பாவேந்தர் காட்டும் இலக்கியப் பெண் - ஆ. ஆனந்தன்

    பாலியல் வேறுபாட்டைக் கற்பித்திருக்கும் ஆண் ஆதிக்கச் சமுதயாத்தில் பெண் பாலியல் அடிப்படையில் ஒடுக்கப்படுவதும் அதிலிருந்து பெண் மீட்சிபெற முயல்வதை, பண்பாடுகளாலும் நாகரீக வளர்ச்சியினாலும் கட்டமைக்கப்பட்ட சமுதாயத்தில் காணமுடிகிறது. பெண் சமுதாயத்தில் அடிமைநிலையிக்கு தள்ளப்பட்டு இருந்ததை கண்ட பாரதி, பெரியார், பாரதிதாசன் போன்ற சிந்தனைவாதிகள், இந்நிலையை ஒழிக்க பாடுபட்டனர். மூடப்பழக்க வழக்கங்களால் பெண்களை அடிமைப்படுத்த விரும்பாத பெண்ணியவாதிகள் சமூகச் சிந்தனையாளர்கள் காலந்தோறும் போராடிவருகின்றனர். இத்தகைய நிலையில் தமிழ், தமிழுணவர்வு பெண்விடுதலை என திராவிட இயக்கச்சிந்தனைகளை ஒரு சேர சிந்தித்து அதனைத் தம் கவிதைகளில் கையாண்டு சமுதாயத்திற்கு கருத்துறைகளை வழங்கிய புரட்சிக் கவிஞரின் இலக்கியத்தில் பெண் என்பவள் எப்படி சித்திரிக்கப்பட்டுள்ளால் என்பதை ஆராயும்நோக்கிலே இக்கட்டுரை அமைகிறது.

    பாவேந்தரை புரட்சி கவிஞரென்றும், புதுவைக் கலைஞரென்றும் புதுமை அறிஞரென்றும் பலவிதமாகப் பாராட்டியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அவருடைய புரட்சிக் கொள்கைகளை போற்றாதவர் யாரும் இல்லை. இவருடைய பெண் உரிமைக் கொள்கையில் பெண் சமுதாயமே விழித்தெழுந்தது. புலவர்களின் வர்ணணைக்கும், காதலுக்கும் மட்டுமே கருவியாகக் கிடந்த பெண் இனத்தை வாழ்க்கையின் வேரும் விழுதுமாய்க் காட்டியவர் பாவேந்தர்.
    பாவேந்தர், கவிதையைக் கண்காட்சிப் பொருளாகப் பார்க்காமல், களத்தில் எய்யப்படும் கணைகளாகவே எண்ணிப் பெண்ணிற்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தெளிவான சமுதாயக் குறிக்கோளுடன் வெளிப்படுத்துகிறார். சாதிமத வேறுபாடுகளால் தவிக்கும் நாடு என்றைக்கும் இருட்டிலேயே இருப்பதுபோல், சமூகரீதியாகக் கொடுமைப்படுத்தப்படும் பெண்ணிணத்தை அடிமைகளாகவும், போகப் பொருளாகவும் பார்க்கும் சமுதாயம் என்றைக்கும் விழிப்படையாது என்கிறார். எனவேதான்
“பெண்ணடிமை தீரு மட்டும் பேகம் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற் கொம்பே”
என்று மனித நேயத்தால் விளைந்த புதிய சிந்தனையால்தான் தீர்க்க முடியும் என்று எண்ணிப் பெண்ணடிமைத் தனத்தை ஒழித்தால்தான் மண்ணடிமைத் தனத்தை ஒழிக்க முடியும் என்று தொடர்புப்படுத்தியும் காட்டுகிறார்.
    பெண்ணினத்தைப் போற்றுவதைக் காலத்தின் கட்டாயத்தால் செய்கின்றவர்கள் உள்ளனர். ஆனால் பாவேந்தரோ எந்தக் கட்டாயத்தாலும் அதைச் செய்யவில்லை, ஒரு சமுதாய நோயைக் குணப்படுத்தவேண்டும் எணும் வேட்கையே அவரது நோக்கம். எனவேதான் அவரது காவியப் படைப்புகள் பெரும்பாலானவற்றில் பெண்கள் ஆடவரைக் காட்டிலும் அறிவாளிகளாகவும், வீரம் மிக்கவர்களாகவும், வழிநடத்தும் வல்லமை பெற்றவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளனர்.
    இத்துறையில் தமிழகத்தில் மயிலாடுதுறை வேதநாயகம் பிள்ளை, மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, திரு.வி.க. முதலானோர் சிறப்பாகத் தொண்றாற்றியுள்ளனர். கவிதையுலகில் பாரதிதாசன் பெண்களின் கண்ணிரைப் படைத்ததோடு நில்லாமல் அதைத் துடைப்பதற்கான வழியினையும் காட்டியிருப்பது முற்றிலும் உண்மை.
    தந்தை பெரியார் பெண்விடுதலைப் பற்றிய தொலைநோக்கும், மிக முற்போக்கான கண்ணோட்டமும் உடையவர். பெண் விடுதலை பற்றி மிகத் தீவிரமான கருத்துக்களை கொண்டிருந்தார். கற்பு, விபச்சாரம் போன்ற ஒழுக்க வார்த்தைகள் ஆண்களால் ஆண் ஆதிக்கச் சமுதாயத்தில் பெண்களுக்குப் போடப்பட்ட கொடுமைiயான பலமான அடிமைச் சங்கிலிகளே என்பதைப் பெரியார் உணர்த்தினார். உண்மையான பெண்கள் சுதந்திரம் வேண்டுமானால், பெண்கள் தங்கள் கர்பப்பையை எடுத்துவிடவேண்டும். கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது, நிலவும் திருமணமுறை ஆண்களுக்குப் பெண்களை நிபந்தனைகளற்ற அடிமைகளாக்குவது என்ற அளவுக்கு முற்போக்காகப் பெரியார் பிரச்சாரம் செய்தார்.
    இவர் வழிவந்த பாரதிதாசன், தந்தைப் பெரியாருடைய புரட்சிக் கோட்பாட்டினையும், பகுத்தறிவு நெறியையும், தன்மானக் கொள்கையையும் முழுமையாக ஏற்றுக்கொண்டு இலக்கியம் படைத்தவராதலால் அவரின் படைப்புகள் இன்றுவரை நின்று விளங்குகின்றன. பெண்ணின் பெருமையைப் பாடுவதையும், இழிவைப் போக்கவும் உலக நலனுக்காகவும் அவர் பெண் கல்வியை வற்புறுத்தினர்.
“பெண்கட்குக் கல்வி வேண்டும்
குடித்தனம் பேணுதற்கே
பெண்கட்குக் கல்வி வேண்டும்
மக்களைப் பெணுதற்கே
பெண்கட்குக் கல்வி வேண்டும்
உலகினைப் பேணுதற்கே
பெண்கட்டுக்கு கல்வி வேண்டும்
கல்வியைப் பேணுதற்கே”
என்று பெண் கல்வியால் வீடு, நாடு, உலகம் ஆகிய அனைத்தும் உயர்வுபெறும் என்று அறியுறுத்துகிறார். பெண்களின் உயர்வைப் பாடும் பாவேந்தர் கல்விபெறும் உரிமையை அவர்களுக்கு முழுமையாக வழங்கவேண்டுமெனக் கூறினார். பெண் கல்வி இல்லை என்றால் சமூகத்தில்
“கல்வியில்லாத பெண்கள்
களர்நிலம் அந்நிலத்தில்
புல் விளைந்திடலாம் நல்ல
புதல்வர்கள் விளைவதில்லை”
எனக் கூறுகிறார்.
    ஓர் ஆடவர் கற்றால் அவனளவில் அக்கல்வி நன்மை தரும். ஆனால் பெண் கற்றால் அவள் தன் குடும்பமே சார்ந்து விளங்கும் என்றும் எதிர்காலச் சமுதாயத்தின் முதல் ஆசிரியர் தாயே என்கிறார். கற்ற பெண்கள் சமுதாயத்தின் கண்கள் நல்ல பெண்கள் நல்ல சமுதாயத்தின் அடிப்படை ஆகும். ஆண்களோடு போட்டியிட முடியும், ஆடவர் செய்து முடிக்க முடியாதவற்றைப் அவரது படைப்புக்களில் ஒவ்வொரு வகையான புதுமைப் புரட்சியைச் செய்யும் பெண்களைச் சந்திக்க முடியும். மேலும் அவரது தனிப்பாடல்களிலும், குறுங்காவியங்களில் புதுமைப் பெண்களை நடமாட விட்டுப் புரட்சிகளை விளைவிக்கிறார்.
    பெண்களை உயர்வாகப் போற்றும் முற்போக்கு எண்ணம் கொண்ட பாரதிதாசன் அடிமைப்படுத்த எண்ணம் கொண்ட ஆண்களை எச்சரிப்பதுடன், பெண் அடிமையை எதிர்க்கிறார். நீதி வழங்காத சமுதாயத்திலிருந்து விடுதலை மேற்கொள்ளச் சொல்லிப் பெண்ணுக்கு வழிகாட்டுகிறார். பெண்ணினத்தைக் கீழாகக் கருதிக் கொண்டு பெரும் பிழைகள் செய்கின்ற ஆண்கள் கூட்டம் பெண்ணை உயர்வாகக் கருதும் நாள் எந்நாளோ? அந்நாளில் மன்னர்களும் தானாக ஏற்றுக்கொள்வர். அப்பொழுது மடமையெல்லாம் ஒரு நொடியில் தொலைந்துபொகும் என்று பெண்ணியத்தைக் கருதிவந்த பெருமையெல்லாம் இவ்வையகம் காணும் என்று எண்ணி பெண்களின் நிலையை உயர்த்திக்காட்டி பெண்கள் செயலாற்றும் திறனொடு ஆணுக்கு நிகரான ஆற்றலுடன் மிளிரவேண்டும் என்று தம் படைப்புக்களில் படைத்துக்காட்டுகிறார்.
    “எதிர்பாராத முத்தம்” குறுங்காவியத்தின் தலைவி பூங்கோதையை பெண்ணின் மொத்த உருவமாகப் படைத்து எழில் ஓவியமாக நடமாடவிட்டிருக்கிறது.
“சஞ்சிவி பர்வதத்தின் சாரல்” என்னும் கதைக் கவிதையில் இடம்பெறும் வஞ்சி, அவள் காதலனான குப்பனை வழிநடத்துகிறாள். அச்சமும், மடமையும் கொண்ட சமுதாயத்தின் குறையைக் கண்டிக்கிறாள். அவள் அவனுள் நிறைந்திருக்கும் அறியாமை இருட்டை அகற்றி அறிவு விளக்கேற்றி வழிநடத்துகிறாள். இவற்றை நடப்பியல் உலகில் பெண்கள் அவமதிக்கப்படும் நிலைமையை மாற்றுவதற்காக நிமிர்ந்த ஞானச் செருக்கோடு பெண் மாந்தரை படைத்திருக்கிறார்.
“புரட்சிக் கவி” என்ற காவியத்தில் அமுதவல்லியும் ஒப்பற்ற பெண்ணாகவே உருவாக்கப்பட்டிருக்கிறாள். தலைகவிழ்ந்து நிலம் பார்த்துத் தடுமாறிப் பேசுகின்ற அப்பாவிப் பெண்ணைப் பாவேந்தர் மாற்ற எண்ணியே இப்படி ஓர் கற்பனைப் பாத்திரத்தைப் படைத்திருக்கிறார்.
    பெண்மை நலம் பாராட்டும் பெரும்புலவரான பாவேந்தர்;, பெண்மையின் குன்றாப் பெருமையினைப் பறைசாற்றும்போது தருவாகத் திகழ்பவன் கணவன் என்றும், வேராக விளங்குபவன் மனைவி என்றும் குறிஞ்சித்திட்டில் குறிப்பிட்டு
“வேரை மரம் வெறுத்தால் விழுந்துடு மன்றோ குடும்பம்”
என வினவுகிறார்.
    சாதியை ஒழிக்க எந்த அளவு பாடுபட்டாரோ அந்த அளவுக்குத் தீவிரத் தன்மையுடன் பெண்ணடிமையையும் எதிர்த்துநின்று சமூக இருப்பிற்கும் வளர்ச்சிக்கும் பெண்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்று எண்ணி நம்நாட்டில் பெண்கள் நிலையானது, மிகவும் கவலைக்கிடமானது என வேர் தொடங்கி உச்சிக்கிளை வரை முழுவதும் திருத்தம் செய்ய வேண்டும் என்று “பெண்களின் சமத்துவம்” என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
    அடிமை மணமுறை ஒழிக்கப்பட்டு பதிவு மணம் வேண்டும், இன்ப துன்பங்களில் சமபங்கு வேண்டும், உள்ளம் வேறுபட்டால் மடவர் பிற ஆடவரை மணக்கவும், வேறோர் அனங்கை ஆடவர் மணக்கவும் உரிமைவேண்டும் என்கிறார்.
    பெண்ணுரிமை, பெண்கள் முன்னேற்றம், பெண்கள்படும் கொடுமைப் போன்றவற்றை பற்றி பேசும்போது
        “கோரிக்கையற்றுக் கிடக்கு தண்ணே கிங்கு
        வேரில் பழுத்தபலா! மிக்க
        கொடிய தென் றெண்ணிடப்
        பட்ட தண்ணே-குளிர்
        வடிகின்ற வட்ட நிலா.
என்று பெண்டிர்க்காகக் கண்ணீர் வடித்திட்ட பேரன்புத் தாயுமானவர் அவர். சிறுமை நிலையில் இறாமல் பெண்கள் விழிப்புற்றுச் சிலிர்த்தனர் என்பதைக் கேட்டுப் பாரதிதாசன் “கோடியுள்ளம் வேண்டுமிந்த மகிழ்ச்சிதாங்க” எனக் கூறுவதில் பெண்ணின் விடுதலை அறிந்து மகிழ்வதையும் காணமுடிகிறது.
    கணவரை இழந்த பெண்களின் நிலையைப் பற்றி புறநானூறும் கூறுகிறது. பாரதியும் கண்டிக்காத இச்சமுதாயக் கொடுமையைப் பாரதிதாசன் கண்டுகடிவதோடு, அவர்களுக்குப் புதிய வாழ்வளிக்க வேண்டிப் புரட்சியாய்ப் பாடுகிறார். மறுமணம்புரிய கெடுப்பவர்களை பிணங்கள் என்றும், சிறுமை என்றும், குறுகிய மதி உடையவர்களை பழிக்கிறார். எனவே பெண்ணும் துணைவன் இறந்தபின் வேறுதுணை தேடிச் செல்லலாம் என்று புவியின்மேல் முழங்கி சமத்துவம் கற்பிக்கிறார்.
    இதுபோன்ற சமுதாயச் சீர்கோடுகளை களைந்து இழிநிலையிலிருந்து பெண்களை மீட்டும் விதவை மணம் பல்கிப் பெருகிட வேண்டும் என்றும் பெண் அறிவாற்றலால் கல்வி கற்று மணத்திண்மை கொண்டு தன்னைத் தான் காத்துக்கொள்ளும் தகுதி படைத்திட வேண்டும் என்றும், வீரமும் ஆற்றலும் விவேகமும் செயல்திறனும் கொண்டு தன்னைச் சார்ந்தவரையும் பேணிக்காத்து நலம் செய்திட வேண்டும் என்றும் புதுமைக் கருத்து மலர்களைத் தூவிப் பெண்ணினத்தை மலரச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தம் எழுத்தாற்றலால் பெண் சமுதாயத்திற்கு புத்துயிர் ஊட்ட காரணமாயிருந்தார் என்பதை இவரது படைப்புகள் மூலம் காணமுடிகிறது.

Read more...

சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் பிறந்தநாள் விழா

சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் அவர்களின் பிறந்தநாள் விழா புதுச்சேரி மாநிலம், வீராம்பட்டினம், பெரியார் பாசைறை தோழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெரியார் பாசறை நிறுவனர் பா.சக்திவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது மேலும் நிகழ்வின் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன. இவ்விழாவில் பாசறைத்தோழர்களும், ஊர்ப்பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.








வரலாறு
பிறப்பு பெப்ரவரி 18, 1860

ம. சிங்காரவேலர் (பெப்ரவரி 18, 1860 -பெப்ரவரி 11, 1946) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பொதுவுடமைவாதியும் தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். மயிலாப்பூர் சிங்காரவேலு செட்டியார் என்ற முழுப்பெயர் கொண்ட இவர் பொதுவுடைமைச் சிந்தனைகளை தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய பணிகளுக்காக "சிந்தனைச் சிற்பி"[1] எனப் போற்றப்படுகிறார்.






பொருளடக்கம்

1 கல்வியும் தொழிலும்
2 சமூகப் பணிகள்
3 ஈடுபட்ட போராட்டங்கள்
4 சிறப்பு
5 அரசு விழா
6 மேற்கோள்கள்
7 உசாத்துணை
8 வெளி இணைப்புகள்

கல்வியும் தொழிலும்

சிங்காரவேலர் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். தனது பள்ளிக்கல்வியை முடித்த பின் மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதன்பின் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்குறைஞர் ஆனார். வழக்குறைஞராகத் தன் வாழ்க்கையைத் தொடர்ந்த இவர் பொதுவுடைமைச் சிந்தனைகளாலும் காந்தியச் சிந்தனைகளாலும் ஈர்க்கப்பட்டார்.
[தொகு] சமூகப் பணிகள்

இந்தியாவில் முதன்முதலாக மே நாளைக் கொண்டாடியவர். (தொழிலாளர் நாள்)
உருசியாவின் கம்யூனிசப் புரட்சியால் கவரப்பட்டு, இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னை தொழிலாளர் சங்கத்தை 1918இல் தொடங்கினார். சென்னை பக்கிங்காம் கர்னாடிக் ஆலையில் தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார்.
தொழிலாளர் நலனுக்காக மே 1, 1923 ல் தொழிலாளர் விவசாயக் கட்சியை தொடங்கினார்[2][3].
1925ல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கிய தலைவர்களுள் இவரும் ஒருவர்.
இவர் சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்த போது மதிய உணவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அதன் பின்னர் இத்திட்டம் இடையிலேயே கைவிடப்பட்டது. எனவே இவரே காமராஜர் தமிழகம் முழுவதும் தொடங்கிய மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி ஆவார்.
தமிழ் மொழிக்காக பெரிதும் பாடுபட்டார். தமிழை ஆட்சி மொழியாக்கும் கோரிக்கையை வலியுறுத்தினார்.
பல நூல்களை எழுதியுள்ளார். மேலும் பல நூல்களை வேறு மொழிகளிலிருந்துத் தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார்.[4] இவர் எழுதிய சிந்தனை நூல்கள் மாஸ்கோ நகர் லெனின் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. இவருடைய நூலக்ள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
பெரியார் ஈ. வே. ராமசாமியின் சுயமரியாதை இயக்கம் 1930களின் ஆரம்பத்தில் பொதுவுடைமைக் கொள்கையின் பக்கம் சாய சிங்காரவேலரின் தூண்டுதல் காரணமாக இருந்தது.

[தொகு] ஈடுபட்ட போராட்டங்கள்

சிங்காரவேலர் 1918ஆம் ஆண்டு மகாத்மா காந்தியைத் தன் தலைவராக ஏற்றார். இவர் ஆங்கிலேய ஆட்சியின் இரவுலத் சட்டத்தினை எதிர்த்தார். மேலும் 1919ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வைத் தொடர்ந்து காந்தி ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்திற்கு அனைத்து வழக்குரைஞர்களுக்கும் அழைப்பு விடுத்தார். அதன் காரணமாக இவர் தனது வழக்குரைஞர் ஆடையை எரித்தும் "இனி எப்போதும் வக்கீல் தொழில் பார்க்க மாட்டேன். என் மக்களுக்காகப் பாடுபடுவேன்!" என்று கூறியும் ஆங்கில அரசுக்குத் தனது எதிர்ப்பையும் காந்திக்குத் தனது ஆதரவையும் காட்டினார். ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலையைச் சமாளிக்கும் விதமாக இங்கிலாந்தின் வேல்சு இளவரசர் இந்தியாவுக்கு வந்தார். அவரது வருகையை எதிர்க்கும் விதமாக சிங்காரவேலர் சென்னையில் பெரிய போராட்டம் ஒன்றை முன்னின்று நடத்தினார். இப்போராட்டம் ஆங்கிலேய அரசையே உலுக்கியது என்று அறிஞர் அண்ணா கூறியுள்ளார்.
[தொகு] சிறப்பு

ம. சிங்காரவேலர் மீனவச் சமூகத்தைச் சேர்ந்தவராதலால், தமிழக அரசு மீனவர் வீட்டு வசதித் திட்டத்திற்கு இவரது பெயரைச் சூட்டியுள்ளது. மேலும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிங்காரவேலர் மாளிகை என்று பெயர் சூட்டியது. இவர் உருசியப் புரட்சியாளர் லெனினின் நெருங்கிய நண்பர்[ஆதாரம் தேவை]. பேரறிஞர் அண்ணா இவரை, "வெட்டுக்கிளிகளும் பச்சோந்திகளும் புகழப்படும் ஒரு நேரத்தில் ஒரு புரட்சிப் புலியை மக்கள் மறந்தனர்!" என்று கூறியுள்ளார்.

Read more...

அப்துல்கலாம் காங்கிரஸ் அரசின் தற்போதைய தரகரா?

இலங்கைக்கு நான்கு நாள் சுற்றுவிஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், இப்பிரடகடனத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வில் பங்கெடுத்துக்கொண்டார். ஊர் உலகை ஏமாற்ற 10 வருட செயல் திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த 'மும்மொழி இலங்கை' திட்டத்தின் தொடக்கவிழாவின் போது ஈழத்தமிழர்களின் அடிப்படைத் தன்மையை சற்றும் உணராதவராய், ஏட்டு அறிவை மட்டுமே கையாண்டு வருபவராய் உரையாற்றிய டாக்டர் அப்துல் கலாம், 'கொண்டாட்டங்களின் அடிப்படையிலேயே வேறுபாடுகளை கலைய முடியும். மோதலிலான் அல்ல. வறுமை, கல்வியறிவின்மை, வேலையின்மை இழப்பு, ஆகியன சச்சரவுகள், கோபம், வன்முறை என்பவற்றை தூண்டிவிடுகின்றன.




இவையே பழமைவாதம், வரலாற்று பகைமை, நீதி நடுநிலையின்மை, மத அடிப்படைவாதம் என்பவற்றை தூண்டிவிட்டு தீவிரவாத எழுச்சியை ஏற்படுத்துகிறது' என்றார். இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு இந்தியா, இலங்கை இரு நாடுகளுமே நீண்டகாலம் நிலைத்திருக்க கூடிய ஒரு நிலையான தீர்வை தேடவேண்டும் என்றார்.



இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் இளைஞர்களுக்கான ”கனவு காணுங்கள்” என்ற திட்டத்தினை இலங்கையிலும் பிரதிபலிக்கும் வகையில் 'சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்ப இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன். இலங்கையில் இணக்கம் மற்றும் செழிப்பு கொண்ட அமைதியான இலங்கையை கட்டியெழுப்ப இரு பக்க தலைவர்களையும் தான் சந்திக்கவிருக்கிறேன். மோதல்கலுக்கான தீர்வாக எந்தவொரு போரும் அமையவில்லை. குறிப்பிட்ட எந்த பிரச்சினையையும் போர் மூலம் தீர்வு காண முடியாது என்றார்.

இதேவேளை அப்துல் கலாம் கடந்த சில நாட்களுக்கு முன் கூடங்குளம் அணு உலை திட்டத்தில் தமிழர் விரோத போக்கை வெளிக்காட்டியிருப்பதன்மூலம் இவர் காங்கிரஸ் அரசின் தற்போதைய இடைத்தரகராக நியமிக்கப்பட்டிருக்கலாம் என அறியப்படுகிறது.

Read more...

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் - கிருஷ்ணா திருப்தி

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் வெறித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் 200க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன. 8 மீனவர்களை சிறை பிடித்துச் சென்று விட்டனர். பல மீனவர்கள் காயமடைந்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்களை இந்த அடாத செயல் பெரும் அதிர்ச்சியிலும், கொந்தளிப்பிலும் ஆழ்த்தியுள்ளது.



600க்கும் மேற்பட்ட படகுகளில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். சர்வதேச எல்லைப் பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சூழ்ந்து கொண்டனர். பின்னர் காட்டுமிராண்டிகள் போல கற்களை வீசித் தாக்கினர். இதில் பல மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டது.



200க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன. மேலும் மீனவர்கள் கரைக்குத் திரும்பிய பின்னர் பார்த்தபோது பாக்கியம்ஜோசப், ராஜமாணிக்கம், மாரியப்பன், விஜயகுமார், சின்னையா, செல்வராஜ், தமிழ்ச்செல்வம், மலைச்சாமி ஆகிய 8 மீனவர்களை காணவில்லை என்று தெரிய வந்தது. அவர்களை இலங்கைப் படை பிடித்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில்தான் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு எல்லாம் திருப்தியாக இருக்கிறது என்று கூறினார். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது. அங்கு என்ன பேசினார்கள் என்பது தெளிவாகத் தெரியாத நிலையில், அந்தப் பேச்சுக்குக் கிடைத்த 'மதிப்பாக' இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது.

தாக்குதலிலிருந்து தப்பி வந்த மீனவர்களில் ஒருவரான ஜஸ்டின்கூறுகையில், கற்களை தாறுமாறாக எங்கள் மீது எறிந்து இலங்கைப் படையினர் தாக்கினர். பெரிய பெரிய கற்களை அவர்கள் எடுத்து வந்து வீசினர். மேலும் மீன்பிடி வலைகளையும் அவர்கள் அறுத்துக் கடலில் போட்டனர் என்றார்.

தாக்குதலில் ஜெகதீசன் என்ற மீனவரின் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தமிழனின் நிலை இப்படியிருக்க...

நைஜீரியா நாட்டில் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் இந்திய ஊழியர் ஒரே ஒருவர் உயிர் இழந்தார். இந்த நைஜீரியா குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் பெரும் உயிர் இழப்பு ஏற்பட்டிருப்பது வருந்தத்தக்கது என்று தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இந்தியர்கள் விவரத்தை அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

தமிழனை இந்தியனாக பாராத இந்திய அரசை இனியும் தமிழக மீனவர்கள் நம்பியிராது...
தமிழ்தேசியத் தலைவரின் பாதையில்...
விரைவில் தற்காப்புக்கேனும் ஆயுதம் ஏந்தும் நிலை வந்தே தீரும்..

Read more...

உயிர் பிரியும் வலி…....

உடலில் சிறு காயங்கள் ஏற்படும் போதெல்லாம் உயிர் போகும் வலியென நாம் அலறுகிறோம்.உன்மையில் உயிர் பிரியும் வேலையில் அது போன்ற வலி ஏற்படுமா? அதை உணர்த்துவது என்பதும் இயலாத ஒன்றாகிவிட்டது. ஆனால் உயிர் பிரியும் வலியை என் அம்மாவின் உயிர் பிரியும்வேளையில் அருகிலிருந்த நான் உணர்ந்தேன்...
ஒருவரின் இழப்பின்போது அவரது குடும்பத்தாரும், உறவினரும் அடையும் ஆழ்ந்த கவலையே உயிர் பிரியும் வலியா?

Read more...

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP