கருணாநிதியின் ஓரிரவு... (நாடகம்) சில நொடியில் அம்பளம்...


ஐயகோ தமிழினம் அழிகிறதே….. மனித சங்கிலி...
முழு வேலை நிறுத்தம்....
ஓரிரவு பொறுத்திருப்போம்....

ஆகிய நாடகங்களைத் தொடர்ந்து இன்று தொடங்கிய சாகும் வரை உண்ணாவிரதம் நாடகத்தில் கருணாநிதி சிறந்த நடிப்பை வெளிகாட்யிருந்தார்.... அதிமுக தலைமையிலான கூட்டணியினரின் தேர்தல் பரப்புரைகளையும், ஈழத்தமிழர்களுக்கெதிரான காங்கிரஸ், தி.மு.கவின் துரோகத்தையும் அடுத்து எழுந்துள்ள மக்களின் கொந்தளிப்பையும் ஈடுகட்ட முடியாத கருணாநிதியின் வஞ்சக புத்திக்கூர்மையின் வெளிப்பாடே இந்த நாடகம்… காலம்காலமாக நடக்கும் போரை ஓரிரு நாளில் நிறுத்துவது என்பது இயலாதது என்று கூறியிருந்தவர்.... உண்ணாவிரதம் ஆரம்பித்த சில மணி நேரங்களில் பேசிவைத்தது போலவும் மேலும் தாமே இலங்கை அதிபர் ஆகிவிட்ட கனவிலோ என்னவோ இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுவிட்டது என கூறி... தனது உண்ணாவிரதத்திற்கு தானே முடிவு கட்டுகிறார்....
இந்த நாடக வெற்றிக்கு நாடெங்கும் பட்டாசு வெடித்து வெற்றி வேறு....
இவரின் நயவஞ்சகத்தை சிங்களவனே வெளிப்படுத்துயுள்ளான்...
யுத்த நிறுத்தம் செய்யப்படுவதாக வெளியான ஊடக செய்திக்கு இலங்கை அரசு மறுப்பு
[ திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 09:07.41 AM GMT +05:30 ]
யுத்த நிறுத்தம் செய்யப்படுவதாக வெளியான தகவலுக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு ஊடகங்களால் திரித்துக் கூறப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளால் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள 15,000 முதல் 20,000 வரையிலான நபர்களை விடுவிக்க மனிதாபிமான நடவடிக்கைகள் தொடரும் என்றும் அந்த நடவடிக்கைகளின்போது பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்களை தவிர்க்குமாறு இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இதனை போர்நிறுத்தம் என்று ஊடகங்கள் திரித்துக் கூறுவதாக அரசு அதிகாரியை மேற்கோள்காட்டி இலங்கை இராணுவ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
'பாதுகாப்புப் படைகள் இப்போது வெற்றியை அடையும் தருவாயில் உள்ளன. போர் நடவடிக்கைகள் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறன.
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் கனரக ஆயுதங்கள், விமானத் தாக்குதல்களை தவிர்க்குமாறு பாதுகாப்புப் படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
உலக நாடுகளின் நெருக்குதல் காரணமாக இம்முடிவு எடுக்கப்படவில்லை. மீட்பு நடவடிக்கைகளுக்காக தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு' என பாதுகாப்பு அமைச்சக இணையதளச் செய்தி தெரிவிக்கிறது.
நாங்கள் போர் நிறுத்தத்தை அறிவிக்கவில்லை:இலங்கை அரசு அதிரடி
உதயநாணயக்கார, இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அறிவிக்கவில்ல போர் நிறுத்தம் செய்வதாக இலங்கை அறிவித்துள்ளதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்துள்ளது. இதை இலங்கை அரசு மறுத்துள்ளது.

0 comments:

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP