வைகோவின் பொருளாதார முற்றுகைப்போராட்டம் - வெற்றி

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் முற்றுகை போராட்டம் நடத்தி கேரளாவுக்கு பொருளாதார நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று மதிமுக போது செயலாளர் வை.கோ விடுத்துள்ள அழைப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்று ஆதரவு தெரிவித்து உள்ளனர்.



தாங்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாளை லாரிகளை கேரளாவுக்கு ஓட்ட மாட்டோம் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் நல்லதம்பி அறிவித்துள்ளார்.


தமிழக லாரி முன்பதிவு அலுவலகங்கள் சங்கமும் கேரளாவுக்கு நாளை முதல் காலவரையறை இன்றி முன்பதிவை நிறுத்துவதாக அறிவித்துள்ளார்கள்.


கேரளாவுக்கு சரக்கு எடுத்து செல்லும் லாரிகளை மலையாள மக்கள் தாக்குவதால் லாரிகள் சேதமடைகின்றன, ஓட்டுனர் மற்றும் கிளீனர்கள் தாக்கப்படுகின்றர்கள். பல இடங்களில் தமிழக வாகனங்கள் தடுத்து நிறுதத்தப்படுகின்றது, அதனால், சரக்குகளை குறிப்பிட்ட நேரத்தில் எங்களால் கொண்டுபோய் சேர்க்க முடியவில்லை. மேலும் கொண்டு போகும் காய்கறி, பழங்கள் எல்லாம் அழுகிவிடுகின்றது.


இதனால், நாளை காலை முதல் (21.12.2011) தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு சரக்குகளை கொண்டு செல்லும் லாரிகளை நிறுத்த முடிவு செய்துள்ளார்கள், எனவே கேரளாவுக்கு செல்லும் சரக்குகளை முன்பதிவு செய்வதும் நாளை முதல் நிறுத்தப்படும். கேரள மற்றும் தமிழகத்திற்கு இடையே முல்லை பெரியாறு அனை விவகாரத்தில் நல்லிணக்கம் ஏற்ப்பட்டு மக்களின் வாழ்க்கை முறை சுமூகமடையும் வரை கேரளாவுக்கு நாங்கள் சரக்குகளை அனுப்பமாட்டோம் என்று தமிழக லாரி புக்கிங் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜவடிவேல் நேற்று சேலத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


இதன் மூலம், தினமும் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு சரக்கு லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படும், கோழி, மாட்டு இறைச்சி, பால், காய்கறிகள், சர்க்கரை, பழங்கள் உள்ளிட்ட பலவகையான அவசியமான பொருட்களில் தட்டுப்பாடு கேரளாவில் ஆரம்பிக்கும் இதன் மூலம் அங்கு பெரிய அளவில் விலையேற்றம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் வைகோ அறிவித்துள்ள முற்றுகைபோராட்டம் வெற்றி பெற்றுள்ளது.

Read more...

மாவீரர் தினம் 2011 - விடுதலைப் புலிகள்

எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று மாவீரர் நாள். எமது இனத்தின் விடுதலைக்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிருக்குயிரான வீரமறவர்களை நினைவு கூர்ந்து மதிப்பளிக்கும் புனித நாள்.



இது உலகத்தமிழினம் விடுதலை வேட்கை கொண்டு எழுச்சி கொள்ளும் மகத்தான நாள். தமிழரெல்லாம் தமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள்.

எமது விடுதலைப் பயணத்தின் முக்கியமான கட்டத்தில் இன்று நாம் நிற்கின்றோம். போராட்டம் இன்னும் ஓயவில்லை. தமிழீழத் தாகம் தீரவில்லை. மிகவும் கொடுங்கோன்மையான இராணுவச் சர்வாதிகார ஆட்சி தமிழர் தாயகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ளது. ஆயுத பலத்தின் மூலம் தமிழீழ மக்களைச் சிங்களப் பேரினவாதம் அடக்கியாண்டு நிற்கின்றது.

துவளாத போராட்டம்

போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் போராட்ட இலட்சியம் மாறப் போவதில்லை. இழப்புக்களை எண்ணிச் சோர்வடையாமல் இலட்சியப் போராட்டத்தைத் தொடரும் பணி எமதாகும். இன்று தமிழீழத்துக்கான போராட்டம் தாயகத்தில் மட்டுமன்றி உலகளவில் தமிழர்கள் வாழ்கின்ற எல்லாக் களங்களிலும் முனைப்புப்பெற்று நிற்கின்றது.

நீண்டதும் கடினமானதுமான தமிழீழத்துக்கான விடுதலைப் போரில் நாம் சந்தித்த இன்னல்கள், இடையூறுகள் ஏராளம். ஆனாலும் நாம் மனம் துவண்டு விடவில்லை. சவால்கள் நிறைந்த காலகட்டமாக இன்றைய நாள் இருப்பினும் அதுவே எமது நம்பிக்கைக்கான காலகட்டத்தின் திருநாளாகவும் இருக்கிறது.

பிரபாகரனால் தெரிவு செய்யப்பட்ட நாள்

தமிழர் வரலாற்றின் வழிவந்த வீரமரபை அடியொற்றிக் களமாடி மடிந்த விடுதலை வீரமறவர்களை ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து மதிப்பளிக்கும் மாவீரர் நாளாக, எமதியக்கத்தின் முதல் மாவீரர் லெப்.சங்கர் வீரச்சாவடைந்த நாளான நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் தெரிவு செய்யப்பட்டது.




தமிழர் தாயகம் எதிரியின் பிடியில் வந்த பின்பு மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்தும் எதிரிப் படைகளால் சிதைத்தழிக்கப்பட்டன.

சிங்களத்தின் காட்டுமிராண்டித்தனம்

யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மணலாறு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்த அனைத்துத் துயிலுமில்லங்களும் சிதைக்கப்பட்டதோடு அவற்றின் மேல் இராணுவத்தினருக்கான கட்டடங்கள் கட்டப்படுகின்றன.

தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் ஆறாத ரணத்தையும் சினத்தையும் ஏற்படுத்திய இந்தக் காட்டுமிராண்டிச் செயலுக்கு நிகரானதொன்றை நாகரிக உலகின் பிறிதெந்தப் பாகத்திலும் காணமுடியாது.

ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழித்தாலும் கூட...

ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் அழித்தாலன்றித் தமிழீழத் தாகத்தை யாராலும் அழித்துவிட முடியாது. தமிழீழ விடுதலைப் போராட்டம் 2009 இல் முள்ளிவாய்க்காலைக் கடந்தும் தீராத தமிழீழத் தாகத்துடன் இன்னும் முனைப்புப் பெற்று நிற்கின்றது.

நவம்பர் 2011 இல் சிறிலங்கா அரசு நியமித்த 'உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழு' அண்மையில் தனது அறிக்கையை வெளியிட்டது. குற்றவாளிகளை இனங்காண்பதற்கும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த அறிக்கை வழிகோலும் எனக் கூறப்பட்டது.

குற்றவாளிகளாகக் காண்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதி கூறினார். ஆனால் சிறிலங்கா அரசு நியமித்த ஆணைக்குழுவானது சிங்கள அரசின் தேவைக்கு உதவும் அறிக்கையையே வெளியிட்டது.

உண்மையான போர்க்குற்றவாளி ராஜபக்சேவும் அவர் தம்பிகளும்

உண்மையான குற்றவாளிகளான சிறிலங்கா அதிபர் ராஜபக்ச உட்பட அவருடைய சகோதரர்களையும் கொலைவெறியோடு தமிழ்மக்களைக் கொன்ற இராணுவத் தலைமையையும் அந்த ஆணைக்குழுவால் எப்படிக் குற்றவாளிகளாகக் காண முடியும்? இலங்கை அரசியல் வரலாற்றில் ஆணைக்குழுக்களும் அறிக்கைகளும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கை மாத்திரமே.

ஐ.நா. மனித உரிமைச் சட்டங்கள், போர் நெறிமுறைகள் மற்றும் உலக இராசதந்திர ஒழுங்குகள் போன்றவற்றையெல்லாம் சிறிலங்கா அரசு கேள்விக்குறியாக்கியுள்ளதுடன், போர்க்குற்றம் புரிந்த தனது இராணுவ அதிகாரிகளை இராசதந்திரிகளாகவும் தூதரக அதிகாரிகளாகவும் வெளிநாடுகளிலுள்ள சிறிலங்காவின் தூதரகங்களில் துணிச்சலாக அமர்த்தியுள்ளது.

இராணுவத்தளம், கடற்படைத்தளம், விமானப் படைத்தளம் உட்படப் பொருளாதார மையங்களையும் சிறிலங்காவில் அமைக்க உலகின் சில வல்லாதிக்க சக்திகள் போட்டியில் ஈடுபடுகின்றன. இதன்காரணமாகச் சிறிலங்கா அரசு செய்த போர்க் குற்றங்களை இந்நாடுகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த விழைகின்றன.

சேனல் 4-க்கு நன்றி

சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட “சிறிலங்காவின் கொலைக்களம்” என்ற ஆவண ஒளிப்படத் தொகுப்பு உலக மனச்சாட்சியின் பார்வையை எம் மக்களின் பக்கம் திருப்பியிருப்பது நல்லதொரு அறிகுறியாகவே உள்ளது. அனைத்துலக ஊடகங்களால் கவனிக்கப்படாதிருந்த எமது மக்களின் அவலங்களை வெளிக்கொணர்ந்த சனல் 4 தொலைக்காட்சிக்கும், மனித உரிமை அமைப்புக்களுக்கும் ஆர்வலர்களுக்கும் எமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

போர்க்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதோடு தமிழர்களுக்கான ஓர் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை அனைத்துலகச் சமுகத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறும் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

தமிழீழம் மது கட்டுப்பாட்டில் இருந்தபோது....

தமிழீழம் எமது கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு மரியாதை கிடைத்திருந்தது. முப்பத்து மூன்று ஆண்டுகளாகச் சிங்கள மொழித்திணிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. சிங்களக் குடியேற்றம் முற்றுமுழுதாகத் தடுக்கப்பட்டிருந்தது.

தமிழீழத்தின் மீதான சிங்களப்படை வெறியர்களின் அடக்குமுறை, பொதுமக்களுக்கு எதிரான வன்கொடுமைகள், தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் என்பன தடுக்கப்பட்டிருந்தன.

ஆனால் தந்தை செல்வாவின் காலத்தில் தமிழர்களுக்கு இருந்த அறப்போராட்ட உரிமைகூட இன்று மறுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்க்கட்சிகள் உண்ணாநிலைப் போராட்டமோ – சட்டமறுப்போ – மறியல் போராட்டமோ – கதவடைப்போ – ஒத்துழையாமையோ – ஏன் ஒரு பொதுக்கூட்டம்கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. உலகச் சட்டங்கள் வழங்கியுள்ள அறவழியிலான போராட்ட உரிமை – கருத்துத் தெரிவிக்கும் உரிமை அனைத்தும் எமது தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன.

தமிழர் பூர்வீகங்கள் அழிப்பு

சிங்கள ஆட்சியாளர்கள், தமிழீழ மக்களின் கோரிக்கையை மட்டுமல்ல தமிழீழ மக்களின் உரிமை தொடர்பான உலகநாடுகளின் வேண்டுகோள்களையும் கூட ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. தமிழரின் தாயகப் பிரதேசமான வடக்குக்கிழக்கில் பூர்வீக அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன.

மூன்று இலட்சம் சிங்களப் படைகளாலும் அவர்களின் இராணுவக் காவலரண்களாலும் இன்றுவரை குடியேறிக்கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான சிங்களக் குடியேறிகளாலும் தமிழீழம் ஆக்கிரமிக்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னான இந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழீழ மக்களின் அரசியல் தீர்வுக்கான எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளாமல் அவர்களை இன்னமும் ஒரு அரசியல் வெறுமைக்குள் வைத்திருக்கவே சிறிலங்கா அரசாங்கம் முனைகிறது.

ஏற்கனவே இருந்த உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் எமது மக்கள் மீண்டும் குடியேற அனுமதிக்கப்படாத நிலையில் மேலும்பல தமிழர் வாழ்விடங்கள் இராணுவப் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுத் தமிழ்மக்கள் தமது வாழ்விடங்களுக்குச் செல்லமுடியாமல் தடுக்கப்படுகின்றனர்.

தமிழர் வாழ்விடங்களில் திட்டமிடப்பட்ட முறையில் கலாச்சாரச் சீரழிவு சிங்கள அரசால் பரப்பப்படுகிறது. கிறீஸ் மனிதன் போன்ற அசாதாரண சம்பவங்களை உருவாக்கித் தமிழ்மக்கள் மீது உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தியும் போரற்ற சூழ்நிலையிலுங்கூட மக்;கள் வாழ்விடங்களில் படையினரின் பிரசன்னத்தை அதிகரித்தும் எமது மக்களின் நாளாந்த வாழ்வியலைக் குழப்பி அவர்களைப் பதட்டநிலைக்குள் வைத்து அரசியல் செய்வதே இந்தச் சிங்கள ஆட்சியாளர்களின் நோக்கமாகும்.

எம் மீதான தடைகளை நீக்குங்கள்

தமிழீழ மக்களின் இனப்பிரச்சனையையும் அவர்களின் விடுதலைப் போராட்டத்துக்கான நியாயத்தையும் புரிந்துகொண்டு அழிக்கப்படும் ஓர் இனத்தின் விடுதலைக்காகப் போராடிவரும் எமதியக்கத்தின் மீது போடப்பட்டுள்ள தடைச்சட்டங்களை நீக்கி எமது மக்கள் நியாயமானதொரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு உலகநாடுகள் ஆதரவளிக்க வேண்டும்.

இனப்படுகொலையைப் புரிந்துவரும் சிங்கள ஆட்சியாளர்களின் பொய்ப் பரப்புரைகளைச் செவிமடுக்காமல் தமிழீழத்துக்கான தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்குமாறு இந்தியா உட்பட உலகநாடுகள் அனைத்தையும் வேண்டிநிற்கின்றோம்.

எமது விடுதலைக்கான போராட்டம் இன்று தமிழகம் தொட்டுத் தமிழர் வாழும் நாடுகள் அனைத்திலும் எழுச்சி பெற்றுள்ளது. இன உணர்வும் மொழிப்பற்றும் மேலோங்கியுள்ளன. தமிழர் என்ற பெருமிதம் தமிழர் நெஞ்சில் ஊற்றெடுத்துள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் அளவுக்குத் தமிழுணர்வும் தமிழீழ மக்கள் மீதான ஆதரவும் தமிழ்நாட்டிலே வலுப்பெற்றுள்ளன.

தாயகத் தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் ஒன்றிணைவதைத் தடுப்பதற்குச் சிங்களப்பேரினவாத அரசு கங்கணம் கட்டி நிற்கின்றது. பலம் பொருந்திய சக்தியாக உலகத்தமிழர் உருவாவதைத் தடுக்க உலக நாடுகளின் ஆதரவையும் வேண்டி நிற்கின்றது. புலம்பெயர் தமிழர்களின் பலத்தைக் குறைப்பதற்காகவும் மனிதநேயப் பணிகளை முடக்குவதற்காகவும் சதித்திட்டங்களும் சூழ்ச்சிகளும் அரங்கேற்றப்படுகின்றன.

இளையோர் மீது பிரபாகரன் வைத்துள்ள நம்பிக்கை

புலம்பெயர் தேசங்களில் அறிவாளிகளாகவும் ஆற்றல் மிக்கவர்களாகவும் வளர்ந்துவரும் தமிழ் இளையோர் தம்மீது தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் வைத்துள்ள அபரிமிதமான நம்பிக்கையை உணர்ந்து தமிழீழத்தின் விடியலுக்காகத் தொடர்ந்தும் அயராது உழைக்கவேண்டும்.

எமது தாயகத்தில் சிங்கள இராணுவ நெருக்குவாரத்துக்குள்ளும் சிறிலங்கா அரசின் சிறைகளுக்குள்ளும் வாடும் தமது வயதையொத்த இளையவர்களின் எதிர்காலத்தைச் சிறப்பாகக் கட்டமைக்கும் பொறுப்பும் கடமையும் தமக்கு உள்ளது என்பதைப் புரிந்துகொண்டு தாயக விடுதலைக்கான தமது முழுமையான பங்களிப்பை ஆர்வமுடன் செய்ய விரைந்து முன்வரவேண்டுமென அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம்;.

எமக்கு முன்னால் எழக்கூடிய எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து தமிழரின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடுவோம்.

இழப்புக்களைக் கண்டு அஞ்சாமல் தளராத உறுதியுடன் தொடர்ந்து போராடும் மக்களே இறுதியில் வெற்றிபெறுவாரென்ற உண்மையை நெஞ்சில் நிறுத்தி நாம் செயலுறுதியுடன் போராடுவோம்.

காலம் இட்ட கட்டளைப்படி தமிழ்மக்களின் இருப்பைத் தக்கவைக்கும் தீர்வான தமிழீழத் தனியரசு கிடைக்கும் வரை நாம் எல்லா வழிகளிலும் தொடர்ந்து போராடுவோம்.

எமது மாவீரர்களின் வீரம் செறிந்த போராட்ட வாழ்வையும் எமது விடுதலைக்காக அவர்கள் புரிந்த மகத்தான ஈகங்களையும் நினைவுகூரும் இன்றைய நாளில் எத்தகைய துன்பங்களும் சவால்களும் எதிர்வந்தாலும் தமிழீழத் தனியரசை வென்றெடுக்கும் வரை தளராது போராடுவோம் என்று நாம் உறுதி கூறுகின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்”

Read more...

ஈழத்தில் ராஜீவ் நிகழ்த்திய போர்க் குற்றங்கள்

ராஜீவ் காந்தி ஈழத்துக்கு அனுப்பி வைத்த இந்திய ராணுவம் 1987 ஆம் ஆண்டில் நிகடிநத்திய போர்க் குற்றங்கள் இனப் படுகொலைகள் பற்றிய ஒரு தொகுப்பு: அக்டோபர் 10 ஆம் தேதிக்கு முன்னரே முல்லைத் தீவில் உள்ள விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றைச் சுற்றி வளைத்த இந்திய அமைதி காக்கும் படையினர் அங்கிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு முகாமை வெடி வைத்துத் தகர்த்தனர்.

10.10.87
இன்று அதிகாலை 5 மணியளவில் யாடிந
நகருக்குள் உள்ள ஈழ முரசு, முரசொலி ஆகிய 2
தினசரித் தமிடிநப் பத்திரிகை அலுவலகங்களுக்கு
புகுந்த இந்திய அமைதி காக்கும் படையினர் அங்கு
வேலை செடீநுது கொண்டிருந்த ஊழியர்களை ஆயுத
முனையில் கைது செடீநுததுடன் அலுவலகங்களை
யும், அச்சு இயந்திரங்களையும் வெடிகுண்டுகள்
வைத்துத் தகர்த்தனர்.
அதே தினத்தில் கொக்குவில் என்னும் இடத்தில்
இருந்த விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி
சேவையான ‘நிதர்சனம்’ தொலைக்காட்சி நிலையத்
துக்குள் புகுந்து அங்கிருந்த தொலைக்காட்சி
ஒளிபரப்பு உபகரணங்களை அபகரித்துச் சென்றனர்.
(விடுதலைப் புலிகள் திருட்டுத்தனமாக வைத்
திருந்த ரேடியோ சாதனங்களைத் தாம் கைப்பற்றி
யதாகவும், இந்தியாவுக்கு எதிராக வன்முறையைத்
தூண்டிப் பிரசுரங்களை வெளியிட்டு வந்த
அச்சகங்களைத் தாம் முடக்கி வைத்திருப்பதாகவும்
இந்திய அமைதி காக்கும் படையினர் தம்
நடவடிக்கைகள் குறித்து சமாதானம் கூறினர்.)



1. விடுதலைப் புலிகள் தங்களது ரேடியோ,
தொலைக்காட்சி சேவைகளைப் பல
ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். விடுதலைப்
புலிகளின் ‘நிதர்சனம்’ தொலைக்காட்சி
சேவையில் ஒளிபரப்பப்பட்ட பல நிகடிநச்சிகளை
இந்திய அரசு அதிகாரிகள் வேண்டிப் பெற்று
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில்கூட ஒளிபரப்பி
யிருக்கிறார்கள். இந்நிலையில் திடீரென்று
எந்தவித தகவலும் கொடுக்காமல் தொலைக்
காட்சி நிலையத்தினுள் புகுந்து அங்குள்ள
சாதனங்களை அத்துமீறித் தூக்கிச் சென்றதானது
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக
எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையேயாகும்.
2. இலங்கை அரசினால் செடீநுதிப் பத்திரிகைகளாகப்
பதிவு செடீநுயப்பட்டு, பல ஆண்டுகளாக வெளி
வந்து கொண்டிருந்த ஈழ முரசு, முரசொலி ஆகிய
பத்திரிகை அலுவலகங்களை இந்திய அமைதி
காக்கும் படையினர் தாக்கித் தகர்த்ததாவது, தமது
ஜனநாயக உரிமைகளை நசுக்கிய செயலாகவே
ஈழத் தமிடிந மக்கள் கருதுகின்றனர்.
மதியம் 2.15 மணியளவில் இந்திய அமைதி
காக்கும் படையினர் கோட்டைப் பக்கமாகவும்,
கோப்பாடீநு பக்கமாகவும், முத்திரைச் சந்திப்
பக்கமாகவும் துப்பாக்கிப் பிரயோகம் செடீநுதபடி
முன்னேறியதைத் தொடர்ந்து, மக்களையும்,
தங்களையும் பாதுகாக்கும் நோக்குடன் விடுதலைப்
புலிகள் தற்காப்பு யுத்தத்தை மேற்கொள்ள வேண்டிய
கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். யாடிந குடா நாடு
முழுவதிலும் இந்திய இலங்கை இராணுவம்
கூட்டாகத் தேடுதல் வேட்டை நடத்தியதில் 100-க்கும்
மேற்பட்ட பொது மக்கள் கைது செடீநுயப்பட்டனர்.
வடமராட்சிப் பகுதியில் தேடுதல் வேட்டை
நடத்திய இந்திய அமைதி காக்கும் படையினர் அங்கு
பத்துப்பொது மக்களைச் சுட்டுக் கொன்றனர்.
11.10.87
இன்று காலையில், இந்திய அமைதி காக்கும்
படையினரால் ஏவப்பட்ட செல் கைலாசப்
பிள்ளையார் கோவில் மீது விழுந்து வெடித்ததில் 12
பொது மக்கள் கொல்லப்பட்டனர். 20 பேர்
காயமுற்றனர்.
பனையில் விடுதலைப் புலிகளின் வேன் ஒன்றை
விரட்டிச் சென்றும் பிடிக்க முடியாமற் போகவே
ஆத்திரமுற்ற இந்திய அமைதி காக்கும் படையினர்
திரும்பிச் செல்லும் வழியில், எதிர்ப்பட்ட
மக்களையெல்லாம் கண்மூடித்தனமாகச் சுட்டனர்.
இதில் இரு குழந்தைகள் உட்பட 13 பேர் இறந்தனர்.
இரவு யாடிநப்பாணத்தைக் கைப்பற்றும்
முயற்சியில் இந்திய அமைதி காக்கும் படையினர்
முழு மூச்சாக இறங்கினர். இரவு 1 மணியளவில்
யாடிநப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடப்
பகுதியில் ஏராளமான இந்திய அமைதி காக்கும்
படையினர் கெலிகாப்டர்கள் மூலம் வந்திறங்கினர்.
அவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில்
8 மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற கடும்
சண்டையில் 40க்கும் மேற்பட்ட இந்திய அமைதி
காக்கும் படையினர் கொல்லப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 20 எ°.எம்.ஜி., 6
எ°.எல்.ஆர்., 3 எல்.எம்.ஜீ., 2 ஜி.பி.எம்.ஜீ., ஒரு
ராக்கட், லோஞ்சர் உட்பட ஏராளமான ஆயுதங்
களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்.
அதனால் ஆத்திரமுற்ற இந்திய அமைதி காக்கும்
படையினர் பொது மக்களைத் தாக்கினர். அதில் 30
பொது மக்கள் கொல்லப்பட்டனர். 250 பேர்
காயமுற்றனர்.




12.10.87
இன்று நடைபெற்ற சண்டையிலும் ஏராளமான
இந்திய அமைதி காக்கும் படையினர் கொல்லப்
பட்டனர். இந்திய அமைதி காக்கும் படையினர்
மேற்கொண்ட மோட்டார் பீரங்கித் தாக்குதல்களின்
போது பல பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
இந்திய அமைதி காக்கும் படையினர் பொது
மக்களை வீதியில் நிறுத்தி மிகக் கொடூரமான
முறையில் அவர்கள் மீது கவச வாகனங்களையும், ஜீப்
வண்டிகளையும் ஏற்றி நசுக்கிக் கொன்றனர். சுமார் 40
பொது மக்களின் சடலங்கள் உருத் தெரியாதவாறு
சிதைந்து அப்புறப்படுத்த முடியாத நிலையில்
காணப்பட்டன.
யாடிந பல்கலைக்கழகத்தினுள் விடுதலைப் புலி
களிடம் சிக்கியவர்களை மீட்க என பாராசூட்டின்
மூலம் இறக்கப்பட்ட இந்திய அதிரடிப் படையினர்
படுமோசமான செயல்களில் இறங்கினர். அவர்கள்
திரும்பிச் செல்லும்போது 12 சடலங்களை மட்டுமே
எடுத்துச் சென்றனர்.
விடுதலைப் புலிகள் தங்களிடம் சிக்கிய இந்தியப்
படையினரின் 29 சடலங்களை செஞ்சிலுவைச்
சங்கத்தின் மூலம் இந்தியத் தரப்பினரிடம் கொடுக்கும்
ஒழுங்குகளை மேற்கொண்டனர். ஆனால் அந்த 29
பேரின் சடலங்கயையும் அப்போது இருந்த
சூடிநநிலையில் தாங்கள் பொறுப்பெடுத்துச் செல்வது
சாத்தியமில்லை என்று இந்திய இராணுவப்
பொறுப்பதிகாரி யாடிந மாவட்ட அரசாங்க அதிபர்
மூலம் விடுதலைப் புலிகளுக்குத் தெரிவித்ததைத்
தொடர்ந்து 29 சடலங்களும் அங்கேயே தகனம்
செடீநுயப்பட்டன.
பாராசூட் மூலம் இறங்கிய இந்திய அதிரடிப்
படையினர் படுதோல்வியுடன் திரும்பி ஓடினர்.
உரும்பராயில் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில்
இந்தியப் படையினர் கண்மூடித்தனமாக நடத்திய
தாக்குதலின்போது அப்பாவிப் பொது மக்கள் பலர்
(இரு மூதாட்டிகள், இரு குழந்தைகள் உட்பட)
கொல்லப்பட்டனர்.
12 ஆம் தேதி மாத்திரம் 104 பொது மக்கள்
செல்காயங்களினால் பாதிக்கப்பட்டு யாடிந
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தியப்
படையினர் பெண்களைக் கொடூரமான முறையில்
பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய பின்னர் கொலை
செடீநுதுள்ளனர். பெற்றோருக்கு முன்பாகவே
அவர்களது பிள்ளைகள் பயங்கரமான முறையில்
கொலை செடீநுயப்பட்டனர். உடம்பின் பல பகுதிகள்
கெட்டுப் போன நிலையில் இவர்கள் இறந்து கிடக்கக்
காணப்பட்டனர்.
சுதுமலை, உரும்பராடீநு, கொக்குவில் ஆகிய பகுதி
களில் ஏராளமான பெண்கள் இந்தியப் படையின
ரால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டுக்
கொல்லப்பட்டனர். உயிர் தப்பிய 13 பெண்கள்
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணம் பொத்துவிலில் பேச்சு
வார்த்தைக்கு வருமாறு விடுதலைப் புலிகளின்
அம்பாறை மாவட்டப் பொறுப்பாளரை ஒரு
கோயிலுக்கு அழைத்த இந்திய அமைதி காக்கும்
படையினர் அவரைக் கைது செடீநுது கொண்டு
சென்று விட்டனர்.
13.10.87
இன்று யாடிந கோட்டை இராணுவ முகாமி
லிருந்து ஏவப்பட்ட மோட்டார் செல்கள் விழுந்து
வெடித்ததனால் யாடிந போதனா வைத்திய சாலையில்
3 இடங்கள் பெரும் சேதமுற்றன. கூரைகள் உடைந்து
மருந்துப் பொருட்களும் பெருமளவில் சேதமுற்றன.
மருத்துவமனை வீதியிலுள்ள மாதா கோயில் வளவில்
பாதிரியார் தங்கும் விடுதியும் செல் விழுந்து சேத
முற்றது. யாடிந நகரில் பரவலாகப் பல இடங்களிலும்
செல் விழுந்து வெடித்ததனால் ஏராளமான பொது
மக்கள் கொல்லப்பட்டனர். வீதிகளில் மக்கள்
நடமாட்டம் இல்லை.
அதிகாலையிலேயே தேடுதல் வேட்டை என்ற
பெயரில் வீடுவீடாகச் சென்ற இந்திய அமைதி
காக்கும் படையினர் குழந்தை, சிறுவர், முதியோர்,
பெண்கள் என்று பாராமல் 60 அப்பாவிப் பொது
மக்களைக் கொன்று குவித்தனர். வீடுகள், வீதிகள்
எனக் காணும் இடமெங்கும் பிணங்களே
தென்பட்டன. வீதிகளில் கிடந்த பிணங்கள்
அனேகமாக எல்லாமே இராணுவ வாகனங்களினால்
நசுக்கப்பட்டுச் சிதைவுற்றுக் காணப்பட்டன.
14.10.87
இன்று திருகோணமலை மாவட்டம் சாம்பல்
தீவுப் பாலத்துக்கு அண்மையில் வைத்து விடுதலைப்
புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 15
இந்திய அமைதி காக்கும் படையினர் பலியாயினர்.
உடுவிலில் 15 பெண்கள் இந்திய அமைதி காக்கும்
படையினரால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கி
கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பெண்களின்
அங்கங்கள் கடித்துக் குதறப்பட்டிருந்ததாகவும்,
உடல் முழுவதும் இரத்தக் காயங்கள் இருந்ததாகவும்
பின்னர் இவர்களது உடல்கள் செயின் பொருத்திய
கவச வாகனங்களில் கீடிந போடப்பட்டு நசுக்கப்
பட்டதனால் உடல்கள் ரொட்டி போலச் சிதைந்து
விட்டதாக இவற்றை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
இந்த வெறிச் செயலைச் செடீநுத இந்திய அமைதி
காக்கும் படையினர் திரும்பிச் செல்கையில்
விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கண்ணிவெடித்
தாக்குதலில் அவர்கள் சென்ற கவச வாகனம் முற்றாக
வெடித்துச் சிதறியது. அதில் சென்ற அனைவரும்
கொல்லப்பட்டனர்.
வடமராட்சியிலுள்ள தொண்டமானாறு
முகாமிலிருந்து யாக்கரைக்கு வந்த இந்திய அமைதி
காக்கும் படையினரின் டிரக் வண்டி ஒன்றுக்கு,
இராணுவ முகாமிலிருந்து 500 மீட்டர் தூரத்திலுள்ள
யாக்கரைப் பிள்ளையார் கோயிலுக்கருகில் வைத்து
விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கண்ணிவெடித்
தாக்குதலில் வண்டியில் வந்த 8 இந்திய அமைதி
காக்கும் படையினரும் கொல்லப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிரான்
எனுமிடத்தில் வைத்து இந்திய அமைதி காக்கும்
படையினரை இடை மறித்து விடுதலைப் புலிகள்
நடத்திய தாக்குதலில் 3 இந்திய படையினர்
கொல்லப்பட்டனர். நால்வர் காயமடந்தனர்.
இந்திய இராணுவத்துக்கு உதவியாக குண்டுவீச்சு
விமானங்களும் கெலிகாப்டர்களும் டாங்குகளும்
வந்தன. ஏராளமான இந்தியப் படை வீரர்கள் யாடிந
முற்றுகைத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டு
வருகின்றனர். 14.10.87 அன்று மட்டும் நகரை நோக்கி
70 மோட்டார் செல்கள் இந்தியப் படையினரால்
ஏவப்பட்டன. குண்டு வீச்சு விமானங்களிலிருந்தும்
கெலிகாப்டர்களில் இருந்தும் 90 கலிபர், 50 கலிபர்
கனரக இயந்திரத் துப்பாக்கிகளினால் தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டன. விமானத்திலிருந்து குண்டு
களும் போடப்பட்டன.
14 ஆம் தேதி வரை 21 இந்திய அமைதி காக்கும்
படையினர் விடுதலைப் புலிகளால் கைது
செடீநுயப்பட்டனர். 40 எ°.எல்.ஆர். 20க்கும்
மேற்பட்ட எ°.எம்.ஜி, 2 ராக்கட் சோலஞ்சர், ஒரு
மோட்டார், 3 கவச வாகனங்கள் என்பவற்றையும்
இந்தியப் படையினரிடமிருந்து விடுதலைப் புலிகள்
கைப்பற்றினர்.

நன்றி - புரட்சிப்பெரியார் முழக்கம்

Read more...

என் குரல்வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ?- பேரறிவாளன்

நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் போதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பேரறிவாளன் தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் தனது குடும்பத்திற்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

பேரன்புமிக்க அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகளே,

வணக்கம். நான், அ.ஞா.பேரறிவாளன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 19 வயதில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு அதன் விளைவாய் தூக்கு தண்டனை பெற்றவனாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் இருந்து வருபவன். எள் முனையளவும் தொடர்பே இல்லாத வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், கேட்க நாதியற்றவன் என்பதாலும் அநீதியான தீர்ப்பை சுமந்து நிற்பவன்.

தந்தை பெரியாரின் கொள்கையால் நிரம்பிய குடும்ப வழி வந்தவன் என்பதால் மனிதநேயத்தின் அடிப்படையிலும், தொப்புள் கொடி உறவு என்பதால், இன உணர்வின் அடிப்படையிலும் சிங்கள இனவாதத்திற்கு எதிரான ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து அதற்காக தமிழக மண்ணில் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்தவன் என்ற காரணத்தால் என் மீது தவறான குற்றச்சாட்டு புனையப்பட்டது என்பதை தங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

19 வயது இளைஞனாய் கைது செய்யப்பட்டு, வாழ்வின் வசந்த காலங்களையெல்லாம் சிறையில் செய்யாத குற்றத்திற்காக தொலைத்து, இன்று 40 வயதுடன் பக்குவப்பட்ட குடிமகனாய் உங்கள் முன் இக்கடிதத்தின் மூலம் பேசுகிறேன்.

1. திரு. ராஜீவ் அவர்களின் கொலையை நியாயப்படுத்துவதல்ல இக்கடிதத்தின் நோக்கம். மாறாக இக்குற்றத்திற்கு எவ்வித தொடர்புமில்லாத நானும், என்னைப் போன்றவர்களும் மரண தண்டனைக்கு உரியவர்கள் அல்லர் என்று எடுத்துரைப்பது மட்டுமே.

2. திரு. ராஜீவ் கொலை விஷயமாக விசாரிக்க வேண்டும் என்று சொல்லி 11.06.1991 அன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நான் இன்று வரை நீதி மறுக்கப்பட்டு தூக்கு மரத்தின் நிழலிலேயே வாழ்ந்து வருகிறேன்.

3. அக்கொலைக்கு பயன்பட்ட ‘பெல்ட் பாம்’ செய்வதற்கு நான் உதவினேன் என்பதே என் தண்டனைக்கு வழி வகுத்தக் குற்றச்சாட்டு. இதற்கு ஏதுவாக ஊடகங்களில் பொய் செய்தி பரப்பப்பட்டது. ‘இந்தியா டுடே’ நாளிதழும் நான் எப்படி வெடிகுண்டு செய்தேன் என்று பொய்யாக ஒரு செய்முறை விளக்கம் வெளியிட்டிருந்தார்கள். ஆனால், “சி.பி.ஐ.யால் இறுதி வரை கண்டுப்பிடிக்க முடியாத கேள்விகளுள் ஒன்று, அந்த ‘பெல்ட் பாம்’ஐ செய்தவர் யார் என்பதே” என்று.

விடை தெரியா கேள்விக்கு விடையாக நான் பலியிடப் படவேண்டுமா?

4. அந்த ‘பெல்ட் பாமிற்கு’ 9வி பேட்டரி வாங்கித் தந்தேன் என்பதின் மூலமே நான் அந்த ‘பெல்ட் பாம்’ஐ செய்தேன் என வழக்குரைத்தனர் அரசு தரப்பு வழக்கறிஞர்கள். அதற்கு வசதியாக என்னுடைய மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டய படிப்பும் இவர்களின் கதைக்கு கருவானது. ஆனால் வழக்கின் எந்தவொரு இடத்திலும் நான் வாங்கித் தந்த 9வி பேட்டரிதான் பெல்ட் பாம் வெடிக்கப் பயன்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை.

5. உண்மை என்னவெனில் நான் 9வி பேட்டரியை வாங்கவுமில்லை, அதனை யாருக்கும் தரவுமில்லை. ஆனால் நான் 9வி பேட்டரி வாங்கினேன் என்பதற்கு வழக்கிலுள்ள ஒரே ஆதாரம், ஒரு பெட்டிக் கடைக்காரரின் சாட்சி தான். இந்த சாட்சியை ஏற்க முடியாது என்று தடா நீதிமன்றத்தில் கூறிய நீதிபதி, பிறகு என்ன காரணத்தினாலோ இந்த சாட்சியை ஏற்றுக் கொண்டுவிட்டார். நான் வாங்காத பேட்டரியை வாங்கினேன் என்று ஒருவர் மூலம் சொல்ல வைப்பது நம் காவல்துறைக்கு எத்தனை சுலபம் என்று சற்றே சிந்தியுங்கள்.

6. தடா சட்டத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதே தவறு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. காரணம் இந்தக் கொலைக் குற்றவாளிகளுக்கு கொலை செய்யப்பட்டவர்களைத் தவிர யாதொருவரையும் அச்சுறுத்தவோ, கொல்வதோ நோக்கமாக இருந்திருக்கவில்லை என்று எடுத்துரைத்தது. அப்படி இருக்கும் வேளையில், எங்களை தடா சட்டத்தின் கீழ் கைது செய்து, உரிமைகள் மறுக்கப்பட்டு, தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு, பெறப்பட்ட வாக்கு மூலம் மட்டும் எப்படி செல்லுபடியாகும்?

மேலும் நம் நாட்டில் வாக்கு மூலங்கள் எப்படிப் பெறப்படுகின்றன என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். கடுமையான சித்திரவதை, மிரட்டல், அடி உதைக்கு பயந்துதான் பல வாக்குமூலங்கள் ரத்தத்தால் கையெழுத்தாகின்றன. பொதுவாக அப்படிப் பெறப்படும் வாக்கு மூலங்களை மட்டுமே வைத்து நீதிமன்றங்கள் தீர்ப்பினை தருவது கிடையாது. ஆனால் என் வழக்கில் மட்டும் நீதிமன்றம் அவ்வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, வேறு எந்த ஆதாரமும் இல்லாமல் எனக்குத் தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது.

7. ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்த திரு. தியாகராஜன் என்ற அதிகாரி கேரள மாநிலத்தில் 1993 இல் நடைபெற்ற அருட்சகோதரி அபயா கொலை வழக்கை ‘தற்கொலை’ என முடிக்க அழுத்தம் கொடுத்தவர் என்பதும், அவரது முறைகேட்டை எதிர்த்ததால், அவருக்கு கீழ் பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் திரு. தாமஸ் வர்கீஸ் என்பவர் தனது பதவியை துறந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பிறகு இந்த வழக்கு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை என்று திரும்பியது. எர்ணாகுளம் தலைமை நீதிமன்ற நடுவர் 23.06.2000 அன்று அளித்த தீர்ப்பில் கடுமையான கண்டனங்களை வாங்கியவர் இந்த தியாகராஜன். இவர் என்னிடம் வாங்கிய வாக்குமூலங்கள் ஏன் உண்மையாக இருக்க வேண்டும்? யாருக்காகவோ வழக்கை எப்படியும் வளைப்பவர்கள்தானே இவர்கள்....

8. தடா சட்டத்தில், சிறப்பு தனி நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதால், பெரும் பான்மையான உரிமைகள் எனக்கு மறுக்கப்பட்டன. அதுவே என் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூற முடியாமல் செய்துவிட்டது. பொதுவாக ஒரு மாவட்ட நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பிற்கு, உயர்நீதிமன்றம், பிறகு உச்சநீதிமன்றம் என்று இருமுறை மேல் முறையீடு செய்யும் வாய்ப்புள்ளது.

இந்த செயலபாடு ஒரு இடத்தில் இல்லாவிட்டாலும் மறு இடத்தில் நீதி சரியாக கிடைக்க உதவியது. ஆனால் எங்கள் விஷயத்தில் தடா கொடுங்கோல் வழக்கு என்பதால், உயர் நீதிமன்றம் செல்லும் வாய்ப்பு மறுக்கப்பட்டு, இரண்டில் ஒரு மன்றத்தின் கதவு அடைக்கப்பட்டுப்போனது. இப்பொழுது தடா சட்டம் தவறு என்று அந்த சட்டமே நம் நாட்டில் வாபஸ் பெறப்பட்டாலும், அதனால் பாதிக்கப்பட்ட என் போன்றவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? எப்பொழுது கிடைக்கும்?

9. தடா நீதிமன்றத்தின் கீழ் விசாரிக்கப்படுபவர்கள் 20 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தடா சட்ட வரம்பு சொல்கிறது.

10. அவர் அதற்கு முன்னால் குற்றம் ஏதும் புரிந்தவரா என்பதை கவனிக்க வேண்டும்.

11. குற்றப் பின்னணி உள்ள குடும்பத்தைச் சார்ந்தவரா என்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்கிறது தடா சட்டம்.

12. எனக்கு மட்டும் இந்த எந்த வரைமுறைகளையும் கடைபிடிக்காமல் தடாவின் கீழ் கைது செய்து விசாரித்து, தண்டனையும் அறிவித்தார்கள்.

13. சிறப்பு நீதிமன்றத்தில் 26 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் அதில் 22 பேர் தூக்குத் தண்டனையை ரத்து செய்கிறதென்றால், இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் எத்தன்மையுடன் ஒரு தலைப்பட்சமாக, முன் முடிவுகளுடன் விசாரிக்கப்பட்டதென்பதை புரிந்து கெள்ள முடியும்.

சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்று இருந்தாலும், இந்த வழக்கைப் பொறுத்தவரை கொல்லப்பட்டவர் ராஜீவ் என்பதாலும், அவருக்கு இருந்த செல்வாக்கு மற்றும் ஊடக அனுகூலங்களாலும், ஒரு தலைபட்சமாகவே பார்க்கப்பட்டது. இன்னொரு வாய்ப்பு கிடைக்கப் பெற்று, நடுநிலையுடன் விசாரிக்கப்பட்டால் எங்களது தூக்குக் கயிறும் கண்டிப்பாக அறுபடும் என்று என்னால் உறுதியாக கூற முடியும்.

அந்த வசதி இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் உள்ளது. ஆனால் இனி வழக்கை விசாரிக்கும் வழியில்லை என்கிறது இந்திய குற்றவியல் சட்டம். ஆகையால் கருணை மனுவின் மீதான முடிவே இறுதி முடிவு என்று விடப்பட்ட பரிதாபத்துக்குரியவர்கள் ஆகிப் போனோம் நாங்கள். நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ?

14. திருமதி சோனியா காந்தி, இவ்வழக்கில் தூக்குத் தண்டனைப் பெற்றவர்களுக்கு அத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கோ என் குழந்தைகளுக்கோ (ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி) சற்றும் விருப்பமில்லை என ஏற்கனவே கூறியுள்ளார்.

15. ஆயினும் எங்களை 20 ஆண்டுகளாக இப்படி சிறையில் அடைத்து வைத்திருக்கும் மர்மம் எங்களுக்கு விளங்கவில்லை. நிரபராதிகளான எங்களை இப்படி தூக்குக் கொட்டடியிலேயே வைத்திருக்கும் காரணம் புரியவில்லை.

16. 1980களின் இறுதியில் வாழ்ந்த எல்லா இளைஞர்களைப் போலவே நானும் ஈழ விடுதலையிலும், விடுதலைப் போராளிகளின் மீதும் பற்றுக் கொண்டிருந்தேன். அன்று கல்லூரிகளிலும், பணி இடங்களிலும் எல்லோரும் தான் விடுதலைப் போராட்டத்திற்காக உதவி வந்தார்கள்.

ஒரு நாள் ஊதியத்தையும் கொடுத்தார்கள். பள்ளிகளில் நன்கொடை வசூலித்தார்கள். ஏன் நம் மத்திய, மாநில அரசுகள் கூடத்தான் அவர்களுக்கு உதவிகள் புரிந்தன? ஒரு துர்ச் சம்பவம் நிகழும்பொழுது நான் மட்டும் எப்படி எதிரி ஆகிப் போனேன்?? ஏன் தனிமைப்படுத்தப்பட்டேன்?? உங்களில் ஒருவன் தானே நானும்??

தூக்குத் தண்டனை என்பது சட்டத்தின் பெயரால் செய்யப்படும் திட்டமிட்ட படுகொலை என்கிறார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர்.

செய்த குற்றத்திற்கு வழங்கப்படும் தூக்கு தண்டனையையே திட்டமிட்டப் படுகொலையெனில், செய்யாத குற்றத்திற்கு வழங்கப்படும் தூக்குத் தண்டனையை என்னவென்று சொல்வது?

- முடிவுறா விசாரணையில், முடிவினை நோக்கித் தள்ளப்பட்டுள்ள அப்பாவி

இவ்வாறு அவர் அந்த கடித்தத்தில் தன் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

Read more...

ஒரே குடும்பத்தால் சுருட்டப்பட்டுள்ள - தமிழர் சொத்துக்கள்

முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது டெல்லியிலிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை.

இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட கால நண்பரும் கூட.

இந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள விவரங்களைப் பார்த்து பிரதமர் உள்ளிட்ட டெல்லி தலைவர்கள் ஆடிப் போய்விட்டதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

அந்த பத்திரிகை வெளி​யிட்டு உள்ள பட்டியல்:

1. 6,124 சதுர அடிகள் பரப்பளவு​கொண்ட கருணாநிதியின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

2. முரசொலி மாறனின் கோ​பாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.

4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.

5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.

6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.

7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.

8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.

9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.

10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.

11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.

12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.

13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.

14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.

15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.

16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.

17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.

18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.

19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.

20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.

21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.

22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.

23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.

24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு - 48 கோடி.

25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.

26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.

27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.

28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.

29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை

30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை

31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.

32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.

33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.

34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.

35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்

36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.

37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.

38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.

39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.

40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.

42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.

44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.

45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.

46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.

49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

50. சென்னைக்கு அருகில் சோழிங்​கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.

51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு - ரூ 3 கோடி.

52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.

53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.

54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.

56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை.

57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.

58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.

59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.

60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.

61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.

63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை

64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.

65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.

66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்த​மான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்​களுடையதே.

67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.

68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்​துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.

- இவ்வாறு அந்தப் பத்திரிகை பட்டியல் இட்டுள்ளது.

Read more...

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP