அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை



15-09-1909-ல் பிறப்பு காஞ்சிபுரம், தந்தை: நடராசன், தாய்: பங்காரு அம்மாள்.
வளர்ப்பு: இராசாமணி அம்மையார் (சிற்றன்னை) - தொத்தா

1914: பச்சையப்பன் தொடக்கப்பள்ளியில் கல்வி.

1927: காஞ்சி நகராட்சியில் எழுத்தர் பணி.

1928: சென்னை பச்சையப்பன் கல்லூரிக் கல்வி

1930: இராணி அம்மையாரை மணந்துகொள்தல்

1931: மாணவர் செயலராதல், போட்டிகளில் பரிசு பெறல்.

19.03.1931: பெண்கள் சமத்துவம் எனும் முதல் கட்டுரை. தமிழரசு இதழில்

1932: முதல் ஆங்கிலக் கட்டுரை 1933: காங்கேயம் - செங்குந்தர் இளைஞர் மாநாட்டில் முதல் பொழிவு

11.02.1934: முதல் சிறுகதை `கொக்கரக்கோ` ஆனந்த விகடனில் வெளியாதல்

1934: முதுகலைப்ப பட்டப் படிப்பில் தேர்ச்சி

1936: `பாலபாரதி` ஆசிரியர் பொறுப்பு

1934: திருப்பூர் - செங்குந்தர் இளைஞர் மாநாடு பொழிவு. பெரியாருடன் முதல் சந்திப்பு

1935: கோவிந்தப்ப நாயக்கர் பள்ளியில் ஆசிரியர் பணி.

1936: சென்னை நகராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடல். (பெத்துநாயக்கன் பேட்டையில்)

1936: பெரியாருடன் வடாற்காடு மாவட்டச் சுற்றுப்பயணம்

04.04.1937: `நீதிக்கட்சி` செயற்குழு உறுப்பினராதல்

1937: செட்டிநாட்டு அரசர், தம் தனிச் செயலாளராகப் பணியாற்ற வேண்டல்.

09.12.37: முதற்கவிதை `காங்கிரசு ஊழல்` விடுதலையில் வெளிவரல்

1937: `நவயுகம்`, `விடுதலை`, `குடியரசு` இதழ்களின் துணை ஆசிரியர் பொறுப்பு

02.09.38: முதல் மடல் பரதன் பகிரங்கக் கடிதம் விடுதலையில் வெளிவரல்

26.09.38: இந்தியை எதிர்க்க மக்களைத் தூண்டியதாக நான்கு மாத வெறும் காவல் தண்டணை: ராணியம்மை வாழ்த்துச் செய்தி (குடியரசு, விடுதலை)

13.01.39: இந்தி எதிர்ப்பில் உயிர் நீத்த தாளமுத்து நடராசன் இரங்கல் கூட்டத்தில் உரை

18.01.39: தமிழர் திருநாள் விழாவில் டாக்டர் சி.நடேசனார் படத் திறப்பு (சென்னை)

10.02.39: சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியில் இந்தி எதிர்ப்பு உரை

07.1939: முதல் குறும் புதினம் `கோமளத்தின் கோபம்` (குடி அரசு)

12.11.39: `கபோதிபுரக் காதல்` தொடக்கம்

10.12.39: நீதிக்கட்சியின் செயலாளர் ஆதல்

06.01.40: பம்பாயில் பெரியார்-அம்பேத்கர் உரையாடல் மொழி பெயர்த்தமை

23.03.40: முதல் புதினம் `வீங்கிய உதடு` தொடக்கம் (குடி அரசு)

02.06.40: காஞ்சியில் திராவிட நாடு பிரிவினைத் தீர்மானத்தைக் கொனரல்

08.11.40: தி.க.சண்முகம் நடித்த `குமஸ்தாவின் பெண்` நாடகத் திறனாய்வு (குடியரசு)

08.03.42: திராவிடநாடு மதழ் தொடக்கம் தலையங்கம் கொந்தளிப்பில் கவிஞர் பாரதிதாசனின் `தமிழுக்கு அமுதென்று பேர்` எனும் பாடல் முகப்பில்.

1942: சென்னையில் அண்ணா தலைமையில் நீதிக்கட்சி மாநாடு

07.02.43: சென்னைச் சட்டக் கல்லூயில் ரா.பி.சேதுப்பிள்ளையுடன் - சேலத்தில் நாவலர் பாரதியாருடன் கம்பராமாயணச் சொற்போர்

05.06.43: திருவத்திபுரம் லட்சுமி விலாஸ் அரங்கில் `சந்திரோதயம்` எனும் தம் முதல் நாடகத்தில் துரைராஜாவாக நடித்தல்

1944: சேலம் மாநாட்டில் நீதிக்கட்சியை திராவிடர் கழகமாக்கும் தீர்மானத்தை முன்மொழிதல்

05.12.45: சென்னையில் சிவாஜி கண்ட இந்துராஜ்யத்தில் காகபட்டராக நடித்தல்

13.01.46: `பணத்தோட்டம்` கட்டுரை வெளிவரல்

மே 46: இந்தி எதிர்ப்பு போரில் அண்ணாவின் தலைமையில் பலர் சிறை ஏகல்

மே 46: மதுரையில் நடைபெற்ற கருஞ்சட்டை மாநாட்டில் உரை 11.10.46: ஓர் இரவு பற்றி பெர்னாட்சா என்று கல்கி பாராட்டு

29.07.46: நாவலர் பாரதியார் தலைமையில் கவிஞர் பாரதிதாசனுக்கு ரூ.25000 பணமுடிப்பு வழங்கல்

25.04.47: அண்ணாவின் `வேலைக்காரி` படம் திரையிடல்

01.06.47: `நீதி தேவன் மயக்கம்` நாடகம் அரங்கேறல்

10.08.47: ஆகஸ்டு 15 துக்க நாள் என்ற பெரியாரை மறுத்து அது திருநாளே எனத் திராவிட நாடு ஏட்டில் வெளியிடல்

17.08.47: தஞ்சையில் நடைபெற்ற வேலைக்காரி நாடகத்திற்கு தலைமையேற்ற திரு.வ.ரா.வையும், என்.எஸ்.கே. வையும் பாராட்டல்

23.09.47: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், நிலையும் நினைப்பும் என்ற தலைப்பில் உரை

14.12.47: திராவிட நாடு அலுவலகம் காஞ்சியில் 95, திருக்கச்சி நம்பித் தெருவில் அமைத்தல்.

14.01.48: அண்ணாவின் `நல்லதம்பி` படம் திரையிடல்

17.07.48: இந்தி எதிர்ப்பு மாநாட்டில் உரை

02.08.48: இந்தி எதிர்ப்பு மறியலுக்கு தலைமையேற்றல் பின் சிறையேகல்

23,24,10.48: ஈரோடு திராவிடர் கழகத் தனி மாநாடு தலைமையேற்று நடத்தல். காலை ஊர்வரத்தில் அண்ணாவை அமர வைத்து ஊர்வரத்தின் முன் பெரியார் நடந்து வந்தமை, `பெட்டிச் சாவியைத்தருகிறேன்` என்று பெரியார் மொழிந்தமை.

1948 அரசு அறிவித்த கருஞ்சட்டை எதிர்ப்புக்கு எதிராகக் கூட்டப் பெற்ற மாநாட்டில் கலந்து கொள்ளல்.

25.06.48: திராவிட நாடு ஏட்டில் 04.04.48, 18.04.48 ஆகிய நாட்களில் எழுதிய கட்டுரைகள் வகுப்புக் கலவரத்தைத் துண்டுகின்றன எனக் குற்றம் சாட்டி ரூ.3000 பொறுப்புத் தொகை கட்ட அரசு ஆணை பிறப்பித்தது.

18.03.49: அழகிரி மரணத்தால் தவித்த குடும்பத்திற்கு நாடகம் நடத்தி ரூ.5000 வழங்கல்

18.06.49: பெரியார் - மணியம்மை திருமண அறிவிப்பு

03.07.49: பெரியாரின் திருமணத்தைக் கண்டித்தல் கண்டன அறிவிப்புக்கு வேண்டுகோள் விடுத்தல்

17.07.49: `கண்ணீர்த்துளிகள்` தலைப்பில் எதிர்ப்பாளர் பட்டியல் வெளியிடல்

10.08.49: `மாலை மணி` நாளிதழ் ஆசிரியராதல்

21.08.49: `மாஜிகடவுள்` கட்டுரைத்தொடர் தொடக்கம்

17.09.49: சென்னைப் பவளக்காரத் தெரு 7 ஆம் எண் இல்லத்தில் (காலை 7 மணிக்கு) குடந்தை கே.கே.நீலமேகம் தலைமையில் திராவிடர் கழகத் தோழர்களின் எதிர் காலப்பணி குறித்து உரையாற்றல்

17.09.49: மாலை இராபின்சன் பூங்காவில் தி.மு.கழகத்தொடக்க விழா உரை

18.09.49: கழகப் பொதுச் செயலாளரானார்

18.09.49: திராவிட நாடு ஏட்டில் எழுதிய கட்டுரைகளுக்காக (04,18.04.48) நான்கு மாதச் சிறைத் தண்டனை ஏற்றல், எதிர்ப்புக்கண்டு பத்தாம் நாள் விடுதலை செய்யப்படல்

25.09.49: `வெள்ளி முளைத்தது` தி.மு.க.தொடக்கம் குறித்த தலையங்கம்.

04.11.49: வழக்கு விசாரணையில் ஈட்டுத் தொகை கட்ட பணிக்கப்பட்ட அரசு ஆணையைநீதிமன்றம் தள்ளுபடி செய்தல்.

13.11.49: ஈட்டுத் தொகைக்கு கழக ஆதரவாளர் அனுப்பிய நன்கொடைகளைத் திருப்புதல்

12.01.50: எங்கும் பொங்கல் விழா எடுக்க அறிக்கை விடல்

12.01.50: திருச்சி சிறையில் இலட்சிய வரலாறு எழுதுதல்

06.08.50: சமநீதி பார்ப்பதாகச் சட்டமன்றத்தில் அறிவித்த அரசின் முடிவுக்கு அறிக்கை

18.09.50: ஆரியமாயை நூல் எழுதியமைக்காக ரூ700 தண்டமும் கட்டத் தவறினால் ஆறு திங்கள் சிறை வாழும் என அறிவிக்கப் பெற்றமை.

24.10.50: அமைச்சர் இராசகோபாலாச்சாரியாருக்குக் கறுப்புக் கொடி காட்ட முடிவு

1950 இந்தி நல்லெண்ணக்குழுவுடன் சந்திப்பு

20.01.51: திருச்சி உழவர் கிராம ஒன்றிய மாநாட்டில் உரை

01.03.51: ஆரிய மாயை நூலை எங்கும் தடையை மீறிப் பலர் படித்தல்

01.03.51: தடை மீறி ஆரியமாயை 159 இடங்களில் படிக்கப்படல்

15.03.51: காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி நிதிக்காக நாடகம் நடத்தியமை 15.03.51: காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி நிதிக்காக நாடகம் நடத்தி ரூ.21000 வழங்கியமை

06.04.51: இராசேந்திர பிரசாத்துக்குக் கறுப்புக் கொடி

29.04.51: சிதம்பரம் திலையரங்கில் சந்திரமோகன் நாடகம் நடத்தியமை

13.08.51: சர் தியாராயர் கல்லூரி உதவி நிதிக்காகத் தம் குழுவினருடன் நீதிதேவன் மயக்கம் நாடகம் நடத்தியமை

02.11.51: அறிவகம், கட்டிடத் திறப்பில் தலைமையேற்றல்

14.12.51: சென்னையில் தி.மு.கழக முதல் மாநில மாநாடு. அண்ணா மாநாட்டு தலைமையேற்றல்

12.03.52: வடநாட்டு ஆளுநர் நியமனக் கண்டனக் கூட்டத்தில் ஆளுநரை மக்கள் தேர்ந்தெடுத்தல் வேண்டும் என்று கோரியமை.

06.04.52: கழக இளைஞர் மஜீத் கொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரல்

01.08.52: இந்தி எதிர்ப்பு அறப்போர்

28.08.52: ராயல்சீமா பஞ்சநிலைக்கு அண்ணா நன்கொடை அனுப்பியமை

1953: கைத்தறி நெசவாளர் துயர் துடைக்க திருச்சியில் துணி விற்றல்.

25.04.53: திருச்சி மாநாட்டில் காதல் ஜோதி அரங்கேற்றல்

28.04.53: புயல் நிவாரண நிதியாக ரூ 27000 வழங்கல்.

06.06.53: கழக இளைஞர் குடும்பத்துக்கு நிலம் அளித்தல்

15.06.53: நம்நாடு ஏட்டின் ஆசிரியர் பொறுப்பு

08.07.53: குலக்கல்வி கண்டன ஊர்வலத்தில் (காஞ்சிபுரம்) தலைமை

13.07.53: குலக்கல்வி, ரயில் நிறுத்தல், கல்லக்குடி இம் மூன்றையும் உள்ளடக்கிய மும்முனைப் போராட்டத்தைத் தூண்டியதாகக் கைதாதல். மூன்று மாதம் சிறை செல்லல்.

01.09.53: மும்முனைப் போராட்டத்திற்கு ரூ.5000 அபராதத் தொகை (அண்ணா மற்றும் சிலருக்கு) எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதி மன்றம் கலையும் வரை காப்பு.

03.05.54: மொழிவழி மாநிலம் அமைய ஆணையிடம் அறிக்கை அளித்தல்

14.01.55: அண்ணாவின் சொர்க்கவாசல் திரையிடப்படல்

20.03.55: ஐந்தாண்டுத் திட்டம் கண்டன நாள் என அறிவித்தல்.

31.05.55: திருச்சி, இராமநாதபுரம் பகுதில் புயலால் பாதிக்கப் பெற்றவருக்கு நிதி வழங்கியமை

20.02.56: தேவிகுளம் பீர்மேடு பகுதிகளைத் தமிழகத்துடனும், செங்கோட்டை வட்டததின் ஒரு பகுதியைக் கேரளத்துடனும் இணைக்க வேண்த் தெரிவிக்கப்பட்ட கண்டனக் கூட்டததில் பொது வேலை நிறுத்தம் பற்றி விளக்கல்.

17,18,19. 05: 1956: திருச்சி இரண்டாவது மாறில மாநாடு.

20.05.56: தேர்தலில் போட்டியிட முடிவு, அண்ணாவின் கருத்துரைமூவலூர் இராமாமிர்தம் அம்மையாருக்கு விருது

11.03.57: தேர்தல் முடிவு அறிவிப்பு, அண்ணா வெற்றி பெறல்

09.06.57: ஆங்கில வார இதழ் தொடங்கல் ழடீஆநு டுஹசூனு 07.07.57: எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அண்ணா உரையாற்றல்

03.01.58: நேருவுக்குக் கறுப்புக் கொடி காட்ட முடிவு. தடையை மீறிப பேசச்செல்லுகையில் கைது செய்யப்படல்.

02.03.58: தி.மு.க. மாநிலக் கட்சியாகவும், உதயசூரியன் அதன் சின்னமாகவும் இந்திய அரசு ஏற்றல்

22.06.58: இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு நாள் கொண்டாடல்.

06.11.58: பூதவராயன் பேட்டையில் எதிரிகளால் கொலை செய்யப்பட்ட கழகத் தொண்டர் ஆறுமுகம் என்பவர் குடும்பத்துக்கு 1 ஏக்கர் நிலம் வழங்கல்

24.04.59: சென்னை மாநகராட்சிப் பொறுப்பைத் தி.மு.க. ஏற்றல்

20,21.06.59: திருச்சி மாவட்ட தி.மு.க 3வது மாநில மாநாட்டில் உரை

15.05.60: சந்திரமோகன் நாடகம் வழி திரு.பி.பாலசுப்பிரமணியன் நிதிக்கு ரூ.10000 வழங்கல்

01.08.60: சென்னையில் இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்குத் தலைமை ஏற்றல்

25.09.60: சென்னையில் கூடிய பொதுக் குழுவில் அண்ணா பொதுச் செயலாளா ஆதல்.

1960: திராவிட நாடு விடுதலை வார விழாப் பளியில் மாண்ட திரு. கணேசனின் (திருப்பூர்) மனைவியிடம் ரூ.5000 மதிப்புள்ள வீட்டை வழங்கல்.

1962: சம்பத் விலகல் குறித்து அண்ணா வருந்தி அறிக்கை வரைதல்

26.02.62: சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுறல்

26.02.62: சட்டமன்றத்திற்குத் தம்பியர் ஐம்பதின்மர் செல்ல, அண்ணா, பாராளுமன்ற மேலவை உறுப்பினராதல்

04.03.62: செயின்ட்மேரி மண்டபத்தில் அண்ணாவின் தலைமையில் தி.மு.க.சார்பில் வெற்றி பெற்ற 48 எம.எல்.ஏ. 8 எம்.பி. களுக்குப் பாராட்டு

20.04.62: டில்லி மாநிலங்களவை உறுப்பினராதல்

01.05.62: டில்லி மாநிலங்களவைறில் முதல் சொற்பொழிவு

10.06.62: நெசவாளர் மீது விதித்த வரிக்கொடுமைக் கண்டன ஊர்வலம் நடத்தியமை. அண்ணா கைதாதல்.

19.07.62: வேலூரில் விலைவாசி உயர்வைக் கண்டித்து நடந்த மறியலில் கைதாதல்.

02.08.62: அண்ணா தம்மீது தொடரப்பட்ட வழக்கில் தாமே வாதாடல்

03.08.62: விலைவாசி உயர்வுப்போர் - வேலூர் சிறையில் பத்து வாரம்.

02.12.62: சென்னையில் போர் நிதி திரட்டல்.

09.12.62: இந்திய-சீனப்போர் பற்றிய வானொலி உரை

1962: ழடிஅந சுரடந இதழ் தொடக்கம் 07.01.63: சீனர்களின் ஆதிக்கசெறி குறித்துச் சென்னை வானொலியில் ஆங்கில்ப் பேருரை

25.01.63: மாநிலங்கள் அவையில் பிரிவினைத் தடை மசோதா மீது உரை

01.09.63: மகன்கள் பரிமளம், இளங்கோவன் திருமணம்

03.11.63: கட்டாய இந்தியை எதிர்த்ததால் அமைந்த கரையில் கைதாதல்

17.11.63: கட்டாய இந்தி 17 வது மொழிப் பிரிவு சட்டம் எரித்ததல் அன்றே கைதாகி, ஆறு மாதம் சிறைத் தண்டனை ஏற்றல்.

02.12.63: இந்தியைப் புகுத்தும் சட்டப் பிரிவை எரித்தல்

10.12.63: ஆறு மாதக் கடுங்காவல் தண்டனை பெறல்

08.01.65: குடியரசு நாளை இந்தி எதிர்ப்பு நாளாகக் கூறல்.

17.01.65: இந்தி எதிப்ப்பு மாநாடு

26.01.65: துக்க நாளாகக் கொண்டாடியமைக்காக கைது.

29.01.65: விடுதலை ஆதல்

09.02.65: இந்தி எதிர்ப்பில் மாணவர் மேற்கொண்ட நடவடிக்கைகளை நிறுத்தக் கூறல்.

09.02.65: சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் சென்று திரும்பிய அண்ணாவிற்கு வரவேற்பு

26.01.66: இந்தித் திணிப்பிற்காகக் குடியரசு நாளைத் துக்க நாள் எனல். அதனால் கைது ஆதல்.

31.12.66, 01.01.67: சென்னை மாவட்ட மாநாட்டில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒரே மேடையில் அமர வைத்தல்

27.02.67: பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெறல்

06.03.67: தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில் தம்யியருடன் 138 பேர் அமர்ந்திட, அண்ணா தமிழக முதல்வர் பொறுப்பேற்றல். அன்றே அரசு ஊழியரிடையே உரையாற்றல்

09.03.67: சென்னை மாநகராட்சி வரவேற்பில் உரை

14.03.67: முதலமைச்சராக வானொலியில் உரை

15.03.67: சட்ட மன்ற வளாகத்தில் உறுதிமொழி கூறி பதவி ஏற்றல்.

16,03.67: இந்தி எதிர்ப்பில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்தல்.

11.04.67: தலைமை அமைச்சர் இந்திராவை சந்தித்தல்

14.04.67: சென்னை அரசு தமிழ்நாடு அரசு எனப் பெயரிடப்பட்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டை தமிழக அரசு தலைமைச் செயலகம் என மாற்றிப் செயர்ப் பலகை அமைத்தல்,

22.04.67: சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படல்

26.04.67: மேலவை உறுப்பினராகப் பதவியேற்றல்

09.05.67: அண்ணாவின் அரசால் ஆகாஷ்வாணி வானொலி என வழங்கப்படல்

15.05.67: ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்கல்.

17.06.67: புன்செய் நிலங்களுக்கு நிலவரி ரத்து, பேருந்துகள் அரசுடைமை ஆதல், ஏழைகளுக்கு இலவசக் கல்வி, கலப்புமணப் பரிசு, குடிசைவாசிகளுக்குத் தீப்பிடிக்காத வீடு, காவிரித் திட்டம். 08.07.67: ஒரு கோடி ரூபாய் திரட்டி குடிசைப் பகுதிக்க செலவிட முடிவு.

23.10.67: சீரணியின் நோக்கத்தைப் புலப்படுத்தல்.

1967: அண்ணாமலைப் பேருரை

02.01.68: தமிழ் அறிஞர்களுக்குச் சிலை எடுத்தல்

04.01.68: இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு செயற்குழுத் தலைமை

10.01.68: இரண்டாவது இலகத்தமிழ் மாநாடு எடுத்து உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் நிற்றல்

23.01.68: இருமொழித் திட்டம் கொணரல்

15.04.68: உலகப் பயணம் மேற்கொள்ளல், யேல் பல்கலைக் கழக அழைப்பு

22.04.68: அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் உரை, சப்பெலோஷிப் எனும் சிறப்பு விருதினைப் பெறல்

12.05.68: அமெரிக்கா, ஜப்பான் முதலிய நாடுகளைக் கண்டு திரும்பல்.

21.08.68: பள்ளிகளில் என்.சி.சி.அணியில் இந்தி ஆணைச் சொற்கள் நீக்கல்.

08.09.68: அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பேரறிஞர் அண்ணாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி பெறுமை பெறல்.

09.10.68: புற்று நோயால் பாதிக்கப் பெற்று அமெரிக்கா செல்லல்.

06.11.68: அமெரிக்க மெமோரியல் மருத்துவமனையில் டாக்டர் மில்லரால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தமிழகம் திரும்பல்.

01.12.68: தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்தமைக்கு விழா கொண்டாடல்

14.01.69: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை திறப்பு.

02.02.69: இரவு 12.22 மணிக்கு உடல் இயக்கம் நின்றது.

03.02.69: தமிழ் மக்கள் பேரறிஞர் அண்ணாவை இழந்து துன்பக்கடலில் மூழ்கல்

04.02.69: முற்பகல் 11.40-க்கு முப்படையினர் மரியாதையுடன் அண்ணாவின் உடல் புதைக்கப்பட்டது,

03.02.70: அண்ணா அஞ்சல்தலை - மைய அரசு வெளியிடல்.





அண்ணாவின் சாதனைகள்

1. 1967-ல் அறிஞர் அண்ணா முதல்வரானதும் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயரிட்டார்.

2. தந்தை பெரியாரின் கொள்கையான சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாகும் அரசாணையை கொண்டுவந்தார்.

3. தமிழக மக்களின், மாணவர்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை, மனதில் கொண்டு, இந்தியத் துணைக்கண்டம் முழுதும் மும்மொழி திட்டம் அமுலில் இருந்தபோது, தமிழில் இரு மொழி திட்டம் கொணர்ந்து, தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும்தான், இங்கு இந்திக்கு இடமில்லை என்று தீர்மானம் இயற்றினார்.

4. பதவி ஏற்கும்போது கடவுள் பெயரால் என்று சொல்லி பதவி ஏற்காது மனசாட்சிப்படி - உளமாற எனச் சொல்லி பதவி ஏற்றார்.

5. அண்ணா அரசு அமைந்ததும் ஆகாஷ்வாணி என்பது வானொலி என அழைக்கப்பட்டது.

6. ஏழை எளியோருக்கு பயன்படும் வகையில் சென்னை, கோவை இரு நகரங்களிலும் ரூபாய்க்கு 1 படி அரிசி வழங்கியது.

7. புன்செய் நிலங்களுக்கு நிலவரி ரத்து செய்யப்பட்டது.

8. பேருந்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டது.

9. ஏழைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க ஏற்பாடு - பி.யு.சி வரையில்.

10. பேருந்துகளில் திருக்குறள் இடம்பெற செய்தது.

11. கலப்பு மணம் செய்துகொள்வோரை ஊக்கப்படுத்தும் விதத்தில் தங்க விருது அளிக்கப்பட்டது.

12. சென்னையில் உள்ள குடிசை வாசிகளுக்கு தீ பிடிக்காத வீடுகள் கட்டித் தந்தார்.

13. 1 கோடி ரூபாய் திரட்டி குடிசைப் பகுதிக்கு செலவிட முடிவு செய்தார்.

14. சீரணி எனும் ஓர் அமைப்பைத் தொடங்கி மக்களை அதில் ஈடுபடுத்தி தங்கள் பகுதிக்குத் தேவைப்படுகிற சிறிய, சிறிய வசதிகளை தாங்களே எந்தப் பலனும் எதிர்பாராமல் செய்துகொள்வது என்கிற திட்டம் கொண்டுவந்ததார்.

15. 1968-ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையிலே நடத்தினைர்.

16. கடற்கரைச் சாலையில் தமிழ்ச் சான்றோர்களுக்குச் சிலை நிறுவினார்.
(திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பர், ஜி.யு.போப், பாரதியார், பாரதிதாசன், ஔவையார், கண்ணகி, கால்டுவேல், உ.வே.ச.)

17. பள்ளிகளில் என்.சி.சி. அணியில் இந்தி சொற்களை நீக்க ஆணை பிறப்பித்தார்.

18. அரசு அலுவலகங்களில் உள்ள கடவுளார் படங்களை நீக்க ஆணை பிறப்பித்தார்.

19. முதல்வரானதும், அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் செல்லும் விழாக்களுக்கெல்லாம் அவர்களை பின் தொடராமல் தங்கள் பணியைச் செய்யலாம் என சுற்றரிக்கை அனுப்பினார்.

20. சென்னை செகரட்டேரியட் என்பதனை தலைமைச் செயலகம் என மாற்றியமைத்தார்.

21. விதவைத் திருமணம் செய்து கொள்வோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கினார்.

5 comments:

Anonymous,  September 15, 2009 at 12:22 PM  

annadorai is a dubakkur.he never speak truth.separate tamilnadu,dravidanadu,manila suya aatchi,rubaikku moonupadi arisi are all his dupes.koothadigalai virumbum tamilanukku annadoraithan perainger.VIZZY.

Anonymous,  September 15, 2009 at 12:42 PM  

செழியா

ಕಾನೂನು ಸುವ್ಯವಸ್ಥೆ ನಿರ್ವಹಣೆಯಲ್ಲಿ ಯಡಿಯೂರಪ್ಪ ಅವರಿಗೆ ಫಾಸ್ಟೆಸ್ಟ್ ಮೂವರ್ ಪ್ರಶಸ್ತಿ ಪ್ರಶಸ್ತಿ ಲಭಿಸಿದೆ. ಇಂಡಿಯಾ ಟುಡೇ ಕೊಡಮಾಡುವ ಈ ಪ್ರಶಸ್ತಿಯನ್ನು ಕೇಂದ್ರದ ಹಣಕಾಸು ಸಚಿವ ಪ್ರಣಬ್ ಮುಖರ್ಜಿ ಅವರು ಯಡಿಯೂರಪ್ಪ ಅವರಿಗೆ ಪ್ರಶಸ್ತಿ ಪ್ರದಾನ ಮಾಡಿದರು. ಪ್ರಶಸ್ತಿ ಸ್ವೀಕರಿಸಿದ ನಂತರ ಮಾಧ್ಯಮ ಪ್ರತಿನಿಧಿಗಳೊಂದಿಗೆ ಮಾತನಾಡಿದ ಯಡಿಯೂರಪ್ಪ, ಈ ಪ್ರಶಸ್ತಿ ಖುಷಿ ತಂದು ಕೊಟ್ಟಿದೆ. ಕಾನೂನು ಸುವ್ಯವಸ್ಥೆ ವಿಚಾರದಲ್ಲಿ ನನ್ನ ಆತ್ಮಸ್ಥೈರ್ಯ ಹೆಚ್ಚಿಸಿದೆ. ವಿರೋಧಪಕ್ಷಗಳ ಆಧಾರ ರಹಿತ ಟೀಕೆಗಳ ಮಧ್ಯೆ ಇಂಡಿಯಾ ಟುಡೇ ಸಮೂಹ ಕರ್ನಾಟಕ ಸರಕಾರ ಕಾನೂನು ಸುವ್ಯವಸ್ಥೆ ಕಾಪಾಡಿಕೊಂಡು ಹೋಗುವಲ್ಲಿ ನಡೆಸುತ್ತಿರುವ ಪ್ರಯತ್ನಗಳನ್ನು ಗುರುತಿಸಿದೆ ಎಂದು ಸಂತಸ ವ್ಯಕ್ತಪಡಿಸಿದರು.

S.P Krishna
(ಏಜನ್ಸೀಸ್)

செழியா September 15, 2009 at 12:50 PM  

அன்புத்தோழர் கிருஷ்ணா அவர்களுக்கு,
தங்களின் கருத்துக்கு நன்றி,
ஆனால் படித்து புரிந்துகொள்ள தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதுக.

4Tamilmedia September 15, 2009 at 2:55 PM  

செழியா!
தங்களுடைய இந்த இடுகையை எங்கள் தளத்தில் வலைப்பார்வை பகுதியில் இணைத்துள்ளோம். அதனை இங்கே காணலாம் தயவு செய்து 4tamilmedia@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்குத் முடியுமாயின் தொடர்பு கொள்ள வேண்டுகின்றோம். நன்றி

"உழவன்" "Uzhavan" September 15, 2009 at 5:20 PM  

நல்ல தகவல்கள். அண்ணா எழுதிய சில புத்தகங்களில் இதுபோன்ற தகவல்களைப் பார்த்துள்ளேன். ஆனால் நீங்கள் அதைவிட அதிகமான தகவல்களைத் தந்துள்ளீர்கள்.

பகிவுக்கு நன்றி

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP