புதுச்சேரியில் பாரதி விழா



புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் 12.12.2009 அன்று, சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் புதுச்சேரி, செஞ்சிசாலை, பாரதிதாசன் திடலில் பாரதி விழா நடைபெறுகிறது. இந்நிகழ்வில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்.

Read more...

உறுதிகொண்ட மக்களால் வென்றெடுக்கப்பட்ட தெலுங்கானா – ஒரு போராட்ட வரலாறு

தெலுங்கானா இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஓர் பகுதியாகும்.இதன் மொழிபெயர்ப்பு தெலுங்கர்களின் நாடு என்பதாக அமையும்.இங்குதான் தெலுங்கு மொழி பிறந்ததாகக் கருதப்படுகிறது.முன்னர் ஐதராபாத் நிசாம் ஆட்சியின் கீழிருந்த தெலுங்கு பேசும் பகுதிகளை உள்ளடக்கியது.



கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்கில் தக்காணத்தில் அமைந்துள்ள இந்த மண்டலத்தில் ஆந்திர மாவட்டங்கள் வாரங்கல்,அதிலாபாத்,கம்மம்,மகபூப்நகர்,நல்கொண்டா, ரங்காரெட்டி,கரீம்நகர்,நிசாமாபாத், மேதக் ஆகியனவும் மாநிலத் தலைநகர் ஐதராபாத்தும் அடங்கும்.கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறுகள் இம்மண்டலத்தில் மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்கின்றன.

இங்கு தெலவானா என்ற இனம் வாழ்ந்ததாகவும் அவர்கள் பாண்டவர்கள் பக்கம் சண்டை புரிந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.இதற்கு உறுதுணையாக வாரங்கலில் இருக்கும் பாண்டவுல குகாலு காட்டப்படுகிறது.

இங்கு சதவாகனர்கள் மற்றும் காகதியர்களின் பேரரசுகள் ஆண்டு வந்துள்ளனர்.கரீம்நகர் மாவட்டத்திலுள்ள கோடிலிங்கலா முதல் தலைநகரமாக விளங்கியது. சதவாகனர்கள் பின்னர் தரணிக்கோட்டைக்கு தலைநகரை மாற்றினர். கோடிலிங்கலாவில் அகழாய்வுகளின்போது சதவாகனர் காலத்து நாணயங்கள் கிடைத்துள்ளன.14ஆம் நூற்றாண்டில் இப்பகுதி முதலில் தில்லி சுல்தான்கள் ஆட்சியிலும் பின்னர் பாமனி,குதுப் சாஹி மற்றும் முகலாயப் பேரரசு ஆட்சிகளின் கீழ் இருந்தது. 18ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் மொகலாயப்பேரரசின் அழிவின்போது அசஃப்ஜாஹி அரசவம்சம் தனியான ஐதராபாத் நாட்டை நிறுவியது. பின்னர் பிரித்தானிய அரசுடன் உடன்படிக்கை செய்துகொண்டு இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் கூடுதல் மக்கள்தொகை கொண்ட சமஸ்தானமாக விளங்கியது.தெலுங்கானா எப்போதும் பிரித்தானிய அரசின் நேரடி ஆட்சியில் இருந்ததில்லை.

விடுதலைக்குப் பிறகான வரலாறு



1947ஆம் ஆண்டு இந்தியா பிரித்தானிய அரசிடமிருந்து விடுதலை பெற்றது.ஆனால் ஐதராபாத்தின் நிசாம் தமது தன்னாட்சியை தொடர விரும்பினார். புதிதாக அமைந்த இந்திய அரசு செப்டம்பர் 17,1948 அன்று இந்திய இராணுவத்தின் போலோ நடவடிக்கை மூலம் ஐதராபாத் நாட்டை அகப்படுத்திக்கொண்டது.

கம்யூனிஸ்ட்கள் தலைமையில் தெலுங்கானப் புரட்சி என அறியப்படும் விவசாயிகள் போராட்டம் 1946ஆம் ஆண்டு துவங்கி 1951வரை தொடர்ந்தது.

மொழிவாரி மாநிலம் மற்றும் தெலுங்கானா ஆந்திரா இணைப்பு
இந்தியா விடுதலை பெற்றபோது தெலுங்கு பேசும் 22 மாவட்டங்களில் பரவியிருந்தனர். இவற்றில் 9 நிசாம் ஆட்சியின் கீழிருந்த ஐதராபாத் சமஸ்தானத்திலும், 12 மதராஸ் மாகாணத்திலும் ஒன்று பிரெஞ்ச் காலனி ஏனாமிலும் இருந்தன. பொட்டி ஸ்ரீராமுலு என்ற தலைவரின் போராட்டத்தின் விளைவாக மதராஸ் மாகாணத்திலிருந்த 12 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு கர்நூல்|கர்நூலைத் தலைநகராகக் கொண்ட ஆந்திர மாநிலம் 1953ஆம் ஆண்டு உருவானது.

திசம்பர் 1953இல் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு மொழிவாரி மாநிலங்கள் ஆணயத்தை ஏற்படுத்தினார். உள்துறை அமைச்சர் கோவிந்த் வல்லப் பந்த் மேற்பார்வையில் நீதியரசர் பசல் அலி தலைமையில் இயங்கிய இவ்வாணையம் தெலுங்கானா பகுதி மற்றும் புதிதாக உருவான ஆந்திரா பகுதி இரண்டிலும் பேசும் மொழி தெலுங்காக இருந்தபோதும் தெலுங்கானா மக்களின் விருப்பத்திற்கிணங்க இணைப்பதை தவிர்க்க வேண்டும் என தனது அறிக்கையில் 382ஆம் பத்தியில் குறிப்பிட்டிருந்தது.அவ்வறிக்கையின் 386ஆம் பத்தியில் தெலுங்கானா மக்களின் கவலைகளைக் கருத்தில்கொண்டு ஐதராபாத் மற்றும் ஆந்திராவை இரு மாநிலங்களாக வைத்துக்கொண்டு 1961 பொதுத்தேர்தலின் பின்னர் அமையும் ஐதராபாத் மாநில மக்களவையில் 2/3 பங்கினர் இணைய விரும்பினால் இவற்றை இணைக்கலாம் என தெரிவித்திருந்தது.

ஆனால் இந்தப் பரிந்துரையை ஏற்கமறுத்து இந்திய அரசு இரு பகுதிகளையும் இணைத்த ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தை நவம்பர்1, 1956இல் நிறுவியது.இருப்பினும் தெலுங்கானா மக்களின் கவலைகளை நீக்க இரு பகுதி மக்களுக்கும் சமமான அதிகார பகிர்வு,நிதி பகிர்வுகளை உறுதி செய்யும் பெருந்தகையாளர் உடன்பாடு ஒன்றை அளித்தது.

தனித் தெலுங்கானா போராட்டம்

1956ஆம் ஆண்டின் பெருந்தகையாளர் உடன்பாட்டின்படி தெலுங்கானாவிற்கு உரிய பகிர்வுகள் மற்றும் உறுதிகள் செயல்படுத்துவதில் குறைபட்டிருந்த மக்கள் 1969ஆம் ஆண்டு இறுதியில் இந்த உடன்பாடு முடிவுக்கு வரவிருப்பதை எதிர்த்து இந்த உடன்பாட்டை நீடிக்க வேண்டும் என குரல் எழுப்பினர். சனவரி 1969இல் ஓஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அது மெதுவே பரவி தெலுங்கானா மக்கள் இயக்கமாக உருப்பெற்றது. அரசு ஊழியர்கள் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களும் போராட்டத்திற்கு துணை நின்றனர்.இந்த இயக்கம் வன்முறையில் முடிந்து 360 மாணவர்களுக்கும் மேலானவர்கள் உயிரிழந்தனர்.

ஆட்சிபுரிந்த காங்கிரஸ் கட்சியிலிருந்து வேறுபாடு கொண்டு வெளியேறிய காங்கிரஸ் தலைவர்கள் எம்.சென்னாரெட்டி தலைமையில் தெலுங்கானா பிரஜா சமிதி என்ற கட்சியை ஆரம்பித்தனர். அடுத்து வந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற போதும் செப்டம்பர் 1971இல் தமது கொள்கைகளைக் கைவிட்டு இவர்கள் காங்கிரசில் மீண்டும் இணைந்தது இந்த இயக்கத்திற்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியது.

1990-2004களில் இயக்கம்

இருபது ஆண்டுகள் நீறுபூத்த நெருப்பாக இருந்த இயக்கத்திற்கு 1990களில் பாரதிய சனதா கட்சி தான் வெற்றி பெற்றால் தனித் தெலுங்கானா பெற்றுத் தருவதாக வாக்குறுதி கொடுத்து புத்துயிர் ஊட்டியது.ஆனால் தங்கள் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் எதிர்ப்பினால் அதனை நிறைவேற்றமுடியவில்லை.காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தனி தெலுங்கானா மாநிலத்தை ஆதரித்து தெலுங்கானா காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் அமைப்பை நிறுவினர். அதே நேரம் தனி மாநிலம் காணுவதையே ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்ட தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி(TRS,தெராச )என்ற புதிய கட்சியை கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ் துவக்கினார்.

2004 பின்னர்
கொடி

2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரசும் தெராச கட்சியும் கூட்டணி அமைத்து தனி தெலுங்கானா காணும் வகைகளை ஆராய்வதாக உறுதி கூறி ஆட்சியைக் கைப்பற்றின. மைய அரசின் பொது குறைந்த திட்டத்திலும் தெலுங்கானா மாநிலம் அமைப்பது இடம் பெற்றிருந்தது.அவ்வுறுதியின் அடிப்படையில் தெராசவும் கூட்டணி அரசில் பங்கேற்றது. இரண்டாண்டுகள் எதுவும் நிகழாத நிலையில் செப்டம்பர் 2006இல் தெராச கூட்டணியிலிருந்து விலகியது. காங்கிரசு அரசிற்கு தெலுங்கானா மாநிலம் அமைக்க அழுத்தம் கூடியது. மார்ச் 2008இல் அனைத்து தெராச சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக பதவி விலகி இடைத்தேர்தல்களுக்கு வழிவகுத்தனர். ஆனால் இந்த இடைத்தேர்தல்களில் தெராச தனது 16 சட்டமன்ற தொகுதிகளில் ஏழையும் 4 நாடாளுமன்ற தொகுதிகளில் இரண்டையும் மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடிந்தது.
இதனிடையே தெலுங்குதேச கட்சியின் தேவேந்தர் கௌட் என்ற கட்சியின் சட்டமன்ற துணைத்தலைவர் கட்சியிலிருந்து பிரிந்து நவ தெலுங்கானா பிரஜா கட்சியை துவக்கினார். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2008இல் தனது 26 ஆண்டு அரசியல் வாழ்வின் வரலாற்றில் ஓர் திருப்புமுனையாக தெலுங்குதேசம் கட்சியும் தெலுங்கானா மாநிலம் அமைவதை ஆதரித்தது.

நவ தெலுங்கானா பிரஜா கட்சி நவம்பர் 2,2008இல் தெலுங்கானாவை தனி மாநிலமாக அறிவித்து அடங்கியுள்ள 10 மாவட்டங்களைக் குறிக்கும் விதமாக பத்து வெண்புறாக்களை பறக்க விட்டார்.
2009 பொதுத் தேர்தல்களின் போது தெராச மற்ற எதிர்கட்சிகளுடன் மகாகூட்டணி அமைத்து காங்கிரசை தோற்கடிக்க உறுதி பூண்டனர்.

புதிதாக திரைப்பட நடிகர் சிரஞ்சீவி துவங்கிய பிரஜா ராஜ்யம் கட்சியும் தெலுங்கானா அமைய வாக்குறுதி கொடுத்தனர்.நவ தெலுங்கானா கட்சி சிரஞ்சீவியுடன் இணைந்தனர்.
இருப்பினும் தேர்தல் முடிவுகள் காங்கிரசிற்கு ஆதரவாகவே இருந்தன;மாநிலத்தில் ஆட்சியையும் தக்க வைத்துக்கொண்டது.முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி தனித் தெலுங்கானா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

திசம்பர் 2009: தெராச தலைவர் கே. சந்திரசேகர் ராவ் (KCR)தமது கோரிக்கைக்காக சாகும்வரை உண்ணாநோன்பு துவக்கினார்.அவரது கைது மற்றும் உடல்நிலை மோசமடைவதை அடுத்து கடையடைப்புகளும் வன்முறையும் மீண்டும் எழுந்தது.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினரும், மாணவர்களும் இணைந்து நடத்தி வரும் மிகப் பெரிய போராட்டம் கிட்டத்தட்ட புரட்சியாக மாறியது.

இதையடுத்து பெரும் இக்கட்டான நிலையில் (09.12.2009) அன்று டெல்லியில் 3 முறை முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தன.

பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஆந்திர முதல்வர் ரோசய்யா, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரி ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை இன்றே கொண்டு வருமாறும் ரோசய்யாவுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், தீவிர ஆலோசனைகளுக்குப் பின்னர் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான நடைமுறைகள் முடுக்கி விடப்படவுள்ளன. இதற்குப் பொருத்தமான தீர்மானம் ஆந்திர மாநில சட்டசபையில் கொண்டு வரப்படும் என்றார்.

இதன் மூலம் மொழி உணர்வுள்ள மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஒரு உறுதியான போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.

Read more...

மக்களாட்சியை மன்னராட்சியாக்கும் கருணாநிதி...

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தனது முதல்வர் பதவியிலிருந்தும், அரசியலிலிருந்தும், வரும் ஜுன் மாதத்தின் பின் ஒய்வு பெறலாம் எனத் தமிழகச் செய்திகள தெரிவிக்கின்றன.

நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில், அருந்ததியர் சமூககத்தினரினால் நடத்தபட்ட பாராட்டுவிழாவில் உரையாற்றும் போது அவர் இதனை மறைமுகமாகத் தெரியப்படுத்தினார் என மேலும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன.



அங்கு அவர் ஆற்றிய உரையில், தன் வாழ்நாளில் செய்யவேண்டும் என நினைத்த விடயங்களை சரிசரச் செய்திருப்பதாகவும், அந்த வகையிலேயே அருந்ததியர் சமூகத்துக்கான அங்கீகாரமும் வழங்கப்பட்டிருப்பதாகவும், தெரிவித்தார். இனி வரும் நாட்களில் தான் செயவேண்டிய சில பணிகளே உள்ளன. அவைகளில் முக்கிய மானவை, புதிய சட்டமன்ற வளாகம், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், உலகச் செம்மொழி மாநாடு, என்பனவே அவைய. இவற்றினை நிறைவேற்றி முடிந்து விட்டால், அதன் பின் அரசியல், அமைச்சர் பதவிகளை ஒதுக்கி வைத்து விட்டு உங்களுடன் இன்னும் நெருக்கமாக வருவேன் எனத்தெரிவித்தார்.

இவ்வாறு முதல்வர் கூறியிருப்பது அரசியலை விட்டு அவர் ஓய்வெடுக்க முடிவு செய்திருப்பதாக கருதப்படுகிறது. இதன்மூலம் தனது மகனுக்கு மகுடம் சுட்டி மக்களாட்சியை மன்னராட்சியாக மாற்றவுள்ளார். முதல்வரின் மறைமுகமான இந்தத் திடீர் அறிவிப்பு திமுகவினரிடையே சிறிமது சலசலப்பினை ஏற்படுத்தியள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் ஏற்கனவே திமுகவில் நடைமுறைப்படுத்தப்படும் அதிகார மாற்றத்தின் ஒரு பகுதியாகவே முதல்வர் கருணாநிதியின் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Read more...

கஸ்பர் இந்தியாவி்ன் உளவாளியே...

கிழிந்து போன கஸ்பாரும் அடுத்த வரும் கஸ்பார்களும் ?

இந்தக் கட்டுரைக்கு இப்படி ஒரு தலைப்பு மிகப் பொருத்தமானது என்றே கருதுகிறேன். ஏனென்றால் அதிகாரத்தை நேரடியாக சுவைப்பவர்கள் ஒரு பக்கமும், அதிகார வர்க்கத்தின் ஒட்டுண்ணிகளாக மாறி அதிகாரத்தை சுவைக்கத் துடிப்பவர்கள் ஒரு பக்கமுமான காலத்தில் நாம் வாழ்கிறோம். எழுத்திலும், படைப்பிலும் அறச் சீற்றத்தை வெளிப்படுத்தும் அறிவுஜீவிகள் பலபேர் தங்களை அதிகாரங்களுடன் பொருத்திக்கொள்வதில் கூடுதல் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அப்படியான வாய்ப்புகளை அவர்கள் ஒரு போதும் தவறவிடுவதில்லை அல்லது வாய்ப்புகளை வலிந்து உருவாக்கிக் கொள்கிறார்கள். அதற்கு வரும் எந்த விமர்சங்களையும் அவர்கள் பொருட்படுத்துவது இல்லை அல்லது சந்தர்ப்பவாதமாக பதில் சொல்லி கடந்து போகிறார்கள். இந்த ஒட்டுண்ணி அரசியலின் முற்றிய வடிவம்தான் பாதிரி ஜெகத் கஸ்பர்.

இவர் ஒன்றும் எழுத்தாளரோ, அறிவுஜீவியோ அல்ல. ஆனால் தமிழக ஊடகங்களிலும் அரசியல் தளத்திலும் தொடர்ந்து தன்னை ஒரு லாபி மேக்கராக நிலைநிறுத்த முயல்பவர். அதற்காக ஆளும் சக்திகளுடன் எப்போதும் நல்லுறவைப் பேணுபவர். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதப் பேரழிவான ஈழ யுத்தத்தையும் தன் சுய நலன்களுக்காக மடைமாற்றிவிட்ட இந்த பாதிரியின் டவுசர் இப்போது கிழிந்து தொங்குகிறது.
[கனிமொழியுடன் ஜெகத் கஸ்பர்] அருகிலேயே அடுத்த கஸ்பரும் கண்ணடித்துக்கொண்டு நிற்கிறார்.



ஆளும் வர்க்க நலன்களுக்காக மக்களின் அரசியலை மழுங்கடிக்கும் தன்னார்வ குழுக்களின் வேலைத் திட்டம்தான் இவர்களின் நிகழ்ச்சி நிரல். அவற்றை இந்தியாவுக்குள் நிறைவேற்றித் தரும் முகவர்கள்தான் இந்த கஸ்பர் வகையறாக்கள். ஈழத்தில் மாபெரும் மனிதப் பேரழிவு நடந்து முடிந்ததும் அதைப்பற்றி மறக்க முடியாத வேதனையில் நக்கீரனில் தொடர் எழுதும் இந்த பாதிரி, கொடூரமான முறையில் போர் நடந்துகொண்டிருந்தபோது என்ன செய்தார்? மக்கள் மனங்களில் எழுந்திருந்த அரச எதிர்ப்புணர்வை மட்டுப்படுத்தும் தந்திரங்களைக் கையாண்டார். ‘யாரையும் பகைத்துக்கொள்ளக் கூடாது. நாம் பகையுணர்வை அதிகப்படுத்துவதன் மூலம் அரை ஆதரவாளனாக இருப்பவனை முழு எதிர்ப்பாளனாக மாற்றிவிடுகிறோம்’ என்று பிரசங்கம் செய்தார். ‘தாழாது, தாழாது... தமிழினம் தாழாது’, ‘தாழ்த்தாது தாழ்த்தாது, தமிழினம் யாரையும் தாழ்த்தாது’ என்று கருணாநிதி தயாரித்துக் கொடுத்த கழிவிரக்க வசனங்களைப்போல ‘யார் மனதும் புண்படாமல் போராடுவது எப்படி?’ என்று வகுப்பு எடுத்தார். அதற்காக இந்த பாதிரி தேர்ந்தெடுத்த போராட்ட வடிவம் ‘மௌன ஊர்வலம்’. ஈழப் போரை நடத்திய இந்தியாவுக்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் குரல் கொடுத்தபோதுதான் கஸ்பர் மௌன ஊர்வலம் நடத்தினார்.

ஜனவரி தொடங்கி அடுத்து வந்த மாதங்களில் கருத்துரிமை மீது தமிழ்நாட்டில் மிக மோசமான அடக்குமுறை நிலவியது. ஈழ ஆதரவு போராட்டங்களுக்கு காவல்துறையால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஈழம் தொடர்பான கருத்தரங்குகள் நடத்தவோ, கூட்டம் நடத்தவோ அரங்குகள் மறுக்கப்பட்டன. அனைவரும் மிரட்டப்பட்டிருந்தனர். துண்டு பிரசுரங்கள் அச்சடித்துத் தரக்கூடாது என்று அச்சகங்களுக்கு வாய்மொழி மிரட்டல் விடப்பட்டிருந்தது. (இந்த காரணத்தினாலேயே திண்டிவனத்துக்குச் சென்று துண்டு பிரசுரம் அச்சிட்டு வந்த தோழர்களை நான் அறிவேன்). ஆனால் ஜெகத் கஸ்பரின் மௌன ஊர்வலத்துக்கு எந்த தடையும், எந்த கட்டுப்பாடும் இல்லை. தீவுத் திடல் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக சென்ற ஊர்வலத்துக்கு போலீஸ் பாதுகாப்பும் தரப்பட்டது. காரணம் மிக எளிதானது. மற்றவர்களின் போராட்டங்கள் அரசுக்கு எதிரானவை. கஸ்பரின் போராட்டங்கள் அரசுக்கு எதிரானவை அல்ல. அவர் எதிர்ப்பை நிறுவனமயப்படுத்தி அரசின் காலடியில் சமர்ப்பித்தார். இந்த இடத்தில்தான் அரசுக்கு கஸ்பர்கள் தேவைப்படுகின்றனர்.

அந்த மௌன ஊர்வலத்திலும், கஸ்பரின் இன்னபிற கூட்டங்களிலும் அவரது ஆதரவாளர்களாக இருந்தவர்களில் அதிகபட்சம் பேர் ஐ.டி. இளைஞர்கள்தான். மாநிலம் முழுவதும் ஒருவித கொந்தளிப்பான சூழல் நிலவிய அக்காலக் கட்டத்தில் ஐ.டி. இளைஞர்களும் குற்றவுணர்வு காரணமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். கேள்வியில்லாமல் திடீர் திடீரென வேலையை விட்டுத் தூக்கப்படும் தங்களின் சொந்த பிரச்னைக்காகக் கூட போராட வீதிக்கு வராத அவர்கள், ஈழத்தில் நடந்த மக்கள் படுகொலைகளைப் பொறுக்க முடியாமல் முதல் முறையாகப் போராடத் துணிந்தார்கள். ஆனால் அவர்களது அரசியல் குறைபாடு காரணமாக போராட்டத்தின் வடிவங்களும், தன்மையும் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அந்த இளைஞர்களை வாகாக கையில் எடுத்தார் கஸ்பர். ‘துப்பாக்கிகளுக்கு இதயமில்லை - உங்களுக்கு’, ‘ஈழம் - கண்ணீர் தேசம்’ என்பது மாதிரியான அரசியலற்ற/ மய்யப்படுத்தப்பட்ட மனிதாபிமான வாசகங்கள் அடங்கிய டி-சர்ட்டுகளை அந்த இளைஞர்களுக்கு அணியத்தந்து ஒரு டி-சர்ட் புரட்சி நடத்தினார். ‘ஏதாச்சும் செய்யனும் பாஸ்’ என்று வந்த இளைஞர்களுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. ‘நாமும் போராடிவிட்டோம்’ என்ற திருப்தி அவர்களுக்கும், ‘எப்பூடி அடக்குனோம்?’ என்ற வெற்றிக் களிப்பு கஸ்பருக்கும் கிடைத்தது. (போராட வந்த ஐ.டி. இளைஞர்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. அதன் பிறகும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிலரை எனக்குத் தெரியும். ஆனால் பெரும்பகுதியானவர்கள் அத்தோடு திருப்தியடைந்து ஒதுங்கிக்கொண்டார்கள்).

இப்போது ‘ஈழம்... மௌனத்தின் வலி’ என்ற தலைப்பில் நூறு பேரின் கவிதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் கஸ்பர். அதன் அபத்தங்களையும் அங்கு பேசிய பக்கி வாசுதேவ் போன்ற பன்னாடைகளின் பேச்சு பற்றியும் ஏற்கெனவே தோழர்கள் விரிவாக இணையத்தில் எழுதியிருக்கிறார்கள்.

[Eelam Genocide] நூறு கவிதைகள் என்கிறார்கள். ஆனால் அதில் ரஜினிகாந்த், சிவக்குமார், சூர்யா, ஜக்கி வாசுதேவ் போன்றவர்ளும் உண்டு. இவர்கள் எப்போது கவிஞர்கள் ஆனார்கள் என்று தெரியவில்லை. ரஜினிகாந்த் மேடையில் பேசிய பேச்சை எடுத்து வெளியிட்டு அதையும் கவிதை என்கிறார்கள். அருந்ததி ராய் ‘டைம்ஸ் ஆஃப் இன்டியா’வுக்கு எழுதிய கட்டுரையின் சில வரிகளும், பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் எழுதிய கட்டுரையின் சில வரிகளும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன. அவையும் கவிதைகளாம். பலரும் பல்வேறு இடங்களில் பேசியவற்றை, எழுதியவற்றை துண்டு, துண்டாக எடுத்து வெளியிட்டுக்கொண்டு ஏதோ அவர்கள் எல்லோரும் இவர்களுக்கு ஸ்பெஷலாக எழுதிக் கொடுத்ததைப் போன்று ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கின்றனர். தோழர் துரை.சண்முகத்தின் கவிதை தணிக்கை செய்யப்பட்டது போன்றவை தனி மோசடி.

த.செ.ஞானவேல் என்பருக்குச் சொந்தமான ‘போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பு’ம், ஜெகத் கஸ்பருக்கு சொந்தமான ‘நாம்’ அமைப்பும் இணைந்துதான் இந்த புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். கஸ்பரை உரிமையாளராகக் கொண்டு செயல்படும் நல்லேர் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. முதலில் எங்கிருக்கிறது இந்த பத்திரிக்கையாளர் அமைப்பு? இதில் இருக்கும் பத்திரிக்கையாளர்கள் யார், யார்? இலங்கையில் மிக மோசமான இன அழிப்புப் போர் நடந்துகொண்டிருந்தபோது இவர்கள் எங்கே போயிருந்தனர்? ஒரு உண்ணாவிரதம், ஒரு ஆர்ப்பாட்டம்... எதை நடத்தினீர்கள்? அப்போதிலிருந்து தினசரி இணையங்களில் வெளிவரும் கோரமான புகைப்படங்களை சேகரித்து வைத்துக்கொண்டு இப்போது அவற்றை தொகுத்து கவிதை எழுதி பணம் பார்க்க முயல்கிறீர்கள் என குற்றம் சாட்டினால் அதற்கு உங்கள் மறுப்பு என்ன? ஆனால் அதுதான் உண்மை. ஈழத்தில் மக்கள் படுகொலைகள் நடந்தபோது மௌன ஊர்வலம் நடத்தி இந்திய, தமிழக அரசுகளின் துரோகத்தை மறைக்க முயன்றதன் மூலம் அப்போதைய ஆளும் சக்திகளுக்கு விசுவாச ஊழியம் புரிந்தார் கஸ்பர். இப்போது அவரது ‘நாம்’ அமைப்பும், ஞானவேலின் ‘போருக்கு எதிரான பத்திரிகையாளர் மன்றமும்’ தமிழ் மக்களின் பேரழிவையும், தோல்வியையும் அதிகார பீடங்களுடன் நெருங்குவதற்கான வாய்ப்பாக பயன்படுத்தியிருக்கின்றனர்.

போருக்குப் பிறகான இலங்கை விவசாயத்தை மேம்படுத்துவது பற்றிய பேச்சுவார்த்தையின்போது ‘ஒவ்வொரு பேரழிவிலும் ஒரு வாய்ப்பு இருக்கிறது’ என்று சொன்னார் எம்.எஸ்.சுவாமிநாதன். தன்னார்வக் குழுக்கள் எப்போதுமே பேரழிவை வாய்ப்பாகத்தான் பயன்படுத்தும் என்பதை சுனாமி நிதி மோசடிகளில் கண்டோம். அமெரிக்க கிறிஸ்தவ நிறுவனம் சுனாமி நிவாரணத்துக்காக தென்னிந்திய திருச்சபைக்கு வழங்கிய 18 கோடி ரூபாயை அவர்கள் ஆட்டையைப் போட, இப்போது அமெரிக்க நிறுவனம் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. இதைப்போலவேதான் இலங்கையில் நடந்திருக்கும் மனிதப் பேரழிவையும் இவர்கள் வாய்ப்பாக பார்க்கின்றனர். புலம்பெயர் தமிழர்களை வைத்து புராஜக்ட் போட்டுப் பணம் பார்க்கும் நோக்கம் இதற்குப் பின்னால் இருக்கக்கூடும் என்று சந்தேகப்படுவதற்கான எல்லா முகாந்திரங்களும் இருக்கின்றன. ஆம், ஒவ்வொரு பேரழிவிலும் சுவாமிநாதன்களுக்கும், கஸ்பர்களுக்கும், ஞானவேல்களுக்கும் வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன.

தமிழ் ஊடகங்களில் இந்த கஸ்பர் எப்படி அறிமுகமானார்? கனிமொழியுடன் இணைந்து ‘கருத்து’ என்ற அமைப்பை ஏற்படுத்தியபோது இவர் மீது ஊடகங்களின் கவனம் பதிந்தது. அடுத்தடுத்த வருடங்களில் உலகளாவிய மேட்டுக்குடி கலாச்சாரமான ‘மாரத்தான்’ என்பதை சென்னைக்கு அறிமுகப்படுத்தினார். பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளிடம் பணம் பெற்று நடத்தப்படும் இந்த மாரத்தான் போட்டியானது, முழுக்க, முழுக்க முதலாளிகளின் விளம்பர சந்தை. நிறுவனத்தின் விளம்பரத் தட்டிகளைப் பிடித்தபடி அதன் ஊழியர்கள் வரிசையாக வந்துகொண்டிருக்க, இந்த பாதிரி மேடையில் நின்று நிறுவனங்களின் பெயர்களை ஒலிபெருக்கியில் ஜெபம் செய்வதுபோல உச்சரிப்பார். இந்த கொழுப்பெடுத்த நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு வருடமும் கடற்கரை சாலை ஒதுக்கித் தரப்படுகிறது.

கடந்த 2008 ஆகஸ்ட் மாதம் கஸ்பர் நடத்திய மாரத்தான் போட்டியில் வேறொரு கொடுமையும் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓரம்பள்ளி என்ற பின் தங்கிய ஒரு கிராமத்தில் இருந்து படித்து முன்னேறி வந்த சந்தோஷ் என்ற மாணவர் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இரண்டாம் ஆண்டு எம்.எஸ்.சி. படித்து வந்தார். கஸ்பர் கோஷ்டி, ‘மாரத்தானில் வெற்றி பெற்றால் லட்சம், லட்சமாகக் கொட்டும்’ என்று கிளப்பிவிட்ட ஆசையால், தான் வெற்றிபெற்றால் தனது ஏழ்மையான குடும்பத்துக்கு விடிவு கிடைக்குமே என்றெண்ணி மாங்கு, மாங்கென ஓடினார் சந்தோஷ். ஆனால் இறுதியில் அவர் மூச்சிரைத்து செத்துப்போனார்.


அதுபோலவேதான் இந்தசென்னைசங்கமம்நிகழ்ச்சியும்.சபாக்களுக்குப் போய் கச்சேரி கேட்பது எப்படி முன்பு பார்ப்பனர்களுக்கு அந்தி நேரத்து நேரப்போக்காக இருந்ததோ, அதுபோல மத்திய வர்க்கத்தின் பொழுதுபோக்கு மனநிலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டதுதான் இந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சி. மாநிலம் முழுவதும் இருக்கும் நலிவடைந்த நாட்டுப்புற இசைக் கலைஞர்களை அழைத்து வந்து சென்னையின் வீதிகளில் நாடகம் போட்டார்கள். அந்த நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்த காசில் பத்தில் ஒரு பங்குக் கூட அதில் கலந்துகொண்டவர்களுக்குத் தரவில்லை. தேர்தல் சமயத்தில் சென்னை சங்கமத்தில் கலந்துகொண்ட நாட்டுப்புற கலைஞர்களை தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார கருவியாகவும் பயன்படுத்திக்கொண்டார்கள். இதற்கெல்லாம் துணை நின்றவர்தான் இந்த கஸ்பர்.

எந்த வகை அரசியல் நிலைபாடும் அற்ற, பாசிச முதலாளித்துவ முகவரான இந்த கஸ்பர் தமிழ் தேசிய சக்திகளுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். இந்த அடிப்படையிலேயே இவர் நக்கீரனில் இடம் பிடித்து எழுதிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த பாதிரிக்கு தமிழ் தேசியத்திலும் தெளிவில்லை, இந்திய தேசியத்திலும் தெளிவில்லை. அவருக்குத் தெரிந்தது எல்லாம் முதலாளித்துவ உளவு அரசியல் மட்டும்தான். இத்தகைய ஒரு நபருக்கு நக்கீரன் மேடை அமைத்துக் கொடுத்திருக்கிறது. நக்கீரன் கோபாலுக்கு கருணாநிதியைத் திட்டக்கூடாது, கஸ்பருக்கு ஆளும் வர்க்கத்தைப் பகைத்துக்கொள்ளக் கூடாது... இருவரும் சேர்ந்துகொள்ள இதுவே போதுமானது. ஈழம் என்பது இன்று விற்கக்கூடிய பண்டமாகவும், பிரபாகரன் என்பவர் விற்பனைக்கான பிராண்டாகவும் இருப்பதால் நக்கீரன் இத்தகைய அபத்தங்களை தொடர்ந்து வெளியிட்டும், ஆதரித்தும் வருகிறது. எந்தவித போர்ச்சூழலும் இல்லாத தமிழ்நாட்டிலும், புலம் பெயர் நாடுகளிலும் மிகவும் பாதுகாப்பாக இருந்துகொண்டு அடுத்தக்கட்ட போர் பற்றி பேசுவதும், அந்த மக்களை போராடச் சொல்வதும் அயோக்கியத்தனமானது. பிரபாகரனின் உடலை ‘மம்மி’யாக்கி, அதை வைத்து பணம் பார்க்கும் இந்த பிழைப்புவாதத்தின் நாற்றம் சகிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. இதன்மூலம் அங்கு முகாம்களில் வாழும் மக்களின் வாழ்வு மேலும், மேலும் மோசமாக்கப்படுகிறது.

கஸ்பர் வகையறாக்களின் பட்டியலில் முன் வரிசையில் நிற்பவராகவும், அடுத்த ஜெகத் கஸ்பராவதற்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளவராகவும் ஞானவேலைக் குறிப்பிடலாம். தனது பத்திரிக்கை அனுபவங்களின் மூலமாக நடிகர் சூர்யா, பிரகாஷ்ராஜ் போன்ற அதிகார மட்டங்களோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஞானவேல், ‘வாழை’ என்ற பெயரிலான‌ தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இயங்கியவர், தற்போது அகரம் பவுண்டேஷனுக்காக உழைத்து வருகிறார்.. ஞானவேல் அடுத்த கஸ்பராவதற்கு இவையே போதுமானவை. ஆனால் இந்தக் கட்டுரை உள்பட தற்போதைய விமர்சனங்கள் அனைத்தையும் ஞானவேல் பாராட்டுக் கட்டுரைகளாகவும், பிரபலமாவதற்கான வாய்ப்பாகவும் எடுத்துக்கொண்டுவிட்டால் என்ன செய்வது என்று தெரியவில்லை.

நாட்டில் பிரபலம் அடைவதற்கு எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. கன்னட பிரசாத்தைக் கூடதான் பலருக்குத் தெரியும். அதற்காக அவரது வழியைப் பின்பற்றிவிட முடியுமா? ஒருவேளை ஞானவேலின் நோக்கம் அடுத்த ஜெகத் கஸ்பராவதுதான் என்றால் அதற்கு எங்காவது நடிகர்களை அழைத்துச் சென்று தையல் மிஷின் வழங்குவது, நோட்டுப் புத்தகங்கள் வழங்குவது போன்றவற்றை செய்யலாம். அதை விட்டுவிட்டு ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொடூரமாக குண்டுவீசி கொல்லப்பட்டதையும், வீரம் செறிந்த தமிழ் மக்களின் போர் துயரமான முறையில் முள்ளிவாய்க்காளில் முடிவுக்கு வந்திருப்பதையும், ஒரு இனமே அகதியாகி உலக வீதிகளில் அலைந்து திரிவதையும் சுய நலனுக்குப் பயன்படுத்துவது அசிங்கமும், அயோக்கியத்தனமுமானது!

- ஆழியூரான்

Read more...

ராம் அவர்களின் உரைக்கு பழ. நெடுமாறன் ஜயா கடும் கண்டனம்

விடுதலைப் புலிகளின் இயக்க முன்னாள் தளபதி ராம் என்பவர் பெயரால் முன்னுக்குப் பின் முரணாகவும் குழப்பம் நிறைந்ததுமான ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனை புகழ்வது போல கூறி அவரைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் அறிக்கை அமைந்துள்ளது. இவ்வறிக்கை சிங்கள இராணுவ நிர்பந்தத்திற்குள் சிக்கியிருக்கும் ஒருவரின் அறிக்கையாக காட்சித் தருகிறதே தவிர பிரபாகரனின் தலைமையில் நம்பிக்கைக் கொண்டுப் போராடிய ஒரு போராளியின் அறிக்கையாக அமையவில்லை.




ஈழப் போர் முடிந்து 7 மாத காலமாக வாயையே திறக்காத ராம் இப்போது திடீரென குழப்பமான அறிக்கைக் கொடுப்பதின் நோக்கம் என்ன? உலகத் தமிழர்கள் மீது சிங்கள அரசு நடத்தும் உளவியல் ரீதியான போரில் ஓர் ஆயுதமாக ராம் பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

பிரபாகரன் மரணமடைந்து விட்டதாகவும் அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் 7 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்க வேண்டுமென செல்வராசா பத்மநாபன் 7 மாதத்திற்கு முன் அறிவித்த போது உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அதை ஏற்கவும் இல்லை. கடைப்பிடிக்கவும் இல்லை. மாறாக பிரபாகரன் மீது நம்பிக்கை வைத்து கொதித்தெழுந்தனர். உலக நாடுகளிலும் தமிழ்நாட்டிலும் தமிழர்கள் எழுச்சிமிக்கப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தினார்கள். சிங்கள அரசு அப்பாவி தமிழ் மக்களைப் படுகொலை செய்ததை உலக நாடுகள் கண்டிப்பதற்கு முன் வந்தன. ராஜபக்சேயும் அவருடைய கூட்டாளிகளையும் போர்க் குற்றவாளிகளாக விசாரிக்க வேண்டுமென்ற குரல் வலுத்தது. இதை திசைத் திருப்பவும் உலகத் தமிழர்களின் எழுச்சியை அடக்கவும் சிங்கள அரசு திட்டமிட்டுச் செயல்படுகிறது. இந்த சதிக்கு ராம் போன்றவர்கள் துணை போனது வெட்கக் கேடானதாகும்.

மீண்டும் போராட்டத்தை முன்னெடுக்க தக்கத் தருணத்தையும் தலைவரின் கட்டளையையும் எதிர்பார்த்து மறைந்திருக்கும் போராளிகளையும் மறைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களையும் வெளிக் கொணரவும் அவர்களின் மனஉறுதியை சீர்குலைக்கவும் இத்தகைய பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்த பிரச்சாரத்தைக் கண்டு உலகத் தமிழர்கள் ஏமாற மாட்டார்கள் என நான் நம்புகிறேன்.
புலிகள் சார்பில் அறிக்கைக் கொடுக்க யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. அக, புற சூழ்நிலைகள் கனியும் போது பிரபாகரன் வெளிப்பட்டு அறிக்கைத் தருவார்.

சிங்கள இராணுவ வெறியர்களால் சீரழிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் கடமை உலகத் தமிழர்களுக்கு உண்டு என்பதை ஒரு போதும் மறவாமல் நம்மாலான அத்தனை உதவிகளையும் செய்ய வேண்டிய வேளையில் நம்மை திசைத் திருப்பும் வகையில் திட்டமிட்டு வெளியிடப்படும் அறிக்கைகளைக் கண்டு யாரும் குழப்பமடைய வேண்டாமென வேண்டிக்கொள்கிறேன்.

இந்திய - சிங்கள உளவுத் துறைகள் தொடர்ந்து தமிழர்களை குழப்புவதற்காக நடத்தும் உளவியல் போரை உறுதியாக எதிர் கொள்ள நாம் தயாராவோம். இந்த போரில் ஏற்பட்டப் பின்னடைவிலிருந்து மீள்வதற்கும் முன்னெடுப்பதற்கும் பிரபாகரன் வழிகாட்டுவார் என்ற உறுதியான நம்பிக்கையோடு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளைத் தொடர்ந்து ஆற்றுவதற்கு தயாராகும்படி உலகத் தமிழர்களை வேண்டிக் கொள்கிறேன்.

இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து அனைவரும் ஒன்று பட்டு நின்று போராடுவதுதான் மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான வீரவணக்கமாகும்.

Read more...

தமிழீழம் அடுத்த வல்லரசாக உருவாகும் என்ற அச்சத்தில் உலகமே ஒன்றுசேர்ந்து அதனை அழித்தது: கனடாவில் சீமான்

“பிரபாகரன் என்ற மாமேதையின் கையில் ஓரு நாடு அல்லது தேசம் செல்லுமானால் உலகத்தின் வல்லரசாக சில வருடங்களிலேயே வந்துவிடும். பிரபாகரனின் ஆட்சியைப் பார்த்து, தமிழ்நாட்டு அரசை விமர்சிப்பார்கள் என்ற பயம், துணிவான-தூய்மையான-நீதி, நிர்வாகம், கட்டுக்கோப்பான அரசென்ற பெருமையை ஈழத்தமிழன் பெற்றுவிடுவான் என்ற பயம்.



ஊழலில்லாத தமிழீழத்திற்குப் பயந்த ஊழல்மிக்க ஒரு அரசாட்சி, பிரபாகரன் என்ற மாமேதை அழிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்தது என்று செந்தமிழன் சீமான் கனடா ஸ்காப்ரோவில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் தெரிவித்தார்.

“இத்தாலியிலே பிறந்த சோனியா காந்தியை அன்னை என்று மொழியலாம், பிரபாகரனை நான் அண்ணன் எனக் கூறினால் என்னைப் புலி என்கிறார்கள். பிடி என்கிறார்கள். கற்பழித்தவன், கொலைசெய்தவன், எரித்தவன், பள்ளியில் குண்டு போட்டவன் ஒருவரும் பயங்கரவாதிகள் இல்லை. கற்பழிக்காத-கொலைசெய்யாத, போர்க்கைதிகளைப் பாதுகாத்த புலிகள் இயக்கம் பயங்கரவாதிகள் இயக்கம் எனச் சொல்லுகிற பயங்கரவாதத்தை என்னென்று கூறுவது” – என்று கேள்வி எழுப்பிய சீமான் -

“ஈழத்தமிழனுக்கு ஏற்ற ஒரு அரசாட்சி எம்.ஜீயாருக்குப் பிறகு தமிழ்நாட்டில் வரவே இல்லை. விடியலுக்குப் போராடிய விடுதலைப் புலிகள் எதிரியோடு பொருதியிருந்தால் இதுவரைக்கும் வென்றிருப்பார்கள். ஆனால், ஊழல் நிரம்பிய தமிழ் எதிரிகளோடும் அவர்களுக்குப் பொருத வேண்டியிருந்தது. ஆனால், இந்த வரலாறு தமிழனுக்குத் தோல்வி இல்லை. துடித்து எழும். தமிழீழத் தேசம் பிறக்கும்” – என்று தெரிவித்தார்.

எழுச்சியுடன் நடைபெற்ற நிகழ்வு

சாவின்றி உயிர்வாழும் சத்திய தேவதைகளாம் மாவீரர் வணக்கநாள் முதல்நாளாக நேற்று புதன்கிழமை ரொறன்ரோ பெருநகரத்தில் வெகு உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.

ஸ்காபரோ நகரத்தில், கென்னடி-பிஞ் சந்திப்பில், பிஞ் வீதியில் அமைந்துள்ள மெற்றோபொலிற்ரன் மண்டபத்தில் அரங்கு நிறைந்த மக்கள் வெள்ளத்தில், ‘செந்தமிழன்’ சீமானின் சிறப்பு வருகையோடும் ஒரு எழுச்சி விழாவாக, மாவீரரை உள்ளத்தால் நினைந்து விழிநீர் பெருக்கி நின்றதென்றால், தமிழர் வரலாற்றை எழுதும் இன்றைய நாட்கள் அது இளைஞர் கைகளிலேயே உள்ளது என்பதை பறைசாற்றிய நிகழ்வாக இது அமைந்து கொண்டது.

கனடா, தமிழ்மாணவர் அமைப்பினால் நடத்தப்பட்ட இவ்விழாவில் பல்கலை பயிலும் மாணவ மாணவிகள் தமிழீழ தேசத்தைத், தமிழர்களிடம் இருந்து பிரிக்க முடியாது என்ற சத்தியத்தை நிரூபித்த விழாவாக அமைந்திருந்தது.

மிகக் கட்டுப்பாடாக, பாதுகாப்பு வழங்கி, துரிதமாக இயங்கி, மண்ணின் துயரங்களை வெளிக்கொணரும் வகையாக கலை நிகழ்வை நடத்தி மாணவர்கள் இயங்கிய விதத்தைப் பார்த்தால் தமிழர் சமுதாயம் என்றும் குனியாது நிமிர்ந்து எழும் என்பதை உறுதி செய்த விழாவாகவும் இது அமைந்து கொண்டது.

விழா தொடங்குவதற்குப் பன்னிரண்டு மணித்தியாலங்கள் முன்னதாகவேதான் விழாவுக்கான இடத்தின் அறிவிப்பு தொலைக்காட்சி, வானொலிகள் மூலம் அறிவிக்கப்பட்டபோதும் அரங்கு மக்கள் வெள்ளத்தால் நிரம்பியிருந்தது.

இசை, நாடகம், மாணவர் தலைவர்களின் பேச்சுக்கள், ஏனைய பல்கலாச்சார மாணவர் அமைப்புகளின் தலைவர்கள், பலதரப்பட்ட பல்கலைக்கழங்களின் தமிழ் அமைப்புக்களின் தலைவர்கள் வழங்கிய உரைகள் என சபைஉணர்ச்சிப் பிழம்பாக மாறியது.

விழா ஆரம்பத்தில், தமிழீழத் தேசியக்கொடி, கனடியத் தேசியக்கொடி என இருநாட்டுக் கொடிகளும் ஏற்றப்பட்டன. கனடியத் தேசிய கீதமும், தமிழீழத் தேசிய கீதமும் இசைக்கப்பட்டன. ‘இனிதான உலகத்தில் அழகான தமிழீழம் உருவாகக் காண்போமே மாவீரரே’ என்ற பாடலுக்கு எழுந்து நின்று வணக்கமும், மௌன அஞ்சலியும் இடம்பெற்றது.

இதனைஅடுத்து, தொழிலதிபர் பாபு மற்றும் மாணவர் தலைவர்களோடும் சீமான் அவர்கள் அரங்கத்தில் நுழைந்தார். சிதைக் கோவிலில்,போராளி உறவினரால் ஈகச் சுடர் ஏற்றலும், ‘செந்தமிழன்’ சீமான் அவர்களால் மலர்க்கொத்து இட்டு அஞ்சலியும் இடம்பெற்றது. வரவேற்பு நடனம், கிரிசாந்தி வதை நாடகம், மண்ணின் துயர், இசை, நடனம், என மாணவர்களின் பங்களிப்பு உள்ளத்தை உருகவைத்தன.

விழாவில் செந்தமிழன் சீமானின் உருக்கமான, உணர்ச்சியான, எழுச்சியான, யாதார்த்தமான உணர்வலைகள் நிரம்பிய பேச்சால் மௌனித்திருந்தது சபை. அவரது கருத்தாடல் மிக்க பேச்சுக்களால் கைதட்டி ஆர்ப்பரித்தது சபை. ஓரு மணித்தியாலமாக அரங்கத்தை வீரச்சுரங்கமாக மாற்றிய செந்தமிழன் சீமான், தேசியத் தலைவன் பிரபாகரன் தனக்குப் பணித்திருந்த வழியிலேயே தான் செல்வதாகக் கூறினார்.

இறுதியாக அனைவரும் எழுந்து நின்று, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுக்குக் கரமிசைத்து நிமிர்வு கொண்ட காட்சி இதயத்தை ஈர்த்துக் கொண்டது.

Read more...

பிரபாகரன் இறப்பதில்லை வருவார்!

ஈழத் தமிழர் வரலாற்றில் இருவர் என்றுமே இறப்பதில்லை ஒருவர் எல்லாளன் மற்றவர் பிரபாகரன். எல்லாளன் சமாதிக்கு விளக்கு வைத்த பொழுதில் கருவுற்றவர் பிரபாகரன். தேசியத் தலைவர் வே.பிரபாகரன் இன்று ( 26.11.2009 ) தனது 55 வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார். யுத்தகளத்தில் இருந்து மூன்று தினங்களுக்கு முன்னரே அவர் வெளியேறிவிட்டார் என்ற தகவலை பலர் வெளியிட்டுள்ளனர். ஆகவே அவர் வருவார் என்ற நம்பிக்கை விடுதலைப் புலிகள் அபிமானிகளிடையே தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் போராட்ட வாழ்வைப் படித்து போர்க்களத்தில் நுழைந்த பிரபாகரனின் வரலாறும் நேதாஜியின் கடைசிக்கால வரலாறு போலவே ஆகியிருப்பது ஆச்சரியம் தரும் உண்மையாக இருக்கிறது. இன்றும்கூட நேதாஜி வாழ்வதாகவும், அவர் வருவார் என்றும் அவ்வப்போது பலர் பேசுவதுண்டு. அதுபோல பிரபாகரனும் வருவார் என்ற நம்பிக்கை தமிழீழ ஆதரவாளரிடையே நிலவுகிறது. அவருடைய 55 வது பிறந்த தினத்தில் அவர் மறுபடியும் மக்கள் முன் வரவேண்டும் என்ற கோரிக்கையே எங்கும் மேலோங்கி நிற்கிறது. அவர் வரவேண்டும் தமிழினம் மகிழ வேண்டும் என்ற ஆசையையை அவரது பிறந்தநாள் வேண்டுதலாக முன் வைக்கிறோம்.

பிரபாகரன் தேடப்பட்ட காலத்தில் இருந்தே மக்கள் மத்தியில் நடமாடிய ஒருவரல்ல. எதிரிகளும், ஆதரவாளரும் அவரைத் தேடிக்கொண்டே இருந்தார்கள். ஆகவே தேடக்கிடைக்காத வைரம் போலவே அவர் வாழ்க்கை அமைந்திருந்தது. வருடத்தில் ஒரு தடவை மாவீரர்நாள் நிகழ்விற்கு அவர் மக்கள் முன் தோன்றிப் பேசுவார். அடுத்த வருடம்வரை அதுதான் அவருடைய பிரதான பிரசன்னமாக இருக்கும். அவருடைய உரை சிங்கள ஆட்சியாளராலும், இந்திய ஆட்சியாளராலும், சர்வதேச சமுதாயத்தாலும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். உலகத்தில் அவருடைய உரையைப் போல உன்னிப்பாக நோக்கப்படும் வருடாந்த உரையை நிகழ்த்தும் உலகத் தலைவர்கள் எவருமே இருந்தாக சரித்திரமே கிடையாது. அப்படிப்பட்ட ஆளுமையை வளர்த்துக்கொண்ட உலகின் ஒரேயொரு தலைவராக அவர் இருந்தார்.

பிரிட்டனின் பிரபல ஊடகமான பீ.பீ.சி உலகத்தின் மிகச்சிறந்த கெரில்லாப்படை வீரனாக அவரையே தேர்வு செய்தது இங்கு குறிப்பிடத்தக்கது. போராட்டக்களத்தில் இருந்த ஒரு படையணி பெருந்தொகையான கப்பல்கள், ஆகாயவிமானப்படை, கரும்புலிகள் அணி, போலீஸ்படை, போராட்டப்படைகள், பெண்புலிகள் என்று கட்டமைத்த இராஜ்ஜியம் உலகத் தலைவர்களின் தன்மானத்திற்கே ஓர் அடியாக இருந்தது.

ஓயாத அலைகள் 3ன்போது அவர் சிறீலங்கா படைகளை பலாலி முகாமிற்குள் முற்றாக முடக்கி முழுமையான வெற்றியை எட்டித் தொட்டிருந்தார். மற்றய நாடுகளின் வேண்டுகோளுக்கு அமைய மனிதாபிமானத்தோடு 40.000 சிங்களப் படைகளுக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தார். சிங்களப் படைகள் தமிழ் மண்ணில் செய்த செயல்களை எண்ணினால் காயப்பட்ட அவர்களை அன்றே புல்டோசர்களை ஏற்றி நெரித்து இன்று சிங்களப் படைகள் செய்த செயலை அவராலும் செய்திருக்க முடியும். ஆனால் அவர் மனிதாபிமானத்திற்காகவும் உலக சமுதாயத்திற்காகவும் அதைத் தவிர்த்தார்.

கடந்த மே மாதம் விடுதலைப்புலிகளின் தலைவர் தனி ஒரு மனிதனாக உலகத்தின் 32 நாடுகளை எதிர் கொண்டார். அன்று போராட்டத்தை ஆரம்பித்தபோது 32 தமிழ் இயக்கங்களை எதிர் கொண்டவர் இப்போது அதேயளவு வல்லரசுகளை எதிர் கொண்டார். சங்கிலியனோ, பண்டாரவன்னியனோ, வீரபாண்டிய கட்டபொம்மனோ, கடைசிச் சோழனோ எதிர் கொள்ளாத பெரும் சவால் இதுவாகும். கடந்த 2000 வருட வரலாற்றில் உலகப்போரை தனிமனிதனாக சந்தித்த ஒரேயொரு வீரத்தமிழனாகவும் அவர் விளங்கினார்.

அவர் போரில் தோற்கடிக்கப்பட்டார் என்பது தவறான கருத்தாகும். உலக நாடுகளின் அசிங்கங்களையும், பொறாமை மனங்களையும் பார்த்தால் பிரபாகரன் தோல்வி மூலம் தமிழினத்திற்கு மாபெரும் வெற்றியையே தேடித்தந்துள்ளார்.

சென்ற ஆண்டு மாவீரர்நாள் உரையைப் பார்த்தால் அவரே இதைச் சொல்லியிருப்பதை உணரலாம். ஒரு சிறிய மக்கள் குழுவை எதிர்க்க இவ்வளவு பெரிய வியூகத்தை உலகநாடுகள் அமைப்பதா என்ற கேள்வியை ஒரு சிறிய சிரிப்புடன் கேட்டிருப்பார். அன்றே அவருக்கு யாவுமே தெரிந்துவிட்டது, அவருடைய மெல்லிய நமட்டு சிரிப்பிற்குள்ளேயே அது கிடந்தது.

பிரபாகரன் தனது பிள்ளைகளை வெளிநாடு அனுப்பிப் படிப்பித்தார் என்று பிரச்சாரம் செய்யப்பட்டு, அவருடைய மகள் அல்லாத டென்மார்க்கில் இருந்த ஒரு பெண்மணியின் படத்தைப் போட்டு பிரச்சாரம் செய்தார்கள். தனது பிள்ளைகள், பெற்றோர், குடும்பம், தான் என்று அனைவரையும் களத்தில் வைத்தே அவர் போரை நடாத்தியிருக்கிறார் என்ற உண்மையை இப்போது நயவஞ்சக எதிரிகள் மௌனமாக சிந்திக்கிறார்கள்.

எதிரிகள் மட்டும் பிரபாகரனுக்கு எதிராகப் போராடவில்லை. ஈழத் தமிழரே பல பிரிவுகளாகப் பிரிந்து அவருக்கு எதிராகப் போர் நடாத்தினார்கள். அவரோடு இருந்தவர்களில் பலர் பணத்திற்காக இருந்தவர்கள் என்பதையும் இப்போது அறிகிறோம். ஆனால் அவருக்காக தமது பணத்தை எல்லாம் கொடுத்த ஏழைகளின் இதயத்தில் பிரபாகரன் இருந்தார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் போல ஏழைகளின் அன்பைப் பெற்ற தலைவராக இருந்தார்.

எம்.ஜி.ஆர் ஒரு கருத்தை எப்போதும் சொல்வார். என்.டி.ராமராவை காட்டிக் கொடுத்த பாஸ்கரராவைப் போன்ற துரோகிகளை பக்கத்தில் வைத்திருக்க வேண்டும் என்று கூறுவார். அதுபோல பிரபாகரனும் பலரை வெளியில் விட்டால் ஆபத்தென அருகில் வைத்திருந்தார் என்பதை இப்போது அனைவரும் உணர்கிறோம். இப்படியாக உள்ளிருந்து ஆப்பு வைத்தவர்கள் பற்றிய கதைகள் மேலும் வரும். சென்ற மாவீரர் நாள் உரையில் அவர் அதிகமாக பாவித்த சொல் ஆப்பு வைத்தல் என்பதுதான். உள்ளிருந்து ஆப்பு வைத்த அனைவரையும் அவர் அறிந்திருந்தார். காலம் அந்தக் கதைகளின் உண்மையை விடுவிக்கும்.

பிரபாகரன் என்பவர் வாழ்ந்துதான் மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டிய ஒருவரல்ல. அவருடைய சக்தி தமிழர் நெஞ்சங்களில் எல்லாம் நிறைந்துள்ளது. ஆகவே மாவீரர்நாளில் பிரபாகரன் உரையாற்றவில்லையே என்று மக்கள் கவலையடைதல் கூடாது. அவர் சிங்கள இனவாதத்தை மட்டுமல்ல, உலக இனவாத வெறுப்பையும் தமிழருக்கு அம்பலப்படுத்தியுள்ளார். இரண்டாயிரம் வருடங்கள் வாழ்ந்ததாகக் கூறப்படும் விக்கிரமாதித்தன் சாதிக்க முடியாத சாதனையை 55 வருடங்களில் சாதித்துள்ளார்.

இயேசுநாதர், நெப்போலியன், மகாஅலக்சாண்டர் போன்ற பெரிய வீரர்கள் எல்லாம் இன்றுவரை இறந்து போகாத புகழ் மனிதர்களே. அவர்களைப் போல அழியாப் புகழ் பெற்றுவிட்ட பிரபாகரன் இன்று உலகப்; புகழ் ஏணியில் நிற்கிறார். இன்று அவரது பிறந்தநாள்! இதுதான் இனி ஈழத் தமிழினத்தின் பிறந்தநாள்.

ஈழத் தமிழர் வரலாற்றில் இருவர் என்றுமே இறப்பதில்லை ஒருவர் எல்லாளன் மற்றவர் பிரபாகரன். எல்லாளன் சமாதிக்கு விளக்கு வைத்த பொழுதில் கருவுற்றவர் பிரபாகரன். அவருடைய கண்களும் எல்லாளன் கண்களும் ஒன்றுதான்.

பிரபாகரன் இறப்பதில்லை வருவார் !
கொஞ்சம் பொறுங்கள் !
இன்று அவர் பிறந்தநாள் விழாவை அவர் இறக்கவில்லை என்ற உறுதியுடன் அனைவரும் கொண்டாடுவோம்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.

Read more...

பிரபாகரன் பிறந்த நாள் 2009



விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு இன்று 55வது பிறந்தநாள். இதை முன்னிட்டு உலகெங்கும் உள்ள தமிழின உணர்வாளர்கள் பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்கள். இதேபோல் சேலத்தில் பெரியார் திராவிடக் கழகத்தினர், மனித உரிமைகள் அமைப்பினர், தமிழின உணர்வாளர்கள் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைத்து பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடினர்.




சேலத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை நேற்று இரவு போலீசார் அப்புறப்படுத்தினர். சில இடங்களில் போலீசாருக்கும் தமிழின உணர்வாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போலீசார் பேனர்களை அப்புறப்படுத்தினாலும், கிச்சிப்பாளையம் என்ற கிராமத்தில் சுமார் 20 இளைஞர்கள் மீண்டும் மீண்டும் பிரபாகரனின் பேனர்களை வைத்து அவ்வழியே செல்லும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர்.

Read more...

புதுச்சேரியில் தமிழ்த்தேசியத்தலைவர் பிறந்ததின விழா

புதுச்சேரியில் தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு.வே.பிரகாரன் அவர்களின் 55வது பிறந்ததினம் உலகத்தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பத்தில் க.சத்தியானந்தன் (மக்கள் நல முன்னணி) தலைமையில் நடைபெற்ற விழாவில் தூ.சடகோபன் (மதிமுக பொறுப்புக்குழு உறுப்பினர்) இல.இராமதாசு (மறுமலர்ச்சி தொழிற்சங்கம்), கோகுல்காந்திநாத் (பெரியார் திராவிடர் விடுதலைக்கழகம்), கவிஞர்.ஆலா, ஆனந்தகுமார் (புதுவைக்குயில் பாசறை), வி.பி.பி.வேலு (பா.ம.க), அ.தெள்ளியன், இரா.சுந்தர் (ம.ந.மு), சேதுபதி, ஆனந்த், முகுந்தன் மற்றும் பல தோழர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாட்டினை மக்கள் நல முன்னணி என்ற இயக்கம் செய்திருந்தது.






Read more...

புதுச்சேரியில் தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு. பிரபாகரன் பிறந்தநாள் விழா

Read more...

தமிழ்த் தேசியத்துக்கு முகவரி தந்த தலைவன் பிரபாகரன்

தமிழ்த் தேசிய அடையாளம் நவம்பர் 27



நீக்ரோக்களுக்கு அடுத்தபடியாக, ஆங்கிலேயர்களால் கொத்தடிமைகளாக பயன்படுத்தப்பட்ட ஓர் இனம் தமிழினம் தான். மலேசியா(சிங்கப்பூர்,) பர்மா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, பிஜி போன்ற பல காலனியாதிக்க பிரதேசங்களை வளப்படுத்த, 200 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழர்கள் அங்கெல்லாம் "ஓட்டிச்" சொல்லப்பட்டனர். இந்திய இனங்களிலேயே இந்தச் "சிறப்பைப்" பெற்ற ஒரே இனம் தமிழினம் தான். எனவே, இந்திய இனங்களிலேயே, கணிசமான அளவு பல வெளிநாடுகளில் வாழும் ஒரே இனம், தமிழினம் தான். இலங்கையிலே வந்தேறி சிங்களவர், மண்ணின் மைந்தர்களான தொல்குடித் தமிழர்களை வதை செய்ய, இந்தியா தனது விடுதலை நாள் முதல் இன்றுவரை, உதவியது என்பது வரலாறாய் உள்ளபோது, மேற்குறிப்பிட்ட தேசங்களில் வாழும் தமிழர்களைக் காக்க, இந்தியாவிடம் நாம் இனியும் மன்றாடி நிற்க இயலாது. அந்நாடுகளிலுள்ள சிறுபான்மைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க தமிழர்களுக்கான ஒரு தேசம் தேவை. தமிழர்களுக்கான ஒரு வலுவான தேசம் இன்றியமையாதது.

இந்தியா என்ற ஒற்றை நாட்டில், 544 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 40 தமிழ் உறுப்பனர்களால் தமது இன உரிமைகளைக் காத்துக் கொள்ள இயலாது. கச்சத்தீவை நம்மால் காக்க இயலவில்லை. இந்தியாவின் தெற்கே தமிழ்நாடு. இலங்கையின் வடக்கே தமிழீழம். இடைப்பட்ட பாக் நீரிணை தமிழனுக்கு மட்டுமே சொந்தமானது. ஆனால், சம்மந்தமே இல்லாத சிங்களவன் அங்கு தமிழக மீனவர்களைத் துரத்துகிறான், கொல்கிறான். வெட்கக்கேடு!

150 ஆண்டுகளாக, ஆங்கிலேயர்களால் அடிமைகளாக அழைத்துச் சொல்லப்பட்டு, இலங்கையைப் பொன்னாக்கிய இந்தியத் தமிழர்களை சிங்களன் நாடற்றவராக்கிய போது, இந்தியா அதை ஆமோதித்தது. 6,00,000 இந்தியத் தமிழர்களை அது அகதிகளாக இந்தியாவிற்கு அழைத்துக் கொண்டது. அதைத் தடுக்க நம்மால் இயலவில்லை. அமைதிப்படை என்ற பேரில் ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி, தமிழர்களை வேட்டையாடியது. நம்மால் தடுக்க இயலவில்லை. தற்போது தமிழ் மக்களின் ஒரே அரணாக இருந்த புலிகளையும் வீழ்த்தி, அம்மண்ணின் மைந்தர்களான தமிழர்களை, வந்தேறிகளான சிங்களவருக்கு அடிமையாக, நாதியற்ற இனமாக இலங்கையில் இந்தியா தான் வைத்திருக்கிறது. அனைத்து இந்திய ஒத்துழைப்போடு நடைபெற்ற தமிழின அழிப்புப் போரில், கடந்த ஓராண்டில் மடிந்தவர் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேலான அப்பாவித் தமிழர்கள். இந்தக் கொடும் பழியிலிருந்து இந்தியாவால் மீள இயலாது!

இலங்கையில் இரண்டே இனங்கள். தமிழ் சிறுபான்மை இனம். சிங்களப் பேரினம். அங்கு தமிழனை, சிங்களவன் நேரிடையாகத் தாக்குகிறான். தமிழர் நிலத்தை அபகரிக்கிறான். அது போன்று பல்லின இந்தியாவால் செய்ய இயலாது. இங்கே அது மறைமுகமாக பல்வேறு முகங்களில் நடைபெறுகிறது. சிங்களனுக்கு ஆயுதம் கொடுத்து, தமிழனின் சொந்தக் கடலில், தமிழ் மீனவர்களைப் படுகொலை செய்ய இந்தியா உதவுகிறது.

கருணாநிதி போன்ற எட்டப்பர்களை பணத்தையும், பதவியையும் காட்டி உருவாக்கி அவர்களின் மூலமாக நமது வளங்களை ஏகாதிபத்தியங்களுக்கு இந்தியா விற்கிறது. பார்ப்பன, பனியா இந்தியாவும் ஒரு ஏகாதிபத்திய நாடு தான். அது தமிழரது உரிமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கிறது. டாட்டா, பிர்லா, அம்பானி போன்ற எண்ணற்ற ஏகாதிபத்தியங்களை வளர்த்துவிடத் தான் இந்திய சட்டங்கள் பயன்படுகின்றன. இங்குள்ள பெரும்பான்மை ஏழை மக்களை இலவசங்களை எதிர்நோக்கும் பிச்சைக்கார இனமாக வைத்திருக்கத்தான் அதன் சட்டங்கள் பயன்படுகின்றன.

தமிழர்கள் தமது அறிவாலும். கடின உழைப்பாலும் ஒப்பீட்டளவில் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளனர். அத்தகைய நமது நிலத்தை நோக்கி மற்ற இனமக்கள் கும்பல் கும்பலாகப் பிழைக்க வருகிறார்கள். இங்கே வரும் அம்மக்கள், வந்த மாத்திரத்திலேயே வாக்குரிமை பெற்று, இங்குள்ள அரசை அமைப்பதிலும் பங்கு வகிக்கின்றனர். இது நீண்ட காலத்தில் நமது தாயகத்தை இழப்பதில் கொண்டு போய் முடிக்கும். நமது வளங்களை அவர்கள் சுவீகரித்துக் கொள்வார்கள், கொண்டிருக்கிறார்கள்.

தமிழரின் பெருமை பேசும் தஞ்சை பெரிய கோயிலிலுக்கு அறங்காவலர், இன்றும் ஒரு மராத்தியன் என்பது ஒரு சிறு சான்று. தமிழ்ப்பகுதியில் தஞ்சம் புகுந்த ஆரியன் தமிழரின் இசையைக் களவாடி கர்நாடக சங்கீதம் என்றது மட்டுமில்லாமல் தமிழ் என்ற தீட்டு மொழியில் பாடல் பாடக்கூடாதென்று சொன்னான். பலநூறு வருடங்களாக நடத்தியும் காண்பித்தான். தமிழரின் நாட்டியக்கலையை, தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட பிறகு கைப்பற்றி, தமது பாரம்பரியக் கலையாக ஆக்கிக் கொண்டனர் ஆரியர்கள். பார்ப்பனீயத்தால் தமிழருக்கு ஏற்பட்ட நசிவுகளை முழுமையாக விளக்க, இக்கட்டுரையில் இடமில்லை. மாற்றானை நமது மண்ணிலே அனுமதித்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு இவை சில ஆணித்தரமான சான்றுகள். ஈழத்தில் வந்தேறிய சிங்களன், அம்மண்ணின் மைந்தர்களைப் படுகொலை செய்து, அவர்களின் தாயகத்தைப் பறிப்பது மற்றுமொரு ஆணித்தரமான சான்று.

இந்தியாவிலேயே தமிழினம் மட்டும் தான் தனித்துவமான மொழியும், பண்பாடும் கொண்ட இனம். ஆரியம் அன்றிலிருந்து இன்று வரை தமிழரின் மீது அளவில்லா பொறாமை கொண்டு நம்மை ஒரு பகையினமாகக் கருதுகிறது. தமிழ் மொழியை அழிப்பதிலும், தமிழரின் தாயகத்தை விழுங்குவதிலும் அது நீண்ட கால செயல்திட்டத்தோடு செயல்படுகிறது.

உலகம் தழுவிய தமிழர்களின் நலன்களைப் பேணவும், தமிழரின் நிலம், மொழி, பண்பாடு இவற்றைக் காக்கவும், பேணவும் நமக்கான தேசங்கள் இன்றியமையாதன. இதை உணரும் நாம் தமிழ் தேசியத்தை அடைய, இனி என்ன செய்ய வேண்டும் என்று ஆராய வேண்டும்.

பாரதி, இந்திய விடுதலை அடைவதற்கு முன்பே, " ஆடுவோமே, பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று" பாடியது போல, தற்போதே நாம் தன்னுரிமை பெற்றுவிட்டதாகக் கொண்டாடத் தொடங்க வேண்டும். அத்தகைய கொண்டாட்டங்கள் மக்களுக்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும். தன்னுரிமைப் போராட்டங்களுக்கு மக்களைத் தயார் படுத்தவும் உதவும். கொண்டாட்டம் என்றாலே அதற்கான ஒரு அடையாள நாள் தேவை.

அந்தப் பொன்னான நாளைக் கண்டறிய வேண்டியது அடுத்த கடமை. சுதந்திரத்திற்குப் பிறகு, பொட்டி ஷ்ரீராமுலு என்ற தெலுங்கரின், தெலுங்கு மொழி மக்களுக்கு தனிமாநிலம் வேண்டி பட்டினிப் போராட்டம் செய்து உயிர்நீத்த பின்னணியில், 1956 நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி, சென்னை மாகாணமாயிருந்த பகுதிகள் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப் பட்டன.

இந்த நாளை கர்நாடகா ராஜ்யோத்சவா நாளாகக் கொண்டாடுகிறது. நவம்பர் 1ல் தொடங்கும் அவர்களது கொண்டாட்டம் ஒரு மாதம் முழுக்க சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. கர்நாடக மாநிலத்தில், மாநிலத்திற்கான கொடியும் உள்ளது. அந்தக் கொடியை, பெரிய சாலைகளிலிருந்து பிரியும் தெருக்களின் முச்சந்திகளில், நிரந்தரக் கொடிக்கம்பம் கட்டி, பறக்க விடுகின்றனர்.

இது போன்ற விழாக்கள் ஆந்திரா, கேரளாவிலும் மிகச் சிறப்பாக எடுக்கப்படுகின்றன. அங்கும் மாநிலங்களுக்கான கொடிகளும் உள்ளன. இந்த மாநிலங்களிலெல்லாம் அரசு விடுமுறையும் விடப்படுகிறது. ஆனால், நாசமாய்ப்போன தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கட்சிகள், இந்த நாளைக் கொண்டாடுவதும் இல்லை, இவர்கள் தமிழகத்திற்கான ஒரு கொடியையும் இன்றுவரை உருவாக்கவில்லை. தமிழகத்தில் தான், இந்தியாவிலேயே, அதிக எண்ணிக்கையில் கட்சிகள் உள்ளன, சாதிக் கட்சிகளையும் சேர்த்து. ஆனால், இந்த அரம்பர்கள் கூட்டம், இதுவரை தமிழ் மக்களுக்கான ஒரு பொதுக் கொடியை உருவாக்கவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது.

இதிலே மனதைப் பதறவைக்கும் முரண் என்னவென்றால், தமிழ் நாட்டில் மட்டும் தான் "திராவிட தேசம்" கோரப்பட்டது. பிரிவினை கோரும் அமைப்புகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டத்தை ஜவகர்லால் நேரு கொண்டுவரப் போகிறார் என்றவுடன் தி. மு. க. திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டது, அண்ணாவின் காலத்திலேயே தான்.

பிறகு வந்த கருணாநிநி மாநில சுயாட்சி கோஷமிட்டார். இதை ஒரு அரசியல் உத்தியாகப் பயன்படுத்திய கருணாநிதி, ஒரு கொடியையாவது உருவாக்கி இருக்க வேண்டாமா? மற்ற மாநிலங்களைப் போல, நவம்பர் 1ல் மாநில விடுமுறை விட்டிருக்க வேண்டாமா? இந்த நாளை மற்ற மாநிலங்களைப் போல, ஒரு சிறப்பான நாளாகக் கொண்டாடி இருக்க வேண்டாமா? ஆனால், இந்த "மஹா புருஷன்" ஓணம் பண்டிகைக்கு தமிழ் நாட்டில் விடுமுறை விடுகிறார். ஹோலிப் பண்டிகைக்கு விடுமுறை விடுகிறார். இதையெல்லாம் செய்து மாற்றானிடம் ஓட்டுப் "பொறுக்கும்" இவர், தமிழுக்காக செய்ததெல்லாம் வெற்று ஆரவாரம் தான்!

கருணாநிதியின் "நச்சு" அரசியல் இப்போது தான் பலருக்கும் தெளிவாகப் புரிகிறது! இந்த மஹாபுருஷன், தான் ஒரு (இந்திய) அடிமை, தன்னால் என்ன செய்ய முடியும் என்பார். அதேநேரம், இந்தியாவின் கொள்கைதான் தனது கொள்கை என்றும் சொல்லுவார். ஒரு அடிமை தனது ஆண்டையின் கொள்கையை ஏற்கிறார் என்றால், அந்த அடிமையின் தராதரம் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

* சரி......! இனி செய்வதைக் காண்போம்!! மேற்சொன்னது போல, நவர்பர் 27 ஐ நாமும் ஒரு சிறப்பு நாளாகக் கொண்டாடலாம். தமிழரைப் பொருத்தவரை நவம்பர் மாதம் ஒரு சிறப்பான மாதமும் கூட. இந்த மாதத்தில் தான் மாவீரர் தினமும் கொண்டாடப்படுகிறது. தமிழரின் தீப ஒளித்திருநாளான "கார்த்திகை தீபமும்" இந்த மாதத்தில் தான். உலகத்தில் தமிழினத்தின் பெருமையை சொன்ன தமிழ்த் தேசியத்தை உருவாக்கித்தந்த மேதகு பிரபாகரன் அவதரித்ததுவும் இந்த புனித மாதத்தில்தான். நவம்பர் "தமிழ்த் தேசிய நாள்" நவம்பர் தொடங்கும் இந்தத் "தமிழ்த்தேசிய நாள்" கொண்டாட்டத்தை நவம்பர் மாதம் முழுக்க, அரங்கக் கூட்டங்களாகவும், பொதுக்கூட்டங்களாகவும் கொண்டாட வேண்டும். அதில் தமிழரின் மாண்புமிகு வரலாறு, பண்பாடு, மொழிச் சிறப்பு, பண்டைய இலக்கியங்கள், பண்டைய அறவியல், பண்டைய அறிவியல், பண்டைய சமூதாயவியல் என்ற தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தப் படவேண்டும். எதிர்காலத் திட்டமிடல் கருத்தரங்குகளும் நடத்த வேண்டும்.

மரபியல் அடிப்படையில், தென்னிந்தியர்கள் அனைவருமே தமிழர்களே! ஆனால், தமிழ் என்பதை உச்சரிக்கத் தெரியாத ஆரியர்களால் தான் தற்போதைய "திராவிடம்" என்ற சொல் படிப்படியாக உருப்பெற்றது. ஆனால், கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகள் ஆரியரால் திட்டமிட்டு, இடைக்காலத்தில் உருவாக்கப்பட்ட மொழிகள். தங்களின் அடையாளங்களை இழந்த இம்மக்களை இனி தமிழர்கள் என்று அழைக்க இயலாததால், திராவிடம் என்ற தமிழர் மரபினத்தை அன்று ஆரியரால் பிழையாக அழைக்கப்பட்ட, பொதுப் பெயராலேயே அழைக்கின்றனர்.

பெரியார் அவர்கள் தமிழும் சமஸ்கிருதமும் சேர்ந்து உருவான மொழிகள் தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் எல்லாம், எனவே அவர்கள் எல்லோருமே தமிழர்கள் தான் என்றும், இம்மக்கள் அனைவரும் தமிழர்களாகவே தங்களை உணரவேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஆனால், அவ்வம்மாநிலங்களில் வாழும் மக்கள் தங்களை திராவிடர்கள் என்று கூடக் கருதாமல், தங்களைத் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் என்றே கருதுகின்றனர். (அங்கெல்லாம் திராவிடம் என்ற சொல்லாட்சி கொண்ட ஒரு அரசியல் கட்சிகூட இல்லை.) இது அவர்களின் அறியாமையைக் காண்பிக்கிறது. அவர்கள் வருங்காலத்தில் தங்களைத் தமிழர்களாக உணர்வார்களா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. அதை ஆரியம் அனுமதிக்காது!

ஆனால், தமிழகத்தில் நெடுநாட்களாக வாழும் இத்தகைய மக்கள் மட்டும் தங்களை திராவிடர் என்று அழைத்துக் கொண்டுள்ளனர். அறியாமையால், தமிழகத் தமிழனும் தன்னை திராவிடன் என்று அழைத்துக் கொள்கிறான். திராவிடர் என்று, ஒரு அரசியல் உத்தியாக, பெரியார் பயன்படுத்திப் பிரபலப் படுத்திய சொல்லாட்சி அவராலேயே கைவிடப்பட்டு, "தனித் தழிழ்நாடு" கேட்டு தனது இறுதிக் காலம் வரை போராடினார். அவர் ஒரு அப்பட்டமான தமிழத்தேசியர்!

எனவே, தமிழரை வீழத்திய திராவிடம் என்ற சொல்லாட்சியை இனிக் குழிதோண்டிப் புதைக்க வேண்டும். திராவிட அரசியல் பச்சோந்திகள் தங்களை "தேசத்தால் இந்தியன், இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன்" என்று தமிழனைக் காயடிப்பதை இனித் தடுத்தே ஆகவேண்டும். தமிழகத்தில் நெடுநாட்களாக வாழும் அனைத்து திராவிடர்களும் தமிழர்களே! எனவே, திராவிடம் என்ற சொல்லை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிவோம்! கர்நாடக, ஆந்திர, கேரள மக்கள் மட்டுமே தங்களை திராவிட இனம் என்று, விரும்பினால், இன்று அழைத்துக் கொள்ளட்டும். ஆதியிலிருந்து தமிழர்கள் தமிழர்களே! இவர்களைத் திராவிடர்கள் என்றழைப்பது அடிப்படையிலேயே பிழையானது. அப்படிப் பிழையாக அழைத்துக் கொண்டதால் தான் தமிழர்கள், தங்களைத் தமிழர்கள் என்று உணரமுடியாமல் வந்தேறிகளின் ஆட்சியில் அடிமைகளாக வாழ்கின்றனர்.

அனைத்து திராவிட அரசியலையும் முற்றுமாக வீழ்த்துவோம்! உலகின் தாயினமான நமக்கு ஒரு தேசம் இன்றியமையாதது! அது இன்றுவரை இல்லாதிருப்பது கேவலமானது. ஒப்பற்ற தமிழ் மொழியையும், பண்பாட்டையும், பண்டைய தமிழிலக்கியங்களையும் உலகெலாம் பரப்புவோம். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும், தூய நல்வழி (சுத்த சன்மார்கம்) சொன்ன தமிழருக்கு இந்த உலகை நல்வழிப் படுத்தும் இன்றியாமையாத கடமையும் உள்ளது! அது நம்மால் மட்டுமே முடியும். அதற்கான கருவிகள் நம்மிடம் தான் உள்ளன!

இதற்கு அடிப்படைத் தேவை தமிழ்த் தேசியம்! அதன் முதற்படி தமிழ்த்தேசிய அடையாள நாள் கொண்டாட்டங்கள்! அதற்கான செயல்பாடுகளைச் செய்யத் தொடங்குவோம்.

வெல்க தமிழ்த் தேசம்!

முனைவர் வே.பாண்டியன்

Read more...

மாவீரர் தின உரை வழமை போன்று இடம்பெறும் – தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை செயலகம்

தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் துணை ஆயுதக்குழுக்களும் மேற்கொண்டுவரும் பிரசாரங்களை நம்பவேண்டாம் என தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் எதிர்வரும் மாவீரர் தின உரையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கை விளக்கம் வழமைபோன்று இடம்பெறும் என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப்புலிகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அன்பார்ந்த தமிழீழ மக்களுக்கும் புலம்பெயர்வாழ் தமிழ் உறவுகளுக்கும் கடந்த 18-05-2009 அன்று தமிழீழ மக்களின் விடுதலைக்காக போராடிய எமது இயக்கம் பாரிய பின்னடைவை சந்தித்ததை தொடர்ந்து நாம் மீண்டும் எமது விடுதலை இயக்கத்தை தாயகத்தில் மீள கட்டியெழுப்பிவருவதை அறிந்த சிங்கள பேரினவாத அரசும் அரசுடன் சேர்ந்து இயங்கிவரும் அரச துணைகுழுக்களும் பொய்யான பிரசாரங்களை ஊடகங்கள் வாயிலாக கட்டவிழ்த்துள்ளனர்.

இவ்வாறான பிரசார போரை கடந்த முப்பது வருடங்கால போராட்ட வரலாற்றில் சிறிலங்கா அரசு பல தடவைகள் நிகழ்த்தியுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

எனவே இவ்வாறான போலிப்பிரசாரங்களை நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்ளும் அதேவேளையில் எமது விடுதலைப்போராட்டத்தின் அடுத்தக்கட்ட நகர்வு பற்றிய கொள்கை விளக்கவுரையும் வழமைபோன்று எதிர்வரும் மாவீரர் தினத்தன்று நிகழ்த்தப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

தன்னுடைய தவறை மறைக்க அவதூறு... கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் கண்டனம்

தன் தவறை மறைக்க அவதூறு செய்கிறார். விடுதலைப் புலிகள் மீது முற்றிலும் உண்மையல்லாத குற்றச்சாட்டுக்களைக் கருணாநிதி தெரிவித்துள்ளார் என பழ.நெடுமாறன் அவர்கள் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கருணாநிதி நீண்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள் போரில் கொல்லப்பட்டதை தடுப்பதற்குத் தவறிவிட்ட தனது மாபெரும் துரோகத்தை மறைப்பதற்காக தொடர்ந்து பொய்யான தகவல்களைக் கொண்ட அறிக்கைகளைக் கருணாநிதி வெளியிட்டு வருகிறார்.

1986ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற டெசோ பேரணி மாநாட்டில் பிரபாகரன் கலந்து கொள்ளாமல் தனது பிரதிநிதியாக திலகர், பேபி சுப்பிரமணியம் ஆகியோரை அனுப்பியதைக் குறைகூறியிருக்கிறார். ஆனால் அம்மாநாட்டில் ஈரோஸ் இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பாலகுமரன், ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பத்மநாபா, பிளாட் இயக்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் உமாமகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்ளாமல் தங்கள் பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பி வைத்தார்கள் என்ற உண்மையை மறைத்து பிரபாகரன் மீது வீண்பழியைச் சுமத்தியிருக்கிறார். அந்த மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவர் என்ற முறையில் இதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா கூறியுள்ள சில செய்திகளின் உண்மைத் தன்மையைக் குறித்துக் கொஞ்சமும் கவலைப்படாமல் புலிகள் மீது அவதூறுச் சேற்றை அள்ளி வீசுவதற்கு ஆதாரமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

2003ஆம் ஆண்டு நடைபெற்ற சமரசப் பேச்சு வார்த்தையின் போது பிரபாகரன் தாமாகவே வெளியேறினார் என்று ரணில் கூறியுள்ள பொய்யான தகவலையே தனக்கு ஆதாரமாக கருணாநிதி பயன்படுத்தியிருக்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நோர்வே பிரதிநிதிகள் முன்னிலையில் ஆறுகட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவில் இலங்கை அரசு 2003ஆம் ஆண்டு ஜூலை மாதம் தற்காலிக நிர்வாகக் குழுத் திட்டத்தை அறிவித்தது. இதன்படி நிலம், காவல்துறை, பாதுகாப்பு, வரிவசூலித்தல் ஆகியவை தொடர்பாக எந்த அதிகாரமும் இந்த அமைப்புக்கு அளிக்கப்படவில்லை.

இந்த அதிகாரங்கள் அனைத்தும் இலங்கை அரசிடமே இருக்கும். இத்திட்டத்தை பரிசீலனை செய்து ஏற்க மறுத்த புலிகள் மாற்றுத் திட்டம் ஒன்றை அளிக்க ஒப்புக்கொண்டனர்.

அதற்காக உலகெங்கிலுமுள்ள ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் பிறநாடுகளைச் சேர்ந்த சட்ட அறிஞர்கள் ஆகியோரின் ஆலோசனைகளைப் பெற்று அதன்பின்னரே மாற்றுத் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டுமென பிரபாகரன் கருதினார்.

அதற்கிணங்க புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஒரு குழு உலக நாடுகளுக்குச் சென்று அங்குள்ள ஈழத்தமிழர் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது.

பிறகு டென்மார்க், நார்வே, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்று அந்நாடுகளில் உள்ள கூட்டாட்சி முறைப்பற்றி நேரில் கண்டறிந்தது. அதன் பிறகு உருவாக்கப்பட்ட மாற்றுத் திட்டத்தை 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதியன்று நார்வே பிரதிநிதிகள் மூலமாக சிங்கள அரசுக்கு பிரபாகரன் அனுப்பி வைத்தார்.

இந்த உண்மையை ரணில் அடியோடு மறைத்து கூறிய பொய்யையே கருணாநிதி திரும்பவும் கூறியுள்ளார். புலிகள் அளித்த மாற்றுத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சிங்கள அரசு ஏற்க மறுத்த காரணத்தினால்தான் பேச்சுவார்த்தை முறிந்தது.

பேச்சுவார்த்தை தொடங்கியபோதே தனிநாடு கோரிக்கைக்கு மாற்றாக கூட்டாட்சி முறையை பரிசீலிக்க விடுதலைப்புலிகள் ஒப்புக்கொண்டது மிகப்பெரிய விட்டுக்கொடுத்தல் ஆகும். ஆனால் சிங்கள அரசு பிடிவாதமாக ஒற்றையாட்சி முறையிலிருந்து விலகி நிற்க மறுத்ததுதான் பேச்சுவார்த்தை முறிவுக்கு காரணமே தவிர பிரபாகரன் காரணம் அல்ல.

2005ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதை பிரபாகரன் தவிர்த்தார் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானதாகும். டோக்கியோவில் ஜப்பானிய அரசு முன் நின்று நடத்திய சக தலைமை நாடுகளின் பேச்சுவார்த்தையில் அமெரிக்க அரசின் பிரதிநிதிகளும் கலந்துகொள்வதால் விடுதலைப்புலிகள் அம்மாநாட்டிற்கு அழைக்கப்படவில்லை.

அழைப்பில்லாத மாநாட்டில் புலிகள் கலந்துகொள்ளவில்லை என்று கூறுவதைப்போன்ற அறியாமை வேறு இருக்க முடியாது. பாங்காக், டோக்கியோ, பெர்லின், ஒஸ்லோ ஆகிய நான்கு இடங்களில் நார்வே பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சிங்கள அரசின் பிரதிநிதிகளும் புலிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

ஆனால் இரண்டாம் முறையாக டோக்கியாவில் நடைபெற்ற முக்கியமான பேச்சுவார்த்தைக்கு புலிகளை அழைக்காதது மிகப்பெரிய தவறாகும். இந்தத் தவறை மூடி மறைத்து ரணில் கூறியவற்றையே கருணாநிதி திரும்பவும் கூறியிருப்பது வேண்டுமென்றே புலிகளை அவதூறு செய்வதாகும்.

1989ஆம் ஆண்டில் ராசீவ் காந்தி கருணாநிதியையும் மாறனையும் அழைத்துப் பேசி பிரபாகரனுடன் இந்தப் பிரச்சினைக் குறித்துப் பேசி முடிவு காண வழிகாணுங்கள் என்று கூறியதாக கருணாநிதி கூறியிருக்கிறார்.

அதற்கிணங்க இவர் செய்தது என்ன? இலங்கை சென்று பிரபாகரனைச் சந்தித்துத் திரும்பியதற்காக வைகோ அவர்கள் மீது அடாத பழியை இவர் சுமத்தினார். புலிகள் உதவியோடு தன்னைக் கொலை செய்யச் சதி நடைபெறுவதாகவும் புலம்பினார். இத்தகையவரா அப்பிரச்சினை தீருவதற்கு வழிகாணுபவர்?
பிரதமராக வி.பி.சிங் இருக்கும்போது ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி என்ன சொல்கிறாரோ அதற்கேற்ப இந்திய அரசு நடந்துகொள்ளும் என்று கூறி இவரிடம் பொறுப்பை ஒப்படைத்தபோது இவர் செய்தது என்ன?

ஈழத்தமிழர்களின் உண்மையான பிரதிநிதிகளான புலிகளுடன் மற்ற துரோக இயக்கங்களைச் சேர்ந்தவர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்கு இவர் செய்த முயற்சியை புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே திட்டமிட்டு அதைச் சீர்குலைத்தவர் கருணாநிதியே ஆவார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கேவை ஆதரிப்பதற்கு புலிகள் தவறிவிட்டார்கள் என்பதும் கருணாநிதியின் மற்றொரு குற்றச்சாட்டாகும். போர் நிறுத்த உடன்பாட்டில் பிரதமர் ரணிலும் பிரபாகரனும் கையெழுத்திட்டனர். ஆனால் அதற்குப் பிறகு நான்கு ஆண்டு காலம் பிரதமராக இருந்த ரணில் அந்த உடன்பாட்டில் எந்தவொரு அம்சத்தையும் நிறைவேற்றாமல் காலங்கடத்தினார்.

இடைக்காலத்தில் சிங்கள இராணுவ வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பி அவர்களுக்குப் பயிற்சி அளிக்கச் செய்தார். உலக நாடுகளிடமிருந்து ஆயுதங்களை வாங்கி குவித்தார். புலிகள் இயக்கத்தை பிளவு படுத்த சதிச் செய்தார். இந்தக் காரணங்களினால் அவரை தமிழர்கள் ஆதரிக்க விரும்பவில்லை. சிங்களர் தங்கள் தலைவர் யார் என்பதை முடிவுசெய்ய நடைபெறும் தேர்தலில் பங்கேற்பதால் எந்த பயனும் விளையப்போவதில்லை எனத் தமிழர்கள் கருதினர்.

தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக எதுவும் கூற புலிகள் விரும்பவில்லை. திரும்பத் திரும்பச் சகோதரச் சண்டை என்னும் புளித்துப்போனப் பொய்யையே கருணாநிதி கூறிவருகிறார். போராளி இயக்கங்களுக்குள் மோதலைத் திட்டமிட்டு உருவாக்கியது இந்திய உளவுத் துறையே என்ற உண்மையை மறைப்பதற்கு அவர் இவ்வாறு செய்கிறார்.

அவருடைய சொந்தக் கட்சியில் முக்கியமான தலைவர்கள் பலர் உட்கட்சி சண்டையில் படுகொலை செய்யப்பட்டதை தடுக்க முடியாத இவர் சகோதரச் சண்டையைப் பற்றிப் பேசுவதற்கு தகுதியற்றவர்.

இலங்கைப் போரில் சிங்களப் படைக்கு இந்தியா இராணுவ ரீதியாக அளித்த உதவிகளை அறிந்திருந்தும் அதைத் தடுத்து நிறுத்த முன்வராமல் மறைப்பதற்கு துணைநின்ற துரோகத்தை மறைத்து பிரச்சினையைத் திசைதிருப்புவதற்காக கருணாநிதி தொடர்ந்து செய்யும் முயற்சிகள் ஒருபோதும் பயனளிக்கப்போவதில்லை. உலகத் தமிழர்கள் அவரை மன்னிக்கப்போவதுமில்லை. என அவர் அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.

Read more...

தமிழர்களை எதிரிக்குக் காட்டிக்கொடுத்த விபீடணன் என்று கருணாநிதியை வரலாறு தூற்றும்

முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்கள் சிங்களப் படையினால் வகைதொகையின்றிக் கொல்லப்பட்ட போது தில்லியில் முகாமிட்டு மகன், மகள்,பேரன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்க தவம் கிடந்த கருணாநிதி இப்போதுதான் விடுதலைப்புலிகளின் பிழைகளைச் சுட்டிக் காட்டித் தான் மெளனமாக அழுவதாகப் புலம்புகிறார்.

இது தொடர்பாக இந்திய நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி:-

மௌனத்தின் வலி: கருணாநிதி வேதனை

இலங்கையில் விடுதலைப் புலிகள் எடுத்த அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின என்பதை எண்ணிப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது? என்று முதல்வர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார். மேலும், அந்த மௌனத்தின் வலிதான் யாருக்குத் தெரியப் போகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

"விடுதலைப் புலிகளின் படையில் நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு, தளபதிகளுக்கு, தலைவர்களுக்கு தமிழகத்தின் சார்பில் நாமே வலுவில் சென்று ஆதரவு வழங்கினோம். அது மிக லேசாகவே தெரிந்தது.

நாம் எடுத்து வைத்த கருத்துகள் அலட்சியப்படுத்தக் கூடியவைகளாக ஆகி விட்டன. வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு, இதுபோன்ற போர் முனைகளில் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தினோம். அதை நாம் தொடர்ந்து வலியுறுத்திய காரணத்தாலோ என்னவோ அலட்சியப்படுத்தி விட்டார்கள்.

"எல்லாம் முடிந்து மேலும் முடிவுறுமோ?' என்ற துயர நேரத்திலே ஜனநாயக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வாசற்படி வரையிலே வந்த போதுகூட, அதை எட்டி உதைத்து விட்ட தவறான காரியம் நடைபெற்றது.

"இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம். அமைதி முயற்சி நடந்த போதெல்லாம் அதனை தவிர்த்தார் அவர். தமிழர்களின் கோரிக்கைகள் என்னவென்பதை தெரிவிக்காமலே இழுத்தடித்தார். மேலும், 2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. தமிழ் மக்களை தேர்தலைப் புறக்கணிக்கச் செய்தார். அவர்கள் தேர்தலில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால், தமிழர்களின் மனநிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறி விட்டார்' என்று இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதை கூர்ந்து கவனித்தால் விடுதலைப் புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காததுதான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இலங்கை அதிபர் தேர்தலில் 1.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் விக்ரமசிங்கே தோல்வி அடைந்தார். ஏறத்தாழ ஏழு லட்சம் தமிழ் வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்த காரணத்தால், அவர்கள் வாக்களிக்கவே இல்லை.

இதை எண்ணிப் பார்க்கும் போது, விடுதலைப் புலிகள் சார்பாக அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின, எங்கே போய் முடிந்தன என்பதை நினைத்துப் பார்த்து நாம் மௌனமாக அழுவது யார் காதில் விழப் போகிறது? நம்முடைய மௌன வலியாருக்குத் தெரியப் போகிறது?'' என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். (Dinamani - November 18,2009)

கருணாநிதியின் மேற்படி பாசாங்கு அறிக்கை தொடர்பாக "நக்கீரன்" வெளியிட்டுள்ள விளக்கம்

கருணாநிதிக்கு அறளை பிறந்துவிட்டது என்பதற்கு அவரது இந்த அறிக்கை நல்ல சான்று. இல்லை பாசாங்கு செய்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கும் எங்களுக்கும் உள்ள உறவை எப்போதோ விலக்கிக் கொண்டுவிட்டோம். விடுதலைப்புலிகளோடான அணுகுமுறையில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் அணுகுமுறைதான் எங்களது அணுகுமுறை என்று நாக்கூசாமல் - வெட்கமோ துக்கமோ சிறிதளவுமின்றி - தமிழக சட்டசபையில் பேசிய கருணாநிதி இப்போது "விடுதலைப் புலிகளின் படையில் நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு, தளபதிகளுக்கு, தலைவர்களுக்கு தமிழகத்தின் சார்பில் நாமே வலுவில் சென்று ஆதரவு வழங்கினோம். அது மிக லேசாகவே தெரிந்தது" எனப் புதுக் கதை பேசுகிறார்.

வி.புலிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு கட்டளை போட்டு காவல்துறை கைது செய்த நூற்றுக் கணக்கான வி.புலிகள் என அய்யப்பட்டவர்களை இன்றும் சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்து அழகு பார்க்கும் கருணாநிதி "ஆதரவு வழங்கினோம்" என அப்பட்டமான பொய் சொல்கிறார்.

இப்போது கருணாநிதிக்கு ரணில் விக்கிரமசிங்க மீது அளவுகடந்த பாசம் பொத்துக் கொண்டு வந்திருக்கிறது. அவரைப் புலிகள் தோற்கடித்துவிட்டார்கள் என்று கருணாநிதி ஒப்பாரி வைக்கிறார்.

இந்த விக்கிரமசிங்கவும் அவரது கட்சிக்காரரும்தான் கருணாவை விலைபேசி புலிகளிடம் இருந்து பிரித்தார்கள். தேர்தலின் போது அதைச் சொல்லித்தான் பரப்புரை செய்தார்கள்.

இந்த ரணில் விக்கிரமசிங்கதான் . தீர்வு எதனையும் முன்வைக்காமல் பேச்சுவார்த்தையை இழுத்தடித்தவர். 2002 ஆம் ஆண்டு டிசெம்பர் 05 ஆம் நாள் ஒஸ்லோவில் நடந்த மாநாட்டில் விடுதலைப்புலிகள் உள்ளக தன்னாட்சி யோசனையை முன்வைத்தார்கள். அதனை அவரது பதவி காலத்தில் நடைமுறைப்படுத்த ஒரு சின்ன அசைவைக்கூடச் செய்யாதவர்.

விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்களை இந்தியாவின் துணையோடு மூழ்கடித்தவர். அந்தச் சாதனையை நாடாளுமன்றத்தில் பெருமையாகப் பேசியவர்.

மேற்குநாடுகளின் செல்லப்பிள்ளையாக விளங்கிய ரணில் விக்கிரமசிங்க மேற்குநாடுகளின் துணையோடு விடுதலைப்புலிகளை வீழ்த்த சதிசெய்தார். விடுதலைப் புலிகளை சிக்க வைக்க வலை பின்னினார்.

இது போன்ற காரணங்களின் அடிப்படையில்தான் தேர்தலை விடுதலைப்புலிகள் புறக்கணித்தார்கள். இரண்டு பிசாசுகளில் எந்தப் பிசாசும் வேண்டாம் என்பதே அவர்களது கணிப்பாக இருந்தது. ஏனென்றால் ரணில் விக்கிரமாசிங்கவும் ராஜபக்சவும் அடிப்படையில் சிங்கள - பெளத்த இனமத வெறியர்கள்.

விடுதலைப்புலிகளின் தோல்விக்கு இந்திய அரசு செய்த சதிதான் காரணம். அதில் பங்காளியாக இருந்த திமுக கட்சியும் காங்கிரஸ் கட்சியும்தான் காரணம். இந்தியா மட்டும் ஒதுங்கி இருந்திருந்தால் விடுதலைப்புலிகளை போர்க்களத்தில் வீழ்த்தியிருக்க முடியாது.

இதனை நேற்றுக் கூட இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறார். இலங்கையை காப்பாற்றியது இந்தியாதான் என மீண்டும் சத்தியம் செய்திருக்கிறார். இதோ கருணாநிதிக்கு பல்லக்குத் தூக்கும் விடுதலையில் (17-11-2009) வந்த செய்தி.

கொழும்பு, நவ. 17_- விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடைசிக்கட்ட போரின்போது இந்தியா அளித்த ஆதரவு காரணமாகவே இலங்கை மீதான உலக நாடுகளின் நிர்ப்பந்தம் குறைந்தது என அந்நாட்டின் பாதுகாப்புத் துறைச் செயல-ரும், அதிபர் ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர், இந்தியா அளித்த ஆதரவினால்தான் போரை நிறுத்தக்-கோரும் உலக நாடுகளின் நிர்ப்பந்தம் குறைந்து, தொடர்ந்து தாக்குதலை நடத்த முடிந்ததாகவும் அவர் கூறினார்.

இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு இந்தியா என்று கூறிய கோத்தபாய, கடந்த நான்காண்டுகளில் இந்த நட்பு மேலும் நெருக்கமானதாகவும், புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா பல வகைகளில் உதவிபுரிந்ததாகவும் தெரிவித்தார்.

எனவேதான் கருணாநிதியின் கைகளில் தமிழீழ மக்களது குருதி தோய்ந்திருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறோம். வரலாறு தலைவர் பிரபாகரனை தமிழன் மானம் காத்த சுத்த வீரன் என்று போற்றும். கருணாநிதியை தமிழர்களை எதிரிக்குக் காட்டிக்கொடுத்த விபீடணன் என்று தூற்றும். வரலாற்றின் தீர்ப்பு இப்படித்தான் இருக்கும்.

நக்கீரன்

Read more...

தமிழர்களை மீட்க மறுத்த இந்தியா ராஜபக்சேவை மட்டும் காப்பாற்ற துடிப்பதா - பழ.நெடுமாறன்

இலங்கையில் தமிழர்களை மீட்க மறுத்த இந்தியா ராஜபக்சேவை மட்டும் காப்பாற்ற துடிப்பது ஏன்? என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் ராணுவப் புரட்சி ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், தனது ஆட்சியைக் காப்பாற்ற இந்தியப் படையை அனுப்புமாறும் இந்திய அரசுக்கு ராஜபக்சே விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்தியப் படை அக்டோபர் 15ஆம் தேதி ஆயத்த நிலையில் வைக்கப்பட்டதாக இலங்கை கூட்டுப்படைத் தளபதி பொன்சேகா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.

கடந்த இரு நாட்களுக்கு முன்பாக ராஜபக்சேயை நேரில் சந்தித்த போதும் பொன்சேகா கூறியபோது அதை மறுக்கும் வகையில் ராஜபக்சே எதுவும் கூறவில்லை என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையில் போரின் இறுதிக் கட்டத்தில் சிங்கள ராணுவத்தினால் சுற்றி வளைத்துக் கொல்லப்பட்ட மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக தலையிடுமாறு இந்திய அரசை தமிழக மக்கள் ஒன்றுபட்டு வற்புறுத்தியபோது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையில் தலையிட முடியாது என இந்தியப் பிரதமர் மறுத்தார்.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்கள் பதைக்க பதைக்க படுகொலை செய்யப்பட்டபோதும், தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தொடர்ந்து கொல்லப்பட்ட போதும் ராணுவ ரீதியாகத் தலையிட மறுத்து இந்திய அரசு ராஜபக்சேயைக் காப்பாற்ற படையை ஆயத்த நிலையில் வைத்தது என்ற செய்தி தமிழர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

மேலும் இலங்கைக்கு ராணுவ ரீதியாக உதவி எதுவும் செய்யவில்லை என்று இடைவிடாமல் மறுத்த வந்த இந்திய அரசு, தான் கொடுத்த இரு போர்க்கப்பல்களை திரும்பக் கேட்டுள்ளது என்ற செய்தியும் இந்திய அரசின் உண்மை உருவத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.

தமிழக மக்கள் இனியாவது இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்று தனது அறிக்கையில் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

Read more...

விலகி சென்றவர்கள் விலாசம் இல்லாமல் போவார்கள்: வைகோ பேச்சு

தேனி மாவட்டம் சின்னமனூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.

’’முல்லைப் பெரியாறு அணை ஆயிரம் ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட சட்டப்படியான பாதுகாப்பு உத்தரவாதத்தை உடைத்து எரிவதற்கு கேரள அரசு முயல்கிறது. அதற்கு மத்திய அரசும் துணை போகிறது.

1979-ம் ஆண்டிலிருந்து அணைக்கு ஆபத்து என்றும் அதனால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கேரளத்தில் திட்டமிட்ட விஷமத்தனமான பொய் பிரச்சாரத்தினை கேரள அரசு செய்து வருகிறது.



2006-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்தது. அதில் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தமிழக அரசு தேக்கலாம் என தீர்ப்பளித்தது. இந்த நேரத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போது தி.மு.க. அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல் படுத்தவில்லை.

கேரளத்தில் ஆட்சிக்கு வந்த மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த அச்சுதானந்தன் இந்திய பிரமதரை 5 முறை சந்தித்து அணை உடைந்துவிடும் என்று இதனால் லட்சக்கணக்கான மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பச்சைப் பொய்யை கூறினார். அதற்காக அவர் கொடுத்த ஆதாரங்கள் எதுவும் இல்லை.

அணை உடைவது போலவும், அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்கள் தண்ணீரில் மூழ்கி சாவது போலவும் கேரள மக்களை அச்சுறுத்தும் வகையில் கிராபிக்ஸ் காட்சிகளை வடிமைத்து லட்சக்கணக்கான சி.டி.க்கள் தயாரித்து மாநிலம் முழுவதும் இலவசமாக வழங்கினார்கள்.

முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டினால் தமிழகத்தின் உரிமை பறிபோகும். பசுமையாக இருக்கும் தென் தமிழகம் பாலைவனமாக மாறும்.

பெரியாறு அணை விஷயத்தில் முதல்- அமைச்சர் கருணாநிதி தும்பை விட்டு வாலை பிடிக்கிறார். மத்திய மந்திரியை எதிர்த்து மதுரையில் தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என்று கருணாநிதி அறிவித்தார்.

ஆனால் 2 தினங்களில் அந்தர்பல்டி அடித்து தற்போது முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட எதிர்ப்பு பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது மக்களை ஏமாற்றும் கபட நாடகம்.

மத்தியில் தேவையான மந்திரி பதவிகளை பெறுவதற்கு டெல்லியில் முகாமிட்டு கேட்டு பெற்றவர்கள் பெரியாறு அணை விஷயத்தில் டெல்லி சென்று பிரதமரை வற்புறுத்த ஏன் தயக்கம் காட்டுகிறார்கள்.

ம.தி.மு.க.வில் தன்னலம் கருதாது உழைக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். இந்த இயக்கத்தை விட்டு விலகி சென்றவர்கள் குறித்து கவலைப்பட வேண்டாம். விலகி சென்றவர்கள் விலாசம் இல்லாமல் போவார்கள்’’என்று பேசினார்.

Read more...

இலங்கைக்கு காங். கூட்டணி கட்சியினர் மட்டுமே செல்வது சந்தேகத்தை அளிக்கிறது: பழ.நெடுமாறன்

இலங்கை தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாமை ஆய்வு செய்ய காங்கிரஸ் கூட்டணி கட்சியின் எம்.பி.க்கள் மட்டுமே செல்வது சந்தேகத்தை அளிக்கிறது'' என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இதுகுறித்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்,

இலங்கையில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களை நேரில் சென்று ஆய்வு செய்ய இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று செல்வதற்கு இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால் அந்த குழுவில் காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டுமே இடம்பெற்றிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பாராளுமன்ற எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஒருவர் கூட அந்தக் குழுவில் சேர்க்கப்படாதது ஆழமான சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

இலங்கையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு 3 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளாகி வருவதற்கு சிங்கள அரசு மட்டுமல்ல அதனுடன் இணைந்து செயல்பட்ட இந்திய அரசும் காரணமாகும்.

இந்த நிலையில் சிங்கள அரசின் அட்டூழியங்களை மூடி மறைக்க உதவுவதற்காகவே காங்கிரஸ் கூட்டணி உறுப்பினர்களை மட்டுமே கொண்ட குழு செல்கிறது என்ற ஐயம் வலுப்படுகிறது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அத்தனை எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் உள்ளடக்கிய குழு சென்றால் ஒழிய உண்மைகளை ஒருபோதும் கண்டறிய முடியாது என்று கூறியுள்ளார்.

Read more...

பெரியார் குடும்பத்தில் பிறந்த பெருச்சாளி ஈ.வி.கே.எஸ்



தேசிய அரசியலில் ஒட்டிக்கொண்டு பிழைப்பு நடத்தும் சோனியாவின் அடிவருடி முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று தான் உயிரோடிருப்பதை வெளிப்படுத்தும் வகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ’'ராகுல்காந்தியை விமர்சனம் செய்ய வைகோவுக்கு தகுதி இல்லை. அவர் ஒரு காலத்தில் சிங்கமாக இருந்தார். பின்னர் புலியாக மாறினார். தற்போது பூனையாக இருக்கிறார்.

எனவே வைகோவுக்கு ராகுலை விமர்சிக்க தகுதி இல்லை என கூறினார்.
சிங்கம் புலியான இருப்பதை விட எலியாக இருப்பதே மானக்கேடு... என்பதை மறந்து இளங்கோவன் பேசியுள்ளார்..

Read more...

போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் சோனியா உறவினர் மீதான வழக்கு கைவிடப்படுகிறது



இந்திய ராணுவத்துக்கு போபர்ஸ் ரக பீரங்கி வாங்க சுவீடன் நாட்டுடன் ராஜீவ்காந்தி ஒப்பந்தம் செய்தார். இதில் பல கோடி ரூபாய் லஞ்சமாக கைமாறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
1987 ஏப்ரல் 16ம் நாள் ஸ்வீடன் நாட்டின் வானொலியில் போபர்ஸ் பீரங்கி பேரத்தில் கமிஷன் பணம் கையாளப்பட்டதாகச் சொல்லி செய்தி வெளியானது. செய்தி வெளியானவுடனேயே இந்தியாவே பற்றிக் கொண்டது. இதுதான் சமயம் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கிக் கொண்டிருந்தபோது அவர்களுக்கு அவல் மெல்வது போல ராணுவ மந்திரியாக இருந்த வி.பி.சிங் அந்த ஊழலை விசாரிக்க கமிட்டி ஒன்றை நியமிப்பதாக அறிவித்தார். இந்த அறிவிப்புதான் அவர் தேசியத் தலைவராக உருவெடுக்க முதல் படியாக அமைந்துவிட்டது. பிரதமரான தனக்கு தெரியாமல், தன்னிடம் கலந்தாலோசிக்காமல் இப்படி ஒரு கமிட்டியை அமைத்தது பற்றி ராஜீவ் கோபம் கொண்டார். இந்த மனக்கசப்பு வளர்ந்து தன் அமைச்சர் பதவியிலிருந்து விலகியதும் இல்லாமல் காங்கிரஸை விட்டே விலக நேர்ந்தது. கூடவே எம்.பி. பதவியிலிருந்தும் விலகினார்.



ராஜீவ்காந்தி உள்பட பலர் மீது டெல்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு நடந்தது. ஊழல் பணம் பெரிய அளவில் கை மாற உதவிய சோனியாவின் உறவினரான இத்தாலி நாட்டைச் சேர்ந்த குவாத்ரோச்சி மீதும் வழக்கு தொடரப்பட்டது.

போபர்ஸ் அவதூறு (Bofors Scandal) இந்தியாவில் 1980 இல் நிகழ்ந்த மிக முக்கிய பீரங்கி பேர ஊழல் குற்றச்சாட்டு நிகழ்வாகும். இந்தியாவிற்காக போபர்ஸ நிறுவனத்திடம் இருந்து வாங்கிய 155 மிமீ பீரங்கிகள் (குட்டையான பீரங்கி வண்டி - howtzer) வாங்கியதில் தனிப்பட்ட இலாபம் அடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டவராக முன்னாள் பிரதமர் இராஜிவ் காந்தி மீது குற்றம் சுமத்தபட்டது. இதன் காரணமாக அவரும் அவருடைய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் 1989 தேர்தலில் தோல்வியைக் கண்டது.
இந்த அவதூறு குற்றச்சாட்டின் இந்திய மதிப்பு 64 கோடி இந்திய ரூபாய்களாகும்.
இந்த வழக்கு வெளிச்சத்துக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர் அப்பொழுது இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த வி. பி. சிங். இது பத்திரிகைகளில் சித்திரா சுப்பரமணியம் மற்றும் என். ராம் போன்ற பத்திரிகையாளர்களால் இந்து மற்றும் இந்தியன் எக்ஸபிரஸ் நாளிதழ்களின் மூலம் வெளியானது.
இந்த ஊழலுக்கு இடைத்தரகராக செயல்பட்டவர் இத்தாலியத் தொழிலதிபரான ஒட்டாவயோ குவட்ரோச்சி. இவர் இராஜிவ் காந்திக்கு மிக நெருக்கமானவர்.
போபார்ஸ் ஊழல் பின்னணியும் குவாத்ரோச்சியும்
கடந்த 1987-ம் ஆண்டு இந்திய ராணுவத்துக்கு போபர்ஸ் பீரங்கிகள் வாங்கியதில் ரூ.64 கோடி லஞ்சப்பணம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் குடும்ப நண்பரும், இத்தாலி தொழில் அதிபருமான ஒட்டாவியோ குவாத்ரோச்சி லஞ்சப்பணம் பெற்றதாக, இவ்வழக்கில் அவரை சி.பி.ஐ. குற்றவாளியாக சேர்த்தது.
குவாத்ரோச்சி கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்ததால், கடந்த 1997-ம் ஆண்டு அவருக்கு எதிராக சி.பி.ஐ. கோர்ட்டு 'பிடிவாரண்டு' பிறப்பித்தது. பி.ஜே.பி. ஆட்சியில் கடந்த 1999-ம் ஆண்டு, குவாத்ரோச்சிக்கு எதிராக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அவர் மீது கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
கோர்ட் ஏற்கனவே பிறப்பித்த பிடிவாரண்டு அடிப்படையில், குவாத்ரோச்சியை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து, அவருக்கு எதிராக 'ரெட் கார்னர் நோட்டீஸ்' பிறப்பிக்கும்படி, சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போலை சி.பி.ஐ. கேட்டுக்கொண்டது. அதன்படி, கடந்த 1999-ம் ஆண்டு குவாத்ரோச்சிக்கு எதிராக 'ரெட் கார்னர் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டது.
இந்த நோட்டீஸ் அடிப்படையில், கடந்த 2003-ம் ஆண்டு மலேசியாவில் குவாத்ரோச்சி பிடிபட்டார். ஆனால் அவருக்கு எதிராக போதிய ஆதாரங்களை சி.பி.ஐ. தாக்கல் செய்யாததால், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க மலேசிய கோர்ட் மறுத்து விட்டது.
இதுபோல், கடந்த 2007-ம் ஆண்டு அர்ஜென்டினா நாட்டில் குவாத்ரோச்சி பிடிபட்டார். அப்போதும், போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாததால், அவரை இந்தியாவுக்கு கொண்டுவர முடியவில்லை.
இதற்கிடையே, கடந்த 2003-ம் ஆண்டு லண்டன் வங்கியில் குவாத்ரோச்சி மற்றும் அவரது மனைவி மரியா பெயரில் இருந்த 2 வங்கி கணக்குகளை சி.பி.ஐ. முடக்கி வைத்தது. பிறகு, 2006-ம் ஆண்டு இந்த முடக்கத்தை ரத்து செய்தது.
இந்த சூழ்நிலையில், குவாத்ரோச்சியின் பெயர், சர்வதேச தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ.யின் வேண்டுகோளின் பேரில், இன்டர்போல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் கடந்த 1999-ம் ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 'ரெட் கார்னர் நோட்டீஸ்' ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் மிலன் பானர்ஜியின் சட்ட யோசனையை ஏற்று இம்முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக சி.பி.ஐ. செய்தித்தொடர்பாளர் ஹர்ஷ் பகால் தெரிவித்தார்.
குவாத்ரோச்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட 'ரெட் கார்னர் நோட்டீஸ்' 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். அதை புதுப்பிக்கலாமா? என்று சி.பி.ஐ. கருத்து கேட்டபோது, அட்டர்னி ஜெனரல் இந்த யோசனையைத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், 'குவாத்ரோச்சியை இந்தியாவுக்கு கொண்டுவர 2 தடவை எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன. எனவே, அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. இந்த தொடர் தோல்வியால், குவாத்ரோச்சிக்கு எதிரான பிடிவாரண்டு செல்லாததாகி விடும். எனவே, அவரை குற்றவாளிகள் பட்டியலில் இருந்து விடுவித்து விடலாம்' என்றார்.
போபர்ஸ் ஊழல் வழக்கு, நாளை சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. அப்போது, இந்த முடிவை கோர்ட்டில் சி.பி.ஐ. தெரிவிக்கிறது.
பிரதமர் மன்மோகன் சிங்கோ இலங்கை தமிழர்கள் செத்து மடிவது குறித்து வாய் திறக்க மாட்டேன் என்கிறார். ஆனால், சோனியா காந்தியின் உறவினர் ஒட்டாவியோ குவாத்ரோச்சி குறித்து, ஓர் அற்புதமான கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் கமிஷன் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, தேடுவோர் பட்டியலில் இருந்த குவாத்ரோச்சியின் பெயர் நீக்கப்பட்டது. இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த பாரத பிரதமர் மன்மோகன்சிங், `மற்றவரை துன்புறுத்துவது நல்லதல்ல’ என்று பதிலளித்து இருக்கிறார்.
அப்படி என்றால், இலங்கை அரசு, இலங்கை தமிழர்களை தினமும் கொன்று குவிக்கிறதே!. இதைத் துன்புறுத்தல் இல்லை என்கிறாரா பிரதமர்?
இலங்கை தமிழர்கள் என்ன இத்தாலிக்காரர்களா? சோனியா காந்தியின் உறவினர்களா? தமிழர்கள் தானே என்ற எகத்தாளம் தான்!.

போபர்ஸ் புகழ் குவாத்ரோச்சியை `இந்தியாவின் மருமகன்' போல் மத்திய அரசு நடத்துகிறது -சுப்ரீம் கோர்ட்


புதுடெல்லி, போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் தொடர்புடைய `இத்தாலிய தொழில் அதிபரான குவாத்ரோச்சியை `இந்தியாவின் மருமகன்' போல் மத்திய அரசு நடத்துவதாகவும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த 1986-ம் ஆண்டில் சுவீடன் நாட்டின் போபர்ஸ் நிறுவனத்தில் இருந்து இந்திய ராணுவத்துக்கு பீரங்கிகள் வாங்கப்பட்டன. இந்த பேரத்தில் இடைத் தரகராக செயல்பட்ட இத்தாலி நாட்டு தொழில் அதிபர் குவாத்ரோச்சி, ரூ.64 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உள்பட முக்கிய பிரமுகர்கள் சிலர் மீதும் இந்த ஊழல் விவகாரத்தில் புகார் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.


போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில், தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் நீதிபதிகள் பி.சதாசிவம், பி.எஸ்.சவுகான் ஆகியோரைக் கொண்ட `சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச்' முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில், சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் கோர்ட்டில் ஆஜராகி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அப்போது அவர், போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் தொடர்புடைய குவாத்ரோச்சிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக அறிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

``குவாத்ரோச்சியை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்துவருவதற்கு சி.பி.ஐ. மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்துவிட்டன. எனவே அவருக்கு எதிரான வழக்கை முடித்துக்கொள்வது என்று சி.பி.ஐ. முடிவு எடுத்து இருக்கிறது.

டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 2004-ம் ஆண்டில் வழங்கிய தீர்ப்பு ஒன்றில், போபர்ஸ் பீரங்கி பேரத்தில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த முடிவை சி.பி.ஐ. எடுத்தது. அனைத்து அம்சங்களையும் பரிசீலித்த மத்திய அரசு குவாத்ரோச்சிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவது என்று முடிவு எடுத்தது''.

இவ்வாறு கோபால் சுப்பிரமணியம் கூறினார்.

அதைத்தொடர்ந்து, ``விசாரணை கோர்ட்டில் `உயிர் இல்லாமல்' ஆகிவிட்ட ஒரு வழக்கில் நாங்கள் என்ன செய்ய முடியும்? அவர்கள் (சி.பி.ஐ.) வழக்கை வாபஸ் பெறும் முடிவுக்கு வந்துவிட்டதாக தோன்றுகிறது'' என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

ஆனால், குவாத்ரோச்சிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து வக்கீல் அஜய் அகர்வால், மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று நீதிபதிகளை கேட்டுக்கொண்டார்.

``இத்தாலிய தொழில் அதிபரான குவாத்ரோச்சியை `இந்தியாவின் மருமகன்' போல் மத்திய அரசு நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசின் வக்கீல் கோபால் சுப்பிரமணியம், ``சர்வதேச போலீசாரின் நோட்டீசை தொடர்ந்து குவாத்ரோச்சியை கைது செய்ய சி.பி.ஐ. மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பயன் அளிக்கவில்லை'' என்று விளக்கம் அளித்தார்.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்த பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், மத்திய அரசின் உத்தரவுப்படி சி.பி.ஐ. நடந்து கொள்வதாக குற்றம் சாட்டினார். அதே நேரத்தில், காங்கிரஸ் தரப்பில் ``இந்த வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதாக'' தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பேட்டி அளித்த கட்சியின் செய்தி தொடர்பாளர் மணீஸ் திவாரி, இந்த வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டுக்கு தெரிவித்த கருத்து மதிக்கப்பட வேண்டும் என்றார்.

மத்திய அரசின் இந்த முடிவின் மூலம், 20 ஆண்டு காலமாக நடைபெற்றுவந்த போபர்ஸ் பீரங்கி பேர வழக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.

Read more...

சொந்த மண்ணில் தமிழர்கள் அகதிகளாக வாழும்போது உலகத்தமிழ் மாநாடு எதற்கு?ஜெ.

ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் தற்போது நிலைகுலைந்து போய் வேதனையில் இருக்கிறார்கள். 1966 ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய மலேசிய தமிழர்கள் இன்று அந்த நாட்டின் இரண்டாம்தர குடிமக்களாக துன்பப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.


கடந்த ஆண்டு, தங்களுடைய உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், மலேசியத் தமிழர்கள் தெருக்களுக்கு வந்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்த போது, அந்த நாட்டு அரசாங்கத்தால் கொடூரமாக அடக்கப்பட்டனர். இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக கருணாநிதி குரல் எழுப்பவில்லை.

1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய இலங்கைத் தமிழர்கள், இன்று தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகள் முகாம்களில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் இனப் படுகொலை நடந்து கொண்டிருந்தபோது கருணாநிதி குரல் கொடுக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில் உலக தமிழ் மாநாடு எதற்கு? 2010 ஜனவரியில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை கோவையில் நடத்தப்போவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இந்த 'உலகத் தமிழ் மாநாடு' கருணாநிதியை உயர்த்திக் கொள்வதற்காக அறிவிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியே தவிர, இதனால் தமிழ் மொழிக்கு எந்தப் பயனும் இல்லை’’என்று தெரிவித்துள்ளார்.

’’1995ஆம் ஆண்டிலிருந்து 14 ஆண்டுகளாக எந்த நாடுமே ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்த முன் வராததற்குக் காரணம், தமிழ் உலகமே கலக்கத்தில், பெருங்குழப்பத்தில், அமளியில் இருந்து வருவது தான்.

உலகத்தில் உள்ள தமிழர்களின் துயர் துடைக்க கருணாநிதி என்ன செய்தார்? கருணாநிதியின் கட்சி தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த மத்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது வாய் மூடி மவுனியாக இருந்தது குறித்து கருணாநிதி என்ன சொல்லப் போகிறார்?

எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசு ஏற்பாடு செய்தது என்ற ஒரே காரணத்திற்காக 1981ம்ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் கருணாநிதியும், அவரது திமுக கட்சியும் கலந்துகொள்ளவில்லை.


நான் முதலமைச்சராக இருந்தபோது 1995ஆம் ஆண்டு எனது அரசின் ஏற்பாட்டில் தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டிலும் இதே நிலையைத்தான் கடைபிடித்தார் கருணாநிதி.

இதுபோன்ற அரசியல் நாகரீகத்தை உலகத் தமிழ் மாநாடுகளில் புகுத்திய கருணாநிதி, உலகத்தில் வாழும் தமிழர்கள் அனைவரும் எல்லாவற்றையும் மறந்து, கோயம்புத்தூரில் தான் நடத்தும் கேலிக்கூத்தான மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? அவ்வாறு அவர் எதிர்பார்த்தால் அது அவர் செய்யும் மிகப் பெரிய தவறாகும்’’என்று தெரிவித்துள்ளார்.

Read more...

'கருணாநிதியும் திசைதிருப்பலும்'-நெடுமாறன்

தமிழர்களின் கோபத்துக்கும், வெறுப்புக்கும் ஆளாகும் ஒவ்வொரு முறையும் தனது உயிருக்கு ஆபத்து என கூக்குரல் எழுப்பி திசைதிருப்ப முயல்வது முதல்வர் கருணாநிதிக்கு கைவந்த கலையாகும் என நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இது அவர் வெளியிட்ட அறிக்கையில்,

வன்னி வதை முகாம்களில் உள்ள 3 லட்சம் தமிழர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் உயிருக்கு ஆபத்துஎன்று ஓலமிடும் முதல்வர் கருணாநிதியின் செயலால் உலகத் தமிழர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

அதனை சுட்டிக்காட்டியதற்காக என் மீது பாய்கிறார். குண்டர் சட்டத்தைக் காட்டி மிரட்டுகிறார்.

தமிழர்களின் கோபத்துக்கும், வெறுப்புக்கும் ஆளாகும் ஒவ்வொரு முறையும் தனது உயிருக்கு ஆபத்து என கூக்குரல் எழுப்பி திசைதிருப்ப முயல்வது முதல்வர் கருணாநிதிக்கு கைவந்த கலையாகும்.

ஐநா அதிகாரி லின் பாஸ்கோ அகதி முகாம்களை நேரில் பார்வையிட்டு உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளார்.

ஆனால் முதல்வர் கருணாநிதி [^] தில்லிக்கு கடிதம் எழுதுவதும், பிரதமர் சார்பில் அதிகாரிகள் இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதுவதுமான நாடகம் தொடர்கிறதே தவிர ஈழத் தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்கவில்லை.

இதுபோன்ற நாடகங்களை எல்லாம் நிறுத்திவிட்டு முகாம்களில் உள்ள தமிழர்களை மீட்பதற்கு உண்மையான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை மீது பொருளாதார தடை...

தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஐநாவில் இந்தியா கொண்டு வரவேண்டும். அப்போதுதான் இந்திய அரசின் மீது தமிழர்களுக்கு நம்பிக்கை பிறக்கும் என அறிக்கையில் நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

Read more...

புதுவையில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா












Read more...

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP