தமிழர்க்கெதிரான அடக்குமுறையை வீழ்த்துவோம்...

தமிழகத்தில் விழுப்புரம் இருப்புப்பாதை தகர்ப்பு விவகாரத்தில் மகிந்த ராஜபக்சேவின் நெருங்கிய நண்பரும் இராமநாதபுரம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ஹசன் அலிக்கு தொடர்ப்பு இருப்பதாக, விழுப்புரம் சரக காவல்துறை உயரதிகாரியிடம் சட்டத்தரணிகள் ஐவர் புகார் மனு கொடுத்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு விழுப்புரம் அருகே ரயில் இருப்புப்பாதையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதை முன்கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக தமிழக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யிடம், தண்டவாள தகர்ப்பில் ஈழத்தமிழர் ஆதரவாளர்களுக்கு தொடர்பு இல்லை. விழுப்புரம் அருகே தண்டவாளம் தகர்ப்பில் காங்கிரஸ் எம்எல்ஏ அசன் அலிக்கு, தொடர்பு உள்ளது என்றும், அதற்கான ஆதாரங்கள் தங்களி‌டம் இருப்பதாகவும். ஆனால் அதை வெளியிட்டால் வழக்கின் புலன் விசாரணைக்கு பாதகமாகிவிடும் என்று வழுக்கறிஞர்கள் 5 பேர் புகார் மனு கொடுத்துள்ளனர்.
இராஜபட்சேவுக்கும் அசன் அலிக்குமிடையே உள்ள தொடர்பு நாம் அறிந்ததே...
அடக்குமுறையை ஈழத்தை தொடர்ந்து தமிழகத்திலும் கொண்டுவர முயலும் காங்கிரசை வீழ்த்துவோம்...

0 comments:

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP