கருணா... கருணாநிதி... குமரன் பத்மநாபன் துரோகம் - வைகோவின் பதிலடி

ஈழத்தில் போர்நிறுத்தம் ஏற்படாமைக்கு காரணம் வைகோ என்று சிறீலங்கா கட்டுப்பாட்டிலுள்ள கேபி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் ஈழப்போராட்டத்தின் இறுதியில் நடந்தது என்னவென்று நமது மீனகம் இணையத்துக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்..

Read more...

புதுவை மாணவர்களுக்கு 75% இடஒதுக்கீடு ரத்து

புதுச்சேரி மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் அந்த மாநில மாணவர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தி மாநில அரசு பிறப்பித்த ஆணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.

புதுவையைச் சேர்ந்த பெற்றோர்-ஆசிரியர் கூட்டமைப்பு, புதுவை வழக்கறிஞர் ஜெயக்குமார் உள்ளிட்ட சுமார் 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுக்களை தாக்கல் செய்தனர். அதில்,

புதுவை யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, மற்றும் ஏனாம் ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இவற்றில் காரைக்கால், மாகி, ஏனாம் மண்டலங்களில் உள்ள மாணவர்கள் [^] கல்வியில் பின்தங்கியுள்ளனர்.

இதையடுத்து அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பதற்காக கடந்த 2006ம் ஆண்டு புதுவை அரசு ஒரு அரசாணை பிறப்பித்தது. இதன்படி காரைக்கால் மாணவர்களுக்கு 18 சதவீதமும், மாகி மாணவர்களுக்கு 4 சதவீதமும், ஏனாம் மண்டல மாணவர்களுக்கு 3 சதவீதமும் மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங், பல்மருத்துவம் உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது.

ஆனால், கடந்த மே மாதம் புதுவை அரசு மற்றொரு ஆணை வெளியிட்டது. இதில் மீதமுள்ள 75 சதவீத இடங்களில் புதுவை மாணவர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டும், குறைந்தது 5 ஆண்டுகள் புதுவையிலேயே தொடர்ந்து வாழ்ந்து கடைசி 3 ஆண்டுகள் அங்கேயே படித்து இருந்தால் அந்த மாணவர்களுக்கு புதுச்சேரி மண்டல இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்த அரசு ஆணை சட்டத்துக்கு விரோதமானது. இந்தியாவில் எந்த மாநிலத்தை சேர்ந்த மாணவர்களும் மற்ற மாநிலங்களில் படிக்க உரிமை உள்ளது. ஆனால் புதுவை அரசின் இந்த அரசாணை மூலம் வெளி மாநில மாணவர்களோ அல்லது புதுவை யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காரைக்கால், மாகி, ஏனாம், மாணவர்களோ அந்த 75 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர முடியாது.

இது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 226 பிரிவுக்கு எதிரானது. எனவே, உள்நோக்கத்துடன் பிறப்பிக்கட்ட அரசு ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது புதுவையில் நடைபெறும் அனைத்து தொழிற் படிப்புக்கான கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இன்று மீண்டும் இந்த வழக்கு அதே நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:

அனைவரும் சம கல்வி கிடைக்க வேண்டும் என்பது தான் சரியான நீதியாகும். இதன்படி பின் தங்கிய மாணவர்களுக்காக காரைக்காலுக்கு 18 சதவீதமும், மாகிக்கு 4 சதவீதமும், ஏனாம் மாணவர்களுக்கு 3 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கி பிறப்பித்த அரசு. ஆணையை இந்த நீதிமன்றம் ஏற்று கொள்கிறது.

அந்த நேரத்தில் மீதமுள்ள 75 சதவீதம் இடத்தை புதுவை மாணவர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு செய்திருப்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளது. மேலும் 75 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எந்த வித அடிப்படை காரணங்களும் அரசாணையில் கூறப்படவில்லை.

அவசர அவசரமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அதை இந்த ஆண்டே உடனடியாக அமல்படுத்துவது என்பது உள் நோக்கமாகவே கருதப்படுகிறது. எனவே, புதுவை மாணவர்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணையை நீதிமன்றம் ரத்து செய்கிறது. ஒதுக்கப்பட்ட 75 சதவீத இடத்தில் தகுதி அடிப்படையில் அனைத்து மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதனால் அந்த மாநிலத்தில் நடந்து முடிந்துள்ள மருத்துவ கவுன்சிலிங்கை மீண்டும் நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு புதுவை அரசு உள்ளாகியிருக்கிறது.

Read more...

இரண்டாம் தர குடிமக்களாக தமிழர்களை நடத்தும் இலங்கை-உலகப் பெருந்தலைவர்கள் குழு கண்டனம்

இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது இலங்கை அரசு என்று உலகப் பெருந்தலைவர்கள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

2007ம் ஆண்டு உலகின் புகழ்பெற்ற பெருந்தலைவர்கள் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

இதில் உலகப் புகழ் பெற்ற உலக நாடுகளின் தலைவர்களான தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, ஐ.நா.சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான், அமெரிக்கா [^]வின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர், முன்னாள் அயர்லாந்து அதிபர் மேரி ராபின்சன், முன்னாள் அல்ஜீரிய வெளியுறவு அமைச்சர் [^] லக்தர் பிராஹிமி, தென்னாப்பிரிக்க ஆர்ச்பிஷப் டெஸ்மாண்ட் டுடு உள்ளிட்ட தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

குழுவின் தலைவராக டெஸ்மான்ட் டுடு பொறுப்பு வகித்து வருகிறார். இந்த உலகப் பெருந்தலைவர்கள் குழு இலங்கை அரசின் இனவெறியைக் கடுமையாக கண்டித்துள்ளது.

இதுகுறித்து பிபிசிக்கு டுடு அளித்துள்ள பேட்டியில், இலங்கையில் தற்போது மனித உரிமை ஆர்வலர்கள் சரமாரியாக கொல்லப்பட்டு வருகின்றனர். பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுகின்றனர். அரசுக்கு எதிர்ப்பானவர்கள் கொல்லப்படுகின்றனர். இது மிகவும் பயங்கரமாக உள்ளது என்றார்.

இலங்கையைக் கண்டித்து உலகப் பெருந்தலைவர்கள் குழு ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதில், தமிழர்களுக்கு எதிராக மனித உரிமைகள் மீறப்படுவது தடுத்து நிறுத்தப்பட இலங்கை அரசை சீனா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற அதன் நட்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும்.

மனித உரிமைகள் பாதுகாக்கப்படுதல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுதல் போன்ற பிரச்சனைகளில் சர்வதேச சமுதாயம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்ளக்கூடாது. தண்டனையில் இருந்து விலக்கு அளிப்பதுதான் சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

போரின் போது அமல் படுத்தப்பட்ட நெருக்கடி நிலை இன்னும் இலங்கையில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவது கவலை தருகிறது. போர் முடிந்து ஓராண்டு காலம் முடிந்த பிறகும் இலங்கை தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வுகாண இலங்கை அரசு இதுவரை உருப்படியான நடவடிக்கை [^] எதையும் எடுக்காதது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளனர்.

இலங்கையில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து உலக நாடுகள் செவிடுகள் போல இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நல்லாட்சி அங்கு இல்லை, நம்பிக்கை இல்லை, நம்பகத்தன்மை என எதுவுமே இல்லை இலங்கையில். இதைப் பார்த்து பிற நாடுகளும் கெட்டுப் போகும் அவலமே மேலோங்கியுள்ளது .

பின்லாந்து நாட்டின முன்னாள் அதிபரான மர்ட்டி அதிசாரி கூறுகையில், அனைவரும் எதிர்பார்த்ததற்கு ஏற்ப இலங்கை அரசு நடந்து கொள்ளவில்லை. எந்தவித முன்னேற்றத்தையும் அது காட்டவில்லை. மீடியாக்களை கட்டிப் போட்டு வைத்துள்ளது. அவற்றின் கண்களை மூடி வைத்துள்ளது. மீடியாக்களை சுதந்திரமாக செயல்பட விட்டால்தான் உண்மை தெரிய வரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

உலக நாடுகள் பலவும் இலங்கை அரசின் இனப்படுகொலை மற்றும் இனவெறிப் போக்கைக் கண்டித்து வரும் நிலையில் உலகப் பெரும் தலைவர்கள் அடங்கிய குழு ஒரேகுரலில் இலங்கை அரசின் இனவெறியைக் கண்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP