சென்னையில் பரபரப்பு சிங்களவர்கள் மீது தாக்குதல்


சென்னை எழும்பூர் கென்னத் லேனில், சிங்களர்களின் மகாபோதி சங்கம் உள்ளது. இந்த சங்கத்திற்கு இலங்கை அரசு நிதியுதவி செய்கிறது. இங்கு ஒரு புத்தர் கோவிலையும் வைத்துள்ளனர். இங்கு இலங்கையைச் சேர்ந்தவர்கள் தவிர நேபாள நாட்டினரும் வருவார்கள்.
Ancient ghosts Pictures, Images and Photos

நேற்று இரவு இங்கு திடீரென பத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர். உள்ளே வந்தவர்கள், சரமாரியாக கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அலுவலக கண்ணாடி, கோவிலுக்குள் இருந்த கண்ணாடி, டிவி உள்ளிட்டவை உடைந்து சிதறின. கல்வீச்சில், புத்த பிக்குகள் மைதிலி, சமீத தேரா, வஜ்ர தேரா உள்ளிட்ட ஐவர் காயமடைந்தனர். அவர்களையும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தாக்கினர். இதையடுத்து அவர்கள் அலறியடித்தபடி உள்ளே ஓடினர். மேலும் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும் அலறி அடித்து ஓடினர். பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் போனது. அதேபோல இலங்கை துணைத் தூதரகத்திற்கும் தகவல் போனது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்தனர். ஆனால் அவர்களால் தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க முடியவில்லை. சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை துணைத்தூதரகத்தை சேர்ந்த அதிகாரிகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார்? ஏன்? எதற்காக தாக்கினார்கள் என்று விசாரித்து வரும் போலீசார், தாக்குதல் நடத்திய கும்பலை தேடும் பணியையும் முடுக்கிவிட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை கடந்த பத்து நாட்களில் 2 தமிழக மீனவர்களை கொடூரமாகக் கொன்றுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொதிப்பான நிலை நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கு. இந்தப் பின்னணியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது


நன்றி
- தமிழ் கூடல்
- போட்டோ பக்கட்

Read more...

தமிழக கடல் வழியே இலங்கைக்கு 1000 வாட் மின்சாரம் - ஷாக் ரிப்போர்ட்

"எல்லாத்துக்கும் மேல் மின் பற்றாக் குறையால் தமிழகமே தத்தளிக்கும் போது.... ஈழத்தமிழர்களை கொன்று குவித்த சிங்களவனுக்கு மின்சாரம் தருவதை ஏற்கவே முடியாது. போராட் டம் பெரியளவில் வெடிக்கும்'' என்கின்றனர்."

இலங்கையில் போர் நிறுத்தத்திற்கு பிறகு அந்த நாட்டுடன் பல்வேறு ஒப்பந்தங்களை போட்டுக்கொண்டிருக்கும் இந்திய அரசு, தற்போது தமிழகம் வழியாக இலங்கைக்கு மின்சாரம் கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருப்பது கண்டு தமிழர் அமைப்புகளும் மீனவர் அமைப்புகளும் கொதித்துப்போயிருக்கின்றன.

இந்திய மின் தொகுப்பு கழகமும் (பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இண்டியா) இலங்கை மின்சார வாரியமும் இணைந்து, தமிழகத்திலுள்ள ராமேஸ்வரத்திலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு கடலுக்கடியில் மின்கேபிள்கள் மூலம் மின் பகிர்மா னம் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான அகழாய்வு பணிகளை துவங்க திட்டமிடப் பட்டுள்ளன.


இதுகுறித்து தெரிவித்துள்ள இலங்கை மின் வாரிய சேர்மன் வித்ய அமரபால,’""அரசின் ஒப்புதல் கிடைத்ததும் விரைவில் இந்த பணி துவங்கும்'' ’என்றிருக்கிறார்.

இந்த திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது பா.ம.க., மற்றும் இந்து மக்கள் கட்சி. இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப் பாளர் கண்ணன்,’’""இலங்கைக்கு இந்தியா வழங்கவுள்ள இந்த மின் திட்டத்திற்கான மொத்த தூரம் 125 கிலோமீட்டர். இதில் கடலுக்கடியில் மட்டும் 50 கிலோ மீட்ட ருக்கு மின்சார கேபிள்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் திட்டச்செலவு 4 ஆயிரம் கோடி ரூபாய்.


இதில் 1 கோடி ரூபாய் செலவில் கடலுக்கடியில் மின்கேபிள்கள் அமைப்பதற்கான ஆய்வுகள் செய்ய மத்திய அரசின் மின் தொகுப்பு கழகம் முடிவு செய்திருக்கிறது. இந்தத் திட்டம் செயல் படுத்தப்படும்போது இலங்கைக்கு 1000 மெகா வாட் மின்சாரத்தை இந்தியா வழங்கும். தமிழகத் தின் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர் களை வகைத்தொகையாக படுகொலை செய்த இலங்கைக்கு மின்சாரம் வழங்க இந்தியா முடிவு செய்திருப்பது கண்டு நெஞ்சு பொறுக்கவில்லை.

நீதிமன்றத்தின் மூலம் இதனை தடுத்து நிறுத்துவதற்கு வழி உண்டா என்று சட்ட நிபு ணர்களுடன் கலந்தாலோசித்துக் கொண்டிருக் கிறோம். தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் காங்கிரஸை வேரறுக்க தமிழர் களுக்கு ரோஷம் வரவேண்டும். அப்போதுதான் தமிழர்களுக்கு எதிராக சிந்திப்பதை காங்கிரஸ் தலைமை நிறுத்தும்''’’என்கிறார் ஆவேசமாக.

இந்திய அரசின் இந்த திட்டத்தை அறிந்து பதட்டமடைந்திருக்கிறார்கள் தமிழக மீனவர்கள் சங்கத்தினர். நம்மிடம் பேசிய இந்திய மீனவர் பேரவை நிறுவனத் தலைவர் ஆவின் பாபு, தமிழ் நாடு மீன வர் முன் னேற்ற சங் கத்தின் தலை வர் கோசு மணி, தென் னிந்திய மீனவர் நலச் சங்கத்தின் தலைவர் கு.பாரதி, ""160 கிலோ மீட்டர் பரந்து விரிந்துள்ள மன்னார் வளைகுடா பகுதியில் 3600-க்கும் மேற்பட்ட அரிய வகையிலான கடல்வாழ் உயிரினங்களும் பவளப் பாறைகளும் உள்ளன.

under the sea Pictures, Images and Photos

இதனை ’தேசிய கடல்வாழ் உயிரின பூங்கா’என்று தமிழக அரசு பராமரித்து வருகிறது. இந்தச் சூழலில், கடல் வழியாக இலங்கைக்கு மின்சாரம் வழங்க மேற்கொள்ளப்படும் ஆய்வு பணிகளால் அரியவகை கடல்வாழ் உயிரினங்களும் தாவரங்களும் பவளப்பாறைகளும் அழிந்து விடும் அபாயம் உள்ளது. மேலும் மீனவர்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படும். தவிர மின் கேபிள்கள் அமைக்கப்பட்டு மின்பகிர் மானத்தின் போது ஏதேனும் சிறிய தவறு ஏற்பட்டாலும் ஜீரணிக்க முடியாத விளைவுகளும் ஏற்பட்டு விடும். எல்லாத்துக்கும் மேல் மின் பற்றாக் குறையால் தமிழகமே தத்தளிக்கும் போது.... ஈழத்தமிழர்களை கொன்று குவித்த சிங்களவனுக்கு மின்சாரம் தருவதை ஏற்கவே முடியாது. போராட் டம் பெரியளவில் வெடிக்கும்'' என்கின்றனர்.

இந்த மின்சார திட்டத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து தமிழர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும்

தமிழர் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தோழர் தியாகு,’’""யுத்தம் என்கிற பேரில் ஈழத்தில் தமிழினப் படுகொலை செய்தது ராஜபக்சே அரசு. உலகின் பல்வேறு நாடுகள், "இனப்படு கொலை செய்த நாடு இலங்கை' என்று பதிவு செய்து கொண்டு வருகின்றன. ஐ.நா.மன்றமும் ராஜபக்சேவின் போர்க் குற்றங்களை விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறது. இதனையெல்லாம் சிறிதும் மதிக்காமல், போரின் போது இலங்கைக்கு ஆதரவாக எப்படிப்பட்ட உதவிகளெல்லாம் செய்து ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் இந்தியா துரோகம் செய்ததோ... அப்படியே போருக்கு பிறகும் செய்து கொண்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகம் வழியாக இலங்கைக்கு மின்சாரம் என்பது தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் இந்தியா செய்கிற ஜீரணிக்க முடியாத பெரிய துரோகம். முளையிலேயே இதனை கிள்ளி எறிய தமிழர்கள் ஒன்று திரள வேண்டும். இல்லையேல் தமிழர்களுக்கு எதிரான காங்கிரஸின் நடவடிக்கைகள் அதிகரிக்கவே செய்யும்''’என்கிறார்.

தமிழகம் வழியாக மின்சாரம் என்பதால் தமிழகத்திற்கான மின் ஒதுக்கீட்டிலிருந்து இலங்கைக்கு மின்சாரம் வழங்கப்படும் என்கிற சந்தேகம் பலருக்கும் இருப்பதால், இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சேர்மன் கபிலனிடம் கேட்டபோது,’’" "இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அனைத்தும் மின் தொகுப்புக்குள் கொண்டு வரப்பட்டு... மின் தொகுப்பி லிருந்துதான் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு மின்சாரம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டு அதற்கேற்ப வழங்கப்பட்டு வருகிறது.


இலங்கைக்கு மின்சாரம் வழங்குவது தொடர்பாக இந்திய மின்தொகுப்பு கழகம் எந்த மாதிரியான செயல்முறைகளை கையாளுகிறது என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால்... தமிழகத்திற்கான மின் ஒதுக் கீட்டிலிருந்து இலங்கைக்கு மின்சாரம் வழங்கப் படாது என்பதை மட்டும் உறுதியாக தெரிவிக்க முடியும். அதனால் அந்த சந் தேகம் யாருக்கும் வேண்டாம்''’’என்கின்றார்.



நன்றி - Tamilcanadian

Read more...

சினைமுட்டை விற்கும் இளம்பெண்கள்! புதுச்சேரிவியாபாரவிபரீதம்!

மாநிறமான பெண்ணின் சினைமுட்டை ரூ. 10 ஆயிரம்... சிவப்பான இளம்பெண்ணின் சினைமுட்டை ரூ. 50 ஆயிரம்... லட்சணமான, கல்லூரி மாணவியின் சினைமுட்டை ரூ. ஒரு லட்சம்... கேரளப் பெண்ணின் சினைமுட்டை ரூ. 3 லட்சம்...

இப்படி சினைமுட்டை வியாபார விபரீதம் மேலை நாடுகளில் அல்ல... நமது புதுச்சேரியில்தான் ஜரூராய் நடக்கிறது.

‘‘குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப்பேறு உருவாக்க வாடகைத் தாய், சினைமுட்டை தானம் போன்ற முறைகள் மருத்துவத் துறையில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், புதுச்சேரி அரசு மகப்பேறு மருத்துவமனை டாக்டர்கள் சிலரோ சினைமுட்டை தானத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் கரன்ஸி வேட்டைக்கு இளம் பெண்கள், கல்லூரி மாணவிகளை இரையாக்குகிறார்கள்’’ என்று அதிர்ச்சியோடு சொல்கிறார்கள் புதுச்சேரி சமூக ஆர்வலர்கள். இது பற்றி புதுச்சேரி அரசு மகப்பேறு மருத்துவமனையின் சீனியர் பெண் மருத்துவர் ஒருவரிடம் பேசினோம்.

‘‘வலுவில்லாத சினைமுட்டை, ஹார்மோன் குறைபாடு உள்ளிட்ட பல காரணங்களால் சிலருக்கு பிள்ளைப் பேறு கிடைப்பதில்லை. இப்படி குழந்தைக்காக ஏங்கும் மேல்தட்டு, நடுத்தர மக்கள் லட்சக்கணக்கில் செலவு செய்ய தயாராக இருப்பதை சில மருத்துவ வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அவர்கள்தான் சினைமுட்டை குறைபாடுள்ளவர்களுக்கு குழந்தைப் பேற்றை உருவாக்க வேறொரு பெண்ணிடமிருந்து சினைமுட்டையை பணம் கொடுத்து தானமாக பெறுகிறார்கள். ஆனால், இப்போது தானம் என்ற பெயரில் இது வியாபாரமாகிவிட்டதுதான் கொடுமை.

சினைமுட்டையை தானமாகப் பெறுவதற்கு இந்திய மெடிக்கல் கவுன்சில் சில சட்ட திட்டங்களை வகுத்திருக்கிறது. சினைமுட்டை கொடுக்கும் பெண்ணிற்கு ஆஸ்துமா, இதயக் கோளாறு, மஞ்சள் காமாலை, ரத்த சோகை போன்ற நோய்கள் அல்லது பரம்பரை நோய் ஏதும் இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். அதன்பிறகே சினைமுட்டையை எடுக்கவேண்டும். காரணம், ஆரோக்கியமான பெண்ணிடம் இருந்து சினைமுட்டை எடுத்தால்தான், அதைப் பெறும் பெண்ணுக்குப் பிறக்கக்கூடிய குழந்தையும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

ஆனால், பணத்தாசை பிடித்த டாக்டர்கள், சினைமுட்டை தரும் பெண்களிடம் சுகர், ரத்த அழுத்தம், எச்.ஐ.வி. மாதிரியான சில பரிசோதனைகளை மட்டும் செய்துவிட்டு, சினைமுட்டைகளை எடுத்து விற்கிறார்கள்’’ என்றார் வேதனையோடு.

அதே மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் சிலரோ, “இந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் டாக்டர்களில் பலர் சொந்தமாக கிளினிக்குகள் நடத்தி வருகிறார்கள். இவர்கள் தங்களிடம் பணிபுரியும் நர்ஸ்கள், கம்பவுண்டர்களையே சினைமுட்டை புரோக்கர்களாக பயன்படுத்துகிறார்கள்.

சினைமுட்டை கொடுக்கும் கிராமப்புற பெண்கள் மற்றும் இளம் விதவைகளுக்கு ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரையும், சிவப்பான இளம் பெண்களுக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரையும், அழகான காலேஜ் பெண்களுக்கோ ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரையும், கேரளப் பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரையும் கொடுக்கப்படுகிறது.

சினைமுட்டையை விற்பதில் பெரும்-பாலோர் காலேஜ் பெண்கள்தான். இது-போன்ற சினைமுட்டை விற்பதால், உடம்பில் வெளிப்படை-யாக எந்த மாற்றமும் தெரியாது என்பதால் இடைவெளி விட்டு இந்த பெண்கள் சினைமுட்டைகளை தொடர்ந்து விற்றுவருகிறார்கள்.

சினைமுட்டையை, ஒரு பெண்ணிடமிருந்து எடுப்பதற்கு 10 நாட்கள் முன்பிருந்தே தொடர்ந்து ரூ. 600 மதிப்புள்ள ஹார்மோன் ஊசிகளைப் போடவேண்டும். அந்த ஊசிகளையும் இந்த அரசு ஆஸ்பத்திரியில் ஓசியில் போடுகிறார்கள். பிறகு தங்­­­­­களுடைய கிளினிக்குக்கு வரச் சொல்லி, சினைமுட்டையை எடுத்துவிடுகிறார்கள். சினைமுட்டை கொடுப்பவர்களிடம் முதலில் பெரிய தொகையைக் கொடுப்பதாகச் சொல்கிற டாக்டர்கள், பின்பு குறைந்த தொகையைக் கொடுத்து ஏமாற்றிவிடுகிறார்கள்.

புதுச்சேரியை அடுத்துள்ள ஒரு கிராமத்துப் பெண்ணிடம் சினைமுட்டை பெறுவதில் இந்த ஆஸ்பத்திரி டாக்டர்களான ஒரு பெண் டாக்டருக்கும் ஒரு ஆண் டாக்டருக்கும் கடந்த வாரம் பிரச்னை வெடித்து, அது வடக்கு பகுதி எஸ்.பி.வரை போய், அவர் தலையிட்டு ஒரு வகையாக அமுக்கப்பட்டது. இது தொடர்பாக ஒரு டாக்டருக்கு மெமோ கொடுக்கப்பட்டிருக்கிறது’’ என்றார்கள்.

இதுபற்றி புதுவையின் பிரபல பாலியல் குறைபாடு சிறப்பு மருத்துவரான பீட்டர் பால் அல்போன்-ஸிடம் பேசினோம். “சினைமுட்டை தானம் வெளிநாடுகளில் சாத்தியம். அங்கு சினைமுட்டை தானம் பண்ணுகிற பெண்களே இன்டர்நெட்டில் தன்னோட கூந்தல், தோல் நிறம், உருவ அமைப்பு போன்றவற்றையெல்லாம் சொல்லி விளம்பரம் செய்வார்கள். அதேபோல, இங்கே அந்த வேலையைச் செய்ய புரோக்கர்கள் இருப்பது வேதனையான விஷயம்.

திருமணமாகாத பெண்கள் பணத்திற்காக சினைமுட்டை கொடுக்க, அடிக்கடி ஹார்மோன் ஊசி போட்டுக்கொள்வதால்... பிற்காலத்தில் அப்பெண்களுக்கு உடல்ரீதியாகப் பல பிரச்னைகள் ஏற்படுவதோடு, அவர்களுக்கு பிள்ளை பிறக்கிற வாய்ப்புமில்லாமல் போகலாம்...’’ என்று எச்சரித்தார்.

இந்தச் சினைமுட்டை வியாபாரம் குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் திலிப்குமார் பாலிகாவின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். “சினைமுட்டை பிஸினஸ் பற்றி எந்த புகாரும் இதுவரை எங்களுக்கு வரவில்லை. இருந்தாலும், இனி கவனமாக செயல்படுவோம்...” என்றார்.

புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் வல்சராஜிடம் பேசினோம். “இது சம்பந்தமாக இயக்குனர் மற்றும் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தி, இம்முறைகேட்டைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்கிறேன்’’ என்றார்.

இளம் பெண்களின் எதிர்-காலத்தையே ‘முட்டை’யாக்கக் கூடிய இந்த சினைமுட்டை வியாபார விபரீதத்தை உடனடியாக தடுக்காமல் இருப்பது, எதிர்கால சந்ததிகளுக்கு செய்யும் துரோகம்!
- நன்றி - தமிழக அரசியல்

Read more...

புதுவையில் தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து லோகு அய்யப்பன் விடுதலை


இலங்கை அகதிகளை படகில் வெளிநாட்டுக்கு தப்ப வைக்க முயற்சி செய்ததாக புதுவை பெரியார் திக தலைவர் லோகு.அய்யப்பன் கவுன்சிலர் சக்திவேல் ஆகியோரும் டீசல் பதுக்கியதாக காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணியும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் லோகு அய்யப்பனின் தந்தை லோகநாதன் தனது மகன் மீது போடப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யு மாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மனு அனுப்பியிருந்தார். இதேபோல் கவுன்சிலர் சக்திவேலுவை விடுவிக்குமாறு அவரது மனைவி கயல்விழியும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மனு செய்திருந்தார். இதையடுத்து லோகு அய்யப்பன் கவுன்சிலர் சக்திவேல் ஆகியோர் மீது போடப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தை பரிசீலனை செய்து ரத்து செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகம் புதுவை தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பியது. இதையடுத்து லோகு.அய்யப்பன் சக்திவேல் ஆகியோர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதற்கான ஆவணங்களை காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைக்கு தாசில்தார் தில்லைவேல் நேற்று மாலை 5.30 மணிக்கு எடுத்துச் சென்றார். நடை முறை காரணங்களால் இருவரையும் விடுதலை செய்வதில் தாமதம் ஏற்பட்டது. சிறை வாசலில் அவர்களை வரவேற்க காத்திருந்த ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பியதால் வடக்கு எஸ்.பி. பழனி வேலு (பொறுப்பு) தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர்இ இரவு 10.30 மணிக்கு இருவரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

நன்றி தினகரன்

Read more...

கருணாநிதிக்கு கிடைத்த சம்பளம் சிங்கிள் டீயும், 2 வடையும் தான்-ஜெயலலிதா

உண்மையைச் சொல்லப் போனால் கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு வளர்ந்தவர் தான் கருணாநிதி, அவர் கூட்டங்களில் பேச ஆரம்பித்த போது அவருக்குக் கிடைத்த சம்பளம் ஒரு சிங்கிள் டீயும், இரண்டு வடையும் தான் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கருணாநிதியிடம் கணக்கு கேட்டு அதைத் தராததன் காரணமாக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக. அதை மறந்து, 'கணக்கு காட்டுகிறேன்; கண்ணுடையோர் காண' என்ற தலைப்பிலே கருணாநிதி தன்னுடைய கணக்கைக் காட்டியிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது. இதை கடந்த நூற்றாண்டு மற்றும் இந்த நூற்றாண்டின் இணையற்ற ஜோக் என்று சொல்லலாம்.

இப்படிப்பட்ட சிறந்த நகைச்சுவைக்காக மாநில அளவிலோ, தேசிய அளவிலோ, ஏன் உலக அளவிலோ கூட கருணாநிதிக்கு விருது கிடைத்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.




திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் மூலம் சென்னைக்கு வந்ததாக கருணாநிதியே பல முறை பேசி இருக்கிறார். இது குறித்து 'வனவாசம்' புத்தகத்தின் முதல் பதிப்பில் கருணாநிதியின் நெருங்கிய நண்பராக இருந்த கவியரசர் கண்ணதாசன் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். உண்மையைச் சொல்லப் போனால் கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு வளர்ந்தவர் கருணாநிதி.

இவர் கூட்டங்களில் பேச ஆரம்பித்த போது இவருக்குக் கிடைத்த சம்பளம் ஒரு சிங்கிள் டீயும், இரண்டு வடையும் தான். இப்படிப்பட்ட கருணாநிதி இப்பொழுது திடீரென்று 'கணக்கு காட்டுகிறேன்' என்ற தலைப்பில், தன்னுடைய குடும்பம் ஓரளவு வசதியுள்ள குடும்பம் என்று ஒரு புதிய தகவலை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

16.1.1946 அன்று கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கியில் பங்காளியாக சேர விண்ணப்பித்த போது, அந்த விண்ணப்பப் படிவத்தில் தனக்கு நஞ்சை, புஞ்சை நிலங்கள் ஏதுமில்லை என்றும், வீட்டு மனை ஏதுமில்லை என்றும் தெரிவித்து, தன் வசம் 'நகை, பாத்திரம் வகையறா சுமார் ரூ. 1,000' இருக்கிறது என்று கருணாநிதியே கைப்பட எழுதியிருக்கிறார்.

கருணாநிதியின் தந்தை முத்துவேலர் வசம் என்ன இருந்தது என்பதெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த கூட்டுறவு மாத இதழில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

கருணாநிதியும், கவியரசர் கண்ணதாசனும் சென்னையில் இருந்து சேலத்திற்கு ரயிலில் பயணம் செய்த போது, உணவு வாங்கி சாப்பிட பணமில்லாத நிலை இருந்த போது, 'தனக்கு பசி தாங்கவில்லை' என்று கவியரசர் கண்ணதாசன் கருணாநிதியிடம் சொன்னதாகவும், அதற்கு பதில் அளித்த கருணாநிதி, அருகில் இருந்த பழக் கூடையை காட்டி 'திருடலாமா?' என்று கேட்டதாகவும், கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய 'வனவாசம்' புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் 1949ம் ஆண்டே மாத ஊதியமாக 500 ரூபாய் சம்பாதித்ததாக கூறியிருக்கிறார். 'மணமகள்' திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதி 10,000 ரூபாய் பெற்றதாகவும், 'இருவர் உள்ளம்' திரைப்படத்திற்காக 20,000 ரூபாயை பெற்றதாகவும் கருணாநிதி கூறி இருக்கிறார். அப்படி என்றால் கருணாநிதி எந்த ஆண்டிலிருந்து வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து கொண்டு வருகிறார்? முதன் முதலில் வருமான வரி தாக்கல் செய்த போது அவருடைய ஆண்டு வருமானம் என்ன? அப்போது எவ்வளவு வருமான வரி கட்டினார்? ஆண்டுதோறும் செலுத்திய வருமான வரி எவ்வளவு? என்பதை முதலில் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுடைய வீடுகளை விட வசதி குறைவான வீட்டில் எளிமையாக வாழ்ந்து வருவதாகவும், அரசு நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்றும் கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறார்.

கருணாநிதிக்கு கோபாலபுரத்திலே ஒரு வீடு, சி.ஐ.டி. காலனியில் ஒரு பங்களா; கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலினுக்கு வேளச்சேரியில் ஒரு பங்களா; சென்னை போட் கிளப்பில் ஒரு மாளிகை; பேரன் கலாநிதி மாறனுக்கு சென்னை போட் கிளப்பில் பிரம்மாண்டமான மாளிகை, பேரன் தயாநிதி மாறனுக்கு போட் கிளப்பில் மிகப் பெரிய பங்களா, மகள் செல்விக்கு பெங்களூரில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் மாளிகைகள், பண்ணை வீடுகள்; தென் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 25க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள், நாளிதழ்கள், வார இதழ்கள், பேரன் பெயரில் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம், சன் ஏர்லைன்ஸ்,

மு.க. அழகிரிக்கு மதுரையில் பல ஏக்கர் நிலங்கள், பண்ணை வீடுகள்; வர்த்தக பலமாடி கட்டடங்கள்; பொறியியல் கல்லூரி; மு.க. தமிழரசு, மு.க. முத்து, கனிமொழி என அனைவரும் மாடமாளிகைகளில் வாழ்ந்து கொண்டு மக்கள் சொத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர்.

பேரன்கள், பேத்திகள் உட்பட, கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனி ஆடம்பர மாளிகைகளும் ஏராளமான அசையா சொத்துக்களும் உள்ளன.

கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து சினிமாத் துறையையே கபளீகரம் செய்துவிட்டனர். தன்னுடைய கோபாலபுரத்தின் பின் பகுதியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 700 சதுர அடி நிலத்தை கருணாநிதி ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்.

டாடா நிறுவனம் கருணாநிதியின் துணைவிக்கு ரூ. 300 கோடி மதிப்பில் மிகப் பெரிய மாளிகை கட்டித் தர இருப்பதாக நீரா ராடியா- ராசாத்தி உரையாடல்களில் இருந்து தெரிய வருகிறது.

செல்வி மற்றும் ஸ்டாலின் மூலமாக ரூ. 600 கோடியை தயாளு பெற்றுக் கொண்டுதான் தயாநிதி மாறனுக்கு மந்திரி பதவியை கொடுத்ததாக அதே நீரா ராடியா உரையாடல்கள் தெரிவிக்கின்றன.

உண்மை நிலை இவ்வாறிருக்க, கருணாநிதி தன்னை யோக்கியர் போல சித்தரித்துக் கொண்டிருப்பது எள்ளி நகையாடத்தக்கது.

கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம், சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் ரூ. 100 கோடி தரப்பட்டதாகவும், அதில் ரூ. 22 கோடி அளவிற்கு வருமான வரி கட்டியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். பத்திரிகை எரிப்பு சம்பவத்திற்கு பிறகு, 200ம் ஆண்டு இறுதியில், 'முழு' தொகை கருணாநிதிக்கு தரப்பட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியானது.

அதனையடுத்து 'கண்கள் பனித்தன, இதயம் இனித்தது' என்று கருணாநிதியும் அறிவித்தார். அதற்கு வருமான வரி கட்டியதாக கருணாநிதி அறிவிக்கவில்லையே?.

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி கருணாநிதியின் ஆட்சி. வீராணம் ஊழல், பூச்சிகொல்லி மருந்து ஊழல், மஸ்டர் ரோல் ஊழல், மணல் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல், கள்ள லாட்டரி சீட்டு விற்பனை என அனைத்திற்கும் மூலக் காரணமானவர் கருணாநிதி. விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர் என்று சர்க்காரியா கமிஷனிடம் சான்றிதழ் பெற்றவர்.

இப்படி இருக்கும் கருணாநிதி, லஞ்சம், ஊழல் ஆகியவற்றைப் பொறுத்தவரை தான் ஒரு நெருப்பு என்று கூறியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. பஞ்சுப் பொதியிலே தீப்பொறி பட்டால் எப்படி தீப்பிடித்துக் கொள்ளுமோ அது போல, தன்னிடம் உள்ள ஊழலை உலகம் முழுவதும் பரப்புவதில் தான் ஒரு நெருப்பு என்ற அர்த்தத்தில் கூறி இருக்கிறார் போலும்!.

பொருளாதாரம், விஞ்ஞானம், இலக்கியம், சமாதானம் போன்றவற்றிற்காக நோபல் பரிசு கொடுக்கப்படுகிறது. சிறந்த நகைச்சுவைக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டால், அந்தப் பரிசுக்குத் தகுதியானவர் கருணாநிதி தான். அந்த அளவுக்கு 'கணக்கு காட்டுகிறேன்; கண்ணுடையோர் காண' என்ற தலைப்பில் வெளி வந்துள்ள கருணாநிதியின் அறிக்கையை படித்து தமிழக மக்கள் விலா எலும்பு வலிக்க சிரித்து உடல் வலி வந்தது தான் மிச்சம்!.

தனது 60 ஆண்டுகால பொது வாழ்வில், ஏழை மக்களை ஏமாற்றி, 'தன்' குடும்ப மக்களை ஏற்றிவிட்டிருக்கும் கருணாநிதி, ஆட்சி முடியும் தருவாயில் பொய்க் கணக்கை காட்டி மீண்டும் மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்.

கருணாநிதியின் பொய்க் கணக்கிற்கு பலமான பதிலடி கொடுக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்.

இவ்வாறு தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Read more...

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP