீனாவிற்கு அம்பாந்தோட்டையில் துறைமுகத்திற்கு நிலம் தருகிற ராஜபக்ச தேசியவாதியா?

அன்னை நிலத்தை, அந்நியனுக்கு தராமல் போராடும் பிரபாகரன் தீவிரவாதியா?

அன்று, பண்டார வன்னியனுக்கு ஒரு காக்கை வன்னியன்!

கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன்!!

இன்று, பிரபாகரனுக்கோ…..’கருணா’க்கள் !!!

துரோகிகளாலேயே, இந்த இனம் தொடர்ந்து வீழ்த்தப்படுகிறதே! என வேதனையோடு குறிப்பிட்டார்.

சீமானின் உணர்ச்சிகரமான உரையைக் கேட்டு கூடியிருந்த தமிழர் கூட்டம் உணர்ச்சி பிழம்பாகவே மாறிவிட்டது.

நிகழ்ச்சி நடைபெற்ற திடல் எங்கும் தேசியத் தலைவரின் படங்களும்,ஈழத்தின் மனித பேரவலத்தை விளக்கும் பதாகைகளும் நிரம்ப இருந்தன.

ராஜபக்ச உருவபொம்மை தூக்கிலிடப்பட்டு, தீயூட்டப்பட்டது.

சோனியா,கருணாநிதி ஆகியோரை தமிழின இரத்தம் குடிக்கும் எதிரியாக,துரோகியாக… உருவகப்படுத்தி, பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

தங்கவயல் தமிழர் முன்னேற்ற முன்னணி என்ற அமைப்பின் சார்பில்,தமிழீழ எதிர்ப்புப் போக்கை கடைப்பிடிக்கும்… கருணாநிதியின் குடும்பப் பத்திரிகையான தினகரன் நாளிதழ் பொதுக் கூட்டத் திடலில் எரிக்கப்பட்டது.

இதே தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்து கணிப்பினால்,அழகிரியின் ஆதரவாளர்கள் தினகரன் அலுவலகத்தை தீயிட்டு கொளுத்தியதில்,தினகரன் ஊழியர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டதும், திமுகவின் அடுத்த சர்வாதிகாரி யார்? என அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் நடந்த சகோதர யுத்தத்தில், முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

எழுச்சிகரமாக நடந்த மனித சங்கிலிப் போராட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களும், ஏராளமான கன்னடர்களும் கலந்து கொண்டனர். மனித சங்கிலியில் கலந்து கொண்ட அனைவரும் தேசியத் தலைவரின் படத்தையும், தமிழீழ ஆதரவு பதாகைகளையும் ஏந்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read more...

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP