உலகத்தாய்மொழி நாள்











பெரியார் அறிவியல் மன்றம் சார்பில் உலகத்தாய்மொழி நாள் விழா பொதுக்கூட்டம் புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம், பெரியார் திடலில் 21.02.2011 அன்று சிறப்புற நடைபெற்றது. மன்ற நிறுவனர் தூ.சடகோபன் தலைமையில், புதுவை செந்தமிழர் இயக்கத்தோழர் ந.மு.தமிழ்மணி அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியனார். மன்ற உறுப்பினர் இல.இராமதாசு வரவேற்புரையாற்றினார். எழுகதிர் ஆசிரியர் அருகோ அவர்களும் கருத்துரை வழங்கினார். மேலும் அதனைத்தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியர். ம.இலே.தங்கப்பா, பேராசிரியர். இரா.ச.குழந்தைவேலனார், வழக்குரைஞர். கோ.மன்றவானன், கலைமாமணி. கோவி.கலியபெருமாள் ஆகியோர் உரையாற்றினர். விழாவின் தொடக்கத்தில் புதுவை க.சுப்பையாவின் விடுதலைக்குரல் கலைக்குழுவினரின் தமிழிசை நிகழச்சி நடைபெற்றது. விழாவின் முடிவில் புதுவைக்குயில் பாசறை ச.ஆனந்தகுமார் நன்றி கூறினார்.

Read more...

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP