தொடரும் இன அழிப்பு... ஒரு இந்தியா நாயின் எச்சரிக்கை!

புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் அணிதிரண்டு ஆயுதப் போராட்டத்தை தொடங்கக்கூடும்! இந்தியா எச்சரிக்கை!

உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் அணிதிரண்டு ஆயுதப் போராட்டத்தை தொடங்கக்கூடும் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் M.K.நாராயணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


புதுடில்லியில் இடம்பெற்ற இந்திய காவல்துறை தலைமையதிகாரிகளுக்கான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்:-

"பெரும் படை நடவடிக்கையின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி வளமாக விளங்கும் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் பரந்து விரிந்து காணப்படுகின்றார்கள். எனவே அவர்களின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான நிதி வழங்கல்கள் எவ்விதமான சிதைவும் இன்றி அப்படியே உள்ளன. உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அணிதிரண்டு தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் கட்டியெழுப்பி ஆயுதமேந்தக்கூடும். இது தொடர்பாக நாம் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்."

இவ்வாறு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.

1 comments:

Anonymous,  September 16, 2009 at 1:46 PM  

செழியா

ಸವಾರ್‌ಲೈನ್ ರಸ್ತೆಯಲ್ಲಿ ಅಗಲೀಕರಣ ಮಾಡುವ ಅವಶ್ಯಕತೆ ಪ್ರಸ್ತುತ ಇರುವುದಿಲ್ಲ. ಸವಾರ್‌ಲೈನ್ ರಸ್ತೆಗೆ ಸಮಾನಾಂತರವಾಗಿ ಜೆಪಿಎನ್ ರಸ್ತೆ ಇರುತ್ತದೆ. ಹಾಗೆಯೇ, ನಗರದ ಬೇರೆ ಪ್ರದೇಶಗಳಿಗೆ ಹೋಗಲು ಹಲವಾರು ರಸ್ತೆಗಳಿವೆ. ಜೊತೆಗೆ, ಬಿ.ಹೆಚ್.ರಸ್ತೆಯಲ್ಲಿ ಕಾಮಗಾರಿಯಾಗುತ್ತಿರುವುದರಿಂದ ಸವಾರ್‌ಲೈನ್ ರಸ್ತೆಯಲ್ಲಿ ವಾಹನ ಸಂಚಾರ ತಾತ್ಕಾಲಿಕವಾಗಿ ಹೆಚ್ಚಾಗಿದೆಯೇ ಹೊರತು ಇಲ್ಲಿ ದಿನನಿತ್ಯ ದೊಡ್ಡ ವಾಹನಗಳ ಸಂಚಾರ ಕಂಡುಬರುವುದಿಲ್ಲ ಎಂದು

S.P Krishna
(ಮನವಿಯಲ್ಲಿ ತಿಳಿಸಿದ್ದಾರೆ)

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP