புலிகள் தாக்கியதில் இலங்கை ராணுவ வீரர் ஒருவர் பலி

இலங்கை மட்டக்களப்பு அருகே விடுதலைப் புலிகள் தாக்கியதில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 2 ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மட்டக்களப்பு கடலோரப் பகுதி அருகேயுள்ள கீரங்குளம் என்னுமிடத்தில் இச்சம்பவம் இன்று அதிகாலை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.



காயமடைந்த 2 ராணுவ வீரர்களும் விடுதலைப் புலி ஒருவரும் மட்டக்களப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

இத்தகவல்கள் இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்களில் வெளியாகியுள்ளன.

0 comments:

About This Blog

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP