ரத்தவெறிபிடித்த சிங்களர்களால் சிதைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்கள்

இலங்கையில் உள்ள ராணுவ வதை முகாமில் தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று நிர்வானமாக்கி, தலையில் சுடும் காட்சிகளை லண்டனில் உள்ள சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டது.

இந்நிலையில் இலங்கை இராணுவம் ஈழத்தமிழர்களை கொன்று பெண்களையும் இளைஞர்களையும் முழுநிர்வாணமாக்கி புகைப்படங்களை எடுத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.




இப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. விமான ஓடுபாதையில் இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.

இது அனுராதபுரம் வான் தாக்குதலாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இறந்த போராளியின் மீது தனது பூட்ஸ் காலை வைத்து இலங்கை இராணுவம் புகைப்படம் எடுத்துள்ளது.

இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தவேண்டாம். ஒரு குழிக்குள்ளாவது போட்டு புதைத்திருக்கலாம். அப்படி செய்யாமல் காக்கா,குருவி கொத்தித்தின்ன அப்படியே போட்டு வைத்திருக்கிறார்கள்.

ஆனால் இறந்த உடலத்தை நிர்வானமாக்கிப் பார்க்கும் சாக்கடைப் புத்தி உலகிலேயே சிங்கள இனத்திற்கு மட்டும் தான் இருக்கும் என்று ஈழ ஆதரவாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.

Read more...

தமிழகமெங்கும் நாளை (26.08.09) ”தமிழ்த் தேசிய எழுச்சி நாள்” போராட்டங்கள்

ஆகஸ்ட் 25 ஆம் நாள் பண்டார வன்னியனின் நினைவுநாள்.



தமிழகமெங்கும் நாளை 26.08.09 அன்று”தமிழ்த் தேசிய எழுச்சி நாள்” கடைப்பிடிக்கப்படுகி்ன்றது. இந்நாளில்ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், தெருமுனைக் கூட்டங்கள், பிரச்சார இயக்கங்கள் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


கடந்த சூலை மாதம் திருச்சியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ”தமிழ்த்தேசியம்” சிறப்புமாநாட்டில், ஆகஸ்ட் 26 ஆம் நாளை தமிழ்நாட்டுத் தமிழர்கள் ”தமிழ்த் தேசிய எழுச்சி நாளா”க கடைபிடிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. தமிழக இழந்த உரிமைகளை மீட்கவும், ஈழ விடுதலைக்கு துணை நிற்கவும் உறுதி ஏற்றுக் கொள்ளும் நாளாக இந்நாள் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென அத்தீர்மானத்தில் வலியுறுத்தியிருந்தது.

அதன்படி நாளை தமிழ்த் தேசியஎழுச்சி நாள் தமிழகமெங்கும் கடைப்பிடிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் இந்நாளில் போராட்டங்கள் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கின்றன.

தஞ்சையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் பேரணியும் ஆர்ப்பாட்டமும்
நடக்கவுள்ளது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர்
பெ.மணியரசன் தலைமை தாங்குகிறார்.

சென்னை நினைவரங்கத்தில் தமிழ்த்
தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாலை 4 மணியளவில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள்
ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. இவ்வார்ப்பட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்
கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் தலைமை தாங்குகிறார்.
இதில், திரைப்படப்பாடலாசிரியர் புலவர் புலமைப்பித்தன், சிவ.காளிதாசன் (தமிழ்த்
தேசிய விடுதலை இயக்கம்), தமிழ் வெப்துனியா இணையத்தின் ஆசிரியர் அய்யநாதன்,
த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் பழ.நல்.ஆறுமுகம், வழக்கறிஞர் இளவரசன், இளந்தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி உள்ளிட்டோர் உரை வீச்சு
நிகழ்த்துகின்றனர்.

ஈரோட்டில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் மருத்துவர் ச.அர.மணிபாரதி தலைமை தாங்குகிறார். மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் துணைத் தலைவர் கண.குறிஞ்சி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஈரோடு பொறுப்பாளர் மோகன்ராசு, பெரியார் திராவிடர் கழகம் குமரகுருபரன், சாதி ஒழிப்புக் கூட்டியக்கத்தின் அமைப்பாளர் இரத்தினசாமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். சேலம் ஆத்தூரில் இளந்தமிழர் இயக்கம் சார்பில் பேரணி - தெருமுனைக் கூட்டம் நடக்கவுள்ளது. இந்நிகழ்விற்கு, இளந்தமிழர் இயக்கம் ஆத்தூர் பொறுப்பாளர் க.ஆனந்த் தலைமை தாங்குகிறார். குடந்தைத் தமிழர் கழகம் அமைப்பாளர் ச.பேகன், பெரியார் திராவிடர் கழக ஆத்தூர் பொறுப்பாளர் சோ.மு.சண்முகம்,கவிஞர் ஆலா, ஓவியர்கள் கார்த்தி, மகேந்திரன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர்.

இதே போன்று நிகழ்ச்சிகள் ஈரோடு,சிதம்பரம், ஓசூர், மதுரை, திருத்துறைப்புண்டி, திருச்செந்தூர், புதுச்சேரி உள்ளிட்டபல இடங்களில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டம், பொதுக் கூட்டம்,கருத்தரங்கம் என நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிகழ்வுகளில் உணர்வாளர்கள்திரளாக கலந்து கொள்ளும்படி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஓகஸ்ட் 25 ஆம் நாள் பண்டார வன்னியனின் நினைவுநாள்.



ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன்.


இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. அந்த வன்னி இராசதானியின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தனது இறுதிமூச்சுவரை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான். ஓகஸ்ட் 25 ஆம் நாள் அம்மன்னனின் நினைவுநாளாக நினைவுகூரப்படுகிறது.

முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. அது நடுகல்லொன்றில் குறிப்பிடப்பட்ட நாளொன்றாக இருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் “பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான்” எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு). அக்கல்லில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நாளைத்தான் நீண்டகாலமாக அவனின் நினைவுநாளாகக் கொண்டாடி வந்தார்கள் தமிழர்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்தபின் இந்நினைவுநாள் மாற்றப்பட்டது. ஜெயசிக்குறு நடவடிக்கை தொடங்கப்பட்டபின் 1997 ஆம் ஆண்டில் பண்டார வன்னியின் நினைவுநாள் ஓகஸ்ட் 25 ஆம் நாள் என அறிவிக்கப்பட்டது.

ஓகஸ்ட் 25 இற்கும் பண்டார வன்னியனுக்கு என்ன தொடர்பு?

பண்டாரவன்னியன் அந்தக்காலத்தில் முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது வன்னிமை முற்றாகப் பறிபோய்விடவில்லை. பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது.

வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான். அத்தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றியதாக வரலாற்றுக் குறிப்புகளுண்டு. அந்தநாள்தான் ஓகஸ்ட் 25.
பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைமுகாமைத் தாக்கி பீரங்கிகளைக் கைப்பற்றிய நாளையே தற்போது பண்டாரவன்னியனின் நினைவுநாளாக நினைவுகூர்கின்றோம்.


சிறிலங்காவின் அரசபடைகள் முல்லைத்தீவில் அமைத்திருந்த பெரும் படைத்தளத்தைத் தாக்கி அங்கிருந்த இரண்டு ஆட்லறிப் பீரங்கிகளைக் கைப்பற்றினர் தமிழீழ விடுதலைப் புலிகள். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன்முதல் ஆட்லறிப்பீரங்கிகள் தமிழர் வசமானது அப்போதுதான். இது நடந்தது 1996 ஜூலை 18. அன்று கைப்பற்றப்பட்ட இரண்டு ஆட்லறிகளுடன் தொடங்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஆட்லறிப்படையணி படிப்படியாக வளர்ந்து மிகப்பெரும் படையணியாக மாறி வரலாற்றுச் சாதனைகளைப் படைத்தது. ஆட்லறிப் பீரங்கிகளின் எண்ணிக்கை பலமடங்காக உயர்ந்தது. அதன்பின் வந்த போர்க்களங்களில் ஆட்லறிகள் மிகப்பெரும் வெற்றியை ஈட்டித் தந்தன.

தொடக்கத்தில் கைப்பற்றப்பட்ட அந்த இரண்டு ஆட்லறிகளோடும் 900 எறிகணைகளோடும் புலிகள் தமது ஆட்லறிப் படையணியைத் தொடங்கினார்கள். முதற்கட்ட ஆட்லறித் தாக்குதல், ஜெயசிக்குறு தொடங்குவதற்குச் சிலநாட்களின் முன்பு வவுனியா ஜோசப் முகாம் மீது நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் இரவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலின் இழப்புக்களை படைத்தரப்பு மறைத்தாலும்கூட இரண்டாம் நாள் தாக்குதலில் அனைத்து எறிகணைகளும் முகாமுக்குள் வீழ்ந்தன என்பதும், படைத்தரப்புக்குக் கணிசமான இழப்பு ஏற்பட்டதென்பதும் மறுக்க முடியாத உண்மை.



அதன்பின் ஜெயசிக்குறு படைநடவடிக்கைக்கு எதிராக நடத்தப்பட்ட வலிந்த தாக்குதல்களில் புலிகள் தமது ஆட்லறிப் படையணியைப் பயன்படுத்தினார்கள். இடையில் புளுகுணாவ இராணுவ முகாமில் ஓர் ஆட்லறிப் பீரங்கியைக் கைப்பற்றினாலும்கூட, கிளிநொச்சி நகரைக் கைப்பற்றிய ஓயாத அலைகள்-2 நடவடிக்கை வரை, புலிகள் முல்லைத்தீவில் கைப்பற்றிய அவ்விரண்டு ஆட்லறிகளை மட்டுமே சமர்க்களங்களில் பயன்படுத்தி வந்தார்கள்.

விடுதலைப்புலிகளின் ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்கு மூலகாரணம் மாவீரர் கேணல் ராயு. ஆட்லறிகள் கைப்பற்றப்பட்டது தொடக்கம் மிக நுணுக்கமாக அப்படையணியை வளர்த்து வந்தார். அவர் இறக்கும்வரை ஆட்லறிப்படையணியின் வளர்ச்சிக்காக உழைத்துக்கொண்டே இருந்தார்.

விடுதலைப்புலிகளின் போரியல் வளர்ச்சிக்கும் சாதனைகளுக்கும் அறிவியல் ரீதியில் முக்கிய பணியாற்றியவர்களுள் கேணல் ராயு முக்கியமானவர்.

புலிகளின் ஆட்லறிப் படையணியானது சுயமாக வளர்ந்தது. அவர்களின் முதலாவது தாக்குதலிலேயே துல்லியத்தன்மையை நிரூபித்திருந்தார்கள். ஈழப்போரின் இறுதிநாள்வரை புலிகளின் ஆட்லறிப்படையணியின் துல்லியத்தன்மை எதிர்த்தரப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் ஆச்சரியமாகவுமே இருந்தது.

யாருடைய உதவியுமின்றி, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இரண்டு ஆட்லறிகளை வைத்துக்கொண்டு, அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட எறிகணைகளையும் வைத்துக்கொண்டு நுட்பங்களை உணர்ந்து, தாமாகவே கற்றுத் தேர்ந்து வளர்ந்ததுதான் புலிகளின் ஆட்லறிப்படையணி. இதன் பின்னணியில் கேணல் ராயுவின் உழைப்பு அபரிதமானது.

ஆட்லறிப்படையணி என்று மட்டுமன்றி, இயக்கத்தின் பல்வேறு துறைகளிலும் கேணல் ராயுவின் பங்களிப்புகள் அளவிடப்பட முடியாதவை.

தொடக்க காலத்திலிருந்தே புலிகள் சுய ஆயுத உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வந்தவர்கள். புலிகளின் பயன்பாட்டிலிருந்த 90 சதவீதக் கண்ணிவெடிகள் அவர்களின் சொந்தத் தயாரிப்புக்கள்தாம். போராட்டத் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்து சீரான வினியோகம் உறுதிப்படுத்தப்படும்வரை அவர்கள் பயன்படுத்திய மோட்டார் எறிகணைகள்கூட சொந்த உற்பத்தியே.

அவ்வகையில் படைக்கல உருவாக்கம், வடிவமைப்பு, உற்பத்தி என்பவற்றில் கேணல் ராயுவின் பங்களிப்பு நிறையவே உள்ளது. புலிகளின் பொறியியற்றுறைக்குப் பொறுப்பாக இருந்து பணியாற்றினார். கணிணி நுட்பப்பிரிவு, தமிழாக்கப்பிரிவு, திரைப்பட மொழிபெயர்ப்புப் பிரிவு என்பவை உட்பட அறிவியல் சார்ந்த துறைகளுக்குப் பொறுப்பாக இருந்தார். இயக்கத்தின் முக்கியமான வெடிமருந்து நிபுணராக இவரே விளங்கினார். கடற்கரும்புலித் தாக்குதல்கள், தரைக்கரும்புலித் தாக்குதல்கள், மறைமுகமான தாக்குதல்கள் என்பவற்றில் இவரின் வெடிமருந்து நிபுணத்துவம் பங்காற்றியிருந்தன.

விடுதலைப்புலிகளின் சிறப்புப் படையணியாக 'சிறுத்தைகள்' என்ற பெயரில் பெரும்படையொன்று உருவாக்கப்பட்டது. வருடக்கணக்கில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அப்படையணி உருவானது. கடற்சிறுத்தைகள் என்ற பெயரில் கடற்பிரிவொன்றும் இப்படையணியின் அங்கமாக வடிவம் பெற்றது. ஒட்டுமொத்தச் சிறுத்தைப்படையணி உருவாக்கமும் முழுமையாக கேணல் ராயுவின் தலைமையின் கீழ்தான் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மிகச்சிறந்த அறிவியலாளன், இயக்கத்தின் நுட்ப வளர்ச்சிக்குரிய ஆணிவேர், கேணல் ராயு புற்றுநோய்க்கு இரையாகிச் சாவடைந்தார். யுத்தம் ஓய்ந்து புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டு சில மாதங்களில் அவர் இறந்தார்.

இயக்கத்தின் ஆட்லறிப்படைப்பிரிவின் உருவாக்கம், வளர்ச்சி என்பவற்றில் முன்னின்றுழைத்த கேணல் ராயு, 2002 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25 ஆம் நாள்– ஆம்! பண்டாரவன்னியன் முல்லைத்தீவில் ஆங்கிலேயரின் பீரங்கிகளைக் கைப்பற்றி வெற்றிகொண்ட நினைவுநாளில்தான் - சாவடைந்தார். மாவீரர் கேணல் ராயுவுக்கு எமது அஞ்சலி.

நன்றி - எல்லாளன்

Read more...

கருணாநிதியை, ஈழத்தில் மண்ணோடு மண்ணாகும் ஆத்மாக்கள் மன்னிக்காது: இந்து மக்கள் கட்சி



குடும்பத்தை மேம்படுத்தவும், ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் இராஜதந்திரம் என்கிற பெயரில் நாடகமாடும் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியை, ஈழத்தில் மண்ணோடு மண்ணாகிக் கொண்டிருக்கும் அத்தனை ஆத்மாக்களும் மன்னிக்கவே மன்னிக்காது என்று இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக 'விகடன்' குழுமத்தின் 'ஜூனியர் விகடன்' வாரம் இருமுறை வெளியிட்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் நேர்காணல் பகுதி வருமாறு:

''தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது, அந்த இயக்கத் தலைவர்களின் படங்கள் மற்றும் கொடிகளைப் பயன்படுத்துவது சட்டப்படி தவறு. எந்த அமைப்பைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், இதனை மனதில் கொள்ள வேண்டும். மீறினால், சட்டப்படி கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும்!'' - திடீரென இப்படியரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.

வருகிற விநாயகர் சதுர்த்தியை 'தமிழீழ விநாயகர் சதுர்த்தி' தினமாக அறிவித்து, அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாகி இருக்கும் 'இந்து மக்கள் கட்சி'யை இந்த அறிவிப்பு கொந்தளிக்க வைத்திருக்கிறது.

அக்கட்சியின் தலைவரான அர்ஜூன் சம்பத்தை நாம் சந்தித்தபோது, ஆவேசமும் ஆதங்கமுமாக முதல்வர் கருணாநிதியை பொசுக்கி எடுக்கத் தொடங்கினார்.

''ஈழத்தில் பிஞ்சுக் குழந்தைகள் கொன்றழிக்கப்பட்ட கொடூரத்தைக்கூட கண்டு கொள்ளாமல், பதவி நாற்காலியை பார்த்துக் கொள்வதிலேயே குறியாக இருந்தவர் கருணாநிதி. அவருடைய பாராமுகத்தை பயன்படுத்திக் கொண்டு மொத்த சதிராட்டத்தையும் முடித்து, ஈழத்தையே இழவுக்காடாக்கி விட்டது சிங்கள இராணுவம். தமிழகத்தின் தலைமகனாக இருந்தும் இந்திய அரசின் ஆயுத உதவிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டும், இலங்கையின் மனிதத் தன்மையற்ற வெறித்தனத்தை தட்டிக் கேட்க தைரியமற்றும் கருணாநிதி இருந்ததால்தான், இன்றைக்கு ஈழத்து தமிழினம் நாதியற்றுப் போய்க் கிடக்கிறது. ஆனால், அதற்காகத் தமிழகத்திலிருந்து ஒலிக்கத் தொடங்கி இருக்கும் ஒப்பாரிக் குரல்களைக்கூட நசுக்குவது போல், திடீரென மிரட்டல் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு!

தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது தவறில்லை என உச்ச நீதிமன்றமே பலமுறை சொல்லி இருக்கிறது. ஆனாலும், அதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், 1968-ம் ஆண்டு சட்டத்தை நினைவூட்டி, மிரட்டல் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. விடுதலைப் புலிகளை அடியோடு நசுக்கி அழித்துவிட்ட பிறகும், எதற்காக இந்த அரசு பயப்பட வேண்டும்?

அரசு எத்தகைய மிரட்டலை அறிவித்தாலும், இந்த வருட சதுர்த்தியை இரத்தமும் கண்ணீருமாகச் செத்தழிந்து கிடக்கும் ஈழத்து மக்களைக் காப்பாற்றுவதற்காக ஈழ விடிவு சதுர்த்தியாகவே வழிபடுவோம். பிரபாகரனையோ புலிகளையோ நாங்கள் துதி பாடவில்லை. ஆனாலும், ஈழத்தின் பெயரால் நாங்கள் ஏற்பாடு செய்யும் சதுர்த்தி விழாவைத் தடுப்பதற்காக தமிழக அரசு அவசர கதியில் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது!'' என சீறத் தொடங்கிய அர்ஜுன் சம்பத் அடுத்த கட்ட ஆதங்கங்களையும் கொட்டத் தொடங்கினார்.

''தி.மு.க. கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் தமிழகம் முழுக்க 'எழும் தமிழ் ஈழம்' என்கிற பெயரில் 'கட்-அவுட்'களையும் பேனர்களையும் வைத்திருக்கிறார்... திசையெங்கும் சிறுத்தைக் கொடியும் புலிக் கொடியும் பறக்கிறது... பிரபாகரனும் திருமாவளவனும் ஒருசேர போஸ் கொடுப்பது போன்ற காட்சிகள் திரும்பிய பக்கமெல்லாம் தெரிகிறது... கருணாநிதியின் கண்களுக்கு இதெல்லாம் தெரியவில்லையா? நெடுமாறன், அமீர், சீமான் போன்றவர்களை மிரட்டத்தான் அரசின் அறிவிப்பா? திருமாவளவனின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வரை பொறுமை காத்து அதன்பிறகு திடீர் அறிவிப்பு வெளியிட வேண்டிய அவசியம் என்ன? சமீபத்தில்கூட விடுதலைச் சிறுத்தைகள் 'எழும் தமிழ் ஈழம்' என்ற பெயரில் பாடல் சி.டி-க்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் 'எழும் தமிழினம்...' என்கிற உணர்ச்சிப் பாடலை திருமாவளவனே எழுதி இருக்கிறார். கருணாநிதிக்கு இது கவனத்தில் படவில்லையா?

ஆரம்பம் தொட்டே அடக்குமுறை நடவடிக்கைகளாக வைகோ, அமீர், சீமான், கொளத்தூர் மணி உள்ளிட்டோரை எல்லாம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்த கருணாநிதி, திருமாவளவன் விவகாரத்தில் மட்டும் இன்றுவரை வாய்மூடிய மௌனியாக இருப்பது ஏன்? இத்தகைய பாரபட்ச நடவடிக்கைகளின் பின்னணிகள் யாருக்கும் புரியாமல் இல்லை... ஈழத்துக்கான எழுச்சியை ஒரேயடியாக நீர்த்துப் போகச் செய்ய இருவரும் திட்டம் போட்டுச் செயல்படுகிறார்கள். எதிர்க்கட்சியினரால் ஈழ விவகாரம் பெரிதாக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே திருமாவளவனை தூண்டிவிட்டு ஒப்புக்குச்சப்பாக பிரசாரம் செய்ய வைத்துக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

திருமாவளவன் என்றைக்கு காங்கிரசுடன் கைகோத்தாரோ, அன்றைக்கே ஈழத்தைப் பற்றிப் பேசும் அருகதை அவருக்கு இல்லாமல் போய் விட்டது. தமிழகத்தை ஏமாற்றவும், காங்கிரஸை மிரட்டவும் திருமாவளவன் என்கிற அஸ்திரத்தை கருணாநிதி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். குடும்பத்தை மேம்படுத்தவும், ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் இராஜதந்திரம் என்கிற பெயரில் இப்படியெல்லாம் நாடகமாடும் கருணாநிதியை, ஈழத்தில் மண்ணோடு மண்ணாகிக் கொண்டிருக்கும் அத்தனை ஆத்மாக்களும் மன்னிக்கவே மன்னிக்காது!'' என படபடத்துத் தீர்த்தார் அர்ஜூன் சம்பத்.

'எழும் தமிழ் ஈழம்' என்கிற பெயரில் சி.டி. வெளியிட்டிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைமை நிலையச் செயலாளரான வன்னியரசுவிடம் இது குறித்துக் கேட்டோம். ''தமிழ் ஈழ எழுச்சிக்கான பாடல்களைத்தான் சி.டி. வடிவில் தயாரித்து வெளியிட்டிருக்கிறோமே தவிர, இந்திய இறையாண்மையை பாதிக்கும் விதமாகவோ, பயங்கரவாதமாகவோ நாங்கள் ஏதும் செய்யவில்லை. ஈழ விவகாரத்தில் சாயம் வெளுத்துப் போனவர்களுக்கு மத்தியில், இன்றளவும் எள்ளளவும் பின்வாங்காமல் போராடி வருவது சிறுத்தைகள் இயக்கம் மட்டும்தான். தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளை இன விடுதலை அரசியல் மாநாடாக நடத்த விடாமல், பொலிஸ் எங்களுக்கு உண்டாக்கிய நெருக்கடிகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனாலும், தனிஈழக் கோரிக்கையை உறுதியான பிடிப்போடு மேற்கொண்டு வரும் நாங்கள், பிறருடைய மிரட்டலையோ குற்றச்சாட்டுகளையோ பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை!'' என்றார் வன்னியரசு.

வீடியோ நன்றி - குண்டுமணி

Read more...

வன்னியில் 1346 சவக்குழிகள்

விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட போரின்போது வன்னிப்பகுதியில் மிகப் பெரிய அளவில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை நிரூபிக்கும் சாட்டிலைட் படங்களை வெளியிட்டு இலங்கை ராணுவத்தின் இனவெறித் தாக்குதலை அம்பலப்படுத்தியுள்ளது ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு.

வன்னி போர்ப் பகுதியில் ஆயிரக்கணக்கான சவக்குழிகள் இருப்பதை இந்த சாட்டிலைட் படங்கள் காட்டுகின்றன. அந்த இடங்களில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிரோடோ அல்லது கொன்றோ புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இலங்கை ராணுவம் கனரக ஆயுதங்களைக் கொண்டு தமிழர்களை கொன்று குவித்திருப்பதும் புலனாகிறது.



இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான கால கட்டத்தில், 7000 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் அதை விட மிகப் பெரிய அளவில், பல ஆயிரக்கணக்கான அப்பாவிகளை இலங்கைப் படைகள் கொன்று குவித்துள்ளதாக ஆம்னஸ்டி உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.

இந்த நிலையில், வன்னிப் போர்ப் பகுதியில் மிகப் பெரிய அளவில் உள்ள சவக்குழிகளின் சாட்டிலைட் படங்களை ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது. மொத்தம் மூன்று பெரிய சவக்குழிகள் இதில் காணப்படுகின்றன. ஆனால் மொத்தம் 1346 சவக்குழிகள் இருப்பதாக ஆம்னஸ்டி தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 19ம் தேதி எடுக்கப்பட்ட சாட்டிலைட் படத்தில் எந்த சவக்குழியும் இல்லாமல் இருந்தது. ஆனால் மே 24ம் தேதி எடுக்கப்பட்ட சாட்டிலைட் படத்தில் 342 சவக்குழிகள் முளைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சவக்குழிகள் அப்பாவித் தமிழர்கள் புதைக்கப்பட்டார்களா அல்லது விடுதலைப் புலிகள் புதைக்கப்பட்டார்களா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று ஆம்ன்ஸ்டி கூறியுள்ளது.

இந்த சாட்டிலைட் படங்களை அமெரிக்க மேம்பட்ட அறிவியல் கழகம் ஆய்வு செய்து முடிவுகளைத் தெரிவித்துள்ளது.

புதிதாக கிடைத்துள்ள சாட்டிலைட் படங்களில் கிட்டத்தட்ட 17 இடங்களில் மார்ட்டர் தாக்குதல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. அத்தனையும் மக்கள் அடர்த்தியாக வாழ்ந்த பகுதிகளாகும். மேலும் இந்த இடங்கள் பாதுகாப்பு வளையப் பகுதிகளாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பகுதிகளாகும்.

இந்தப் பகுதிகளுக்கு வருமாறு அப்பாவி மக்களை இலங்கை அரசும், ராணுவமும்தான் அழைத்தன. ஆனால் இங்கு வந்து சேர்ந்த மக்களைத்தான் ராணுவம் கொடூரமாகக் கொன்று குவித்தது.

புதிய சாட்டிலைட் படங்கள் குறித்து ஆம்னஸ்டி அமைப்பின் நிர்வாகிகளில் ஒருவரான கிறிஸ்டோப் கோயட் கூறுகையில், இலங்கை ராணுவம் அப்பாவி மக்களை பாதுகாப்பு வளையமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு வரவழைத்து அங்கு தாக்குதல் நடத்தியிருப்பது தற்போது உறுதியாகிறது என்றார்.

இந்த நிலையில், இலங்கை பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கெகலிய ரம்புகவல்லா இந்த புகாரை மறுத்துள்ளார். இது உண்மையற்றது, ஏற்றுக் கொள்ளமுடியாதது, ஒருதலைபட்சமானு என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் அது போர்ப் பகுதி, விடுதலைப் புலிகள் மார்ட்டர் தாக்குதல்களில் ஈடுபட்டு சொந்த மக்களையே கொன்றனர். அவர்கள்தான் இந்த சவக்குழிகளை தோண்டியிருக்க வேண்டும் என்றார்.

போர் முடிந்து 3 மாதங்களைத் தாண்டியும் கூட இன்னும் சர்வதேச மனித உரிமை அமைப்பினரையோ, சர்வதேச பத்திரிக்கையாளர்கள், உள்ளூர் பத்திரிக்கையாளர்களையோ, செஞ்சிலுவைச் சங்கத்தினரையோ போர் நடந்த வன்னிப் பகுதிக்கு அனுமதிக்காமல் தடுத்து வருகிறது இலங்கை அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கிடைத்துள்ள புகைப்படங்கள் மூலம் மிகப் பெரிய அளவிலான மனித உரிமை மீறல், மனிதாபிமான மீறல் நடவடிக்கைகள் நடந்திருப்பதாக அனுமானிக்க முடிகிறது. எனவே சுயேச்சையான விசாரணை ஒன்று சர்வதேச அளவில் நடைபெற வேண்டியது அவசியம் என்றும் ஆம்னஸ்டி வலியுறுத்தியுள்ளது.

Read more...

தமிழின படுகொலை ஓவியமாக...




Read more...

தமிழின படுகொலை ஓவியமாக...

சிங்கள இனவாத அரசின் தமிழின படுகொலையை வெளிக்காட்டும் விதமாக புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஓவியர் திரு. வாசுதேவன் அவர்கள் அவரின் சொந்த கிராமத்தில் இடுகாட்டுச் சுவரில் வரைந்த ஓவியங்களின் தொகுப்பு...





Read more...

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP