புதுவையில் தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து லோகு அய்யப்பன் விடுதலை


இலங்கை அகதிகளை படகில் வெளிநாட்டுக்கு தப்ப வைக்க முயற்சி செய்ததாக புதுவை பெரியார் திக தலைவர் லோகு.அய்யப்பன் கவுன்சிலர் சக்திவேல் ஆகியோரும் டீசல் பதுக்கியதாக காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணியும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் லோகு அய்யப்பனின் தந்தை லோகநாதன் தனது மகன் மீது போடப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யு மாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மனு அனுப்பியிருந்தார். இதேபோல் கவுன்சிலர் சக்திவேலுவை விடுவிக்குமாறு அவரது மனைவி கயல்விழியும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மனு செய்திருந்தார். இதையடுத்து லோகு அய்யப்பன் கவுன்சிலர் சக்திவேல் ஆகியோர் மீது போடப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தை பரிசீலனை செய்து ரத்து செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகம் புதுவை தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பியது. இதையடுத்து லோகு.அய்யப்பன் சக்திவேல் ஆகியோர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதற்கான ஆவணங்களை காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைக்கு தாசில்தார் தில்லைவேல் நேற்று மாலை 5.30 மணிக்கு எடுத்துச் சென்றார். நடை முறை காரணங்களால் இருவரையும் விடுதலை செய்வதில் தாமதம் ஏற்பட்டது. சிறை வாசலில் அவர்களை வரவேற்க காத்திருந்த ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பியதால் வடக்கு எஸ்.பி. பழனி வேலு (பொறுப்பு) தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர்இ இரவு 10.30 மணிக்கு இருவரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

நன்றி தினகரன்

Read more...

கருணாநிதிக்கு கிடைத்த சம்பளம் சிங்கிள் டீயும், 2 வடையும் தான்-ஜெயலலிதா

உண்மையைச் சொல்லப் போனால் கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு வளர்ந்தவர் தான் கருணாநிதி, அவர் கூட்டங்களில் பேச ஆரம்பித்த போது அவருக்குக் கிடைத்த சம்பளம் ஒரு சிங்கிள் டீயும், இரண்டு வடையும் தான் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கருணாநிதியிடம் கணக்கு கேட்டு அதைத் தராததன் காரணமாக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக. அதை மறந்து, 'கணக்கு காட்டுகிறேன்; கண்ணுடையோர் காண' என்ற தலைப்பிலே கருணாநிதி தன்னுடைய கணக்கைக் காட்டியிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது. இதை கடந்த நூற்றாண்டு மற்றும் இந்த நூற்றாண்டின் இணையற்ற ஜோக் என்று சொல்லலாம்.

இப்படிப்பட்ட சிறந்த நகைச்சுவைக்காக மாநில அளவிலோ, தேசிய அளவிலோ, ஏன் உலக அளவிலோ கூட கருணாநிதிக்கு விருது கிடைத்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.




திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் மூலம் சென்னைக்கு வந்ததாக கருணாநிதியே பல முறை பேசி இருக்கிறார். இது குறித்து 'வனவாசம்' புத்தகத்தின் முதல் பதிப்பில் கருணாநிதியின் நெருங்கிய நண்பராக இருந்த கவியரசர் கண்ணதாசன் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். உண்மையைச் சொல்லப் போனால் கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு வளர்ந்தவர் கருணாநிதி.

இவர் கூட்டங்களில் பேச ஆரம்பித்த போது இவருக்குக் கிடைத்த சம்பளம் ஒரு சிங்கிள் டீயும், இரண்டு வடையும் தான். இப்படிப்பட்ட கருணாநிதி இப்பொழுது திடீரென்று 'கணக்கு காட்டுகிறேன்' என்ற தலைப்பில், தன்னுடைய குடும்பம் ஓரளவு வசதியுள்ள குடும்பம் என்று ஒரு புதிய தகவலை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

16.1.1946 அன்று கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கியில் பங்காளியாக சேர விண்ணப்பித்த போது, அந்த விண்ணப்பப் படிவத்தில் தனக்கு நஞ்சை, புஞ்சை நிலங்கள் ஏதுமில்லை என்றும், வீட்டு மனை ஏதுமில்லை என்றும் தெரிவித்து, தன் வசம் 'நகை, பாத்திரம் வகையறா சுமார் ரூ. 1,000' இருக்கிறது என்று கருணாநிதியே கைப்பட எழுதியிருக்கிறார்.

கருணாநிதியின் தந்தை முத்துவேலர் வசம் என்ன இருந்தது என்பதெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த கூட்டுறவு மாத இதழில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

கருணாநிதியும், கவியரசர் கண்ணதாசனும் சென்னையில் இருந்து சேலத்திற்கு ரயிலில் பயணம் செய்த போது, உணவு வாங்கி சாப்பிட பணமில்லாத நிலை இருந்த போது, 'தனக்கு பசி தாங்கவில்லை' என்று கவியரசர் கண்ணதாசன் கருணாநிதியிடம் சொன்னதாகவும், அதற்கு பதில் அளித்த கருணாநிதி, அருகில் இருந்த பழக் கூடையை காட்டி 'திருடலாமா?' என்று கேட்டதாகவும், கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய 'வனவாசம்' புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் 1949ம் ஆண்டே மாத ஊதியமாக 500 ரூபாய் சம்பாதித்ததாக கூறியிருக்கிறார். 'மணமகள்' திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதி 10,000 ரூபாய் பெற்றதாகவும், 'இருவர் உள்ளம்' திரைப்படத்திற்காக 20,000 ரூபாயை பெற்றதாகவும் கருணாநிதி கூறி இருக்கிறார். அப்படி என்றால் கருணாநிதி எந்த ஆண்டிலிருந்து வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து கொண்டு வருகிறார்? முதன் முதலில் வருமான வரி தாக்கல் செய்த போது அவருடைய ஆண்டு வருமானம் என்ன? அப்போது எவ்வளவு வருமான வரி கட்டினார்? ஆண்டுதோறும் செலுத்திய வருமான வரி எவ்வளவு? என்பதை முதலில் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுடைய வீடுகளை விட வசதி குறைவான வீட்டில் எளிமையாக வாழ்ந்து வருவதாகவும், அரசு நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்றும் கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறார்.

கருணாநிதிக்கு கோபாலபுரத்திலே ஒரு வீடு, சி.ஐ.டி. காலனியில் ஒரு பங்களா; கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலினுக்கு வேளச்சேரியில் ஒரு பங்களா; சென்னை போட் கிளப்பில் ஒரு மாளிகை; பேரன் கலாநிதி மாறனுக்கு சென்னை போட் கிளப்பில் பிரம்மாண்டமான மாளிகை, பேரன் தயாநிதி மாறனுக்கு போட் கிளப்பில் மிகப் பெரிய பங்களா, மகள் செல்விக்கு பெங்களூரில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் மாளிகைகள், பண்ணை வீடுகள்; தென் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 25க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள், நாளிதழ்கள், வார இதழ்கள், பேரன் பெயரில் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம், சன் ஏர்லைன்ஸ்,

மு.க. அழகிரிக்கு மதுரையில் பல ஏக்கர் நிலங்கள், பண்ணை வீடுகள்; வர்த்தக பலமாடி கட்டடங்கள்; பொறியியல் கல்லூரி; மு.க. தமிழரசு, மு.க. முத்து, கனிமொழி என அனைவரும் மாடமாளிகைகளில் வாழ்ந்து கொண்டு மக்கள் சொத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர்.

பேரன்கள், பேத்திகள் உட்பட, கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனி ஆடம்பர மாளிகைகளும் ஏராளமான அசையா சொத்துக்களும் உள்ளன.

கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து சினிமாத் துறையையே கபளீகரம் செய்துவிட்டனர். தன்னுடைய கோபாலபுரத்தின் பின் பகுதியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 700 சதுர அடி நிலத்தை கருணாநிதி ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்.

டாடா நிறுவனம் கருணாநிதியின் துணைவிக்கு ரூ. 300 கோடி மதிப்பில் மிகப் பெரிய மாளிகை கட்டித் தர இருப்பதாக நீரா ராடியா- ராசாத்தி உரையாடல்களில் இருந்து தெரிய வருகிறது.

செல்வி மற்றும் ஸ்டாலின் மூலமாக ரூ. 600 கோடியை தயாளு பெற்றுக் கொண்டுதான் தயாநிதி மாறனுக்கு மந்திரி பதவியை கொடுத்ததாக அதே நீரா ராடியா உரையாடல்கள் தெரிவிக்கின்றன.

உண்மை நிலை இவ்வாறிருக்க, கருணாநிதி தன்னை யோக்கியர் போல சித்தரித்துக் கொண்டிருப்பது எள்ளி நகையாடத்தக்கது.

கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம், சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் ரூ. 100 கோடி தரப்பட்டதாகவும், அதில் ரூ. 22 கோடி அளவிற்கு வருமான வரி கட்டியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். பத்திரிகை எரிப்பு சம்பவத்திற்கு பிறகு, 200ம் ஆண்டு இறுதியில், 'முழு' தொகை கருணாநிதிக்கு தரப்பட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியானது.

அதனையடுத்து 'கண்கள் பனித்தன, இதயம் இனித்தது' என்று கருணாநிதியும் அறிவித்தார். அதற்கு வருமான வரி கட்டியதாக கருணாநிதி அறிவிக்கவில்லையே?.

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி கருணாநிதியின் ஆட்சி. வீராணம் ஊழல், பூச்சிகொல்லி மருந்து ஊழல், மஸ்டர் ரோல் ஊழல், மணல் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல், கள்ள லாட்டரி சீட்டு விற்பனை என அனைத்திற்கும் மூலக் காரணமானவர் கருணாநிதி. விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர் என்று சர்க்காரியா கமிஷனிடம் சான்றிதழ் பெற்றவர்.

இப்படி இருக்கும் கருணாநிதி, லஞ்சம், ஊழல் ஆகியவற்றைப் பொறுத்தவரை தான் ஒரு நெருப்பு என்று கூறியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. பஞ்சுப் பொதியிலே தீப்பொறி பட்டால் எப்படி தீப்பிடித்துக் கொள்ளுமோ அது போல, தன்னிடம் உள்ள ஊழலை உலகம் முழுவதும் பரப்புவதில் தான் ஒரு நெருப்பு என்ற அர்த்தத்தில் கூறி இருக்கிறார் போலும்!.

பொருளாதாரம், விஞ்ஞானம், இலக்கியம், சமாதானம் போன்றவற்றிற்காக நோபல் பரிசு கொடுக்கப்படுகிறது. சிறந்த நகைச்சுவைக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டால், அந்தப் பரிசுக்குத் தகுதியானவர் கருணாநிதி தான். அந்த அளவுக்கு 'கணக்கு காட்டுகிறேன்; கண்ணுடையோர் காண' என்ற தலைப்பில் வெளி வந்துள்ள கருணாநிதியின் அறிக்கையை படித்து தமிழக மக்கள் விலா எலும்பு வலிக்க சிரித்து உடல் வலி வந்தது தான் மிச்சம்!.

தனது 60 ஆண்டுகால பொது வாழ்வில், ஏழை மக்களை ஏமாற்றி, 'தன்' குடும்ப மக்களை ஏற்றிவிட்டிருக்கும் கருணாநிதி, ஆட்சி முடியும் தருவாயில் பொய்க் கணக்கை காட்டி மீண்டும் மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்.

கருணாநிதியின் பொய்க் கணக்கிற்கு பலமான பதிலடி கொடுக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்.

இவ்வாறு தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Read more...

மாவீரர் நாள் - 2010 - வைகோ பேச்சு வீடியோ

Vaiko Pictures, Images and Photos

சென்னையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பழ.நெடுமாறன் அய்யா தலைமையில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வுகள் கடைபிடிக்கப்பட்டன. நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் பலர் பங்கேற்றனர். மக்கள் அலையென திரண்டு அகவணக்கம் செலுத்தினர்.

ltte flag Pictures, Images and Photos

Fire GIF Pictures, Images and Photos










CAPTAIN PRABAKARAN Pictures, Images and Photos

Read more...

மாவீரர் நாள் - 2010

விடுதலைப் புலிகளின் முதல் களப்பலி!



தேர்ந்தெடுக்கப்படும் போராளிகளுக்குப் பயிற்சியளிக்க வவுனியா காட்டுப்பகுதியில் ஓர் இடத்தைத் தேர்வு செய்து, அந்த இடத்துக்குப் “பூந்தோட்டம்’ என்று பெயர் வைக்கப்பட்டது. குடும்பத்தைத் துறத்தல், புகை மற்றும் மதுவைத் தொடாதிருத்தல், ரகசியம் காத்தல் உள்ளிட்ட விதிகளுக்குட்பட்ட போராளிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

பல்வேறு வகையான துப்பாக்கிகள், ஏ.கே.47 வகைத் துப்பாக்கிகள், சிறு -குறு துப்பாக்கிகள் போன்றவற்றை இயக்குவது, ராக்கெட் மூலம் குண்டு செலுத்துவது, நிலக்கண்ணி வெடிகளை வைப்பது, வெடிக்கச் செய்வது, எறிகுண்டுகளை வீசுவது உள்ளிட்ட பயிற்சிகள் இங்கு அளிக்கப்பட்டன.

“புலிகளின் பயிற்சி முகாம்களில் போர்க்குரல், கைத்துப்பாக்கியால் சுடுவது எப்படி, உயிர் பாதுகாப்பு, நீர் அடியில் நீச்சல், குண்டுவீச்சிலிருந்து தப்புவது எப்படி?, போரில் கையாளப்படவேண்டிய முறைகள் மற்றும் ஒழுக்க விதிகள் எனப் பல்வேறு தலைப்புகளில் நூல்களைப் பார்த்தேன். போர் முறைகள் பற்றி ஆங்கிலத்தில்தான் நூல்கள் உண்டு. ஆனால் தமிழில் முதன்முதலாக புலிகளின் முகாமில்தான் இதுபோன்ற நூல்களைப் பார்த்தேன்’ என்று பழ.நெடுமாறன் தான் எழுதியுள்ள “ஈழப் போர்முனையில் புலிகளுடன்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அந் நூலில் அவர் மேலும், “போராட்ட வரலாறு சம்பந்தப்பட்ட நூல்களையும் அங்கு பார்த்தேன். அதில் ஒன்று, “தன்பிரீன் தொடரும் பயணம்’ என்ற நூல் ஆகும். அந்த நூலை எழுதியவர் எழுத்தாளர் கல்கியின் நண்பர் ப.ராமஸ்வாமி. அவர் 1932-34-இல் சிறையில் இருந்தபோது அயர்லாந்து போராட்ட வரலாற்றைத் தமிழில் எழுதினார். அரை நூற்றாண்டுக்குப் பிறகு தமிழீழத்தில் போராளிகளுக்கு இந்நூல் உத்வேகம் ஊட்டுகிறது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வகையான முதல் படையணியில் கிட்டு, சங்கர், பண்டிதர், செல்லக்கிளி, சுப்பையா, பொன்னம்மான் உள்ளிட்டோரும், இரண்டாவது அணியில் சீலன், புலேந்திரன், சந்தோஷம், ரஞ்சன் ஆகியோரும் மூன்றாவது அணியில் பொட்டு, விக்டர், பஷீர்காக்கா, லிங்கம், கணேஷ், அருணா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

புலிகள் தங்களுக்கு வேண்டிய ஆயுதங்களைத் தாக்குதல் மூலமே பெற்றனர். இயக்கத்தில் ஏராளமான பேர் சேரவும் ஆயுதத் தேவையும் அதிகரித்தது. அந்தச் சமயத்தில் ஆயுதங்கள் வெளிநாடுகளிலிருந்து வாங்கப்பட்டன. இதற்கான நிதி வசதியை மக்களே அளித்தனர்.

தமிழர் பகுதிகளில் உள்ள குடும்பத்தினர், ஒரு குடும்பத்துக்கு ஒரு பவுன் தங்கம் வீதம் வழங்கினர். இதுபற்றி அறிந்த சிங்கள அரசு, அடகுக்கடை மற்றும் வங்கிகளில் அவசரத்தேவைக்காக வைத்த நகைகள் அனைத்தையும் கொழும்பில் மத்திய கிளைக்கு எடுத்துச் சென்றது. நகையை மீட்கச் சென்றபோதுதான் இந்த உண்மை மக்களுக்குத் தெரியவந்தது.

இதன் காரணமாக மக்கள் அடகுக்கடை மற்றும் வங்கிகள் முன்பாக பெரும் போராட்டங்களை நடத்தினர். இவ்வகையான 300 கோடி மதிப்பிலான தங்கநகைகள், கொழும்பில் முடங்கியிருந்தது. அதில் பெரும்பாலான நகைகள், சம்பந்தப்பட்டவர்கள் அகதிகளாக நாட்டை விட்டுச்சென்றுவிட்டதால் இலங்கை அரசின் கஜானாவில் சேர்க்கப்பட்டுவிட்டது.

ஆயுதம் மற்றும் பயிற்சி செலவுகளுக்காக, தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். பெருமளவு நிதியளித்ததாக ஆன்டன் பாலசிங்கம் தனது “விடுதலை’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேபி சுப்ரமணியம் (இளங்குமரன்), வீரச்சாவு எய்திய கர்னல் சங்கர், “விடுதலைப்புலிகள்’ என்னும் பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்த மு.நித்தியானந்தன் ஆகியோருடன் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை அவரின் ராமாவரம் தோட்டத்தில் சந்தித்தபோது ஆயிரம் போராளிகளுக்கு பயிற்சியளிக்க ஒரு கோடியும், அந்த ஆயிரம் பேருக்கு ஆயுதம் தரிக்க இன்னொரு கோடியுமாக இரண்டு கோடி தேவைப்படும் என நிதியுதவி கேட்டதாகவும், அவரும் மறுநாள் வரும்படி கூறியதாகவும் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பாலசிங்கம் அந்நூலில் குறிப்பிட்டுள்ளதாவது: “நள்ளிரவில் கோடிக்கான பணத்துடன் திருவான்மியூரில் உள்ள அலுவலகத்துக்குச் செல்வதில் சிக்கல்கள் எழலாம். காவல்துறையினர் மடக்கினால் பிரச்னைகள் வரலாம். எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைக் கூறினோம். பாதுகாப்புக்கு ஒழுங்கு செய்வதாகக் கூறி, யாரிடமோ தொலைபேசியில் பேசினார். இரு ஜீப் வண்டிகளில் ஆயுதம் தரித்த காவல்துறையினர் அங்கு வந்தனர். எமது வாகனத்துக்கு முன்னும் பின்னுமாக ஆயுதம் தரித்த காவல்துறையினர் வர திருவான்மியூரை அடைந்தோம். எமது வீட்டில் தலைவர் பிரபாகரன், தமிழேந்தி, கர்னல் சங்கர் மற்றும் போராளிகள் காத்திருந்தனர். நூறு ரூபாய் நோட்டுகளை எண்ணி முடிக்க விடிந்துவிட்டது’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பணத்தைக்கொண்டு ஆயிரம் போராளிகளுக்குப் பயிற்சியளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பில் முதன்முதலில் களப்பலியானவர் சங்கர். 1982-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி யாழ்ப்பாணத்திலிருந்து பதினாறு கல் தொலைவில் உள்ள நெல்லியடியில் ரோந்து சென்று கொண்டிருந்த போலீஸ் படையின் மீது கொரில்லாப் படைகள் தாக்குதல் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலில் நான்கு போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், மூன்று போலீசார் படுகாயமுற்றனர். போலீஸ் படையினரிடமிருந்து பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்தத் தாக்குதலை அடுத்து சங்கரை வேட்டையாடியது ராணுவம். அவர் பதுங்கியிருந்த வீட்டை ராணுவம் சுற்றிவளைத்துத் தாக்கியது. நேருக்கு நேராக நடந்த துப்பாக்கிச் சண்டையில் சங்கரின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. ரத்தம் பீறிட்ட நிலையிலும் மூன்று கிலோமீட்டர் தூரம் ஓடித் தன் நண்பர்களிடம் துப்பாக்கியை ஒப்படைத்துவிட்டு மயங்கி விழுந்தார்.

பின்னர் மதுரைக்குக் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். தமிழ்நாட்டில் நடந்த பயிற்சியை ஒழுங்குபடுத்துவதற்காக அப்போது தமிழகத்திலிருந்த பிரபாகரன், உடனே மதுரை விரைந்தார். சங்கரின் கைகளைப் பற்றிக்கொண்டு திகைத்து நின்றார். கடைசி நிமிடம், பிரபாகரன் கைகளைச் சங்கர் என்கிற சத்தியநாதன் பற்றியபடியே இருக்க -அவருடைய உயிர் பிரிந்தது.

தனது இயக்கப் போராளியை, உயிர் நண்பனை இழந்த துக்கத்தில், “என் கைகளில் உயிர் பிரிந்ததை இன்றுதான் காண்கிறேன்’ என்று கண்ணீர் சிந்தினார் பிரபாகரன். அந்த சங்கர் உயிர்துறந்த நவம்பர் 27-ஆம் நாள் மாவீரர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. “நடுகல்’ வழிபாட்டு முறையும் அப்போதுதான் வந்தது.

Read more...

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன் கைது

புதுச்சேரியில் இருந்து வெளிநாட்டுக்கு ஈழ அகதிகளை அழைத்து சென்றது தொடர்பாக வீராம்பட்டினம் திமுக கவுன்சிலர் சக்திவேல், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், சிலோன் மணி, படகு ஓட்டுநர் ஜீவா ஆகியோர் புதுச்சேரி குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல்துறையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் பயன்படுத்தியப் படகு காரைக்காலில் நிறுத்தப்பட்டது. அதில் இருந்த டீசல், கேஸ் சிலிண்டர், அடுப்பு உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்று, தடயங்களை அழித்தது தொடர்பாக காரைக்கால் மாவட்ட பாமகச் செயலர் தேவமணியும் பின்னர் கைது செய்யப்பட்டார்.பின்னர் 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டு, நிபந்தனை ஜாமீனில், வெளியில் வந்து, தினமும் குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர்.





இந்நிலையில் காரைக்கால் மாவட்ட பா.ம.க. செயலாளர் தேவமணியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து பெரியார் திராவிடர் கழக புதுச்சேரி தலைவர் லோகு.அய்யப்பன் மற்றும் வீராம்பட்டினம் கவுன்சிலர் சக்திவேல் ஆகியோர் இன்று மாலை குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல்நிலையத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரியில் பெரியார் திராவிடர் கழகத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்!


அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கும் நோக்கத்தோடு புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை கண்டித்தும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட மூவரையும் உடனடியாக விடுதலை செய்ய கோரியும் இன்று காலை 10 மணியளவில் பெரியார் திராவிடர் கழகத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இந்த மறியலில் ம.தி.மு.க., பார்வர்டு பிளாக், செந்தமிழர் இயக்கம், தமிழர் தேசிய இயக்கம், நாம் தமிழர் இயக்கம், மண்ணின் மைந்தர்கள் நல உரிமைக் கழகம், அம்பேத்கர் தொண்டர்படை, பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம், லோக்ஜனசக்தி, புரட்சிப்பாவலர் இலக்கியப் பாசறை, புதுவைக்குயில் பாசறை, செம்படுகை நன்னீரகம், தந்தை பெரியார் பாசறை, மாணவர் நல அறக்கட்டளை, மீனவர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தோழமை அமைப்பினரும் திரளாக கலந்துகொண்டனர். இதனால் கடலூர், விழுப்புரம், திண்டிவனம் ஆகிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 200 பெண்கள் உள்ளிட்ட 500 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Read more...

Read more...

ராஜா டிஸ்மிஸ் - வைகோ

அமைச்சர் ராஜா உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் டிஸ்மிஸ் செய்யப்படுவார் என்று கோபாலபுரத்திற்கு தகவல் வந்ததால்தான் ராஜாவை ராஜினாமா செய்யச் சொல்லியுள்ளது திமுக மேலிடம் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

ராஜா விலகல் குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:


ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஆ.ராசா வரலாறு காணாத இமாலய ஊழலில் சிக்கி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளார்.

14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு வரையிலும், ராஜினாமா என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று பேசினார் இந்த அமைச்சர். எந்த ஊழலும் நடைபெறவில்லை என்றும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது இல்லை என்றும், முதல்வர் கருணாநிதி [^] அறிக்கை வெளியிட்டார்.

அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா செய்யாவிடில், டிஸ்மிஸ் செய்ய வேண்டி இருக்கும் என்ற எச்சரிக்கை கோபாலபுரத்துக்கு வந்ததன் விளைவாகத்தான் அமைச்சர் ஆ.ராசா பதவியை விட்டு விலக வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

அலைவரிசை ஒதுக்கீட்டில், ரூ 1 லட்சத்து 76 ஆயிரத்து 381 கோடி கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு எடுத்த முடிவுகளையே தான் பின்பற்றியதாக, ஆ.ராசா காரணம் சொல்லுகிறார்.

ஆனால், 2001 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட சந்தை மதிப்பின் அடிப்படையிலேயே, 2008, 2009 ஆம் ஆண்டுகளில், ஒதுக்கீடு செய்ததன் மர்மம் என்ன? என்ற கேள்வியை பாரதீய ஜனதா கட்சி எழுப்புகிறது.

யூனிடெக், ஸ்வான் ஆகிய நிறுவனங்கள் திடீரென உருவான நிறுவனங்கள் ஆகும். ஒரு அறிவிப்புப் பலகையை மட்டும் ஒரு அலுவலகத்தில் மாட்டிக்கொண்டு, தங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்ட கம்பெனிகளுக்கு, அலைவரிசை உரிமத்தை அமைச்சர் ராசா வழங்கினார்.

அந்த உரிமத்தைப் பெற்ற ஒரு மாதத்துக்குள் பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கு அந்த உரிமத்தை அந்த நிறுவனங்கள் விற்றுக் கொள்ளை அடித்து விட்டன.

இந்த இமாலய ஊழல் குறித்து உச்சநீதிமன்றம் [^] மத்திய அரசு [^] க்கு கண்டனம் தெரிவித்தது. இன்று 15ஆம் தேதி அதுகுறித்த விசாரணை நடப்பதால் மேலும் பலத்த கண்டனம் வரக்கூடும் என்ற பயத்தால் வேறு வழி இன்றி காங்கிரஸ் அரசு ராசாவை பதவியில் இருந்து வெளியேற்றுமாறு தி.மு.க.வுக்கு நிர்பந்தம் தந்தது.

1,76,000 கோடியும், ஆ.ராசா குடும்பத்துக்கே போய்ச் சேர்ந்து இருக்க முடியாது. இந்தக் கொள்ளைப் பணத்தின் உண்மைப் பயனாளிகள் யார்? பங்கு போட்டவர்கள் யார்? என்ற கேள்விகள் விஸ்வரூபம் எடுத்து உள்ளன. இந்தக் கொள்ளையில் தி.மு.கழகத்தின் பெரும்புள்ளிகளுக்குப் பங்கு உண்டு என்பதுதான் உண்மையாக இருக்க முடியும்.

1987ல், போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் பிரச்னை நாடாளுமன்றத்தில் வெடித்தபோது, நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்ததில் தி.மு.க.வுக்கும் பங்கு உண்டு. தி.மு.க. ஊர்வலங்களில் போபர்ஸ் பீரங்கி வடிவ வண்டிகளைக் கொண்டு சென்றதை கருணாநிதி மறந்துவிட்டார் போலும்.

இந்திய வரலாறு காணாத ஸ்பெக்ட்ரம் ஊழலில், தி.மு.க. அமைச்சர் திரட்டிய பணம்தான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் செலவழிக்கப்பட்டது. வரப்போகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கும் அந்தப் பணத்தைத்தான் தி.மு.க. வைத்து இருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைப்படி, நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும். ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி முன்னாள் அமைச்சர் ராசா மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை [^] மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

Read more...

ம.தி.மு.க. வரலாற்றுப்பதிவுகள்

வைகோ பயோடேட்டா
பெயர் : வையாபுரி கோபால்சாமி (வை.கோ)
வயது : 65
தந்தை : வையாபுரி
தாய் : மாரியம்மாள்
கல்வி : எம்.ஏ. பி.எல்.,
பிறந்த கிராமம் : கலிங்கப்பட்டி (நெல்லை மாவட்டம்)
சகோதரிகள் : மூன்று பேர்
சகோதரர் : ரவிச்சந்திரன் (இளையவர்)
மனைவி : திருமதி. ரேணுகாதேவி
மகன் : துரை வையாபுரி
மகள்கள் : ராஜலெட்சுமி, கண்ணகி
பிடித்த விளையாட்டு : கால்பந்து
பொழுதுபோக்கு : நல்ல திரைப்படங்கள் பார்ப்பது, பழைய பாடல்கள் கேட்பது, புத்தகங்கள் வாசிப்பது.
பிடித்த நடிகர் : சிவாஜி கணேசன்
வகித்த பதவிகள் : 25ம் வயதிலேயே (1970) கலிங்கப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர், பிறகு குருவிகுளம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர்.
_ திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டுறவு வங்கித் தலைவர்.
_ தி.மு.க. மாநில, மாணவரணித் துணைச் செயலாளர்.
- 1976 ஜனவரி 31 முதல் 77 பிப்ரவரி வரை எமர்ஜென்சி காலத்தில் பாளையங்கோட்டை, சேலம் சிறை வாசம்.
- தி.மு.க. தேர்தல் பணிக் குழு செயலாளர்.
- தி.மு.க. தொண்டர் அணியை உருவாக்கினார்.
1978 - முதன் முதலில் மாநிலங்களவை உறுப்பினர்.
1984 - இரண்டாவது முறை
1990 - மூன்றாவது முறை. மொத்தத்தில் 18 ஆண்டுகள்.
1994 - முதல் ம.தி.மு.க. பொதுச் செயலாளர்.
1998 - பிப்ரவரி - சிவகாசி தொகுதி எம்.பி.
1999 – அக்டோபர் – இரண்டாவது முறை சிவகாசி தொகுதி எம்.பி.
அரசியலுக்கு முன் வழக்கறிஞர்
சட்டக் கல்வி முடித்ததும் – சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகப் பிறகு பதவி வகித்த ரத்தினவேல்பாண்டியனிடம் ஜூனியராக வேலை பார்த்தார் வைகோ. பணிபுரிந்த இடம் – திருநெல்வேலி.
‘வைகோ’ ஆனார்!
‘வை.கோபால்சாமி என்ற பெயர் இனிமேல் ‘வைகோ’ (Vaiko) என்றுதான் அழைக்கப்படும்’ என்று 1998 ஜனவரி 14ம் தேதி இந்திய அரசிதழில் செய்தி வெளியானது. தன் பெயரை ‘வைகோ’ என்று மாற்றும்படி வைகோ ஏற்கனவே விண்ணப்பித்திருந்தார்.
வை.கோ. எழுதியுள்ள புத்தகங்கள்
கனவு நனவாகியது
இதயச் சிறகுகள்
வீரத்தின் புன்னகை
பரவட்டும் தமிழிசை
வெல்வோம்
நாதியற்றவனா தமிழன்?
சங்கநாதம்
அண்ணாவின் அகல்விளக்கு
Clarion Call
வை.கோவின் தொகுதி முகம்
சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வைகோ அந்தத் தொகுதியை ‘மாதிரி தொகுதி’ என்கிற அளவுக்கு மாற்றியிருப்பதாகச் சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
தொகுதி முழுக்க போலியோவினால் பாதிக்கப் பட்டவர்களுக்குத் தானே முன் நின்று நிவாரண முகாம்கள் நடத்தி ஆபரேஷன்கள் நடக்க உதவியிருக்கிறார் வைகோ. கோவில்பட்டியில் மட்டும் மூன்று மேம்பாலங்கள் கட்ட உதவி. மருத்துவ, பொறியியல் கல்லூரிகளுக்காக நுழைவுத் தேர்வு எழுத ஐந்து இலவச மையங்களைத் துவக்கியிருக்கிறார்.
சங்கரன்கோவிலில் உள்ளாறு நீர்ப்பாசனத் திட்டம்.
கட்டபொம்மன், கல்கி, ஓமந்தூரார், குமாரசாமிராஜா, இரட்டைமலை சீனிவாசன், மருதுபாண்டியர், பூலித்தேவன், வீரன் அழகுமுத்துக்கோன் ஆகியோருக்கு அஞ்சல் தலை வெளியிட ஏற்பாடு.
தொகுதி நிதியைத் தானே நேரடியாகப் போய் பள்ளிக் கூடங்கள், குடிநீர்த் திட்டங்களுக்கான தேவைகளை ஆய்வு செய்து நிறைவேற்றியிருக்கிறார்.
சிவகாசியில் தொகுதிப் பிரச்னைகளைக் கவனிக்க மட்டும் கணிப்பொறி வசதியுடன், மூன்று உதவியாளர்களுடன் அலுவலகம்.
யாழ்ப்பாணத்துக்கு ரகசியப் பயணம்



பிரபாகரனுடன் வைகோ
தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த வைகோ, 1989ம் ஆண்டு யாருக்கும் தெரியாமல் யாழ்ப்பாணத்திற்கு ரகசியப் பயணம் மேற்கொண்டார்.
அச்சமயத்தில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பும்போது இந்திய அமைதிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டார். பின்னர் வைகோ விடுவிக்கப்பட்டார்.
வைகோவைக் காப்பாற்ற படகிலிருந்த விடுதலைப்புலிகள் போராடினர். வைகோவைக் காப்பாற்றும் போராட்டத்தில் சரத் என்கிற பீட்டர் கென்னடி மரணமடைந்தார்.
தனக்காக உயிர் துறந்த பீட்டர் கென்னடியின் புகைப்படத்தை தன் வீட்டின் வரவேற்பறையில் மாட்டி வைத்துள்ளார் வைகோ. அண்டை நாட்டிற்கு பாஸ்போர்ட், விசா இல்லாமல் பயணம் செய்தது தொடர்பாக வைகோ, கட்சித் தலைவர் கலைஞரிடம் மன்னிப்புக் கோரினார்.
இந்நிலையில் விடுதலைப்புலிகளுக்கும் தி.மு.க.வுக்கும் இடையே உறவு இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.
சர்ச்சையைக் கிளப்பிய சந்திப்பு
2000ம் ஆண்டுவாக்கில் இந்திய அரசின் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கலந்து கொண்டார் வைகோ. லண்டன் வழியாக இந்தியா திரும்பும்போது லண்டனில் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்தைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்த வாழப்பாடி ராமமூர்த்தி, வைகோ பதவி விலக வேண்டும் என்று அப்போது கோரினார்.
ஒரு உறையில் இரண்டு வாள்கள்



தமிழீழ ஆதரவுக் கூட்டத்தில் கலைஞருடன் வைகோ
“விடுதலைப் புலிகளால் என் உயிருக்கு ஆபத்து.’’
“வை. கோபால்சாமிக்கு சாதகமாக புலிகள் என்னைக் கொல்ல நினைக்கிறார்கள்.’’
“மத்திய உளவுப்பிரிவு எனக்கு அனுப்பிய தகவல் இது.’’
“தி.மு.க. தலைவர் கலைஞர் செய்தியாளர்கள் கூட்டத்தில் இப்படிச் சொன்னபோது பலருக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. பலரும் இதை நம்பத் தயாராக இல்லை. அப்போதே தி.மு.க.வில் இன்னொரு பிளவுக்கு அஸ்திவாரம் போடப்பட்டுவிட்டது. இது நடந்தது 1993, அக்டோபர் 3ம் தேதி.
தி.மு.கவின் போர்வாள்
தி.மு.க.வில் அதுவரை வைகோ படுவேகமாக வளரும் இளம் தலைவராக இருந்தார். அவர் பேசும் கூட்டங்களிலெல்லாம், வைகோவின் இடிமுழக்கம் போன்ற பேச்சைக் கேட்க ஏராளமான தொண்டர்கள் கூடினர். “தி.மு.க.வின் போர்வாள்’’ என்றே கலைஞர் பெருமிதத்துடன் வைகோவைக் குறிப்பிட்டு வந்தார். வைகோ முறையான அனுமதியில்லாமல் இலங்கை சென்று விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து வந்ததால் பிரச்னை ஏற்பட்டபோதும் கூட கலைஞர் அவரை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை. பின்னர் ஏன் இந்த மாற்றம்? எதற்காக வைகோவினால் தன் உயிருக்கு ஆபத்து என்று கலைஞர் சொன்னார்?
வாரிசு அரசியல்
இதற்குக் காரணம் தி.மு.க.வில் அடுத்த தலைவர் யார் என்று எழுந்த சிக்கல்தான். கலைஞர் தன் மகன் ஸ்டாலினை வளர்த்து விட முயல்கிறார் என்றும், வாரிசு அரசியல் நடத்துகிறார் என்றும் வைகோவின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.
‘தலைவரின் உயிருக்கு உலைவைக்கும் வைகோ.வை நீக்க வேண்டும்’ என்றும் ‘வைகோ நிரபராதி’ என்றும் கட்சிக்குள் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.
வைகோ விவகாரத்தை ஆலோசிக்க 93 அக்டோபர் 5ம் தேதி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. மொத்தம் 31 பேர் கலந்து கொண்டனர். அதில் 9 மாவட்டச் செயலாளர்கள் வைகோவுக்கு ஆதரவாக இருந்தனர். கட்சி உடைந்தது.
“கழகத்தின் அடுத்த தலைவர் பதவிக்கு வைகோ முயற்சி செய்கிறார்’’ என்றார் கலைஞர். (8.10.1993)
“ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது’’ -_ இதுவும் கலைஞர்தான் (16.10.1993). இந்த பேச்சுகளுக்கெல்லாம் வைகோவும் பதிலளித்துக் கொண்டிருந்தார். இதனால் பிளவு பெரிதாகிக் கொண்டே போனது.
“சங்கொலி’’
ம.தி.மு.கவின் கட்சிப் பத்திரிகையான ‘சங்கொலி’ வார இதழ் தொடங்கப்பட்டது. இதன் முதல் இதழ் 2.2.96ல் வெளியானது. ஆசிரியராக வைகோவும், பொறுப்பாசிரியராக க. திருநாவுக்கரசும் பொறுப்பேற்றார்கள். சங்கொலி, வெளியீட்டு விழா ஜனவரி 26, 1996ல் சென்னையில் நடந்தது. மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சங்கரய்யா, ‘இந்து’ ராம், நடிகர்கள் சத்யராஜ், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மலர்ந்தது ம.தி.மு.க.
இனி கலைஞர் எனக்குத் தலைவர் இல்லை என்று வைகோ பகிரங்கமாக அறிவித்தார். வைகோவுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் தி.மு.க. தொண்டர்களிடமிருந்து குரல்கள்; ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள். இதன் உச்சக்கட்டமாக வைகோவை ஆதரித்து ஐந்து தொண்டர்கள் தீக்குளித்து இறந்தனர்.
நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், கோவை பாலன், உப்பிலியாபுரம் வீரப்பன் ஆகிய ஐந்து பேர் உயிரிழந்த பிறகு கலைஞருக்கும் வைகோவுக்கும் ஏற்பட்ட பிளவு நிரந்தரமாகிவிட்டது. தீக்குளித்து இறந்தவர்களின் இறுதிச் சடங்கில் வைகோ பேசிய பேச்சுக்களில் தீப்பிழம்பு!
இந்நிலையில் 29.12.93 அன்று தி.மு.க. பொதுக்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்குப் பதிலடி வைகோ தரப்பிலிருந்து உடனே வந்தது. தி.மு.க. பொதுக்குழு கூடுவதற்கு முன்பே 16.12.93 அன்று வைகோவின் ஆதரவாளர்கள் திருச்சியில் பொதுக்குழுவைக் கூட்டினர்.
கலைஞர், பேராசிரியர் அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி, சாதிக் பாட்சா ஆகியோரைக் கட்சியிலிருந்து நீக்குவதாக திருச்சியில் வைகோ ஆதரவாளர்கள் அறிவித்தனர்.
திருச்சியில் பொதுக்குழு
திருச்சியில் நடந்த பொதுக்குழுவில் 447 உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகவும், மொத்தம் உள்ள 825 உறுப்பினர்களில் இது பெரும்பான்மை என்றும் வைகோ அணி அறிவித்தது.
கட்சியின் அமைப்பு முறையும் அண்ணா காலத்தில் இருந்தது போல் மாற்றியமைக்கப்பட்டது. பொதுச் செயலாளராக வைகோ, அவைத்தலைவராக எல். கணேசன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். (அவைத் தலைவர் பதவியை உருவாக்கியவர் அண்ணாதான்.)
இதன்பிறகு தி.மு.க. பொதுக்குழு 29ம் தேதி சென்னையில் கூடியது. இதில் 903 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகவும், மொத்த உறுப்பினர்கள் 1112 பேர் என்றும் கூறப்பட்டது. இரண்டு அணிகளும் பெரும்பான்மை வலு தங்களிடம் இருக்கிறது என்று கூறியதால் வைகோ அணியை திமுக (கோ) அணி என்றும் கலைஞர் அணியை திமுக(க) அணி என்றும் பத்திரிகைகள் குறிப்பிட்டன.
மயிலாப்பூர், பெருந்துறை ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் வந்தது. எந்தச் சின்னத்தைப் பயன்படுத்துவது என்ற சிக்கல் வரவே - உதயசூரியன் சின்னம் கேட்டு வைகோ தேர்தல் ஆணையத்திடம் சென்றார். ஆனால், கறுப்பு-சிவப்புக் கொடியும், உதயசூரியன் சின்னமும் கலைஞர் தலைமையிலான தி.மு.க.வுக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.
பிறகு _
வைகோ அணி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் மாற்றிக் கொண்டது. தி.மு.க. கொடியின் கறுப்பு வண்ணத்திற்குமேல் இன்னொரு சிவப்பைச் சேர்த்து தங்கள் கொடியாக்கிக் கொண்டனர். மயிலாப்பூர் பெருந்துறை இடைத்தேர்தலில் குடை சின்னம் கிடைத்தது.
இணைந்த இரு துருவங்கள்



ஜனநாயக மக்கள் கூட்டணியின் பொதுக்கூட்டம்
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி முடிவடைந்து 1996ல் சட்டமன்றத் தேர்தல் வந்தது. அந்தத் தேர்தலில் மூன்று அணிகள் போட்டியிட்டன.
அ.தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி.
தி.மு.க., த.மா.கா., சி.பி.ஐ. கூட்டணி.
ம.தி.முக., சி.பி.ஐ(எம்)., ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மக்கள் ஜனநாயகக் கூட்டணி.
ம.தி.மு.க. மதுரையில் “தேர்தல் சிறப்பு மாநாடு’’ நடத்தியது. இம்மாநாட்டில் ஹர்கிஷன்சிங் சுர்ஜித், ஜி.ஏ. வடிவேலு போன்ற கூட்டணித் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
அதேசமயம் புதுவையிலும் தேர்தல் வந்தது. ம.தி.மு.க. அங்கும் தேர்தலில் போட்டியிட தயார்படுத்திக் கொண்டது.
தமிழகத்தில் மொத்தம் 179 சட்டமன்றத் தொகுதிகளிலும், 23 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ம.தி.மு.க. போட்டியிட்டது தேர்தல் சின்னம் குடை.
கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியிலும், சிவகாசி நாடாளுமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டார். தேர்தலில் ம.தி.மு.க. கூட்டணி தோல்வி அடைந்தது. 93ம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.முக. கணிசமான இடங்களைப் பிடித்தது. உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த நம்பிக்கையுடன் அ.தி.மு.க.வுடன் ம.தி.மு.க. கூட்டணி சேர்ந்தது. 98ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 5 இடங்களில் போட்டியிட்டு 3 இடங்களில் ம.தி.முக. வென்றது. வாஜ்பாய் தலைமையில் அமைந்த கூட்டணி ஆட்சியில் அ.தி.மு.க இடம் பெற்றது. ம.தி.முக. வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்தது.
பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசுக்கு ஜெயலலிதா விதித்த சில நிபந்தனைகளால் மத்திய ஆட்சியின் நிலைத்தன்மை கேள்விக்குறியானது. இந்தச் சமயத்தில் ம.தி.மு.க. தன் அழுத்தமான ஆதரவை பா.ஜ.க. அரசுக்குத் தெரிவிக்க, அ.தி.மு.க.வுக்கும், ம.தி.மு.க.வுக்குமான உறவில் லேசான விரிசல்.
புகழ்பெற்ற டீ பார்ட்டி



வாஜ்பாய், கலைஞருடன் வைகோ
ஒரு புகழ்பெற்ற ‘டீ பார்ட்டி’ நிகழ்ச்சிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்துகொண்டு ஜெயலலிதா, பா.ஜ.க. அரசுக்கான தன் ஆதரவைத் திரும்பப் பெற்றார். இதனால் வாஜ்பாய் அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பில் யாரும் எதிர்பாராதவிதமாக தி.மு.க. தன் ஆதரவை பா.ஜ.கவுக்கு வழங்கியது. ம.தி.மு.க.வும் வாஜ்பாய்க்கு ஆதரவாகச் செயல்பட்டது.
ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் மத்திய அரசு கவிழ்ந்தது. பதிமூன்றே மாதங்களில் நாடு இன்னொரு தேர்தலைச் சந்திக்க நேர்ந்தது.
இந்தத் தேர்தலில் தமிழகத்தில் ஆச்சரியப்பட வைத்த அணி மாற்றம் ஏற்பட்டது. காங்கிரஸ், அ.தி.மு.க. ஒரு அணியாகவும், த.மா.கா., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மூன்றாவது அணியாகவும் தேர்தலைச் சந்தித்தன.
1999 நாடாளுமன்றத் தேர்தலில் வைகோ (சிவகாசி), செஞ்சி ராமச்சந்திரன் (திண்டிவனம்), கண்ணப்பன் (திருச்செங்கோடு), கிருஷ்ணன் (பொள்ளாச்சி) ஆகிய நான்குபேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றார்கள்.
ம.தி.மு.க. மத்திய அமைச்சர்கள்
பிரதமர் வாஜ்பாய் தலைமையில் மீண்டும் மத்திய ஆட்சி அமைந்தது. இந்த அமைச்சரவையில் ம.தி.மு.க. பங்கேற்றது. ம.தி.மு.க. பொருளாளரான கண்ணப்பன், மரபு சாரா எரிசக்தித் துறையின் தனிப்பொறுப்பு அமைச்சராகவும், ம.தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் மத்திய நிதித்துறை இணை அமைச்சராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.
தனித்துப் போட்டி
மே 10ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.மு.க.வும் பாரதிய ஜனதாவும் இருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மத்திய அமைச்சரவையில் ம.தி.மு.க. இடம் பெற்றுள்ளது. ஆனால் தனித்து இந்தத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடுகிறது.
கலைஞருக்கு வைகோ நோட்டீஸ்
என் பெயருக்கு தி.மு.க. தலைமைக் கழகத்திற்கோ அல்லது அரசின் தலைமைச் செயலகத்திற்கோ எழுதும் கடிதங்கள் உரிய நேரத்தில் என் கைக்கு கிடைக்காத காரணத்தால் தயவுசெய்து இனிமேல் கடிதம் எழுதுவோர் என் வீட்டு முகவரிக்கே எழுத வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’- முதல்வர் கலைஞர் 24.12.1997 ‘முரசொலி’யில் இப்படி அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு அரசியல் சட்ட விதிகளுக்கு எதிரானது என்று வைகோ முதல்வருக்கு வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸ் முதல்வரின் அலுவலக முகவரிக்குத்தான் அனுப்பப்பட்டது.
தாயகம் அமைந்தது
கட்சி தொடங்கி ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ம.தி.மு.க.வுக்கு ஒரு அலுவலகம் அமைக்கப்பட்டது. 141, ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர், சென்னை எனும் முகவரியில் அமைந்த அலுவலகத்திற்குத் ‘தாயகம்’ எனப் பெயரிட்டார்கள்.
96ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி ‘தாயகம்’ திறப்பு விழா நடைபெற்றது. அப்போதைய ம.தி.மு.க. அவைத் தலைவர் எல். கணேசன் தலைமை தாங்கினார். அலுவலகத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார் வைகோ.
இந்த நிகழ்ச்சியோடு பெரியார், அண்ணா பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்பட்டது.
‘எழும்’ என்பதால் எழும்பூரில் ம.தி.மு.க.



தாயகம் திறப்பு விழாவில்
இந்த இயக்கம் வீழ்ந்து விட்ட இயக்கமென்று சொன்னார்கள். இனி எழப் போவதில்லை என்று சொன்னார்கள். எழும் - வீழ்ந்த வேகத்தோடு எழும் - உறுதியுடன் எழும் - லட்சியத்துடன் எழும் - அண்ணாவின் கொள்கை காக்க எழும் - அண்ணாவின் தம்பிமார் பட்டாளத்தை அழிப்பதற்கு எந்தச் சக்தியும் இல்லையென்று கம்பீரமாக அணிவகுத்து எழும் - அப்படி எழும் என்பதற்காகத்தான் எழும்பூரிலே எங்கள் கட்டடம் எழுந்து நிற்கிறது.’’
(‘தாயகம்’ திறப்புவிழாவில் வைகோ பேசியது)
தாயகம் தூவிய பாசமலர்!



ஜெயல்லிதாவை வரவேற்கும் வைகோ
ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்திற்கு ஜெயலலிதா வந்தபோதுதான் தமிழக அரசியலில் மாபெரும் மாற்றத்துக்கான அடித்தளம் அமைந்தது. “தாயகம் உங்களைப் பாசமலர் தூவி வரவேற்கிறது’’ என்று ம.தி.மு.க.வினர் ஜெயலலிதாவை வரவேற்றனர். “தாயகத்தில் எனக்கு மகிழ்ச்சியான அன்பான வரவேற்பை ம.தி.மு.க.வினர் அளித்தனர்’’ என்று ஜெயலலிதா மகிழ்ந்தார். கடைசியில் வைகோ, மறுமலர்ச்சி தி.மு.க. - அ.தி.மு.க. இரண்டும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இயங்கும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
போராட்டப் பாதையில்..
கட்சி தொடங்கியதிலிருந்து இன்று வரை பல போராட்டங்களை ம.தி.மு.க. நடத்தியுள்ளது. அதில் சில..
ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைப் பயணம்



நடைபயணத்தின்போது தொண்டர்களுடன்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி வைகோ நடைப்பயணம் சென்றார். 14.5.97 அன்று திருவைகுண்டத்தில் தொடங்கி 16.5.97 தூத்துக்குடியில் முடிந்த இப்பயணத்தில் ஆயிரக்கணக்கில் ம.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
‘ஈழத் தமிழரைக் கொல்லாதே’ வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்



ஈழத்தமிழர் ஆதரவு பொதுக்கூட்டம்
இலங்கையில் ஈழத் தமிழர்களைச் சிங்கள ராணுவம் படுகொலை செய்வதை நிறுத்த வேண்டும்’ என்று கோரிக்கை வைத்து வைகோ தலைமையில் ம.தி.மு.க.வினர் 30.5.97 அன்று சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராக இருந்த செஞ்சி ராமச்சந்திரன், பொருளாளராக இருந்த மு. கண்ணப்பன் ஆகியோர் ஆர்ப்பாட்ட முடிவில் கண்டன உரையாற்றினர்.
தமிழக மீனவர்கள் பிரச்சினை: குஜ்ரால் - வைகோ சந்திப்பு
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதை உடனடியாக நிறுத்தக்கோரி அன்றைய இந்தியப் பிரதமர் குஜ்ராலிடம் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்தார்.
30.7.97 அன்று டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. வைகோவின் வேண்டுகோளை நிறைவேற்றுவதாக பிரதமர் உறுதியளித்தார்.
மாநில சுயாட்சி மாநாடு



மாநாட்டின்போது வைகோ
ம.தி.மு.கவின் காஞ்சிபுரம் மாவட்ட முதல் மாநாடு மாநில சுயாட்சி மாநாடாக 1999 ஜூலை 24, 25 ஆகிய நாட்களில் நடத்தப்பட்டது. தமிழக முதல்வர் கலைஞர், மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, மத்திய அமைச்சர்கள் ராமகிருஷ்ண ஹெக்டே, மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
மாநில சுயாட்சி பற்றிய ம.தி.மு.க.வின் பிரகடனத்தை அன்றைய மத்திய வர்த்தக அமைச்சர் ராமகிருஷ்ண ஹெக்டே வெளியிட்டார்.
‘தமிழக எழுச்சி மாநாடு!’
மறுமலர்ச்சி தி.மு.க.வின் ஈரோடு மாவட்ட முதல் மாநாடு தமிழக எழுச்சி மாநாடாக நடத்தப்பட்டது. அன்றைய உள்துறை அமைச்சர் அத்வானி, தமிழக முதல்வர் கலைஞர், அன்றைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அன்றைய பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், அன்றைய ஜம்மு காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா, பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், மின்துறை அமைச்சராக இருந்த மறைந்த ரங்கராஜன் குமாரமங்கலம் ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

Read more...

புலி பசித்தாலும் புல்லைத் தின்னலாமா? எந்திரன் படத்தைப் புறக்கணிக்க நாம் தயங்கலாமா? – தமிழர் பண்பாட்டு கழகம் பிரான்சு

“நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்” என்று பாடினான் அன்று எட்டயபுரம் தந்த எழுச்சிக் கவிஞன் பாரதி! வெள்ளையரின் ஆதிக்கத்தை எதிர்த்து வீறு கொண்டு எழாமல், ஆமைகளாய் ஊமைகளாய், அடிவருடிகளாய் கூனிக்குறுகிக் கிடந்த இந்தியரைப் பார்த்து இப்படித்தான் ஏக்கப் பெருமூச்சு விட்டான் அந்தப் பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதி.

இன்று விடுதலை பெற்று 64 ஆண்டுகள் ஆன பிறகும் தமிழனைப் பார்க்கும் போது, நமக்கும் அப்படித்தான் பாடத் தோன்றுகிறது. ஏன் தெரியுமா? ‘சன்’ குடும்பத் தொலைக்காட்சியில் 19.09.2010 காலை ஒரு செய்தி வெளியானது.

நடிகர் ரஜினிகாந்த நடித்த எந்திரன் திரைப்படம், தமிழக முதல்வர் கருணாநிதி குடும்பத்தாரால் தயாரிக்கப்பட்டு அடுத்தமாதம் உலகமெங்கும் வெளியிடப்பட இருக்கிறதல்லவா, அந்த எந்திரன் படம் ஆயிரம் நாள் ஓடி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் (ரஜினி ரசிகர்கள்) கோயில் படிக்கட்டுகளில் முட்டிபோட்டு ஏறிச்சென்று வழிபாடு செய்தார்களாம். ரஜினியின் உருவப் பதாகைகளுக்குப் பாலாபிசேகம்கூட செய்தார்களாம்.

இத்தகைய நிலைகெட்ட மனிதர்கள் காலம் தோறும் இருக்கத்தான் செய்வார்கள் என்பதற்காக நெஞ்சு பொறுக்காமல் அன்றே பாடினார் போலும் பாரதி. தமிழக முதல்வர் குடும்பத் தொலைக்காட்சிகள் அனைத்தும் அன்று முள்ளிவாய்க்கால் 4ஆம் கட்ட ஈழப்போரில், ஈழத்தமிழர்கள் சிங்கள இராணுவத்தின் கொத்துக் குண்டுகளாலும், இரசாயனக் குண்டுகளாலும் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்ட போது அலறித்துடித்து அந்த அப்பாவித் தமிழர்கள் பெண்டு, பிள்ளைகளோடு, பதுங்கு குழிகளுக்குள் ஓடி தஞ்சம் புகுந்த போதிலும் வன்னெஞ்சர்கள் சர்வதேசப் போர் விதிமுறைகளையும் மீறி இராணுவ டாங்குகளால், உயிருடன் துடிதுடிக்க ஏற்றிச் சிதைத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தையும், தமிழ் இளைஞர்கள் கூட்டங்கூட்டமாக கைகள் பின்புறம் கட்டப்பட்டு, சிங்கள இராணுவத்தினால் நிர்வாணமான நிலையில் சுட்டுக்கொன்ற சொல்லொணாத் துயரச் சம்பவங்களையும் சேனல்4, சி.என்.என், பி.பி.சி, ஏ.பி.சி போன்ற தொலைக்காட்சிகள் உலகம் முழுவதும் ஒலிபரப்பின. அப்பட்டமான அந்த தமிழினப் பேரழிவு அவலங்களைப் பார்த்து உலகெங்கும் வாழும் தமிழர்கள் அதிர்ச்சி அடைந்து உறைந்துப் போயினர். தாங்கள் வாழும் நாடுகளிலெல்லாம் தமிழினத்திற்கெதிராக நடந்தேறிய போர்க்குற்றங்களையும் இனப்படுகொலையையும் வீதியில் நின்று போராடி உலக மக்களுக்கு உணர்த்தினர்.

ஆனால் மனித நேயம் சிறிதும் இன்றி தமிழைக்காட்டி, தமிழனைக்காட்டி பிழைப்பு நடத்தும் கருணாநிதிக் குடும்பத் தொலைக்காட்சிகள் அந்த சூழ்நிலையில்கூட, மானாட மயிலாட என்று குத்தாட்டம் போட்டுக் குதூகலித்துக் கிடந்தனர். அம்மணமாக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் கைகள் கட்டப்பட்டு பிடரியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட இலண்டன் சேனல்4 காணொலிக் காட்சிகளைச் சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே பாணியில் அவை கிராபிக்சுக் காட்சிகள் என ஏகடியம் பேசினர். ஆனால் ஐ.நா.அமைப்பு அவற்றை ஆய்வு செய்து அந்த சேனல்4 காட்சிகளி;ல் அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாக உறுதி செய்தது.

வெளிநாட்டு ஊடகங்களும், இணைய தளங்களும் ஈழத்தமிழர்களுக்கெதிரான இலங்கை இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்த எத்தனையோ ஆதாரங்களை அடிக்கடி வெளியிட்டு வருகின்றன. கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகளில் இது பற்றிய செய்திகள் எதுவும் வெளிவராமல் எச்சரிக்கையாய்ப் பார்த்துக் கொண்டனர். 2010 சனவரியில் வடஅயர்லாந்து டப்ளின் மக்கள் நீதிமன்றம், , இரண்டு நாட்கள் ஆய்வு செய்து ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் குறித்து 20க்கும் மேற்பட்ட ஆதாரங்களை முன்வைத்து ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்திற்கு இலங்கை மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்தது. இதுபற்றிக்கூட கருணாநிதி குடும்பத்தாரது தொலைக்காட்சிகள் கண்டும் காணாமல் நடந்து கொண்டன.

ஐ.நா.பொதுச்செயலாளர் பான்.கீ.மூன் இலங்கை போர்க்குற்றம் புரிந்துள்ளதா என்பதை ஆராய்ந்து பரிந்துரை செய்திட மர்சுகி தரூஸ்மன் தலைiயில் மூவர் கொண்ட குழுவை நியமனம் செய்ததையோ, அதை எதிர்த்து இலங்கையில் உள்ள ஐ.நா அலுவலகத்தை, சிங்களர்கள், இலங்கையின் வீட்டுவசதித் துறை அமைச்சர் தலைமையில் முற்றுகையிட்டு அதிகாரிகளைச் சிறைபிடித்து வைத்தனர். ஐ.நா.மன்றத்தை அவமதித்த சம்பவத்தை இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூட கண்டித்தார்.

ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் பல ஐ.நா.வின் ஆலோசனைக் குழுவை வரவேற்றன. ஆனால் இந்தியா இன்றுவரையில் இதுபற்றி எந்தவிதக் கருத்தும் வெளியிடவில்லை. தமிழ்நாட்டில் உள்ள நெடுமாறன், தா.பாண்டியன், வை.கோ, செந்தமிழன் சீமான் உள்ளிட்ட பல தலைவர்கள் ஐ.நா.வின் ஆலோசனைக் குழுவிற்கு இந்தியா ஆதரவு அளிக்க, தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி நடுவண் அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் எனப் பலமுறை கேட்டும் இதுபற்றிய செய்திகளைக் கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகள் ஒருபோதும் வெளியிட்டது கிடையாது.

“வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” எனக் கலைஞர் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்கிறார்களே, தமிழரை வீழ்த்திவிட்டு தமிழை மட்டும் எப்படி இவர்கள் வாழ வைப்பார்கள்? “தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப் எறிந்தாலும் அமிழ்ந்து போகமாட்டேன்;; கட்டுமரமாய் மிதப்பேன்; அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்” என்று கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சியில் வசனம் பேசினால் மட்டும் போதுமா? கருணாநிதி என்கிற இந்த “வெள்ளை வேனை” நம்பி தமிழர்கள் பத்திரமாக பயணம் செய்ய முடியுமா?

போர் முடிந்து ஓராண்டு கடந்த பிறகும் இன்னும் சிங்கள இராணுவக் கெடுபிடிகள் தமிழர் பகுதியில் ஓய்ந்தபாடில்லை. அங்கு வாழ இயலாத நிலையில் ஈழத்தமிழர்கள் சிலர் பகீரதப் பிரயத்தனம் செய்து படகிலேறி தப்பி வந்தால், மலேசியா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற தூரத்து நாடுகள் விசாரணை நடத்திய பிறகாவது மனிதாபிமானத்தோடு அகதியாக ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தளங்களில் வழிப்படச் செல்லும்போதே தடுத்துக் கைது செய்யப்படுகிறார்கள். சுற்றுலாத் தளங்களில் மடக்கிப்பிடித்து முகாம்களுக்கு திருப்பியனுப்பப்படுகிறார்கள்.

இலங்கைத் தமிழரானாலும் சரி, கடலோரத் தமிழக மீனவராயினும் சரி, தமிழன் என்ற ஒரே காரணத்திற்காகச் சுட்டுக் கொல்கின்ற போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு இந்தியாவில் திருப்பதி கோயிலில் சிவப்புக் கம்பள வரவேற்பு – அரச மரியாதை. ஆனால் விடுதலைப் புலிகள் எனப் பூச்சாண்டிக்காட்டி தமிழரை அகதியாகக்கூட இந்தியா கெடுபிடி செய்து ஏற்க மறுக்கிறது என்றால், உலகத் தமிழர்களின் நெஞ்சம் பதைக்காதா? இத்தகைய தமிழர்களுக்கெதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எல்லாம் கருணாநிதி ஒத்து ஊதிக்கொண்டே இருந்தால், வரலாறு அவரைத் தமிழனத் துரோகி எனத் தூற்றும் என்பதைப்பற்றிக்கூட கருணாநிதி கவலைப்டவில்லையே.

தமிழர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன, தம்குடும்பம் செழித்துச் செல்வந்தரானால் போதும் என்று அரசியலில் இந்தியாவை வளைத்துப்போட்டது போல், திரைப்படத் துறையையும் கருணாநிதி தனது குடும்பக்கூடாரமாக்கி வளைத்துப்போட்டு விட்டார். கொள்கையில் திராவிட நாட்டை அடையாவிட்டாலும், தனது குடும்பத் தொலைக்காட்சிகளைத் திராவிட மாநிலங்கள் தோறும் திறந்து (திராவிட நாட்டை) குடும்பத்தின் குத்தகை வருமானமாக்கி அடைந்துவி;ட்டார். இனித் தமிழருக்கு காவிரி டெல்டா பகுதியில் முப்போகம் முழுதாய் விளைந்து தமிழ்நாடு செழித்துவிடப்போகிறது என்று அப்பாவித் தமிழர்கள் நம்பினாலும் நம்புவர்.

முல்லைப் பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்த உச்சநீதி மன்றம் ஆய்வு ஆணை பிறப்பித்தும், அடாவடியாகக் கேரளா மறுப்பதை எதிர்த்துப் போராட தமிழரைத் தட்டி எழுப்பக் கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகள் முன்வரவில்லை. ஆனால் கருணாநிதி குடும்பம் தயாரித்த எந்திரம் படம் ஆயிரம் நாட்கள் ஓடத் தமிழர்களைக் கோயில் படிக்கட்டுகளில் முட்டி போடமட்டும் முனைப்புடன் பிரச்சாரம் செய்கிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குப் போட்டியாக புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களாகிய நாமும் தமிழினத்தை வேரறுக்கத் துணை போகிற கருணாநிதிக் குடும்பத் தயாரிப்பான எந்திரன் படத்தைப் பார்த்து ஐரோப்பா யூரோக்களாகவும், இங்கிலாந்து பவுண்டுகளாகவும், அமெரிக்க டாலர்களாகவும், மலேசிய ரிங்கிட்டுகளாகவும், சிங்கப்பூர் வெள்ளிகளாகவும் வாரிக்கொடுத்து கருணாநிதி குடும்பக் கருவூலத்தை நிரபபப் போகிறோமா?

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் புரிந்த நாடு என்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கைக்கான ஜி.எஸ.பி வரிச்சலுகையை இரத்து செய்து இலங்கைக்குப் பொருளாதார நெருக்கடிகள் தருகின்றன. ஆனால் தமிழராகப் பிறந்த காரணத்திற்காக – தமிழ்ப் பேசுகின்றோம் என்கிற பாவத்திற்காக தொடர்ந்து இனஅழிப்புக்கு ஆளாகி அழிந்து வருகிறோம். நம்மினத்தை அழிப்பவர்கள் செழிப்படைய – நாம் நமது வருவாயை எள்ளுந் தண்ணீராய் இறைத்து வீணாக்க வேண்டுமா?

எந்திரன் படத்தைப் புறக்கணித்தால் எம்மினம் விடுதலைபெற்று விடுமா என்று சிலர் கேட்கலாம். மண்ணைத் துறந்து, மக்களை இழந்து நாடுநாடாய் திரிந்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் நாம் இன்று வாழ்வது ஒரு வாழ்க்கையா? நம் காலை மிதிப்பவரின் தலையை மிதிக்கும் தன்மானச் சூழல் தற்போது நமக்கு இல்லாமல் இருக்கலாம். அதற்காக நமது உள்ளக்குமுறலை வெளிபடுத்தும் ஒரு வழிமுறையாக இதைக்கூடவா நம்மால் தியாகம் செய்யமுடியாது? நமக்கொரு நாடு வேண்டுமென்பதற்காக போராளிகளும், பொதுமக்களும் இலட்சக்கணக்கில் உயிர்த்தியாகம் செய்துள்ள அவல நேரத்தில், தமிழினத் துரோகிக் குடும்பப் படங்களைப் பார்த்துக் குதூகலித்துக் கிடப்பது எந்தவகையில் இனப்பற்றாகும்? நமது தாய்மார்களும், சகோதரிகளும், பச்சிளங்குழந்தைகளும் ஒவ்வொரு முறையும் குண்டுவீச்சுக்கு ஆளானபோது உடல் சிதறி உயிர்துடித்து ஓலமிட்டு அலறியபோதும், வெடித்துச் சிதறி அங்கமெல்லாம் சிதைந்து சின்னாபின்னமாகியதைக் கண்டபிறகும் கல்மனம் கொண்ட இரக்கமற்ற இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அனைத்தும் போரை நிறுத்தாமல் தமிழர்கள் கொத்துக்கொத்தாய் கொல்லப்படும் அகோரத்தை வேடிக்கையல்லவா பார்த்துக் கொண்டிருந்தன.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, இன்று வரை இந்தியா, இலங்கைமீது போர்க்குற்ற விசாரணை நடைபெறாமல் தடுக்க அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளிடம் என்னென்னவோ முயற்சிகள் எடுக்கிறதே தவிர, தமிழர்களை மீள்குடியமர்த்த எவ்வித அக்கரையும் காட்டவில்லையே. வடக்கு-கிழக்கு பகுதிகள் புத்த விகாரைகளாகவும், சிங்கள குடியிருப்புகளாகவும், சிங்கள இராணுவக் கட்டமைப்புகளாகவும் மாற்றப்பட்டு வருவதை தடுக்க முடியவில்லை. குறைந்தது வதைமுகாம்களில் உள்ள போராளிகளையாவது விடுவிக்க உதவினார்களா? முள்வேளி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் ஒரு இலட்சம் தமிழர்களை மீள்குடியமர்த்த முயற்ச்சிக்காமல், இலங்கை அரசுக்கு ஆயிரமாயிரம் கோடி ரூபாய்களை உதவிகளாய் அள்ளித்தருகிறது இந்தியா. இதற்கெல்லாம் உறுதுணையாய் இருக்கும் தமிழினத்துரோகி கருணாநிதியின் குடும்பத் திரைப்படங்களை நாம் பார்த்து திரை செலுத்திக் கொண்டிருக்க வேண்டுமா? கன்றுக்கு அநீதி இழைத்ததால், தான் பெற்ற ஒரே மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழன் வாழ்ந்த தமிழகத்தில் இன்று தம் மகன்கள், பேரன்களுக்காகவும், தமிழினத்தையே அழித்துக்கொன்ற ராஜபக்சே, சோனியா,மன்மோகன்சிங் நலன்களுக்காகவும் முறைவாசல் செய்துக் கொண்டிருக்கும் துராகிகளுக்கு நமது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தி எச்சரிப்பதற்காகவாவது எந்திரன் படத்தை புறக்கணிக்க நாம் ஒவ்வொருவரும் முன்வரவேண்டும். தமிழகத்தின் நம்மினச் சொந்தங்கள் முத்துக்குமாருடன் 16 தமிழர்களும் நம் உறவு முரகதாசும் நமக்காக தங்களது இன்னுயிரை தீக்கிரையாக்கி வீரச்சாவு அடைந்தனரே. அவர்களது தியாகத்தை எண்ணியாவது நாம் துரோகிகளின் தயாரிப்பில் வெளிவரும் எந்திரன் படத்தை புறக்கணிக்க வேண்டும். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பதை மெய்ப்பிக்க நமக்கு இதுவொரு அரசதந்திர வாய்ப்பு; நழுவ விடாதீர்கள்!

எந்திரன் படத்தைப் புறக்கணிப்போம்! தமிழினத் துரோகி கலைஞர் குடும்பத்தாரின் கனவை முறியடிப்போம்!!

Read more...

சர்வதேசத்தின் முன் அசிங்கப்பட்டு போயிருக்கும் சோனியா காங்கிரஸ்

சென்ற ஆண்டு ஒலிம்பிக் போட்டியை சீனா நடத்தியதைத் தொடர்ந்து, இந்தியாவிலும் அதைப் போன்றதொரு போட்டியை நடத்தி, சீனாவுக்கு ஒரு பிலிம் காட்டவும் அத்தோடு நின்றுவிடாது அந்நிய முதலீடுகளை ஈர்க்கப் போவதாகவும் காங்கிரஸ் சொல்லிவந்தது. அதன்படி, 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், வரும் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதிவரை காமன்வெல்த் நாடுகளின் போட்டிகளை டெல்லியில் நடத்த ஏற்பாடாகிவருகிறது. ஆனால் அவுஸ்திரேலிய விளையாட்டு வீரர்கள், அதனைத் தொடர்ந்து கனடா, இப்போது ஆபிரிக்கர்கள் என எல்லா விளையாட்டு வீரர்களும் இந்தியா செல்லப் போவது இல்லை என அரிவித்துவருகின்றனர். ஏன் தெரியுமா ? இதற்காக அமைக்கப்பட்டுவரும் விளையாட்டரங்கு, உட்பட தங்கும் விடுதிகள் கூட, ஒரு தரத்தில் இல்லை என்பது மட்டுமல்லாது, சுத்தமாக இல்லை என்றும் குறைகூறப்படுகிறது. இதனை ஏன் இந்திய ஊடகங்கள் மூடி மறைக்கின்றது ?

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்வதற்கென அமைப்புக் கமிட்டி ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அதன் தலைவராக சுரேஷ் கல்மாடி என்ற முன்னாள் காங்கிரசு அமைச்சர் நியமிக்கப்பட்டார். இந்தப் போட்டிகளுக்காக நவீன விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு வீரர்கள் தங்கும் குடியிருப்புகள் போன்றவற்றைப் புதிதாகக் கட்டுவது, ஏற்கெனவே உள்ள விளையாட்டு அரங்கங்களைச் சர்வதேச தரத்திற்கு நவீனப்படுத்துவது எனப் பல வேலைகள் தொடங்கி நடந்து வருகின்றன. ஆனால் அவை 3ம் திகதிக்கு முன்னர் முடிந்துவிடுமா என்று இதுவரை சரியாகக் கூறமுடியவில்லை. போதாக்குறைக்கும் அங்கு கட்டப்பட்ட பாலம் ஒன்று இன்று உடைந்து விழுந்துள்ளது. அவசர அவசர மாகக் கட்டப்படும் கட்டிடங்களும், தொடர்மாடிகளும் எப்போது இடிந்து விழும் என்ற ஏக்கமே இங்கு உரையோடிப்போய் உள்ளது.

இந்தத் திட்டங்களின் எல்லா இடங்களிலும் வகைதொகையின்றி, அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும் உள்நாட்டு – வெளிநாட்டு முதலாளிகளும் கூட்டுச் சேர்ந்து ஊழல் செய்துள்ளது அம்பலமாகி வருகிறது. சென்ற மாதத்தில் இவர்களது ஊழல் வெளிப்படாத நாளே இல்லை என்று கூறும் அளவிற்கு தினந்தோறும் ஏதாவதொரு திட்டத்தில் ஊழல் நடந்திருப்பது அம்பலமாகியது. இதனைக் கண்டுகொள்ளாமல் காங்கிரஸார் விட்டதால், பிரச்சனை பூதாகரமாகி பி.பி.சி, சி. என். என் போன்ற சர்வதேச தொலைக்காட்சிகளில் எல்லாம், இந்தியா விளையாட்டு வீரர்களுக்காக அமைத்திருக்கும் தங்கும் அறைகளை போட்டோ எடுத்துக்காட்டி மானத்தை கப்பல் ஏற்றியுள்ளது. இதனைப் பார்வையுற்ற பல விளையாட்டு வீரர்கள் தாம் இந்தியா செல்லப்போவது இல்லை என தற்போது அறிவிக்க, அவ்வப்போது இந்திய வெளியுறவு அமைச்சர் தொலைக்காட்சியில் தோன்றி, அவற்றை நாம் சர்வதேசத்தின் தரத்திற்கு உயர்த்துவோம் என கெஞ்சுவதும் வழமையான விடையமாகிவிட்டது.

தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கோ இதனைப் பற்றி எதுவும் தெரியாத நிலை காணப்படுகிறது. காமன்வெல்த்தின் தலைமைப்பீடமான பிரிட்ஷ் பேரரசியின் முன்னிலையில் நடைபெற்ற ’காமன்வெல்த் சுடர்’ ஊர்வலத்தை அகன்ற திரையில் காட்டவும், அந்த ஊர்வலத்திற்கு கார்களை வாடகைக்கு எடுக்கவும், ஏ.எம்.பிலிம்ஸ், ஏ.எம்.கார்ஸ் ஆகிய பிரிட்டிஷ் நிறுவனங்களுடன் பல கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டன எனக் கூறப்பட்டன. ஆனால், அது போன்ற நிறுவனங்கள் எதுவும் உண்மையில் இல்லை. இந்தியாவில் இவர்கள் கொடுத்திருந்த முகவரியும் போலியானது. ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகம் அனுப்பியது போன்றதொரு போலியான சிபாரிசுக் கடிதத்தை அதிகாரிகளே உருவாக்கி ஏமாற்றியுள்ளனர்.

பிரிட்டிஷ் பேரரசியே தனது அதிருப்தியைத் தெரிவிக்குமளவுக்கு இந்த ஊழல் சில்லறைத்தனமாக நடந்துள்ளது.

நாட்டிலுள்ள தனியார் மற்றும் அரசு நிறுவனங்களிடம் இவ்விளையாட்டுப் போட்டிக்கு விளம்பரம் திரட்டித் தரவும், விளம்பரக் கட்டணத்தை வசூலிக்கவும் ஸ்போர்ட்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட் என்ற ஆஸ்திரேலிய நிறுவனம் அமர்த்தப்பட்டது. இந்நிறுவனம் இதுவரை ஒரு விளம்பரதாரரைக் கூடப் பிடித்து தரவில்லையாம் நம்புவீர்களா இதை ? அரசு நிறுவனங்கள் அரசு விழாக்களுக்கு விளம்பரம் தருவதென்பது வழக்கமான செயல்தான். இந்திய அரசுத் துறை நிறுவனங்கள் தாமே முன்வந்து வழங்கிய கோடிக்கணக்கான விளம்பரதாரர் தொகையில் 23 சதவீதத்தை, செய்யாத வேலைக்குக் தரகுப் பணமாக இந்த நிறுவனத்திற்குத் தரவேண்டும்.

நாக்பூரில் புதிதாக ஒரு விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு ஆன செலவு 84 கோடி ரூபாய்தான். ஆனால், டெல்லி நேரு விளையாட்டரங்கை ‘மேம்படுத்த’ மட்டும் 669 கோடி ரூபாய் செலவழித்துள்ளனர். இவ்வாறு ‘மேம்படுத்தப்பட்ட’ அரங்கத்தின் கூரை, அண்மையில் பெத லேசான மழைக்கே ஒழுக ஆரம்பித்துவிட்டது. இதேபோன்று இன்னும் 17 அரங்கங்களை பல ஆயிரம் கோடிகளில் ‘மேம்படுத்தி’யுள்ளனர். இதுதான் மேம்படுத்தலா. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை காங்கிரஸ் கொள்ளை அடித்துச் செல்கிறதே.

டிரெட் மில்” என்னும் உடற்பயிற்சி சாதனத்தின் அதிகபட்ச விலையே ரூபாய் மூன்று லட்சம்தான். ஆனால், அதனை 9.75 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். 10,000 ரூபாய் மதிப்புள்ள ஏர் கூலரை 40,000 ரூபாய்க்கும், ரூ.25,000 மதிப்புள்ள கணினியை 89,052 ரூபாய்க்கும் வாடகைக்கு எடுத்துள்ளனர். கையை சுத்தம் செய்ய சோப்புக் கலவையை உமிழும் சாதனத்தின் விலையே 450 ரூபாய்தான். இதனை 3,397 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். குடைகளை 6,000 ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்த அநியாயம் குறித்து கேட்ட பொழுது, அக்குடைகளெல்லாம் ‘தனிச் சிறப்பானவை’ என்று கூச்சநாச்சமின்றிப் புளுகுகின்றனர். 50 முதல் 100 ரூபாய் மதிப்புள்ள கழிவறைக் காகிதச் சுருளை, 3,757 ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். அவற்றிலும் ‘தனிச் சிறப்பாக’ ஏதேனும் இருக்குமோ என்னவோ?

இதேபோல முக்கிய பிரமுகர்கள் அமரும் சோபாசெட்டுகள், குளிர்சாதன எந்திரங்கள், கார்கள் என பலவற்றை அவற்றின் சந்தை விலையை விட பல மடங்கு கூடுதலான விலைக்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். தொடக்கவிழாவின் போது ஒளிவெள்ளத்தைப் பாச்சும் ஹீலியம் பலூனூக்கு அன்றைய ஒருநாள் வாடகையாக ரூ.50 கோடி வாரியிறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது அரங்கத்தின் பாதியளவுக்குத்தான் ஒளியை உமிழும் என்று தொழில்நுட்பவாதிகளே அம்பலப்படுத்துகின்றனர்.

2003-இல் திட்டமிடப்பட்ட போது, இப்போட்டியை நடத்த மொத்தத்தில் ரூ.1,899 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், எல்லா அதிகாரிகளும் முதலாளிகளும் போட்டி போட்டுக் கொண்டு பணத்தைச் சுருட்டியதால் தற்போது செலவு மதிப்பீடு 35,000 கோடிகளில் வந்து நிற்கிறது. வேலைகள் எதுவும் முடிந்த பாடா இல்லை என்ற நிலையில், திட்டமிட்டதை விட 1575% செலவு அதிகரித்துவிட்டது. இதனை ஈடுகட்ட டெல்லி மாநில அரசின் பல்வேறு நலத்திட்ட நிதிகள் இதற்குத் திருப்பி விடப்பட்டுள்ளன.

ஆதரவற்ற முதியவர்களுக்கான 171 கோடி, தாழ்த்தப்பட்டவர்களுக்கான 744 கோடி நிதி ஒதுக்கீடு ஆகியன காமன்வெல்த் போட்டிகளுக்கு செலவு செய்யப்பட்டன. இதுதவிர, மெட்ரோ ரயில் திட்டத்திற்கென டெல்லி அரசு கொடுக்க வேண்டிய 5,000 கோடி ரூபாய், பல்வேறு கலாச்சார அமைப்புகளுக்கான டெல்லி அரசின் நிதி ஒதுக் கீட்டில் 14 கோடி ரூபாய் – என பிற நலப்பணிக்களுக்கான நிதிகள் காமன்வெல்த்தில் கரைக்கப்பட்டுவிட்டன. இது இவ்வாறிருக்க விளையாட்டுப் போட்டிகளை ஒட்டி கட்டப்படும் வீடுகளை, போட்டிகள் முடிந்த பின்னர் கைப்பற்றிக்கொள்ள இப்போதே போட்டாபோட்டியும் ஊழல்களும் பெருகி, வெளியே கசிந்து முற்சந்திவரை வந்துவிட்டது.

‘தேசியப் பெருமித’ போதையில் இந்த அயோக்கியத்தனத்தை நாம் அங்கீகரிக்கப் போகிறோமா ? கூச்சநாச்சமின்றி சில்லறைத்தனமாக நடந்துள்ள இந்த ஊழல் மோசடிகளையும், குடிசைவாழ் மக்களை கட்டாயமாக வெளியேற்றிவிட்டு ஆக்கிரமிக்கும் அட்டூழியத்தையும், கூலித் தொழிலாளர்களின் உதிரத்தை உறிஞ்சும் கொத்தடிமைத்தனத்தையும் நாம் இன்னமும் சகித்துக் கொண்டிருக்கத்தான் போகிறோமா ? காங்கிரஸ் ஆட்சிக்கு இனியும் முடிவுகட்டவேண்டாமா ?

Read more...

கருணா... கருணாநிதி... குமரன் பத்மநாபன் துரோகம் - வைகோவின் பதிலடி

ஈழத்தில் போர்நிறுத்தம் ஏற்படாமைக்கு காரணம் வைகோ என்று சிறீலங்கா கட்டுப்பாட்டிலுள்ள கேபி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் ஈழப்போராட்டத்தின் இறுதியில் நடந்தது என்னவென்று நமது மீனகம் இணையத்துக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்..

Read more...

புதுவை மாணவர்களுக்கு 75% இடஒதுக்கீடு ரத்து

புதுச்சேரி மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் அந்த மாநில மாணவர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தி மாநில அரசு பிறப்பித்த ஆணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.

புதுவையைச் சேர்ந்த பெற்றோர்-ஆசிரியர் கூட்டமைப்பு, புதுவை வழக்கறிஞர் ஜெயக்குமார் உள்ளிட்ட சுமார் 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுக்களை தாக்கல் செய்தனர். அதில்,

புதுவை யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, மற்றும் ஏனாம் ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இவற்றில் காரைக்கால், மாகி, ஏனாம் மண்டலங்களில் உள்ள மாணவர்கள் [^] கல்வியில் பின்தங்கியுள்ளனர்.

இதையடுத்து அனைவருக்கும் சமமான கல்வி கிடைப்பதற்காக கடந்த 2006ம் ஆண்டு புதுவை அரசு ஒரு அரசாணை பிறப்பித்தது. இதன்படி காரைக்கால் மாணவர்களுக்கு 18 சதவீதமும், மாகி மாணவர்களுக்கு 4 சதவீதமும், ஏனாம் மண்டல மாணவர்களுக்கு 3 சதவீதமும் மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங், பல்மருத்துவம் உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது.

ஆனால், கடந்த மே மாதம் புதுவை அரசு மற்றொரு ஆணை வெளியிட்டது. இதில் மீதமுள்ள 75 சதவீத இடங்களில் புதுவை மாணவர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு செய்ய வேண்டும், குறைந்தது 5 ஆண்டுகள் புதுவையிலேயே தொடர்ந்து வாழ்ந்து கடைசி 3 ஆண்டுகள் அங்கேயே படித்து இருந்தால் அந்த மாணவர்களுக்கு புதுச்சேரி மண்டல இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்த அரசு ஆணை சட்டத்துக்கு விரோதமானது. இந்தியாவில் எந்த மாநிலத்தை சேர்ந்த மாணவர்களும் மற்ற மாநிலங்களில் படிக்க உரிமை உள்ளது. ஆனால் புதுவை அரசின் இந்த அரசாணை மூலம் வெளி மாநில மாணவர்களோ அல்லது புதுவை யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காரைக்கால், மாகி, ஏனாம், மாணவர்களோ அந்த 75 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர முடியாது.

இது இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 226 பிரிவுக்கு எதிரானது. எனவே, உள்நோக்கத்துடன் பிறப்பிக்கட்ட அரசு ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது புதுவையில் நடைபெறும் அனைத்து தொழிற் படிப்புக்கான கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இன்று மீண்டும் இந்த வழக்கு அதே நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:

அனைவரும் சம கல்வி கிடைக்க வேண்டும் என்பது தான் சரியான நீதியாகும். இதன்படி பின் தங்கிய மாணவர்களுக்காக காரைக்காலுக்கு 18 சதவீதமும், மாகிக்கு 4 சதவீதமும், ஏனாம் மாணவர்களுக்கு 3 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கி பிறப்பித்த அரசு. ஆணையை இந்த நீதிமன்றம் ஏற்று கொள்கிறது.

அந்த நேரத்தில் மீதமுள்ள 75 சதவீதம் இடத்தை புதுவை மாணவர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு செய்திருப்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளது. மேலும் 75 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எந்த வித அடிப்படை காரணங்களும் அரசாணையில் கூறப்படவில்லை.

அவசர அவசரமாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அதை இந்த ஆண்டே உடனடியாக அமல்படுத்துவது என்பது உள் நோக்கமாகவே கருதப்படுகிறது. எனவே, புதுவை மாணவர்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணையை நீதிமன்றம் ரத்து செய்கிறது. ஒதுக்கப்பட்ட 75 சதவீத இடத்தில் தகுதி அடிப்படையில் அனைத்து மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதனால் அந்த மாநிலத்தில் நடந்து முடிந்துள்ள மருத்துவ கவுன்சிலிங்கை மீண்டும் நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு புதுவை அரசு உள்ளாகியிருக்கிறது.

Read more...

இரண்டாம் தர குடிமக்களாக தமிழர்களை நடத்தும் இலங்கை-உலகப் பெருந்தலைவர்கள் குழு கண்டனம்

இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறது இலங்கை அரசு என்று உலகப் பெருந்தலைவர்கள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

2007ம் ஆண்டு உலகின் புகழ்பெற்ற பெருந்தலைவர்கள் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

இதில் உலகப் புகழ் பெற்ற உலக நாடுகளின் தலைவர்களான தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, ஐ.நா.சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான், அமெரிக்கா [^]வின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர், முன்னாள் அயர்லாந்து அதிபர் மேரி ராபின்சன், முன்னாள் அல்ஜீரிய வெளியுறவு அமைச்சர் [^] லக்தர் பிராஹிமி, தென்னாப்பிரிக்க ஆர்ச்பிஷப் டெஸ்மாண்ட் டுடு உள்ளிட்ட தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

குழுவின் தலைவராக டெஸ்மான்ட் டுடு பொறுப்பு வகித்து வருகிறார். இந்த உலகப் பெருந்தலைவர்கள் குழு இலங்கை அரசின் இனவெறியைக் கடுமையாக கண்டித்துள்ளது.

இதுகுறித்து பிபிசிக்கு டுடு அளித்துள்ள பேட்டியில், இலங்கையில் தற்போது மனித உரிமை ஆர்வலர்கள் சரமாரியாக கொல்லப்பட்டு வருகின்றனர். பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுகின்றனர். அரசுக்கு எதிர்ப்பானவர்கள் கொல்லப்படுகின்றனர். இது மிகவும் பயங்கரமாக உள்ளது என்றார்.

இலங்கையைக் கண்டித்து உலகப் பெருந்தலைவர்கள் குழு ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதில், தமிழர்களுக்கு எதிராக மனித உரிமைகள் மீறப்படுவது தடுத்து நிறுத்தப்பட இலங்கை அரசை சீனா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற அதன் நட்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும்.

மனித உரிமைகள் பாதுகாக்கப்படுதல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுதல் போன்ற பிரச்சனைகளில் சர்வதேச சமுதாயம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்ளக்கூடாது. தண்டனையில் இருந்து விலக்கு அளிப்பதுதான் சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

போரின் போது அமல் படுத்தப்பட்ட நெருக்கடி நிலை இன்னும் இலங்கையில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவது கவலை தருகிறது. போர் முடிந்து ஓராண்டு காலம் முடிந்த பிறகும் இலங்கை தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வுகாண இலங்கை அரசு இதுவரை உருப்படியான நடவடிக்கை [^] எதையும் எடுக்காதது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளனர்.

இலங்கையில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து உலக நாடுகள் செவிடுகள் போல இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நல்லாட்சி அங்கு இல்லை, நம்பிக்கை இல்லை, நம்பகத்தன்மை என எதுவுமே இல்லை இலங்கையில். இதைப் பார்த்து பிற நாடுகளும் கெட்டுப் போகும் அவலமே மேலோங்கியுள்ளது .

பின்லாந்து நாட்டின முன்னாள் அதிபரான மர்ட்டி அதிசாரி கூறுகையில், அனைவரும் எதிர்பார்த்ததற்கு ஏற்ப இலங்கை அரசு நடந்து கொள்ளவில்லை. எந்தவித முன்னேற்றத்தையும் அது காட்டவில்லை. மீடியாக்களை கட்டிப் போட்டு வைத்துள்ளது. அவற்றின் கண்களை மூடி வைத்துள்ளது. மீடியாக்களை சுதந்திரமாக செயல்பட விட்டால்தான் உண்மை தெரிய வரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

உலக நாடுகள் பலவும் இலங்கை அரசின் இனப்படுகொலை மற்றும் இனவெறிப் போக்கைக் கண்டித்து வரும் நிலையில் உலகப் பெரும் தலைவர்கள் அடங்கிய குழு ஒரேகுரலில் இலங்கை அரசின் இனவெறியைக் கண்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

சிங்கள கடற்படைக்கு எதிராக தமிழக மீனவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டும்: பெ.மணியரசன்

மீனவர்களைப் பாதுகாக்கத் தமிழகக் கடலோரக் காவல் பொறுப்பை ஐ.நா. சபை ஏற்கவேண்டும். இல்லையேல் சிங்கள கடற்படைக்கு எதிராக தமிழக மீனவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன் கூறியுள்ளார்.



இதுகுறத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்களைக் கொலை செய்த எண்ணிக்கை 7.7.2001 இரவுடன் 451 ஆக உயர்ந்துள்ளது. வேதாரணியம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவர் பன்னாட்டுக் கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கொல்லப்பட்டார்.

சிங்களக் கடற்படையினர் அப்படகுக்குள் சென்று கம்பி, தடி, கயிறு ஆகியவற்றால் படகில் இருந்த மீனவர்கள் செல்லப்பன், காளியப்பன், செல்வராசு திருவன் புலம் ஆகியோரைத் தாக்கியுள்ளனர்.

அத்தாக்குதலில் செல்லப்பன் இறந்தார்.மற்ற மூவர் காயமடைந்தனர். இதற்கு முன்னால் கடந்த ஆண்டுகளில் துப்பாக்கியால் சுட்டு 450 தமிழக மீனவர்களைச் சிங்களப் படையினர் கொன்று விட்டனர்.

இன்னொரு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த முருகேசன் அறிவழகன், சின்னப்பூ, இளையராஜா ஆகிய நால்வரையும் இரும்புக் கம்பியால் தாக்கி விட்டு, அவர்கள் நால்வரின் உடைகளைக் களைந்து அவற்றைக் கடலில் வீசி விட்டனர்.

பன்னாட்டுக் கடலில் மீன் பிடிப்பதைத் தடுக்க சிங்களப் படைக்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்த பேரவலம் பல்லாண்டுகளாகத் தொடர்கிறது.காரணம், தமிழக மீனவர்கள் அயல்நாட்டுப் படையினரால் கொல்லப் பட்டாலோ,அவர்களின் மீன்களையும் மீன் பிடி வலைகளையும் கடலில் வீசினாலோ அவர்களை அம்மணப்படுத்தினாலோ அந்த அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்தி, பாதுகாப்புக் கொடுக்க தமிழருக்கென்று இறையாண்மையுள்ள ஓர் அரசு இல்லை.

இந்தியாவுக்குள் தமிழர்கள் வாழ்ந்தாலும் தமிழகத்தின் இயற்கை வளங்களையும் தமிழர்களின் உழைப்பையும் சுரண்டுவதற்கு மட்டுமே இந்திய அரசு தமிழ்நாட்டைப் பயன்படுத்திக் கொள்கிறது. தமிழர்களின் பாதுகாப்புக்கு அது பொறுப்பேற்பதில்லை.

தமிழகத்தில் உள்ள மாநில ஆட்சியாளர்கள் இந்திய அரசுக்குக் கங்காணி வேலை பார்த்து, தங்களின் பதவி மற்றும் பணப் பசிகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் தமிழக மீனவர்களைப் பாதுகாக்க உருப்புடியான, உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்காமல் ஒப்புக்குக் கண்டனம் தெரிவிப்பதும் கடிதம் எழுதுவதும் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.


இதுவரை 451 அப்பாவி மீனவர்களை சிங்கள நாட்டுக் கப்பற்படை கொன்று விட்டது. இனியும் இந்த மனித அழிவு நடைபெறாமல் தடுக்க ஐ.நா. சபை தலையிட்டு, தமிழகக் கடலோரக் காவலை அது தன் பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து தமிழக மீனவர்கள் தங்களின் தற்காப்பிற்கு ஆயுதம் ஏந்தவேண்டும். இந்த இரண்டு வழிகளைத் தவிர தமிழக மீனவர்களைக் காக்க வேறு வழி தமிழர்களுக்கு விட்டு வைக்கப்படவில்லை. ஐ.நா சபை உடனடியாக தலையிடுமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Read more...

இந்திய கடற்படையில் காமெடி கலாட்டா

கொச்சியில் கடற்படையினர் இன்று நடத்திய துப்பாக்கிச் சூடு பயிற்சியின்போது குண்டு தவறுதலாக பாய்ந்து தென் மண்டல கடற்படை தளபதி எஸ்.எஸ்.ஜாம்வால் (51) மரணமடைந்தார்.

கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் துரோனாச்சாரியா தென் பிராந்திய கடற்படை தளத்தில் இன்று இந்தச் சம்பவம் நடந்தது.

இங்கு இன்று காலை 10.30 மணிக்கு வழக்கமான துப்பாக்கி சுடும் பயிற்சி நடந்தபோது அதை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த தென்பிராந்திய கடற்படை தளபதியான 'ரியர் அட்மிரல்' எஸ்.எஸ்.ஜாம்வால் மீது குண்டு பாய்ந்தது. இதில் ஜாம்வால் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து உயர் மட்ட விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லியிலிருந்து கடற்படை அதிகாரிகளும், கடற்படை உளவுப் பிரிவினரும், மத்திய உளவுப் பிரிவினரும் கொச்சி விரைந்துள்ளனர்.

பலியான ஜாம்வால் தென் மண்டல கடற்படையின் இரண்டாவது ரேங்கி்ல் உள்ள மிக மூத்த அதிகாரியாவார்.

மாஸ்கோ உள்பட பல நாடுகளில் இந்தியத் தூதரகங்களில் கடற்படை பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர். ஐஎன்எஸ் பியாஸ் கப்பல் படை பிரிகேடின் கேப்டனாக இருந்தவர்.

இந்தியக்கடற்படையின் வல்லமை இப்படியிருக்கையிலேயே தமிழர் நாம் தமிழர் உயிரை காக்க இப்படையிடம் வேண்டி நிற்கிறோம்....

Read more...

நஞ்சு யார்? நம்பி கெட்டது யார்? - தூ. சடகோபன்

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரையில் ‘ஜனநாயகம் என்பது மக்கள் அரசுமுறை என்பதோடு முடிந்துவிடவில்லை. புதுவாழ்விற்கான நல் அழைப்பும் அது. பொறுப்பையும் பலாபலன்களையும் அனைவரும் சரி சமமாகப் பங்கிட்டுக்கொண்டு செயலாற்றிடும் ஓர் அருங்கலைக்கூடமும் அதுவே! ஒவ்வொரு மனிதனிடத்தும் உள்ளடங்கியுள்ள அறிவையும் ஆற்றலையும் வெளிப்படுத்தி ஒருங்கிணைத்து ‘பொது நன்மை’ என்ற குறிக்கோளை அடைந்திடச் செயலாற்றிட வைத்திடும் பெருநோக்கம் கொண்டதே ஜனநாயகம் எனப்படுவது’ என்று அரிய பல சிந்தனைகளை அதில் அடக்கியுள்ளார். திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவராக, தமிழினத்தின் தலைவராக, தி.மு.க.வின் நிரந்தரத் தலைவராக, ஆட்சியின் தலைவராக தன்னை ஆக்கிக் கொண்ட கலைஞர் கருணாநிதிக்கு அண்ணாவின் ஜனநாயகம் புலப்படாது. என்னவெனில் ‘பொறுப்பையும் பலாபலன்களையும் அனைவரும் சரிசமமாகப் பங்கிட்டுக் கொண்டு செயலாற்றிடும் ஓர் அருங்கலைக் கூடம் ஜனநாயகம்’ என்று அண்ணா அளித்த விளக்கம், கலைக்கூடம் என்பதையும் அதன் உட்பொருளையும் தன் குடும்பக் கூடம் என்பதாகப் புரிந்துள்ளது.

அண்ணாவின், கழகத்தின் உண்மைத் தம்பிகளுக்கு புரிந்ததெல்லாம் ‘ஒவ்வொரு’ மனிதனிடத்தும் உள்ளடங்கியுள்ள அறிவையும் ஆற்றலையும் வெளிப்படுத்தி ஒருங்கிணைத்து ‘பொது நன்மை’ என்ற குறிக்கோள்’ என்பது தான்.



இதுதான் கழகம் என்னும் தி.மு.க. குடும்பத்தில் நிலைத்திருக்கும் என்று நம்பியதுதான் குற்றம். அந்த நம்பிக்கையை நஞ்சாக்கியது யார்? எண்ணற்ற கழக முன்னணித் தலைவர்களை வெளியாக்கியது யார்? அறிவாலயத்தில் மின்தூக்கிக் கூடுக்குள் தலைவர் போகும்போது அவர்மீது ஓர் தூசும் விழாது பார்த்திருந்து விழித்திருந்த மாசற்ற மனிதனாய் இன்று உயர்ந்து நிற்கும் வைகோ அவர்களை வெளியேற்றியது யார்? எல்லாம் கலைஞர் கருணாநிதியே!இன்றுவரை ‘மைனாரிட்டி’ என்றே எதிர் கட்சிகளால் அழைக்கப்படும் ஆட்சியும் பலமானதாக இல்லை. தி.மு.க.வும் பலமானதாக இல்லை. எல்லாம் தானே! தன் குடும்பமே! தம்மக்களே என்ற நிலை கட்சியிலும் ஆட்சியிலும் நிலையானபோது அண்ணாவின் ஜனநாயகம் நிலையாமல் போனது. கழகங்கள் பலவாகிவிட்டன. திராவிட இயக்கம், கொள்கைகள் சிதறிப் போயின.
செம்மொழி மாநாட்டையொட்டி ‘திராவிட இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும் என்னும் கலைஞர் கருணாநிதிக்கு திராவிட இயக்கங்கள் உடைவதற்குத் தாமே காரணம் என்பது மறந்து போயிற்று.

அறிஞர் அண்ணாவின் தம்பி என்றும் இதயத்தை இரவலாகப் பெற்றவர் என்றும் கூறிக்கொள்ளும் கலைஞர் கருணாநிதிக்கு அண்ணாவின் நாகரிகம் மட்டும் மறந்து போயிற்று. செம்மொழி மாநாட்டுக்கு வாருங்கள் என்று உடன்பிறப்புக்கு எழுதும் மடலில் ஓர் வரியைப் பாருங்கள்.
‘எங்கிருந்தோ ஒரு குரல் கேட்கிறதா? ஏதோ ஒரு விலங்கின் ‘காம்போதி’ என்பார்களே! அந்தக் காம்போதிதான் கேட்கிறது’ கழுதைக்கு ஒப்பிட்டு ஓர் கட்சியின் தலைவரை, ஆட்சிக்குத் தலைமையாய் இருந்தவரை இழிவுபடுத்துவதை எண்ணிப்பாருங்கள். சகிக்கமுடியாத சொல் அல்லவா இது. ‘மாற்றான் தோட்டத்து மல்லிகை;கும் மணமுண்டு’ என்ற அண்ணாவின் இதயம் இப்படி எழுதுமா? ஆட்சி மன்றத்தில் அண்ணா முதலமைச்சராக இருந்து ஆற்றிய உரையையும் பாருங்கள். ‘இருபது ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் பலன் கிடைக்கவில்லை. ஆகையால் மாற்றம் வேண்டும் என்று அண்ணாதுரை பேசுகிறானே, இவனுக்குத் திருமணம் ஆகி வருஷங்கள் இருபது ஆண்டுகள் ஆகிறது. இன்னும் ஒரு குழந்தை கூடப்பிறக்கவில்லை. அப்படியானால் அவன் மனைவி ராணிக்கு வேறு ஒரு கணவனைத் தேடலாமா? என்று கூறும்போது அண்ணா கண்களில் கண்ணீர் தளும்ப சற்று பேச்சினை நிறுத்திவிட்டு ‘சகித்துக்கொண்டிருந்தேனே’ என்று அண்ணா கூறியது சகிப்புத்தன்மைக்கே உச்சம்.

மனித மனத்துக்கே அடித்தளமான நாகரிகம். இந்த நாகரிகத்தை கலைஞர் கருணாநிதியிடம் பார்க்கமுடியாது.
செம்மொழி மாநாடு, தமிழுக்கு மாநாடு! நடத்துவது கலைஞர் கருணாநிதியானாலும் அரசு மாநாடு. தமிழ்நாட்டரசு மாநாடு. மாண்புகள் காக்கப்பட வேண்டிய மாநாடு. உலகத் தமிழரெல்லாம் உற்று நோக்கும் மாநாடு. ஊலகமொழி அறிஞர்கள் ஆய்வாளர்கள் பார்வைக்குண்டான மாநாடு. அதற்கு அழைப்பதில் அநாகரிகச் சொல். தொல் நாகரிகத்தைப் பண்பாட்டை கொல்லும் சொல். இனிய தமிழ்ச் சுளைகளை கலைஞர் கருணாநிதியா கொடுக்கப் போகிறார்?
நெஞ்சில் நஞ்சு
எண்ணு தமிழ் நாடே
நம்பிக் கெடாதே!

தூ. சடகோபன்
மாநில பொறுப்புக்குழு உறுப்பினர்,
புதுச்சேரி.

Read more...

விழுப்புரம் ரயில் தண்டவாளம் தகர்ப்பு… அரசின் குற்றப்பின்னணி....


12-ம் தேதி விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு நடந்தது. தகவல் கிடைத்து முன்கூட்டியே ரயில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அது குறித்து தகவல் வெளியிட்ட மாநில காவல் துறை தலைவர் லத்திகாசரன் அவர்கள் 'இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு மாவோயிச தீவிரவாதிகள் காரணம் அல்ல' என்று அறிவித்தார். அதாவது விடுதலை புலிகள் ஆதரவு இயக்கங்கள்தான் என்பதை கோடு போட்டு கொடுத்தார். வழக்கு உடனடியாக கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதனையடுத்து பேசிய மாநில உளவு பிரிவு ஐ.ஜி. ஜாபர்சேட் 'விடுதலை புலிகளின் ஆதரவு இயக்கங்கள்தான் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்தியிருக்கும்' என்றார். அதாவது 1991-ம் ஆண்டு மே 21-ம் நாள் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையான போது, அது குறித்த ஆரம்பகட்ட விசாரணைகூட தொடங்கப்படாத நிலையில், அன்றைய மத்திய சட்டத்துறை அமைச்சர் சுப்ரமணியசுவாமி 'ராஜீவ் படுகொலைக்கு விடுதலை புலிகள்தான் காரணம்' என்று அன்றைய சில மணி நேரங்களிலேயே ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். அதே பாணியில் இன்று உளவுதுறை அதிகாரி ஜாபர்சேட் முனைப்பு காட்டுகிறார்.
விசாரனை தொடங்கப்படாத நிலையில் எப்படி 'புலிகளின் ஆதரவாளர்கள்' என்கிறார் என பழ. நெடுமாறன், வைகோ, சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கான 'விளக்கம்' இப்போது கிடைத்திருக்கிறது. விழுப்புரத்தில் உள்ள ஈழ ஆதரவு இயக்க இளைஞர்கள் எட்டு பேர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாகவே ரகசியமாக கடத்தி சென்று தடுத்து வைத்து 'விசாரித்து' வருகிறார்கள். அதாவது சம்பவம் நடந்த அடுத்த நாளே அந்த இளைஞர்களை கடத்தி சட்ட விரோதமாக தடுத்து வைத்திருக்கிறது போலீஸ். அதை வைத்துதான். உளவுதுறை அதிகாரி ஜாபர்சேட் அப்படி 'கருத்து' கூறினார். இந்த
நிலையில் 14-ம் தேதி திங்கள் அன்று விழுப்புரத்திற்கு சென்ற ஜாபர்சேட் 'வழக்கு விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு தினங்களில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவோம்' என்று பேட்டி அளித்தார். ஆக முன்கூட்டியே திட்டமிட்டு 'இதுதான். இப்படித்தான்' என்று செயல்படுத்துகிறார்கள். சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜோதி நரசிம்மன், எழில் இளங்கோ, தமிழ்வேங்கை, பாபு, ஏழுமலை, கணேஷ், ஜெயராமன், குமார் ஆகிய எட்டு நபர்கள் ஈழ ஆதரவு இயக்கத்தில் செயலாற்றி வருகிறார்கள். கைதுக்கு வேறு பின்னணியும் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி அன்று ஈழத்தில் போர் நிறுத்தம் வேண்டி தன்னைத்தானே எரித்து உயிர் கொடையளித்த முத்துகமார், சிவகுமாரன் உள்ளிட்ட 19 பேருக்கான முதலாம் ஆண்டு வீர அஞ்சலி பொதுக்கூட்டத்தை நடத்தினார்கள். அந்த கூட்டத்திற்கு சிறப்பு பேச்சாளராக புலமைபித்தன், திருச்சி வேலுசாமி ஆகியோர் கலந்துகொள்வதாக இருந்தது. கடைசியில் புலவர் புலமைபித்தன் அவர்கள் கலந்துகொள்ளவில. நேரில் கலந்துகொண்ட வேலுச்சாமி திமுகவையும், அதன் தலைவர் கருணாநிதியையும் கடுமையாக சாடியிருந்தார். அதைவிட அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த அந்த இளைஞர்கள் கருணாநிதியை தாக்கி, மத்திய மாநில அரசுகளை மிகவும் கடுமையாக கேலிசெய்து நாடகம் போட்டிருந்ததுதான். அவர்களின் கேலிக்கை நாடகம்தான் அனைவரையும் பரபரப்பாக பேச வைத்தது. அந்த நாடகம் திமுக-காங்கிரஸாருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அப்போதிலிருந்தே அந்த இளைஞர்கள் குறிவைக்கப்பட்டார்கள். அது மட்டுமல்ல இளைஞர்களின் இந்தவித வீராவேசமான எழுச்சி தமிழகம் முழுவதும் நடந்தேறிக்கொண்டிருந்தது. ஆளும் கட்சியினருக்கு பெரும் எரிச்சல். நிலைமையை இப்படியே விட்டால் எதிர்கால தமிழகம் இந்த இளைஞர்களின் பிரச்சார
வளையத்திற்குள் சென்றுவிடும் என்று அஞ்சி திட்டமிட்டது. அதன் ஒரு வெளிப்பாடுதான் இந்த குண்டு வெடிப்பு நாடகம். நினைத்தபடி இப்போது இளைஞர்கள் மீது கைவைக்க தொடங்கிவிட்டார்கள். இப்படி கைது செய்வதன் மூலம் மற்ற இளஞைர்களுக்கு ஒருவித அச்சத்தை எற்படுத்த வேண்டும். அதன் மூலம் அவர்களின் ஈழ ஆதரவு சிந்தனையை, பிரச்சாரத்தை சிதறடிக்க வேண்டும் என்பதுதான் முக்கிய திட்டம். அதை நிறைவேற்றுகிறார்கள். அதற்கு ரயில் தண்டவாள தகர்ப்பு ஏன்? குண்டு வெடிப்பு ஏன்? வேறு ஏதாவது பொய் வழக்கு போடலாமே?... இதில்தான் விஷமம் இருக்கிறது. மற்ற வழக்குகளை போல் அல்ல குண்டு வெடிப்பு வழக்கு. போலீஸ் எப்படி வேண்டுமானாலும் இதில் விளையாடலாம். கைது செய்யும் இளைஞர்களை ஜாமீனில் விடுவதற்கு ஏதாவது
காரணத்தை சொல்லி தாமத்தபடுத்தலாம். இப்படி செய்வதால் மற்ற இளைஞர்களுக்கு அச்சத்தை எற்படுத்த முடியும் என்பதுதான் பின்னணி. ஆக, முதல்வர் கருணாநிதையை கடுமையாக விமர்சித்ததற்கு பழி தீர்த்த மாதிரியும் ஆயிற்று,மற்ற இளைஞர் எழுச்சிகளை தடுத்த விதமாவும் ஆயிற்று என்பதுதான் திட்டத்தின் மையம். பிரதான இன்னொரு காரணம் ஈழ விடுதலை ஆதரவு எழுச்சியை உடனடியாக தடுக்க வேண்டும். அது கைது நடவடிக்கைகள் மூலமாக மட்டும் போதாது. புலிகளின் ஆதரவாளர்கள், ஈழ ஆதரவாளர்கள் 'வன்முறையாளர்கள்' 'பயங்கரவாதிகள்'.! தமிழக மக்கள் உயிர்களை பலிவாங்க முனைபவர்கள்.! எங்கோ நடக்கும் ஈழ பிரச்சனைக்கு இங்கே உயிர்பலி செய்வது என்ன நியாயம் என்ற கருத்தை வெகுஜன மக்கள் மத்தியில் பேச வைப்பதுதான்.
பிரச்சாரப்படுத்துவதுதான். அப்படி பிரச்சாரப்படுத்த காங்கிரஸ்-திமுக ஊடகங்களும், அரசு இயந்திரங்களும் தயாராகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு, புலிகளின் ஆதரவு என்றாலே 'அது சார்ந்த இயக்கம், இளைஞர்கள் எல்லாம் பயங்கரவாதத்தை செய்பவர்கள்' என்ற முத்திரையை குத்துவதான பின்னணிதான் இந்த குண்டு வெடிப்பு வழக்கில் 'சுற்றுகிறது'! ஈழ மண்ணில் கொத்து குண்டுகளால் தமிழர்கள் கொத்து கொத்தாக, குவியல் குவியலாகவே செத்தார்கள்.

தமிழகத்தில் பெரும் கதறல் ஏற்பட்டது. போராட்டம் வெடித்தது. அப்போதுகூட எந்த இளைஞனும். இயக்கமும் இப்படியான பயங்கரவாத வேலைகளை செய்யவில்லை.
சிவகுமாரன் முத்துகுமாரைப்போல் தன்னுயிரைத்தான் மாய்த்துகொண்டார்கள். முத்துகுமாரின் இறுதி ஊர்வலத்தின் போதுகூட அரசு அடக்குமுறையை ஏவியது. கல்லூரி விடுதிகளை நல்லிரவில் முடி அந்த இளைஞர்களை வீதிக்கு கொண்டு வந்தது. போராட்டத்தற்கு பிறகு அந்த நேரத்திற்கு இல்லை என்று மறுத்துவிட்டு மீண்டும் கல்லூரிகளை இழுத்து மூடியது. அப்போது யாரும் உணர்ச்சிவசப்பட்டுகூட 'இப்படியான குண்டுவெடிப்பு பயங்கரவாத செயலில் ஈடுபடவில்லை என்பதை மட்டுமல்ல... இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.

தீவிரவாதத்தை கண்காணிக்கும் மாநில கியூ பிரிவும், சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்த நிறுத்தவே பாடுபடும் உளவு பிரிவு போலீஸம் இந்த குண்டு வெடிப்பு வழக்கில் இவ்வளவு தூரம் இறக்கை கட்டி பறப்பதேன். சில மாதங்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு தனி ரயிலயே ஒருவன் கடத்தி சென்றான். ஓட்டிச் சென்ற ரயில் அனைத்து சிக்னல்களையும் மீறி சென்று வியாசர்பாடி ரயில் நிறுத்தத்தில் பெரும் விபத்தோடு கவிழ்ந்தது. நான்கு பேர் அதில் உயிர் இழந்தார்கள். அந்த நேரம் எதிரே எந்த ரயிலும் வரவில்லை. வந்திருந்தால் 'மோதல்' மூலம் மேலும் பெரும்
உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கும். அந்த சம்பவத்திற்கு நேரில் சென்றாரா உளவுத்துறை அதிகாரி. ஏதாவது உடனடி கருத்தை சொன்னாரா? ஏன்? ஏனென்றால், வியாசர்பாடி விபத்து எதேச்சையாக நடந்தது. அதாவது நடத்தியவன் திட்டமிட்டபடி நடந்தது. அதனால் அதில் என்ன எப்படி முடிவெடுப்பது என்ற 'தெளிவு' காவல்துறை வீரர்களுக்கு இல்லை. ஆனால் விழுப்புரம் குண்டு வெடிப்பு 'சிலரால்' திட்டமிடப்பட்டது. திட்டமிட்டபடி நேரடியாக 'விளக்க' வந்துள்ளார்கள். இந்த வித்தியாசத்தையும் கவனிக்க வேண்டும். மற்றொரு காரணத்தையும்
பார்க்க வேண்டும். உண்மையில் பெரிய அசம்பாவிதம், விரவாதம் என்று நடக்கும் போதெல்லாம் 'அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை' என்று பூசி மெழுகுவதையேதான் காவல்துறை செய்யும். அதாவது சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடவில்லை. சுமூகமாக இருக்கிறது என்று காட்டிக்கொள்ளவே முனைப்பு காட்டும். ஊடகங்கள் பெரிதாக வெளிப்படுத்தினால் எரிச்சல்படும் போலீஸ். ஆனால் விழுப்புரம் குண்டு வெடிப்பு சம்பவத்தில் நேரெதிராக உள்ளது. மாநில அரசு, காவல்துறை கட்டமைப்பு வரிந்துகட்டிகொண்டு 'ஆமாம், குண்டு வெடிச்சதுததான். இது புலி ஆதரவாளர்கள்தான்' என்று கூப்பாடு போடுவதிலிருந்தே 'என் அப்பன் குதிருக்குள் இல்லை' என்று வலிந்து போய் சொல்லும் கதையை நினைவு படுத்துகிறது. முதர்வர் கருணாநிதியின் 'வாழ்நாள் கனவான' உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடக்க இன்னும் ஒரு வாரமே இருக்கின்ற நேரத்தில், உண்மையிலே
குண்டு வெடிப்பு நடந்திருந்தால் உளவுத்துறை ஐ.ஜி. பர்சேட்டின் டவுசரை கழட்டியிருப்பார் கருணாநிதி. மாநாட்டிற்கு யார் எந்த நம்பிக்கையில் வருவார்கள். எந்த நம்பிக்கையில் ரயில் மற்றும் பேருந்துகளில் ஏறி கோவைக்கு வருவார்கள் என்று தறியிருப்பார். ஆக இந்த நேரத்தில் 'நாடு நன்றாக இருக்கிறது' என்றே காட்ட முனைவார்கள். அப்படியிருக்க 'குண்டு வெடித்து. அது புலிகளின் ஆதரவு அமைப்புதான் செய்தது' என்று சொல்கிறார்கள் என்றால் என்ன பொருள். அவர்கள் திட்டமிட்டது என்று அர்த்தம். உண்மையில் ஈழ ஆதரவாளர்கள் யாரும் அப்படி செய்ய மாட்டார்கள் என்று மக்கள் நம்புவார்கள். அதனால் கோவை செம்மொழி மாநாட்டுக்கு எந்த சிக்கலும் வந்துவிடாது என்று அரசே 'தெளிவு'கொண்டிருப்பதாகத்தான் அர்த்தம். மூன்று நாட்களாக சட்டவிரோத தடுப்பில் வைத்து ரகசிய சாரணைக்குள்ளாகியிருக்கும் எட்டு இளைஞர்களின் தரப்பாக நீதிமன்றத்தை நாடும் வழக்கறிஞர் கண்ணனிடம் பேசியபோது... ''அந்த எட்டு நபர்களையும் எப்போது எங்கே கைது செய்து அழைத்து சென்றார்கள் என்று தெரியாது. சிலரை வீட்டில் இருந்து
அழைத்து சென்றிருக்கிறார்கள். மற்றபடி எங்கே வைத்துள்ளார்கள். அவர்களின் நிலை என்ன என்பது குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை. அவரவர் வீட்டாருக்குகூட தெரிவிக்கவில்லை. வழுக்றிஞர் என்ற முறையில் நான் முயற்சி எடுத்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசியும் பயனில்லை. இந்த குண்டு வெடிப்பு வழக்கில் இவர்கள் ஈடுபடவில்லை. ஈழ ஆதரவு தரப்பினர் யாருமே ஈடுபடவில்லை. அப்படி செய்யவும் மாட்டார்கள் என்பதுதான் வழக்கறிஞர்களின் கருத்து. அப்படி அசம்பாவிதம் செய்வதால் ஈழ ஆதரவாளர்களுக்கு ஆதாயம் ஏதும் இல்லை. மக்கள் வெறுப்பார்கள். இழப்புதான். ஆனால் ராஜபக்சேவுக்கும், காங்கிரஸ் தரப்புக்கும் இதில் பெரிய நலன் இருக்கிறது. ஆகவே அவர்கள் செய்திருக்கதான் அதிக வாய்ப்பு. அதுதான் எங்களின் எதிர் புகார்.

குறிப்பாக காங்கரிஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அசன்அலியின் பங்கு இந்த குண்டு வெடிப்பில் இருக்கிறது. அதற்கான ஆதாரம் உள்ளது. உறுதியாக கூறுகின்றோம். சாட்சிகள் மறைக்கப்படும், விசாணை போக்கு மாறிவிடக்கூடும் என்பதால் இப்போது மக்கள் மத்தியில் வெளிப்படையாக சொல்ல முடியாது. சரியான நேரத்தில் அதை அம்பளப்படுத்துவோம். ஆனால் அசன் அலியின் கடந்த காலங்களை பார்த்தாலே தெரியும். அவர் இங்கே ராஜபக்சேவின் ஏஜன்ட்டாகதான் வேலை செய்தார். நான் ராஜபக்சேவின் நண்பர்தான் என்றார். அந்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக இங்கே பல வேலைகளை செய்தவர்.அப்போது இலங்கை துணை தூதர் அம்சாவுடன் சேர்ந்துகொண்டு பத்திரிகைளார்களை வளைத்து அவர்களுக்கு 'அன்பளிப்பு, நிதியுதவி' என்று ஏற்பாடு செய்து கொடுக்க உதவியாக இருந்தவர். ராஜபக்சேவின் திட்டத்திற்கு ஏற்ப இங்கே முக்கிய அதிகாரிகளை சந்தித்து அவர்களுக்கு ஆதரவாக காய் நகர்த்தியவர். தமிழக முதல்வரை சந்தித்து ஈழ ஆதரவு போராட்டத்தை நசுக்க மாற்றுவழி திட்டம் இருப்பதாக சொன்னவர். அப்படியான காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ அசன் அலி மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. அதற்கான ஆதாரத்தோடு புகார் கொடுக்கின்றோம். இந்த வழக்கில் அவரை விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் ஒன்று சேர்ந்து புகார் கொடுக்க இருக்கின்றாம்.'' என்று கூறினார். இந்த பின்னணியை வைத்து பார்க்கும் போது விழுப்புரம் ரயில் தண்டவாள குண்டு வெடிப்பு வழக்கு காங்கிரஸின் 'ஆசைகளுக்கு' ஏற்ப நடந்தேறியிருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

நன்றி- அதிர்வு

Read more...

தமிழர்க்கெதிரான அடக்குமுறையை வீழ்த்துவோம்...

தமிழகத்தில் விழுப்புரம் இருப்புப்பாதை தகர்ப்பு விவகாரத்தில் மகிந்த ராஜபக்சேவின் நெருங்கிய நண்பரும் இராமநாதபுரம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ஹசன் அலிக்கு தொடர்ப்பு இருப்பதாக, விழுப்புரம் சரக காவல்துறை உயரதிகாரியிடம் சட்டத்தரணிகள் ஐவர் புகார் மனு கொடுத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு விழுப்புரம் அருகே ரயில் இருப்புப்பாதையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதை முன்கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக தமிழக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யிடம், தண்டவாள தகர்ப்பில் ஈழத்தமிழர் ஆதரவாளர்களுக்கு தொடர்பு இல்லை. விழுப்புரம் அருகே தண்டவாளம் தகர்ப்பில் காங்கிரஸ் எம்எல்ஏ அசன் அலிக்கு, தொடர்பு உள்ளது என்றும், அதற்கான ஆதாரங்கள் தங்களி‌டம் இருப்பதாகவும். ஆனால் அதை வெளியிட்டால் வழக்கின் புலன் விசாரணைக்கு பாதகமாகிவிடும் என்று வழுக்கறிஞர்கள் 5 பேர் புகார் மனு கொடுத்துள்ளனர்.
இராஜபட்சேவுக்கும் அசன் அலிக்குமிடையே உள்ள தொடர்பு நாம் அறிந்ததே...
அடக்குமுறையை ஈழத்தை தொடர்ந்து தமிழகத்திலும் கொண்டுவர முயலும் காங்கிரசை வீழ்த்துவோம்...

Read more...

அயல்வீட்டில் அழுகுரலும் சாம்பல்மேடும் ஆனால், அக்கினி குண்டத்தில் செம்மொழி மாநாடு?

உணர்வாரா கலைஞர்?:
தமிழ் கூறும் நல்லுலகு இதுவரை 8 உலக தமிழர் மாநாட்டினைக் கண்டுள்ளது. உலகத் தமிழர் மாநாடு நடத்தப்படுவது தொடர்பாக முடிவு செய்ய வேண்டியது உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகம் ஆகும் இப்போது அதன் தலைவராக இருப்பவர் ஜப்பானைச் சேர்ந்த மொழியியல் அறிஞரான நொபாரு கராஷிமா.

(International Association of Tamil Reasearch) உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகத்துடன் எவ்வித கலந்துரையாடலையும் செய்யாது ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு கோவையில் ஜனவரி மாதம் 2010 ஆண்டு நடத்த உள்ளதாக நவம்பர் மாதம் 2009 ம் ஆண்டு தன்னிச்சையாக அறிவித்தார் தமிழகத்தின் முதலைமைச்சர் கருணாநிதி இது மரபுக்கு மாறானது. கடந்த 8 உலகத் தமிழர் மாநாடு நடைபெறும் திகதி மற்றும் இடம் போன்றவற்றை உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகமே அறிவித்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து கருணாநிதிக்கு பல்வேறு தமிழ் தரப்புக்களிலிருந்தும் எதிர்ப்புக்கள் வெளிவரத் தொடங்கின.

இது சம்மந்தமாக பல்வேறுவிதமான வாதபிரதிவாதங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருந்த பொழுது உலகத் தமிழ் ஆராய்ச்சி கழககத்தின் தலைவரான ஜப்பானைச் சேர்ந்த மொழியியல் அறிஞரான நொபாரு கராஷிமா பல்வேறு தரப்பினரையும் கலந்தாலோசித்து விட்டு 2011 ம் ஆண்டில் வேண்டுமானால் உலகத் தமிழர் மாநாட்டைத் தமிழகத்தில் நடத்தலாம் இப்போது இரண்டு மாதக் காலத்தில் தமிழ் அறிஞர்களால் ஆராய்ச்சிக் கட்டுரைகளை தயாரித்து மாநாட்டில் சமர்ப்பிக்க போதிய நேரம் இல்லை என்று சொல்லிவிட்டார். இதனை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர் காரணம் யாதெனில் 2009 ம் ஆண்டு நவம்பர் மாதம் கருணாநிதி உலகத் தமிழ் மாநாடு 2010 ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கின்றார் இந்த 2 மாதக் காலத்தில் தமிழ் பேராசியர்களாலோ அல்லது அறிஞர்களாலோ ஆய்வுகளை மேற்கொள்ளவோ ஆய்வுக் கட்டுரைகளை மாநட்டில் சமர்ப்பிக்கவோ தேவையான கால அவகாசம் இல்லை என்பதால். ஆனால் கலைஞர் கருணாநிதிக்கு ஒரு விழா அவசரமாக தேவைப்பட்டது. அதற்கு பல்வேறு சுயலாப காரணங்கள் உண்டு அதனை பார்ப்பதற்கு முதல் உலகத் தமிழ் மாநாட்டின் பின்னனி பற்றியும் அதன் பெருமை பற்றியும் ஒரே கட்டுரையில் ஆழமாக பார்க்க முடியாவிட்டாலும் மேலோட்டமாக இக்கட்டுரை வாயிலாக அறிந்துக்கொள்ள முடியும்.

யாழ்ப்பாணம் கரம்பனில் 02-08-1913 ஆண்டு பிறந்த தனிநாயகம் என மக்களால் அறியப்பட்ட சேவியர் ஸ்தனிஸ்லாஸ் தனிநாயகம் அவர்களின் முயற்சியாலே தமிழ் ஆராய்ச்சிக் கழகம் தோற்றம் பெற்றது. 18-07-1981 ல் தனிநாயகம் அடிகளாருக்கு மாட்சி நயப்பு மலர் வெளியிடப்பட்டது அதில் பேராசிரியர் கா.பொ. இரத்தினம் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் தந்தையும் தாயும் தனிநாயகம் அடிகள் என்கிறார். அதுமட்டுமன்றி கலாநிதி சு. வித்தியானந்தன் அருள்திரு தனிநாயகம் நினைவு மலரில் (பக்கம்44) உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் ஸ்தாபகர் தனிநாயகம் அடிகள் என்கிறார். அத்துடன் கலாநிதி கமில்சுவல்லபில் தனிநாயம் அடிகள் உலகத் தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் ஞானத் தந்தை என்கிறார். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றமானது அரசியல் சார்பு கொண்டதாகவோ வர்த்தக நோக்கம் கொண்டதாகவோ இருக்க கூடாது என தொடகத்திலேயே யாப்பிலே குறிப்பிட்டுவிட்டார்கள. ஸ்தாபகர்கள் இல்லாத காலத்தில் கருணாநிதி போன்றோர் இதனை தமதும் தமது குடும்பத்தினதும் சுய லாபத்திற்கு பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற தீர்க்க தரிசனம் மிக்க பார்வை இருந்ததாலோ என்னவோ? இதுவரை தமிழகத்தை ஆண்ட எல்லாத் முதலைமைச்சர்களும் உலகத் தமிழர் மாநாட்டை நடத்தியுள்ளனர் தமிழின் காவலன் என் அவரது பக்கவாத்தியங்களால் புகழப்படும் கருணாநிதியைத் தவிர இவ்வாறு சொல்வதானது அவர் மீதான கோபம் என கருதிவிட வேண்டாம்.

அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்திருக்கின்றேன் முதலாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 16-04-1966 ம் ஆண்டு காலை 10.30 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள துங்கு அப்துல் ரகுமான் அரங்கிலே மலேசியப் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் தொடக்க உரையாற்றி ஆரம்பித்து வைத்தார். முதலாவது மாநாட்டில் 25 நாடுகளைச் சேர்ந்த 132 பேராளர்களும் 40 பார்வையாளர்களும் கலந்துக்கொண்டு 150 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன் மாநாட்டிற்குப் பின் அவற்றினை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இரண்டு தொகுப்புக்களாக வெளியிட்டனர். அறிஞர் அண்ணா தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த போது இரண்டாவது உலகத் தமிழர் மாநாடு 03-01-1968 ம் ஆண்டு சென்னை மெரீனா கடற்கரையில் இந்தியாவின் அன்றைய ஜனாதிபதி கலாநிதி ஜாகீர் உசேன் தொடக்க உரையாற்றி ஆரம்பித்து வைத்தார். இதில் முன்நாள் முதலைமைச்சர்களான கு. காமராசர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் உற்பட அப்போதைய தமிழக எதிர்கட்சியினரும் கலந்துக்கொண்டனர். மூன்றாவது உலகத் தமிழ் மாநாடு பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ்சில் 15-07-1970 அன்று தொடங்கியது. பாரிஸ்சில் நடைப்பெற்றதால் நிறையப்பேர் கலந்துக்கொள்ளவில்லை எனினும் 39 நாடுகளைச் சேர்ந்த 200 பேராளர்கள் அதில் கலந்துக்கொண்டனர் அதில் ஒருவர் கலைஞர் கருணாநிதி.

நான்காவது உலகத் தமிழ் மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைப்பெற்றது. யாழில் நடைப்பெற்ற மாநாடு பற்றி சற்று விரிவாக பார்ப்பதன் வாயிலாக சிங்கள பேரினவாத அரசு அந்தக் காலம் தொடக்கம் எவ்வாறு தமிழ் மக்களை அடக்கியாள முற்பட்டிருக்கின்றாhகள்; என்பதை நாம் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். அப்போது இலங்கையில் பிரதமர் ஆட்சியே இருந்தது. அன்றைய பிதமராக திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்கா பதவி வகித்தார். யாழ் மண்ணில் மாநாட்டை நடத்த சிங்கள அரசு அனுமதிக்கவில்லை. யாழ்ப்பாணத்திலே தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்வதால் அங்கே மாநாட்டினை நடத்தினால் இலங்கைத் தமிழர்களின் மொழித்திறன் நாகரீகம் பண்பாடு போன்றவற்றினை மாநாட்டிற்கு வருகைத் தரும் வெளிநாட்டு அறிஞர்கள் அறிந்துக்கொள்வர்கள் என்ற பயம் காரணமாகவும் அரசியல் ரீதியாக தமிழர்கள் பலம் பெறக் கூடும் என்பது போன்ற காரணங்களால் இலங்கை பேரினவாத அரசு இலங்கையில் நடத்த அனுமதியளிக்கவில்லை. இறுதியாக திருமதி. சிறிமாமோவோ பண்டாரநாயக்காவிற்கு அரசியல் நெருக்கடி வராது என உத்தரவாதம் அளிக்கப்பட்ட பின்னரே பேரினவாத அரசு அனுமதியளித்தது. மாநாட்டிற்கு வருகை தரவிண்ணப்பித்தவர்களில் ஏராளமானோருக்கு வீசா வழங்குவதை இழுத்தடித்த போதும் 20 நாடுகளில் இருந்து 197 பேராளர்கள் கலந்தக்கொண்டனர்.

இலங்கை அரசு சார்பில் ஒருவர் கூட பங்குபற்றவுமில்லை எதுவித உதவியினையும் செய்யவில்லை. நடந்து முடிந்த 8 மாநாட்டிலும் அரச ஆதரவுமின்றி அரச தரப்பின் பங்கு பங்குபற்றலும் இல்லாமல் நடந்த ஓரேயொரு மாநாடு 4வது மாநாடு மட்டுமே தமிழர் ஆராய்ச்சிக் கழகமே தனித்து நின்று நான்காவது மாநாட்டினை நடத்தியது. 03-01-1974 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள வீரசிங்கம் மண்டபத்தில் அருட்திரு. தனிநாயகம் அடிகள் தொடங்கி வைத்தார் உலகத் தமிழர் மாநாடானது தமிழரசுக்கட்சியின் மாநாடென்றும் அரச எதிப்புச் சக்திகளின் மாநாடு என்றும் அன்றைய அமைச்சராக இருந்த தமிழரான சூரியகுமார் மற்றும் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா போன்றோர் பிரச்சாரம் செய்தும் கூட யாழ் மண்ணில் உலகத் தமிழர் மாநாடு நடத்தப்படுவதை அறிந்த மக்கள் மகிழ்ச்சி களிப்பில் யாழ்நகரையே அலங்கரித்தனர். நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது; நடக்க இருக்கும் விபரீதம் பேரினவாத அரசிற்கும் தமிழர்களாய் பிறந்து அவர்களுக்கு சேவகம் செய்யும் அடிவருடிகளையும் தவிர வேறு யாருக்குத் தெரியும்? மாநாடு நடப்பதற்கு எல்லா வழிகளிலும் இடைஞ்சலை ஏற்படுத்தியும் அது வெற்றிகரமாக நடந்ததை சகித்துக்கொள்ள முடியாத பேரினவாத அரசின் பணிப்பின் பேரில் அந்தக் கோரச்சம்பவம நடந்தேறியது. மாநாட்டிற்கு வந்தவர்களை வழியனுப்புவதற்கான ஏற்பாடுகள் 10 ம் திகதி செய்யப்பட்டுக்கொண்டிருந்தன. இதற்கென அரங்கு பதிவுசெய்யப்பட்டிருந்த போதிலும் மைதானத்தின் வாசல் பூட்டப்பட்டிருந்தது.

யாழ் மேயர் அல்பிரட் துரையப்பாவிடமிருந்து கடிதம் கொண்டுவந்தால் மட்டுமே வாசலை திறக்க முடியுமென கிளிபிள்ளையைப் போல் காவலாளி பதில் சொல்லி விட்டார். அல்பிரட் துரையப்பாவை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. நிலையில் இதனால் வீரசிங்கம் மண்டபம் முன்னால் அவசரமாக மேடை ஒன்று அமைக்கப்பட்டது. 50000 மக்கள் கூட்டம் குழுமியிருந்தது பேராசிரியா நெய்னார் முகமது உரையாற்றிக்கொண்டிருந்தார். இரவு 8 மணிக்கு போலிஸ் உதவி அத்தியட்சகர் போலிஸ் பட்டாளத்தோடு வந்து மக்களை கலைந்து செல்லுமாறு ஒலிபெருக்கியில் அறிவித்தார். குழப்பம் செய்ய வேண்டாம் அமைதியான முறையிலேயே தாம் கூட்டம் கூட்டுவதாக மக்கள் கேட்ட உடன் கண்ணீர் புகைத் தாக்குதலை நடத்தி மக்கள் மீது தடியடி தாக்குதலை போலீசார் நடத்தியதுடன் துப்பாக்கி பிரயோகமும் செய்தனர். இதனை சற்றும் எதிர்பாராத மக்கள் கூட்டம் கலைந்தோடியதில் ஏராளமானோர் காயப்பட்டனர். துப்பாக்கி பிரயோகத்த்தால் மின்சாரக் கம்பி அறுந்து வீழ்ந்ததில் மின்சாரம் தாக்கி 7 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர் 2 பேர் நசுங்கிச் செத்தனர். நிராயுதபாணிகளான அப்பாவி பொது மக்களை கொன்றொழித்த காவற் துறை அதிகாரிக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டது.

மக்களே போலீசாரை தாக்கினர் என திருமதி. சிறிமா பாராளுமன்றத்தல் அறிவித்ததுடன் இறந்தவர்களுக்காக மரியாதை நிமித்தமேனும் அனுதாபம் தெரிவிக்கவில்லை. ஐந்தாவது மாநாடு ஆபிரிக்காவிலே நடாத்த திட்டமிட்டிருந்த போது அன்றைய தமிழக முதலைமைச்சர் எம். ஜி. ஆர் கேட்டுக்கொண்டதற்கிணங்க தமிழக மாவட்டங்களில் ஒன்றான மதுரையில் 04-01-1981 அன்று அன்றைய தமிழக ஆளுனர் ஜனாப். சாதிக் அலி தொடங்கிவைத்தார். 20 நாடுகளில் இருந்து 800 பேராளர்கள் கலந்துக்கொண்டனர். இதில் சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது. அப்போதைய இந்தியப் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி 5வது மாநாட்டிலே கலந்து கொண்டிருந்தார். தமிழகத்தின் பலம் பொருந்திய முதலமைச்சராக இருந்த எம். ஜி. ஆர் உலகத் தமிழர் மாநாட்டை தமிழத்திலே நடத்தும் படி உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தைக் கேட்டாரே தவிர கருணாநிதி செய்தது போல உலகத் தமிழ மாநாடு நடைபெறும் என தன்னிச்சையாக அறிவிக்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. ஆறாவது மாநாடு மலேசிய அரசின் ஒத்துழைப்புடன் மலேசியாவில் 19-11-1987 அன்று மலேசிய பிரதம மந்திரி மகாதீர் அகமது தொடங்கிவைத்தார். இதில் தமிழ் நாட்டில் இருந்து கலந்து கொள்ள சென்றவர்களில் கருணாநிதியும் ஒருவர்.

6வது மாநாட்டிலே 2000 பேராளர்கள் கலந்து கொண்டனர் 250 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது. 650 பக்கம் கொண்ட விழா மலர் ஒன்று வெளியிடப்பட்டது. எழாவது மாநடு மொரீஷியஸ் தீவின் தலைநகரான லூயிலில் 04-12-1989 அன்று நடைப்பெற்றது. 7வது மாநாட்டில் மொரீஷியஸ் பிரதமர் அனுரூட் ஜெகந்நாத் கலந்து கொண்டார். 28 நாடுகளில் இருந்து 300 பேராளர்கள் கலந்தக் கொண்டனர். 7வது மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து 81 கட்டுரைகள் தனித் தனித் நூலாக 8வது மாநாட்டிலே வெளியிடப்பட்டது. எட்டாவது மாநாடு தமிழக நகரங்களில் ஒன்றான தஞ்சை மாவட்டத்தல் 01-01-1995 அன்று நடைப்பெற்றது. 8வது மாநாட்டில் அன்றைய இந்திய துணை ஜனாதிபதி கே. ஆர் நாராயணன் மற்றும் இந்தியப் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் ஆகியோர் கலந்துக் கொண்டார். 8வது மாநாடு தமிழகத்தின் அன்றைய முதலைமைச்சர் ஜெ. ஜெயலலிதா தலைமையில் நடந்தது. ஆக மொத்தத்தில் தமிழத்தை ஆண்ட எல்லா முதலைமைச்சர்களும் உலகத் தமிழர் மாநாட்டை நடாத்தியுள்ளனர் கலைஞர் கருணாநிதியைத் தவிர. இந்த நிலையிலேயே உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகத்துடன் எவ்வித கலந்துரையாடலையும் செய்யாது ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு கோவையில் ஜனவரி மாதம் 2010 ஆண்டு நடத்த உள்ளதாக கடந்த வருடம் நவம்பர் மாதம் தன்னிச்சையாக அறிவித்தார் தமிழகத்தின் முதலைமைச்சர் கருணாநிதி.

கடந்த வருடம் மே மாதம் 18 ம் திகதி வரையும் ஈழத்திலே தமிழர்கள் கொள்ளப்பட்டும் இலட்சசக் கணக்கான மக்கள் புனர்வாழ்வு நிலையம் என்ற பெயரிலே சிறைப்படுத்தியும் வைத்திருக்கும் போது கருணாநிதி வெளியிட்ட தன்னிச்சையான அறிவிப்பானது தமிழையும் தமிழர்களையும் நேசிக்கும் எல்லோரையும் கோபப்படுத்தியது.

* ஈழத்திலே நடந்த இன அழிப்பினை தடுத்து நிறுத்தக் கூடிய அரசியல் பலம் இருந்தும் அதனைச செய்யாது விட்டதுடன் தமிழ் மக்களது விடுதலைப் போரைத் தோற்கடிக்க இந்திய அரசு தீட்டிய சதித் திட்டத்துக்குப் பங்காளியாக இருந்த முதல்வர் கருணாநிதி, ஆளும் கட்சியாக இருந்துக்கொண்டே மனிதச் சங்கிலி போராட்டம் பதவி விலகல், பொதுக் கூட்டம், தந்தி, கடிதம் என்ற நீண்ட நாடகத்தின் உச்சக்கட்டமாக உண்ணாவிரதம் என்றும் நாடகமாடியதுடன் ஈழத்திலே போர் நிறுத்தப்பட்டுவிட்டது என மிகப் பெரிய பொய்யைச் சொன்னதுடன் அவருக்கிருக்கும் ஊடக பலத்தை வைத்து சாதாரண தமிழக மக்களை நம்ப வைத்தவர் உலகத் தமிழ் மாநாட்டினை நடாத்த முனைந்ததானது.......?

அவருக்கும் அவரது வாரிசுகளுக்கும் மட்டுமே நன்மை பயக்குமே தவிர தமிழுக்கு ஒன்றும் செய்துவிடப் போவதில்லையென்ற கருத்துருவாக்கம் தமிழ் ஆர்வலர்களிடையே இருக்கின்றது. அவரது அரசியல் மற்றும் பண பலத்தின் மூலம் அவரது செம்மொழி மாநாட்டினை வெற்றிகரமாக நடாத்தி முடிக்கலாம்.

தமிழையும் தமிழர்களையும் அழிக்க ஸ்ரீலங்கா அரசுடன் கை கோர்த்ததுடன் மட்டுமன்றி அதனை வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்ட இத்தாலிய நாட்டை தாயகமாக கொண்ட சோனியாவே தொடங்கியும் வைக்கலாம.; இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சிறப்பு விருந்தினராக கூட கலந்;து கொள்ளலாம். இலங்கையின் வெளிநாட்டமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூட தமிழ் மொழியின் சிறப்பு பற்றி செம்மொழி மாநாட்டில் பேசினால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை தமிழ் சமூகமே செத்த வீட்டில் இருக்கும் மனநிலையில் தவித்துக் கொண்டிருக்கையில் முதல்வர் கருணாநிதி மேளம் கொட்டி தாலி கட்டும் வைபவத்தை நடத்திப் பார்க்க முயல்கிறார் என்று தமிழ் படைப்பாளிகள் கழகம் கலைஞரின் செமமொழி மாகாநாட்டை விமர்சித்துள்ளது.

* ஸ்ரீலங்கா இராணுவம் மேற்கொண்ட இனவழிப்புப் போரில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரில் மட்டும் 20,000 க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருந்த போது முதல்வர் கருணாநிதி டெல்லியில் கூடாரமிட்டு மகனுக்கும் மகளுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவிக்காகப் பேரம் பேசிய வரலாற்று துரோகத்தை வரலாறு நிச்சயம் மன்னிக்காது.

இந்த வரலாற்று துரோகத்தை மறைக்கவும் தனது காலத்திலும் உலகத் தமிழர் மாநாட்டினை தாம் நடத்தியதாக வரலாற்றிலே இடம் பிடிக்கவும் தனது வாரிசு அரசிலுக்கு தமிழ் உலகத்தின் அங்கீகாரத்திற்மே அவசரம் அவசரமாக உலகத் தமிழர் மாநாடு நடத்தப்படுமென தன்னிச்சையாக அறிவித்தார். அது முடியாது போகவே செமமொழி மாநாட்டினை நடத்துவதென அறிவித்து வேலைகள் மும்முரமாக நடந்துக்கொண்டிருக்கின்றார். உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகம் (International Association of Tamil Reasearch) துணைத் தலைவராக இருக்கும் கலாநிதி வா.செ.குழந்தைசாமியையும் பொருளாளர் இரா. முத்துக்குமாரசாமியையும் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுப்புராயலுவையும்; அறிஞர் ஐராவதம் மகாதேவனையும் வைத்து முதல்வர் கருணாநிதி செமமொழி மாநாட்டை நடத்த முயல்கிறார். இவர்கள் தமிழகத் தமிழர் என்பதால் முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கிணங்க செயற்படுகிறார்கள். தமிழறிஞர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி “தற்போதுள்ள தமிழ் அரசியல் சூழ்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்பது பொருத்தமற்றது” என பி.பி.சி தமிழோசைக்கு பேட்டியளித்திருந்தார். அதன் பின்னர் பங்குபற்ற போவதாக ஊடகங்களுக்கு சொல்லியுள்ளார். செம்மொழி மாநாட்டிற்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில் அவர் எவ்வாறான முடிவை எடுக்கப் போகிறார் எனத் தமிழ் உலகம் எதிர்பார்த்துக்கொண்டு உள்ளது.

ஏலவே உலகத் தமிழர் மாநாட்டிற்கு சென்ற பேராசிரியார் கார்த்திகேசு சிவத்தம்பியை பார்வதியம்மாவை போல புலி ஆதரவாளர் என விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பபட்டதை அவர் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு அறிவுரை கூறும் அருகதை எமக்கு இல்லை. எனினும் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என தாழ்மையோடும் அதே வேளை உரிமையோடும் வேண்டுகோள் விடுக்கலாம் என கருதுகிறேன். கடந்த 30-12-09 அன்று முரசொலி நாளிதழில் செம்மொழி மாநாட்டில் கலந்துக்கொள்வோரின் விபரம் வெளிவந்தது. செம்மொழி மாநாடு நடத்தும் அவர்களுக்கு வெப்சைட் ஈ;-மெயில் தபால் போன்ற சொற்களுக்கு இருக்கும் அழகிய தமிழ் சொற்கள் தெரியாது போலும். அதனை விட்டுவிடுவோம் நாடு தெரியாதோர் 4 பேர் விண்ணப்பித்ததாக இருக்கிறது. எந்த நாடு என்றே தெரியாதவர்களின் விண்ணப்பங்களைக் கூட ஏற்றுக்கொண்டிருக்கின்றார்களா? யாரும் கலந்தக்கொள்ளலாம் எதனையும் எழுதி அனுப்பலாம் என தமிழகம் எங்கும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள். இப்போது ஏ.ஆர் ரகுமானை வைத்து செம்மொழி மாநாட்டிற்கு பாட்டிற்கு இசையமைக்கப்பட்டு ஒலிபரப்பப்படுகிறது.

தமிழ் கூறும் நல்லுலகின் பேராளர்களும் மாமேதைகளும் தமிழ் ஆராய்சியாளர்களும் சேர்ந்து நடாத்தும் உலகத் தமிழர் மாநாடு எங்கே?

கருணநிதியின் குடும்பக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் நடாத்தும் பெயர் ஊர் தெரியாதவர்கள் பங்கு கொள்ளும் செம்மொழி மாநாடு எங்கே?

தமிழகத்தைச் சில தமிழ் கல்வியாளர்களும் ஈழத் தமிழ் ஆதரவாளாகளும் செம்மொழி மாநாட்டை புறக்கனித்துள்ள இவ் வேளையில் உலகெங்குமுள்ள தமிழ் உதிரக்கொடி உறவுகளும் ஈழப் போரில் ஆகுதியாகிப் போன நம் உறவுகளுக்காக புறக்கணிக்க வேண்டும். கருணாநிதி ஈழத் தமிழருக்கு செய்த வரலாற்று துரோகத்தை மறக்காமல் இருப்போம். செம்மொழி மாநாட்டில் கருணாநிதியின் புகழ் பாட சில மிகவும் பிரபலமான திரையுலக கவிஞர்கள் இருக்கின்றார்கள். அவரது பக்கவாத்தியங்களும் இருக்கின்றார்கள்.

* தமிழகத்தில் செம்மொழி மாநாட்டை புறக்கனிக்கும் தமிழக உறவுகளோடு உலகெங்குமுள்ள உறவுகளே கைகோருங்கள். தான் செய்த வரலாற்றுத் துரோகத்தை மறைக்க முற்படும் கருணாநிதிக்கு சாரளம் வீசுகின்றவர்களை புலம்பெயர் நாடுகளில் நடைபெரும் வைபவங்களுக்கு அழைக்காமலிக்க திடசங்கட்பம் பூணவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

* வன்னி போர் வெற்றியினைக் கொண்டாட சின்னத் திரையுலகினரை இலங்கை அரசிற்கு ஒழுங்கு செய்து கொடுத்த தன்னை அன்பு அறிவிப்பாளர் என அழைத்துக் கொள்ளும் பி.எச. அப்துல்ஹமீதே செம்மொழி மாநாட்டினை தொகுத்து வழங்க போகிறார். தமிழை வளாப்பதாக சொல்லிக்கொள்ளும் கருணாநிதி; மற்றும் அப்துல் ஹமீத் போன்றவர்கள் தமிழால் அவர்களே வளர்கின்றார்கள் என்பதே யதார்த்தமாகும்.

* தமிழகத்தின் மேடைகளில தமிழில் முழங்கி பணம் உழைக்கும் அப்துல் ஹமீத்திடம் ஈழப்போர் பற்றி சின்னத்திரை நடிகர்கள் கேட்டபோது அது ஒரு மூளையில் நடக்கிறது நாம் ஒரு மூளையில் இருக்கின்றோம் என்று சாவசாதரரணமாக பதில் அளித்துள்ளார் இவ்வாறானவாகளையும் செம்மொழி மாநாட்டிலே பங்கெடுப்பவாகளையும் உலகத் தமிழர்கள் ஓரம் கட்டும் படச்சத்தில் இனிவரும் காலங்களில் இவ்வாறான பச்சோந்திகளை தலையெடுக்காமல் தடுக்கமுடியும்.

தென்னாசியவிலிருந்து இளையவன்

Read more...

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP